தமிழ் அரங்கம்

Wednesday, January 7, 2009

கேலிக் கூத்தாகிய போராட்டம், துன்பவியலாக முடிகின்றது

கடமைகளுள்ள உரிமைகளையோ, உரிமைகளுள்ள கடமைகளையோ தமிழ் மக்கள் கொண்டிருக்கவில்லை. அதாவது கடமைகளில்லாத உரிமைகளையோ, உரிமைகளில்லாத கடமைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். இப்படி இதிலிருந்து மக்கள் பலாத்காரமாக அன்னியமாக்கப்பட்டனர். மக்கள் மந்தைகளாக, ஆடு மாடுகள் போல் எந்த உரிமையுமற்ற நடைப்பிணமாக வாழ்வதைத்தான், தமிழ்மக்களின் உரிமைகள் கடமைகள் என்றனர்.

இதை மூடிமறைக்க ஆர்ப்பாட்டமான பேச்சுகள், பொய்கள், நிச்சயமற்ற உளறல், தடுமாற்றம், குழப்பம், தெளிவற்ற பிதற்றல், இதுவே மனித அறிவாகியது. இவை கடமைகளுள்ள உரிமைகளையும், உரிமைகளுள்ள கடமைகளையும் இழந்த மக்கள் முன், (புலித்) தேசியமாகியது.

திட்டம் கிடையாது, நோக்கம் கிடையாது. மக்கள் பற்றிய எந்த அக்கறையும் கிடையாது. துவக்கெடுத்தவர்களும், சுட்டவர்களும், கடத்தல்காரர்களும், கொலைகாரர்களும் கதாநாயகர்களாகி, விடுதலையின் பெயரில் ஒரு இனத்தையே அழித்துவிட்டனர். புலிகள் மட்டுமல்ல, இன்று அரசின் பின் மண்டியிட்டு தொழும் தொழுநோய்க்காரர்கள் அனைவரும் இந்தப் பாதையில் தான் பவனிவந்தவர்கள்.

மக்களோ தம் வரலாற்றை தாங்கள் விரும்பியவாறு உருவாக்க விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் விரும்பியவாறு எல்லா நேரமும், வரலாற்றை உருவாக்க முடிவதில்லை. மக்களின் அறியாமை, அவர்களின் விழிப்புணர்வற்ற தன்மை, செயலற்ற தன்மை, அவர்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. இதனால் எல்லாம் கேலிக்கூத்தாகி, மனித வரலாறே துன்பவியலாக மாறிவிடுகின்றது. மக்களை மந்தைகளாக மாற்றி, அவர்களை தம் அதிகாரத்தின் கொலுசில் கட்டி விடமுனைகின்றனர்.

மக்களின் பெயரில் சில.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: