தமிழ் அரங்கம்

Sunday, January 4, 2009

மக்கள் பார்க்காவிட்டால், இந்த அநியாயத்தை யார் தான் பார்ப்பது

........நிர்வாணமான உடல் என்பது, காட்சிப்படுத்தப்படக் கூடாத ஒரு பொருளல்ல. எந்த நோக்கில், எந்த அடிப்படையில் என்பதில் தான், அது தங்கியுள்ளது. இதை ஆயிரக்கணக்கில் பார்வையிட்டவர்கள், இதை வக்கிர உணர்வுடன் பார்ப்பதில்லை. அதை அப்படி அவர்கள் பார்ப்பதாக நம்பும் நீங்கள் தான், அந்த உணர்வுடன் பார்ப்பது வெளிப்படுகின்றது. மக்கள் அப்படிப் பார்ப்பதாகக் கூறி மக்களை ஏமாற்ற முனைகின்றீர்கள். மக்கள் பார்க்காவிட்டால், இந்த அநியாயத்தை யார் தான் பார்ப்பது. அதைச் சொல்லுங்கள். சில புனிதர்களா!? அதற்கு என்ன அடையாளம்!? நாம் மக்களை நம்பிப் போராடுபவர்கள். இதனால் மக்கள் முன் வைக்கின்றோம். இது எம் போராட்ட மரபில் கிடையாது என்பதால் தவறாகாது.

இந்தக் காட்சியை பார்ப்பவர்கள், எம்மை மீறி நடக்கும் எமக்கு எதிரான எதார்த்தத்தைக் கண்டு சினந்து வெடிக்கும் கோப உணர்வுடன் தான் பார்க்கின்றனர். புலித்தேசியத்தால் ஏற்பட்டுள்ள, சொந்த கையாலாகாத்தனத்தை எண்ணி வெட்கப்படுகின்றனர். ஏன் இந்த நிலைமை என்று, சொந்தமாகவும் சுயமாகவும் சிந்திக்கின்றனர். இதனால் இதை மூடிமறைக்க கோருவது, அருவருக்கத்தக்கது. ........

No comments: