தமிழ் அரங்கம்

Friday, January 9, 2009

மும்பய்த் தாக்குதல் : கண்ணீரிலும் வர்க்கமுண்டு

"நாங்கள் தினந்தோறும் இறக்கிறோம்'' — மும்பய் தாஜ் விடுதியில் பதுங்கியிருந்த முசுலீம் தீவிரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தியா டி.வி., இம்ரான் பாபர் என்ற தீவிரவாதியிடம் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தியபொழுது, "நீ சுற்றி வளைக்கப்பட்டு விட்டாய்; சரணடையவில்லை என்றால் கண்டிப்பாக இறந்து விடுவாய்'' எனக் கூறியதற்கு நாங்கள் தினந்தோறும் இறப்பதாகப் பதில் அளித்தாராம்.

இந்தத் தொலைபேசி உரையாடல் அந்தத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒலி/ஒளிபரப்பப்பட்டது. இந்த உரையாடல் உண்மையிலேயே நடந்ததா, அல்லது அந்த டி.வி., தனது வர்த்தக நோக்கங்களுக்காக "செட்டப்'' செய்ததா என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது. ஆயினும், காசுமீரில், ஆப்கானில், ஈராக்கில் முசுலீம்கள் அன்றாடம் கொசுக்களைப் போல, இந்தியாவால், அமெரிக்காவால், பாகிஸ்தானால், "நேடோ'' படைகளால் கொல்லப்படுவதை யாரும் சந்தேகிக்க முடியாது.

இந்த மரணங்கள் நமது நாட்டு மேன்மக்களின் மனசாட்சியை ஒருபோதும் உலுக்கியது கிடையாது. இந்த முசுலீம்களின் மரணங்களை விட்டு விடுங்கள். காங்கிரசு கூட்டணி பதவியேற்ற பிறகு, கடந்த நாலரை ஆண்டுகளில் இந்தியாவில் 25,000 குண்டு வெடிப்புகள் நடந்திருப்பதாகவும், அதில் 7,000 அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முந்தைய பா.ஜ.க., கூட்டணி ஆட்சியில் நடந்த 36,259 குண்டுவெடிப்புகளில் 11,714 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments: