தமிழ் அரங்கம்

Thursday, January 8, 2009

புலிகள் கெரில்லா அமைப்பாக கூட நீடிக்க முடியாது.

.........புலிகள் நீடிப்பார்கள், கெரில்லா அணியாக மாறுவார்கள். தொடர்ந்தும் சண்டை நடக்கும். அடர்காட்டில் இருந்து தப்பிப் பிழைப்பார்கள். இப்படி குருட்டு அனுமானங்களுடன் பல்வேறு முடிவுகளையும் அபிப்பிராயங்களையும் பிரகடனம் செய்கின்றனர். பிழைப்புவாதிகள் முதல் 'சுதந்திர" ஊடகவியல் பேசும் பச்சோந்திகள் வரை இதில் அடங்கும்;. உண்மைக்காக போராடுவது, மக்களைச் சார்ந்து நிற்றல் என்பது அருகிவிடும் போது, ஆய்வுகளும் அனுமானங்களும் கூட குறுகிவிடுகின்றது.

இப்படி இவர்கள் கூறும் காரணங்களாக அவர்கள் கண்டுபிடிப்பதில் முக்கிமானது, தமிழ் மக்களின் பிரச்சனையை இந்த அரசு தீர்க்காது என்ற அனுமானம் தான்.

இந்த பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்காது என்பது உண்மைதான்;. இதனால் மட்டும் புலிகள் நீடித்து இருக்கமுடியும் என்று, எப்படி கூறமுடியும்!? புலிகள் நீடித்து இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகின்றனரா? இந்தக் கேள்வியை யாரும் எழுப்புவது கிடையாது. புலிகளை ஏன் எதற்காக தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டும்?

மறுபக்கத்தில் இன்றும் தான், தமிழ் மக்கள் பிரச்சனையை இந்த அரசு தீர்க்கவில்லை. இதை தீர்க்காது என்பது, அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரியும். துரோகத்தையே இன்று தொழிலாக கொண்ட கும்பலுக்கும் கூட இது தெரியும். இப்படி இருந்தும், புலிகளை மக்கள் ஏன் தோற்கடிக்கின்றனர்? இதை விட புலிக்கு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: