தமிழ் அரங்கம்

Monday, January 5, 2009

கறுப்பின ஒபாமாவும் காசாக் கொலைகளும்

ஒபாமா அமெரிக்காவின் ஆரம்பம் களைகட்டத் தொடங்கியுள்ளது காசாவில். கசாப்புக்கடையாய் விரிகிறது காசா நகரம். குழந்தைகள், கர்ப்பிணிகள் வெற்றுடலாய் வீழ தெருவெங்கும் மரண ஓலம். இஸ்ரேலின் காசா மீதான ஆக்கிரமிப்புக்கு பின்னாலும் இத்தனை கொடுமையான படுகொலைகளுக்குப் பின்னாலும் அமெரிக்க ஆசீர்வாதம் இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு கொடுக்கு கட்டி விடுகிறது.

கிளர்ந்தெழும் மக்களின் ஊர்வலங்கள் எதிர்ப்பு பேரணிகள் எல்லாவற்றையும் துச்சமாக மதித்து காசாவை துவம்சம் செய்யும் இஸ்ரேலுக்கு முன்னால் எதுவும் செய்ய திராணியற்று கறுப்பின அமெரிக்க அதிபர் ஒபாமா கைகட்டி மவுனம் சாதிக்கிறார் என்று நம்புபவர்களும், உலகமே இனி அமைதிப் பூங்கா தான் அமெரிக்க கறுப்பின அதிபரின் வருகை நன்மைகளாக விளையப் போகின்றது என்பவர்களும் இதோ காசாவுக்கு செல்லுங்கள். இஸ்ரேல் செய்யும் அறுவடைகளில் உங்களுக்கும் பங்குண்டல்லவா?

பாலஸ்தீன மக்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்க முனையும் இஸ்ரேல் அமெரிக்க கூட்டு சதிக்கு இன்று தலைமை தருவது வேறு யார் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: