தமிழ் அரங்கம்

Tuesday, December 16, 2008

புலியை ஆதரிக்க, 'சுயநிர்ணயவுரிமையை" முன்வைக்கும் இடதுசாரிய புல்லுருவிகள்


இப்படி தாளம் போடும் இடதுசாரிய புல்லுருவிகள், தமது இடதுசாரிய வேஷத்தை பாதுகாக்கும் ஆசையும் வேறு. இதனால் புலியை ஆதரிக்கவும், அதேநேரம் இடதுசாரியத்தை பாதுகாக்கவும் தாம் 'சுயநிர்ணயவுரிமை"காக போராடுவதாக திடீரென இன்று பாசாங்கு செய்கின்றனர்.

இப்படி வலது பாசிசத்தை ஆதரிக்க, அதன் பிற்போக்கை மூடிமறைக்கவும் முனையும் இடதுசாரிய போக்கிலிகள், இன்று அரசியல் வேஷம் போடுகின்றனர். தம்மை மூடிமறைத்துக்கொள்ள 'சுயநிர்ணயவுரிமைக்" காகத்தான், தாம் போராடுவதாகவும் பீற்றிக்கொள்கின்றனர்.

தற்போது இதை திடீரென்ற ஒரு புதுக்கோசமாக முன்வைக்கும் இவர்கள், இதுவரை காலமும் எங்கேயிருந்தனர். இன்று இதை புலிக்காகவே முன்னெடுக்கும் இவர்கள், உண்மையில் சுயநிர்ணயவுரிமைக்காகவா போராடுகின்றனர்? ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, December 15, 2008

லுங்கி –நாடகம்

லுங்கி –நாடகம் வி.வி.மு நாடகக்குழு கம்பம்

யாழ் சமூக கட்டமைப்பின் சமூகவிளைவா, விடுதலைப் புலிகள்?

யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவு தான் விடுதலைப்புலிகள் என்ற தர்க்கமே, இன்று தமிழ் இடதுசாரிய அரசியல் வழியில் செல்வாக்கு வகிக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி தனது சமூக அரசியல் மதிப்பீட்டை, இப்படி தவறாகவே கூறி வருகின்றனர். அதாவது இந்த யாழ் சமூக கட்டமைப்பைப் தாண்டி, புலிகளைத் தவிர வேறு யாரும் உருவாயிருக்க முடியாது என்கின்றனர். யாழ் மேலாதிக்க தன்மை தான், புலியை உருவாக்கியது என்கின்றனர்.

இதை நாங்கள் தெளிவாகவே மறுக்கின்றோம். இந்த முடிவை கூறுபவர்கள் அனைவரும், புலி பாசி;ச சூழலை எதிர்கொள்ள திராணியற்றவர்கள். ஒரு மாற்று அரசியல் வழியை மக்களுக்கு முன் வைக்கத் தவறியவர்கள் அல்லது அதில் தோற்றவர்கள். ஒரு அரசியல் வழியின்றி, தம் சொந்த அடையாளத்தையே இழந்தவர்கள்;. தமது இன்றைய இந்த நிலையை நியாயப்படுத்திக் கொள்ள, இந்த தர்க்கத்தை முன்வைக்கின்றனர். இதன் மூலம் தமது செயலற்ற தன்மையையும், கருத்தற்ற ஓடுகாலித்தனத்தையும் நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

இதன் சாரம், யாழ் சமூகக் கட்டமைப்பின் தன்மையைத் தாண்டி, புலிக்கு மாற்றாக எதுவும் உருவாகியிருக்கவே முடியாது என்கின்றனர். இதனால் தான், தாம் சமூகத்தை மாற்ற எதுவும் செய்யமுடியாது இருக்கின்றோம் என்று கூறி, சமூகக் கடமையை நிராகரிக்கின்றனர். இதன் மூலம் கருத்துத்தளத்தில் தம் கருத்தையே கை விடுகின்றனர்.

இந்த தர்க்கம், இதன் சாரம், இதன் நடைமுறை, மூன்று ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, December 14, 2008

சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்

வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் இருந்து புலிகளையும் பாலசிங்கத்தையும் மீட்கும் போது கிடைப்பதோ, சமூக அறியாமை என்னும் சூக்குமமே. அவை ஒரு நூலுக்குள் அடக்க முடியாதவை. அதில் இருந்து ஒரு சிறிய பகுதியே இக்கட்டுரை. உங்கள் நம்பிக்கைகள், அதிதமான பிரமைகள் எல்லாவற்றையும் இது வெட்ட வெளிச்சமாக்கி தகர்க்கின்றது.

புலிகள் தமது கடந்த கால வரலாற்றை மட்டுமல்ல, நிகழ் காலத்தையும் மிக வேகமாகவே குப்பைத் தொட்டியில் போட்டு புதைப்பது, அவர்களுக்கு கைவந்த கலை. வற்றாத புதையல் போல், அவர்களின் வரலாற்றுக் குப்பையைக் கிண்டிக் கிளறினால் கிடைப்பதோ, தேசியத்தை விலைபேசுவது, சுயநிர்ணயத்தை இழிவுபடுத்துவது, மக்களை ஏமாளிகளாக்குவது தான். இந்தப் பாசிட்டுகளுக்கு இதுவே கைவந்த கலையாக உள்ளது. மோசடித்தனம், ஏமாற்றுதல், பொறுக்கித்தனம் என்று சமூகத்தை இழிவாடி, அதன் மூலம் பொறுக்கித் தின்னுகின்ற எல்லா கீழ்நிலைப் பண்பாட்டையும், புலிகள் தமது சொந்த வக்கிரம் மூலம் தமது பண்பாடாக்கியுள்ளனர்.

தமிழ் மக்களையும், சுயநிர்ணயத்தையும் எப்படி நாங்கள் ஏமாற்றி மோசடி செய்தோம் என்பதை, பாலசிங்கம் தனது மனைவி மூலமான நூலில் ஒரு சாட்சியமாக முன்வைத்து அதை அம்பலமாக்கியுள்ளர். "ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் என்பதை நியாயப்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகள் தங்களது ஆரம்பகால வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மார்க்சிய லெனினிச தத்துவங்களை பயன்படுத்தினர்கள்.",1 ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஈழத்து கோயபல்ஸ்சின் மரணம்!

'பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனித வாழ்வு நிலைக்கிறது" என்பது, பாசிசத்தின் பிறப்புக்கும் இறப்புக்கும் கூட சமகாலத்தில் பொருந்திப் போகின்றது. பாலசிங்கம் சமகாலத்தில் தனது நோயால் செத்துக் கொண்டிருந்தது போல், பாசிசம் என்னும் புற்றுநோயால் புலிகள் மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள். வரலாறு இப்படி கோயபல்ஸ்சின் மரணத்துடன் பின்னிப்பிணைந்து செல்வது எம் முன்னால் அனுதினம் நிகழ்கின்றது. மனித தியாகங்கள் எல்லாம் வருத்தத்துக்குரிய ஒன்றாக எம் மண்ணில் இழிந்து போகின்றது.

இந்த நிலையில் தான் பாசிசத்தின் குரலை, பாசிசம் இழந்து நிற்கின்றது. தமிழ் மக்கள் இதனால் எதையும் இழக்கவில்லை. இந்த ஈழத்து பாசிசக் குரலை 'தேசத்தின் குரல்" என்று பாசிட்டுக்கள் அழைப்பது, சாலப் பொருத்தமானதே. ஏனென்றால் அது அவர்களின் சொந்த இழப்பே ஒழிய, மக்களின் இழப்பல்ல. பாசிசத்தின் சகல இலக்கணத்துக்குமுரிய வகையில் ஒரு கோயபல்ஸ்சாகவே வாழ்ந்தும், இழிவுக்குரிய ஒரு மக்கள் விரோத பாசிட்டாக வாழ்ந்து மடிந்தவர். இவரை 'மதியுரை"யர் என்பது, மக்களுக்கு எதிராகவே சதா சதி செய்வதைத் தான். வேறு எதைத்தான் அவர் செய்தார்? சூனியக்காரியாக, சூழச்சிக்காரனாகவே வாழ்ந்து மடிந்து போனார்.

இவர்கள் மக்களுக்கு செய்தது என்ன? இந்த சூனியக்காரனின் மரணம் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதற்கு, இதுவே அடிப்படையான கேள்வி? மக்களின் நன்மைக்காக எதையும் இவர்கள் தமது வாழ்வில் செய்யவில்லை. அவர்களால் எதையும் பட்டியலிடவே முடியாது. ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் புலிகளால் என்ன நன்மை கிடைத்தது என்ற கேள்வியை எழுப்பி, யாராலும் பதில் சொல்ல முடியுமா எனின், முடியாது.

தமிழ் மக்களுக்கு பாசிசப் ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஐரோப்பாவில் மீண்டும் கம்யூனிசம் : தீப்பொறி காட்டுத் தீயாக மாறிவருகின்றது


மூலதனத்துக்கு எதிராக கிறிஸ்சில் எழுந்துள்ள போராட்டம், ஐரோப்பா எங்கும் அதை கற்றுக்கொடுக்கின்றது. மூலதனத்தின் அமைதியான உலகம் தளுவிய சூறையாடல், இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. ஐரோப்பா எங்கும் ஓன்றன் பின் ஒன்றாக, வர்க்க எழுச்சிகளை உருவாக்கி வருகின்றது.

ஆம் மீண்டும் கம்யூனிசம். மூலதனம் யாரை எல்லாம் தன் மண்ணில் இருந்து ஓழித்துக்கட்டி விட்டதாக கொக்கரித்தோ, அவர்களின் மடியில் இருந்தே, அந்த மண்ணில் புரட்சிக்கான விதைகள் ஊன்றப்படுகின்றது.

கிறிஸ்சில் மீளவும் எழுந்துள்ள வர்க்கப்போராட்டத்தை 'சுதந்திரமான ஊடகங்கள்" இருட்டடிப்பு செய்ய, அதையும் மீறி ஐரோப்பாவின் ஓவ்வொரு தலைநகரங்களிலும் அதற்கு ஆதரவான போராட்டங்கள் எழுந்து வருகின்றது.

பெரும் பன்னாட்டு நிறுவனங்கள்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

கருப்பு ஓபாமாவை வெள்ளை மாளிகை தேர்வு செய்தது ஏன்?

அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இனவேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல், அமெரிக்காவின் கனவை, அதன் முன்னோர்களின் இலட்சியத்தை அந்த இரவின் வெற்றிச் செய்தி உறுதி செய்திருப்பதாக ஒபாமா அந்த மக்களிடத்தில் உரையாற்றினார்.

2004க்கு முன்னர் ஒபாமா என்றால் யாரென்றே பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குத் தெரியாது. 2007இல் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் பலரும் வியப்புடன் பார்த்தனர். கென்யாவைச் சேர்ந்த ஆப்பிரிக்கருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளையினப் பெண்மணிக்கும் பிறந்த ஒபாமா, தனது தாய்வழிப் பாட்டியிடம்தான் வளர்ந்தார். அவ்வகையில் அவர் கருப்பின மக்களின் போராட்டம் நிறைந்த அவல வாழ்க்கையை பெரிய அளவுக்கு உணர்ந்தவர் அல்ல. நல்ல கல்விப் புலமும், பேச்சுத் திறனும் கொண்ட ஒபாமாவுக்கு 90 சதவீதக் கருப்பின மக்களும், வெள்ளையர்களில் ஏறக்குறைய பாதிப்பேரும் வாக்களித்துள்ளனர்.

Saturday, December 13, 2008

குறவன் குறத்தி ஆட்டம் சங்கராச்சாரி ஓட்டம்

குறவன் குறத்தி ஆட்டம் சங்கராச்சாரி ஓட்டம்

பூணூலில் மலரும் ஈழம்

இந்து தேசியத்தின் புதிய அடியாட்படையாக பரிணமிக்கும் புலிகள் தமிழீழ மக்களின் போராட்டத்தின் ஆதரவிற்காக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.திரு சிவலிங்கம் அவர்கள் தனது பயணத்தின் முத்தாய்பாக சிறீ சிறீ பிரம்ம சிறீ ஜெயேந்திர சங்கராச்சார்ய சுவாமிகளை சந்தித்து ஈழத்தின் இந்து மக்களுக்காக அருளாசி கோரினார்.சங்கரலாயாத்திற்கு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி”ஈழத்தில் இது வரை 1800 இந்து கோஇல்கள் இடிக்கப்பட்டு இருப்பதாகவும் அங்கே பாதிக்கப்படுபவர் எல்லாம் இந்துக்கள் என்பதால் அல்கில உலக இந்துக்களின் தலைவராகிய சுவாமிகள் ஈழப்பிரச்சினையில் தலையிட வலியுறுத்த வேண்டும் ,மேலும் அடுத்த வாரம் சுவாமிகள் டெல்லி செல்ல இருப்பதாலும் அஙு அத்வானியை சந்திது ஈழ மக்கள் சார்பாக பேசுவார் “என வும் நம்பிக்கை தெரிவித்தார்.

இவாரம் செவ்வாயன்று சேலத்தில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவு மானாட்டில் யார் கூப்பிடாலும் கூப்பிடாவிட்டாலும் போகும் ” நெடு” மாறனோடு சிவலிங்கம் கந்து கொண்டு “ஈழத்திலே இந்து மக்கள் கொல்லப்படுகின்றனர் இந்துக்களின் நாடான இந்தியா தான் உதவ வேண்டும்.ஈழப் பிரச்சினையில் இந்தியா தலையிடகூடாது..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
er1917

Friday, December 12, 2008

மகிழ்ச்சியின் தருணங்கள்

முகஸ்துதி, முதுகுசொறிதல், சாகித்ய அகாடமி.... அற்பத் தனங்களில் ஊறித் திளைப்பதையே தனது தனித்துவம் என்றும் மகிழ்ச்சி என்றும் பிரகடனம் செய்கிறான் அற்பவாதி. ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டோ தனது அகங்காரமும் அற்பத்தனங்களும் செதுக்கி எறியப்படும் வலி நிறைந்த அந்தத் தருணங்களை மகிழ்ச்சியின் தருணங்களாக உணர்கிறான்.

தாலி, சடங்கு, வரதட்சிணை, சாதி ஆகியவற்றை மறுத்து மணங்கள், மறுமணங்கள் பலவற்றை ம.க.இ.க. நடத்தியிருந்தபோதும், கண்ணீர்க் கடலைக் கடக்காமல் அநேகமாக எதுவும் "இனிதே' கரையேறுவதில்லை. கண்ணீர், முறையீடுகள், தற்கொலை முயற்சிகள் ஆகிய அனைத்து ஆயுதங்களும் இந்த மணமக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டன. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் அரிவாள் தூக்கும் சந்தர்ப்பங்களைக் காட்டிலும் தூக்கு மேடையில் நிற்கும்போது தான் அபாயகரமாகக் காட்சியளிக்கின்றன............. முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, December 11, 2008

வேஷம் போட்ட 'சுதந்திர" ஊடகவியலாளர்களும், இடதுசாரிகளும்

பாசிசத்தின் வேர் சமூகத்தில் எங்கும் ஊடுருவி, சமூகவிரோத நஞ்சைக் கக்குகின்றது. கொழும்பில் இருக்கும் வரை 'சுதந்திர" ஊடகவியல் வேஷம் போட்டவர்கள், இன்று புலியின் பாசிசத்துக்காக ஐரோப்பா எங்கும் பாசிசத்தை நவீனமாக பிரச்சாரம் செய்ய முனைகின்றனர். இது போல் தம்மைத்தான் இடதுசாரிகள் முற்போக்குகள் என்று காட்டிக்கொண்ட பல பொறுக்கிகள், இன்று பாசிசத்தின் தூண்களாகின்றனர்.

முன்னாள் சரிநிகர் ஆசிரியர்கள் முதல் இதில் பலர் அடங்குவர். இதில் பலர் எம்முடன் சேர்ந்து போராடியவர்கள் அல்லது எம்முடன் அரசியல் உறவை வைத்திருந்தவர்கள். இன்று புலிப் பாசிசமே சரி என்றும், அதை காப்பாற்றுவதே இன்றைய வரலாற்றுத் தேவை என்கின்றனர். இந்த வரலாற்று தேவை எந்த மக்களுக்கு, எப்படி, ஏன் தேவை என்பதை இவர்களால் சொல்ல முடிவதில்லை. என்ன செய்கின்றனர், புலிகளின் கடந்தகால பாசிச வெறிச் செயல்களை நவீனமாக தம் அறிவைக்கொண்டு நியாயப்படுத்த முனைகின்றனர். வேறு எதைத்தான் இந்த புதிய பாசிசக் கும்பல் பிரச்சாரம் செய்யமுடியும்.

மக்கள் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுடன் புலிகளை விமர்சிக்கின்றனர். இதை பூசி மெழுகுவது தான், இந்தக் கும்பலின் நவீன பாசிசப் பாட்டு.

இவர்கள் தமிழ் மக்களின் உண்மை அவலத்தையிட்டு, உண்மையாக அக்கறைப்படுவது கிடையாது. புலிப்பாசிசத்துக்கு ஏற்பத் தாளம் போடுபவர்களாக, சிங்சிங்காக என்கின்றனர். இதற்கு அன்று சூழலைக் காரணம் காட்டித் தப்பியவர்கள், இன்று தாம் யார் என்பதை காட்டுகின்றனர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

வேஷம் போட்ட 'சுதந்திர" ஊடகவியலாளர்களும், இடதுசாரிகளும்

பாசிசத்தின் வேர் சமூகத்தில் எங்கும் ஊடுருவி, சமூகவிரோத நஞ்சைக் கக்குகின்றது. கொழும்பில் இருக்கும் வரை 'சுதந்திர" ஊடகவியல் வேஷம் போட்டவர்கள், இன்று புலியின் பாசிசத்துக்காக ஐரோப்பா எங்கும் பாசிசத்தை நவீனமாக பிரச்சாரம் செய்ய முனைகின்றனர். இது போல் தம்மைத்தான் இடதுசாரிகள் முற்போக்குகள் என்று காட்டிக்கொண்ட பல பொறுக்கிகள், இன்று பாசிசத்தின் தூண்களாகின்றனர்.

முன்னாள் சரிநிகர் ஆசிரியர்கள் முதல் இதில் பலர் அடங்குவர். இதில் பலர் எம்முடன் சேர்ந்து போராடியவர்கள் அல்லது எம்முடன் அரசியல் உறவை வைத்திருந்தவர்கள். இன்று புலிப் பாசிசமே சரி என்றும், அதை காப்பாற்றுவதே இன்றைய வரலாற்றுத் தேவை என்கின்றனர். இந்த வரலாற்று தேவை எந்த மக்களுக்கு, எப்படி, ஏன் தேவை என்பதை இவர்களால் சொல்ல முடிவதில்லை. என்ன செய்கின்றனர், புலிகளின் கடந்தகால பாசிச வெறிச் செயல்களை நவீனமாக தம் அறிவைக்கொண்டு நியாயப்படுத்த முனைகின்றனர். வேறு எதைத்தான் இந்த புதிய பாசிசக் கும்பல் பிரச்சாரம் செய்யமுடியும்.

மக்கள் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுடன் புலிகளை விமர்சிக்கின்றனர். இதை பூசி மெழுகுவது தான், இந்தக் கும்பலின் நவீன பாசிசப் பாட்டு.

இவர்கள் தமிழ் மக்களின் உண்மை அவலத்தையிட்டு, உண்மையாக அக்கறைப்படுவது கிடையாது. புலிப்பாசிசத்துக்கு ஏற்பத் தாளம் போடுபவர்களாக, சிங்சிங்காக என்கின்றனர். இதற்கு அன்று சூழலைக் காரணம் காட்டித் தப்பியவர்கள், இன்று தாம் யார் என்பதை காட்டுகின்றனர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

வாசகர்களும் நாங்களும்

இன்று சோர்வும், அவநம்பிக்கையும், ஓடுகாலித்தனமும் நிறைந்துள்ள இவ்வேளையில் புரட்சிப் பாரம்பரியத்தை அழியவிடாது பாதுகாக்கும் உங்கள் பத்திரிகைக்கு என் வாழ்த்துகள். தத்துவரீதியாக விடாப்பிடியான ஊசலாட்டமற்ற நிலையே இன்று தேவையாகும். மார்க்சிசமானது உழைக்கும் மக்களின் தத்துவமானது வென்றே தீரும். அதை நாம் உறுதியாக நம்புவோம். ஏனெனில் அது விஞ்ஞான பூர்வமானது. இன்றைய உலகின் ஆக முன்னேறிய தத்துவம் அதுவேயாகும்.

சி. கணேசமூர்த்தி -ஜெர்மனி

நாட்டுச் சூழலிருந்து அந்நியப்பட்டு இருந்து கொண்டு கற்பனையில் போராட்டம் நடத்துவதா என்று தான் தோன்றுகின்றது. அந்தச் சூழலில் இப்போதும் இருந்து கொண்டு இது பற்றி சிந்திப்பவர்கள் ஏதாவது யோசனைகள் சொன்னால் இதைப்பற்றி நாங்களும் சிந்திக்கலாம். நடைமுறைச் சாத்தியமாகவும் இருக்கும். எல்லோரும் புத்தகங்களில் விடுதலைப்புலிகளைக் கண்டிக்கின்றார்கள். இதற்கெதிராக போராடவேண்டும், மக்களை விழித்தெழுங்கள் என்று எல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் எப்படி நாங்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு அங்கு நடைமுறையில் என்ன நடக்கின்றது, கேட்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதையெல்லாம் நன்கு தெரிந்தவர்களே கோசங்களை வைக்கின்றார்கள். எனக்கென்றால் இவையெல்லாம் நாங்கள் போராட்டத்திலிருந்து இன்னும் விலகவில்லை ஏதோ செய்கிறோம் என்று எமது மனச்சாட்சிக்குச் சமாதானம் சொல்வதற்காக செய்வது போல் இருக்கிறது.

இங்கு இப்போது ஒரு சிலரை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. விடுதலையை உண்மையான விடுதலையை உண்மையாக நேசிப்பவர்கள் நேர்மையானவர்கள். ஆனால் இவர்கள் த-வி-பு- ஆதரவாக இருக்கிறார்கள். சாதாரணமாக கதைக்கும் போது அவர்கள் செய்வது சரியா? ஏன் ஆதரவு அளிக்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் தொடங்கிய போராட்டத்தை கைவிடுவதா? மற்றவர்கள் எல்லாம் ஒதுங்கிவிட்டார்கள். அவர்கள் ஏதோ செய்கிறார்கள் உதவிசெய்கிறோம் என்று விட்டு இவர்களை விட்டால் வேறு யார் இருக்கின்றார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்.(தற்போதைய நிலைமைக்கு) அதாவது த-வி-பு விட்டால் அடுத்து( )என்ன என்று கேட்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு என்ன மாதிரி பதில் சொல்வீர்கள். மேற்குறிப்பிட்ட த-வி-பு- பிழைகளையும் விளங்கிக் கொள்கிறார்கள். பிழை விட்டாலும் அவர்களை விட்டால் வேறு இல்லை தானே என்று கதைப்பார்கள். உங்களிடமிருந்து இதற்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.

Wednesday, December 10, 2008

ஆயிரம் காலம் அடிமையென்றாயே

ஆயிரம் காலம் அடிமையென்றாயே

தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டு துரோகக் கும்பல்கள்

தமிழ் மக்களின் முதன்மை எதிரியான சிங்களப் பேரினவாதம், தமிழ் இனத்தின் இருப்புக்கே வேட்டுவைக்கின்றது. அதை வெறுமனே புலிப் பயங்கரவாதமாக காட்டுகின்றது. தமிழ் இனத்துக்கு எந்த அரசியல் உரிமையும்
கிடையாது என்று சொல்வதே, அதன் அரசியல் சூக்குமமாகும். காலனித்துவ காலம் தொடக்கம் பேரினவாத சக்திகள் படிப்படியாக தமது பேரினவாத தமிழ் விரோத செயல்களை செய்து வருகின்றது. இதை இன்று வெறும் புலிப் பயங்கரவாதமாக திரித்து உலகறியச் செய்கின்றது. ஒரு இனம் திட்டமிட்ட வகையில் பேரினவாதிகளால் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றது.

இந்த பேரினவாதத்துக்கு துணையாக, அக்கம்பக்கமாக இரண்டு தமிழ் துரோகக் கும்பல்கள் செயல்படுகின்றன. இவர்கள் தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட முடியாதவர்கள் என்று கூறியபடி, அவர்களை அடக்கி அடிமைப்படுத்தி வைத்தபடி தமது துரோகத்தை அரசியலாக்க முனைகின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான இந்த இரண்டு துரோகிகள் யார்? .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, December 9, 2008

"புயல் மையம்"

தேர்தல் காலங்களில்
சூறாவளிச் சுற்றுப் பயணம்
..
சூறாவளி ஓய்ந்தபின்
வாக்காளர்களின்
பிணங்களின் மீதும்
வாக்குறுதி வழங்க
இன்னொரு பயணம்.
..
உங்கள்
ஒரு சொட்டு கண்ணீர்கூட
வெள்ள அபாயத்தை
அதிகரிக்கக் கூடும்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மோட்டுப் புலிகளும், பினாமிகளும்


கொழும்பில் ஒரு பாரிய தாக்குதலை நடத்த முயலும் புலிகள், அங்கு இதற்கான நபர்களை நிலைநிறுத்த முடிவதில்லை. அவர்கள் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்படுகின்றனர், அழிக்கப்படுகின்றனர். மறுபக்கத்தில் பல யுத்த முனைகள். இங்கு கட்டாய பயிற்சி பெற்றவர்கள், யுத்தம் செய்ய விரும்பமின்றி தம்மைத்தாம் தோற்கடிக்கின்றனர்.

தோற்கடிக்க முடியாத யுத்தம்;, புலியின் அழிவிற்கான காலத்தை வேகமாக குறைத்து வருகின்றது. புலிகள் சிறிய வட்டத்துக்குள் சுருங்கி, சுருக்குக் கயிற்றை கொண்டு தற்கொலை செய்யும் வண்ணம் தம்மை தாம் தம் நடத்தைகளால் மேலும் பலவீனப்படுத்துகின்றனர். படிப்படியாக கடல் எல்லையை இழந்து, அந்த பலத்தையே விரைவில் இழந்து விடுகின்ற அபாயம். பலராலும் நம்பமுடியாத விடையங்கள், அன்றாடம்; நிகழ்கின்றது. அதுவே செய்தியாகின்றது.

தோல்வியை தடுக்க, புலியின் எதிர்த்தாக்குதலால்............ முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ்த்தீட்டு வில்லிசைப்பாட்டு-

தமிழ்த்தீட்டு வில்லிசைப்பாட்டு- ஆத்தூர் கோமதி குழுவினர்

Monday, December 8, 2008

புரட்சிகர கலைநிகழ்ச்சி சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்

புரட்சிகர கலைநிகழ்ச்சி சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்

வரலாற்றில் பிரபாகரன்

இது பிரபாகரன் பற்றிய வரலாறல்ல. மாறாக வலதுசாரியான பிரபாகரனை, யார்? எப்படி? பாசிட்டாக்கினார்கள் என்பதை இனம் காணும் கட்டுரை. பலரும் தனிப்பட்ட பிரபாகரனையே, பாசிட்டாக சித்தரிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மாறாக தனிப்பட்ட பிரபாகரன் அப்படி மாற்றப்பட்டார் என்பதே உண்மை. பிரபாகரனின் அறியாமையையும் பலவீனத்தையும் பயன்படுத்தி, பாசிட்டாக்கியவர்கள் பற்றிய கதை இது. இங்கு பிரபாகரன் வெறும் கருவிதான்.
தேசத்தையும் தேசிய போராட்டத்தையும் சிதைத்த பாசிட்டுகள், பிரபாகரனை தமது பாசிச முகத்துக்குரிய கதாநாயகராக்கினர்.

கொடுமையும் கொடூரமும் நிறைந்த புலிகள் வரலாற்றில், பிரபாகரன் 'எல்லாம் தெரிந்த" ஒரு அப்பாவியே. இன்று புலிக்கு பின்னால் உள்ளவர்களை விடவும், அப்பாவி. 8ம் வகுப்பே படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். எந்த சூதுவாதுமற்ற ஒரு அப்பாவி சிறுவனின் அறியாமையைத்தான், பிரபாகரன் கொண்டிருந்தான். மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டணி, இந்த அறியாமையைப் பயன்படுத்தி பிழைக்க தன் தலைமையின் கீழ் ஒரு அறிவீனமாக மாற்றினர். மக்களை மோசடி செய்து பிழைக்கும், இந்த பிழைப்புவாத அரசியல் வாதிகளின் உணர்ச்சிகரமான உரைகளை எல்லாம் உண்மை என்று நம்பினான் பிரபாகரன். இப்படி அதன் பின் சென்ற ஒரு அப்பாவி தான் பிரபாகரன். இதையெல்லாம் உண்மை என்று நம்பி, கூட்டணியின் அரசியல் எடுபிடியாக மாறினான்;. அதையே போராட்டமாக நம்பி, அவர்களுக்காக கொலை செய்ய களமிறங்கியவன் தான் இந்தப் பிரபாகரன்.

உண்மையில் கூட்டணியின் அரசியல் எதிரிகள் மீது, வன்முறையை கையாள்வதைத் தான் இவர்கள் போராட்டமாக கருதினர். இதையே கூட்டணி ஊக்குவித்தது. இப்படி அரசியல் படுகொலைகள் மூலம், அரசிடம் தாம் சலுகைகளைப் பெற முனைந்தனர். இந்த பிழைப்புவாத படுகொலை.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சிறுவர்களின் கலைநிகழ்ச்சி

சிறுவர்களின் கலைநிகழ்ச்சி

Sunday, December 7, 2008

வரலாற்றில் பிரபாகரன்

இது பிரபாகரன் பற்றிய வரலாறல்ல. மாறாக வலதுசாரியான பிரபாகரனை, யார்? எப்படி? பாசிட்டாக்கினார்கள் என்பதை இனம் காணும் கட்டுரை. பலரும் தனிப்பட்ட பிரபாகரனையே, பாசிட்டாக சித்தரிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மாறாக தனிப்பட்ட பிரபாகரன் அப்படி மாற்றப்பட்டார் என்பதே உண்மை. பிரபாகரனின் அறியாமையையும் பலவீனத்தையும் பயன்படுத்தி, பாசிட்டாக்கியவர்கள் பற்றிய கதை இது. இங்கு பிரபாகரன் வெறும் கருவிதான்.

தேசத்தையும் தேசிய போராட்டத்தையும் சிதைத்த பாசிட்டுகள், பிரபாகரனை தமது பாசிச முகத்துக்குரிய கதாநாயகராக்கினர்.

கொடுமையும் கொடூரமும் நிறைந்த புலிகள் வரலாற்றில், பிரபாகரன் 'எல்லாம் தெரிந்த" ஒரு அப்பாவியே. இன்று புலிக்கு பின்னால் உள்ளவர்களை விடவும், அப்பாவி. 8ம் வகுப்பே படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். எந்த சூதுவாதுமற்ற ஒரு அப்பாவி சிறுவனின் அறியாமையைத்தான், பிரபாகரன் கொண்டிருந்தான். மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டணி, இந்த அறியாமையைப் பயன்படுத்தி பிழைக்க தன் தலைமையின் கீழ் ஒரு அறிவீனமாக மாற்றினர். மக்களை மோசடி செய்து பிழைக்கும், இந்த பிழைப்புவாத அரசியல் வாதிகளின் உணர்ச்சிகரமான உரைகளை எல்லாம் உண்மை என்று நம்பினான் பிரபாகரன். இப்படி அதன் பின் சென்ற ஒரு அப்பாவி தான் பிரபாகரன். இதையெல்லாம் உண்மை என்று நம்பி, கூட்டணியின் அரசியல் எடுபிடியாக மாறினான்;. அதையே போராட்டமாக நம்பி, அவர்களுக்காக கொலை செய்ய களமிறங்கியவன் தான் இந்தப் பிரபாகரன்.

உண்மையில் கூட்டணியின் அரசியல் ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

டாலரில பச்சை இரத்தக் கவுச்சி வீசுதடா

அந்த யுத்த வெறியன் டாலரில பச்சை இரத்தக் கவுச்சி வீசுதடா

Saturday, December 6, 2008

இடித்துவிட்டான் மசூதியை

இடித்துவிட்டான் மசூதியை (அசுரகானம்)

வானரங்களின் பாசிசம்

நாம் எதிர்பார்த்தது போல் 450 வருடங்கள் பழைமை வாய்ந்த முஸ்லீங்களின் பாரம்பரியம் மிக்க பாபர் மசூதியை, பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிசத், பஜ் ரங்தத் ஆகிய பிழைப்புவாத அரசியல் மத வெறி கும்பல்களால் பாமர உழைக்கும் மக்கள் வெறியூட்டப்பட்டு மசூதி உடைப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மனித நாகரீகத்துக்கு சவாலாக நடத்தபட்ட இச்சம்பவத்தில் ஆயிரத்தி நூறு மனித உயிர்கட்கு அதிகமாகவும், இது சம்மந்தமாக ஏற்கனவே தொடர்ந்து வந்த தாக்குதலில் 3000 மனித உயிர்கட்கு அதிகமாகவும் பலி கொடுக்கப்பட்டுள்ளது.

வறுமை, பஞ்சம், வேலையில்லாத்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

அயோத்தி : ராம ஜென்ம பூமியா? கிரிமனல் சாமியார்களின் கூடாராமா?

சங்கர மட முதலாளி ஜெயேந்திரன், அடியாள் கும்பலுக்குப் பணம் கொடுத்து சங்கரராமனைப் போட்டுத்தள்ளிய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. கொலைகாரர்களோடு நெருங்கிப் பழகிய ஜெயேந்திரன் மிச்ச நேரங்களில் சினிமா பக்தைகளுடன் ஆன்மிகத்தை ஆய்வு செய்வதும், அதுவும் போக மேல்மட்டத் தகராறுகளை தீர்க்கும் மேல்கட்டை பஞ்சாயத்தையும் செய்து வந்தார். இந்த ஆன்மீக அவஸ்தைகளைத்தான் ரவுடிகளும் செய்து வருகின்றனர் என்றாலும், அவர்களுக்கு ஜெயேந்திரர் கையில் வைத்திருப்பது போன்ற தண்டமும், லோகக் குரு என்ற புனிதப் பட்டமும் கிடையாது.

இருந்தாலும், அவாள்களைப் பொருத்தவரை, சங்கர மடம் என்பது என்னதான் கிரிமினல் வேலை செய்து வந்தாலும் புனிதத்தை இழக்கக்கூடாது; ஏதாவது செய்து அந்தப் புனிதத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதில் குறியாயிருக்கிறார்கள்.இராமன் பிறந்த அயோத்தியில் இந்த ஜோடனைகள் எதுவுமில்லை. அங்கே மடங்களும் மாஃபியாக்களும் வேறுபடுவதில்லை என்றால் உங்களுக்குச் சற்று ஆச்சரியமாயிருக்கலாம். எனினும் உண்மை அதுதான். அயோத்தி நகரில் மட்டும் 8,000த்திற்கும் மேலும், பீகாரில் 7,000த்திற்கு அதிகமாகவும் மடங்கள் உள்ளன. பெட்டிக்கடைகளை விட மடங்கள் அங்கே அதிகமாக இருப்பதன் காரணம், இந்தியா முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலா பக்தர்களை வைத்து அங்கே விரவியிருக்கும் பக்தித் தொழில்தான். பாபர் மசூதியை இடித்து இராமனுக்கு கோவில் கட்டப்போவதாக சங்க வானரங்கள் ஊர் ஊராக ஓதியிருப்பதால், அயோத்தி '90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாகிவிட்டது. அங்கு இருக்கும் மடங்களில் மட்டும் 40,000 மடாதிபதிகள், சாமியார்கள் மற்றும் பூசாரிகள் வேலை வெட்டியில்லாமல், நெய்ச் சோறோ, நெய் சப்பாத்தியோ தின்றுவிட்டுக் காலம் தள்ளுகிறார்க..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மக்கள் போராட்டம் என்றால் என்ன?

மக்கள் எதிரிக்கு எதிராக தனக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஐக்கியப்படுதலாகும். மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு, தமது சொந்த விடுதலைக்காக தாம் போராடுவது தான் மக்கள் போராட்டம்.
இது தனக்குள்ளான ஒடுக்குமுறைகளை அனுமதிக்காது. அதாவது தனக்குள்ளான முரண்பாடுகளை களையும் போராட்டத்தை நடாத்திக் கொண்டு, எதிரியை தனிமைப்படுத்தி தனது சொந்த விடுதலையை அடையப் போராடுவது தான் மக்கள் போராட்டம்.

இப்படி போராடாத, போராட முனையாத அனைத்துமே மக்கள் விரோதப் போராட்டம் தான். இப்படி குறைந்தபட்சம் மக்கள் போராட்டம் இருக்க, மக்களை பிளவுபடுத்தி அதை அரசியலாக பாதுகாக்கும் மக்களின் எதிரிகள் எல்லாம், தாம் மக்கள் போராட்டம் நடத்துவதாக கூறிக்கொள்கின்றனர்.

தாம் மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு தான், ஜோஷ் புஸ் முதல் பின்லாடன் வரை மக்களின் தொண்டைக்குழியையே அறுக்கின்றனர். புலிகளாக இருக்கலாம், புலியெதிர்ப்பாளனாக இருக்கலாம், போலிக் கம்ய+னிஸ்ட்டாக இருக்கலாம், அரசியல் கருத்தற்றவராக கூறிக்கொள்பவராக இருக்கலாம், ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனமாக இருக்கலாம், இப்படி பற்பலவிதமானவர்கள் எல்லாம் மக்களின் விரோதிகளாகவே உள்ளனர். ஆனால் இவர்கள் தாம்............... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுயவிமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர்.
எல்லாம் சரியாக உள்ளதாக வரட்டுத்தனமாக கூறமுனைகின்றனர்.

புலிகள் தோற்று வருகின்றனர் என்று நாம் கூறுவதை, துரோகமாக, எட்டப்பத்தனமாக வழமைபோல் காட்டுகின்றனர். இது எப்படி தோற்காமல் முன்னேறுகின்றது என்று அவர்களால், காட்ட முடியாதுள்ளது. புலிகள் எதைத்தான், தமிழ் மக்களுக்கு பெற்று தருவார்கள் எனக் கூட அவர்களால் கூற முடிவதில்லை.

இப்படிப்பட்ட புலிப்போராட்டம் பல பத்தாயிரம் மக்களின் மனித உயிர்களை காவு கொண்டது. போராட்டத்தின் பெயரில், இரண்டு பத்தாயிரம் இளமையும் துடிப்பும் தியாக உணர்வும் கொண்டவர்களை பெயரில் பலியிட்டுள்ளனர். புலியுடன் முரண்பட்டதால் இதேயளவு எண்ணிக்கை கொண்ட துடிப்பும் ஆர்வமும் தியாக உணர்வும் கொண்டவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி கொன்றனர்.

இப்படி ஒரு சமூகமே புலியின் சொந்த நலன் சார் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, December 5, 2008

இப்படி இருக்கட்டும் நாளைய திருவிழா !

இனியும், உன் தலை
நிலம் நோக்கி....?
வேண்டாம் இந்த வெட்கக்கேடு.
முற்றுபுள்ளியை
முதலில் அடிமைச்சாசனத்தின்
நெற்றியில் வை.
உன் கையில் பற்றியுள்ள
மரக்குச்சிகலைத் தூக்கித் தூற எறி.
ஆதிக்க வர்க்கங்களின்
விலா எலும்பினை உடைத்து

.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, December 4, 2008

பசுத்தோல் போர்த்திய கேள்விகள்

என்னையும்

எப்படி இந்துவாக்கினர்?
..
யாரெல்லாம்
இசுலாமியர் இல்லையோ
யாரெல்லாம்
கிறித்தவர் இல்லையோ
என்பதில் தொடங்கி
யாரெல்லாம்
மனிதர்கள் இல்லையோ
என்ற பரிணாமத்தில்
மாட்டிக் கொண்டேனோ நானும்?
..
எப்படி நானும்
இந்துவாய்....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, December 3, 2008

நலம், நலமறிய நக்சல்பரி...

நக்சலைட்டுகளை
இயங்கவிடாமல் செய்துவிட்டதாம் அரசு
நம்புகிறார்கள் சிலர்.
உண்மையில்
இயங்கமுடியவில்லை மக்களால்.


.கத்திக்கு எத்தனைச் சாணைபிடித்தாலும்
ஒரு இழவு விசாரித்துவர
பேருந்து கட்டணத்தைப்
பிடிக்க முடியாமல்
துருப்பிடித்துக் கிடக்கிறது
தொழிலாளியின் வாழ்க்கை.


.அங்கங்கே ஆள் வைத்து
பணத்தாலே கண்ணி வைத்து...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, December 2, 2008

மும்பாய் பயங்கரவாதம் அநுராதபுரப் பயங்கரவாதம் ஒரு ஒப்பீட்டுப் பார்வை

இந்திய இராணுவத்துடன் புலிகள் முரண்பட்டு மோதல் நடத்திய காலத்தில் மறைந்த புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசின் இலங்கைப் பிரசைகள் மேலான பயங்கரவாத நடவடிக்கைக்கு தாங்கள் எப்படி கைக்கூலிகளானோம் என பின்வருமாறு அம்பலப்படுத்துகின்றார்.


இலங்கை நாட்டின் அநுராதபுரத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் 1985 ம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி 146 அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி தாங்கள் பெண்கள் குழந்தைகள் வயோதிபர், புத்தபிக்குகள் என யார் எவர் என்று பாராமல் சுட்டுத்தள்ளிய படுகொலையை நிகழ்த்தும்படி தங்களுக்கு ஆலோசனையும் பணமும் ஆயுதமும் பயிற்சியும் உளவுத் தகவலும் தந்து தங்களை வேண்டிக் கொண்டவர்கள் யாருமல்ல இந்திய அரசேயாகும் என்றார்.

இறைமையுள்ள ஒரு நாட்டின் அப்பாவி குடிமக்களை குறிவைத்து கொலைக்களமாக்கி அவர்களின் உயிர் குடித்து இரத்தத்தை ஆறாய் ஓடவைத்த பயங்கரவாதத்தை பணம் ஆயுதம் மற்றும் திட்டம் தயாரித்து அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்த இந்திய ஆளும் வர்க்கமே! இன்.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இந்திய இராணுவத்துடன் புலிகள் முரண்பட்டு மோதல் நடத்திய காலத்தில் மறைந்த புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசின் இலங்கைப் பிரசைகள் மேலான பயங்கரவாத நடவடிக்கைக்கு தாங்கள் எப்படி கைக்கூலிகளானோம் என பின்வருமாறு அம்பலப்படுத்துகின்றார்.

இலங்கை நாட்டின் அநுராதபுரத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் 1985 ம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி 146 அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி தாங்கள் பெண்கள் குழந்தைகள் வயோதிபர், புத்தபிக்குகள் என யார் எவர் என்று பாராமல் சுட்டுத்தள்ளிய படுகொலையை நிகழ்த்தும்படி தங்களுக்கு ஆலோசனையும் பணமும் ஆயுதமும் பயிற்சியும் உளவுத் தகவலும் தந்து தங்களை வேண்டிக் கொண்டவர்கள் யாருமல்ல இந்திய அரசேயாகும் என்றார்.

இறைமையுள்ள ஒரு நாட்டின் அப்பாவி குடிமக்களை குறிவைத்து கொலைக்களமாக்கி அவர்களின் உயிர் குடித்து இரத்தத்தை ஆறாய் ஓடவைத்த பயங்கரவாதத்தை பணம் ஆயுதம் மற்றும் திட்டம் தயாரித்து அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்த இந்திய ஆளும் வர்க்கமே! இன்.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, November 30, 2008

அடக்கியொடுக்கி திரிந்த கும்பல், அதிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசிக்கின்றோம்

இந்து பாசிட் நரந்திரமோடி நடத்திய குஜராத் படுகொலை முதல், பம்பாய் படுகொலைகள், டில்லி சீக்கிய படுகொலை, ஒரிசா கிறிஸ்தவ படுகொலைகள் என்று, ஆயிரம் ஆயிரம் படுகொலைகள் இந்த மண்ணில் நடந்தபோது அதை ரசித்தவர்கள் தான், இன்று பம்பாய்க்காக புலம்புகின்றனர். சாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக இந்து அடிப்படைவாத பாசிசம் நடத்திய கொடூரத்தையே, மதவழிபாடாக்கி கொண்டாடும் கும்பல்கள் தான், இன்று ஜயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாங்கள், இதைப் பார்த்து ரசிக்கின்றோம். காலம் ப+ராவும் கொலை வெறியுடன், மற்றவனை அடக்கியொடுக்கி திரிந்த கும்பல், அதிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசிக்கின்றோம். மனிதத்தை வதைக்கும் கொடுங்கோலர்கள், பதைபதைக்க அதன் அத்திவாரமே ஆடுவதைக் நாம் கண்டு மனக்கிளர்ச்சி கொள்கின்றோம்.

சாதியின்பெயரால், மதத்தின் பெயரால் கொன்று குவித்த ஆவிகள், இதை பார்த்து குதூகலமடைகின்றன. ஆளும் அரச பயங்கரவாதமும், அதன் துணையுடன் ஆட்டம் போடும் இந்துத்துவவாதிகளால், மனிதம் சிதைக்கப்பட்ட போதெல்லாம் எந்த நீதி விசாரணையும் நடந்தது கிடையாது. இந்தக் குற்றத்துக்காக யாரும் தண்டிக்கப்பட்டது கிடையாது. இந்த குற்றவாளிகளும் அவர்களின் ரசிகர் கூட்டமும் தான் 'பயங்கரவாதம்" தண்டிக்கப்பட்ட வேண்டும் என்று கூச்சல் போடுகின்றனர். படுபாதகமான தம் செயலுக்காக தாம் கொல்லப்படுவதற்கு எதிராக, கொல் என்று கொக்கரிக்கின்றனர். சித்திரவதைக் கூடங்களையும், சிறைக் கொட்டகைகளையும், சட்டங்களையும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இந்து பயங்கரவாதம் தான், பம்பாய் தாக்குதலை (வழி)நடத்தியுள்ளது.

பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள், இந்து பயங்கரவாத அடையாளங்களை தரித்திருந்தனரே, ஏன்!?

பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள (முஸ்லீம் தனிநபர் பயங்கரவாதம் மூலம்), இந்து பயங்கரவாத அடையாளங்களையே தம் கவசமாக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் தான் மிக வெற்றிகரமான, முழு உலகை அதிரவைத்த ஒரு தாக்குதலை அவர்கள் இலகுவாக நடத்த முடிந்தது.

இதுவும் எமக்கு ஒரு தெளிவான செய்தியைத் தருகின்றது. இந்து பயங்கரவாதிகள் தம்மை அடையாளப்படுத்தும் அடையாளங்களை 'பயங்கரவாதிகள்" தரித்ததன் மூலம், இலகுவாக அவர்கள் தம் இலக்கை அடையமுடியும் என்பதை நிறுவியுள்ளது. கடலில் தொடங்கி ஆடம்பர சொகுசு விடுதி வரை சுதந்திரமாக தாக்குதலை நடத்திச் செல்ல அனுமதித்துள்ளது.

இந்து பாசிச பயங்கரவாதிகள் நடத்திய பாபர் .................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மனித படுகொலைகளைக் கண்டு ரசிப்பவர்கள் தான், பம்பாய் மரணத்தை கண்டு புலம்புகின்றனர்

இந்து பாசிட் நரந்திரமோடி நடத்திய குஜராத் படுகொலை முதல், பம்பாய் படுகொலைகள், டில்லி சீக்கிய படுகொலை, ஒரிசா கிறிஸ்தவ படுகொலைகள் என்று, ஆயிரம் ஆயிரம் படுகொலைகள் இந்த மண்ணில் நடந்தபோது அதை ரசித்தவர்கள் தான், இன்று பம்பாய்க்காக புலம்புகின்றனர். சாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக இந்து அடிப்படைவாத பாசிசம் நடத்திய கொடூரத்தையே, மதவழிபாடாக்கி கொண்டாடும் கும்பல்கள் தான், இன்று ஜயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாங்கள், இதைப் பார்த்து ரசிக்கின்றோம். காலம் ப+ராவும் கொலை வெறியுடன், மற்றவனை அடக்கியொடுக்கி திரிந்த கும்பல், அதிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசிக்கின்றோம். மனிதத்தை வதைக்கும் கொடுங்கோலர்கள், பதைபதைக்க அதன் அத்திவாரமே ஆடுவதைக் நாம் கண்டு மனக்கிளர்ச்சி கொள்கின்றோம்.

சாதியின்பெயரால், மதத்தின் பெயரால் கொன்று குவித்த ஆவிகள், இதை பார்த்து குதூகலமடைகின்றன. ஆளும் அரச பயங்கரவாதமும், அதன் துணையுடன் ஆட்டம் போடும் இந்துத்துவவாதிகளால், மனிதம் சிதைக்கப்பட்ட போதெல்லாம் எந்த நீதி விசாரணையும் நடந்தது கிடையாது. இந்தக் குற்றத்துக்காக யாரும் தண்டிக்கப்பட்டது கிடையாது. இந்த குற்றவாளிகளும் அவர்களின் ரசிகர் கூட்டமும் தான் 'பயங்கரவாதம்" தண்டிக்கப்பட்ட வேண்டும் என்று கூச்சல் போடுகின்றனர். படுபாதகமான தம் செயலுக்காக தாம் கொல்லப்படுவதற்கு எதிராக, கொல் என்று கொக்கரிக்கின்றனர். சித்திரவதைக் கூடங்களையும், சிறைக் கொட்டகைகளையும், சட்டங்களையும், தண்டனைகளையும் மக்களுக்கு எதிராகவே 'பயங்கரவாதத்தின்" பெயரில் உருவாக்குகின்றனர். இப்படி அரச பயங்கரவாதம் மக்கள் மேல் குதறியதும், அதற்கு எதிரான போராட்டமும் தான் மனித வரலாறு.

பம்பாய் தாக்குதல், செப் 11 போல் ஆளும் வர்க்கத்ததைக் கிலி கொள்ள வைத்துள்ளது. இதைக் காட்டி யுத்த வெறியும், அடக்குமுறையும், அடிப்படைவாதமும் மேல்நிலைக்கு உசுப்பேற்றப்படுகின்றது.

இந்தத் தாக்குதல் உலகம் இரண்டாக........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பம்பாய் 'பயங்கரவாதம்" ஆளும் வர்க்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது

பம்பாய் தாக்குதல் செப் 11 இல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலைப் போன்று, மீண்டும் உலகளாவில் பரப்பரப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு ஈராக்காக, ஆப்கானிஸ்தானாக, பாகிஸ்தானாக இந்தியாவை மாற்றப் போகின்றீர்களா இல்லையா என்பதை, இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

'பயங்கரவாதம்" என்று எதை நீங்கள் கருதுகின்றீர்களோ, அது எதனால் எப்படி ஏன் உருவாகின்றது என்பதை இனம் காணவும், அதற்கு காரணமானவர்களை எதிர்த்து சமூகம் போராடதவரை இது போன்ற 'பயங்கரவாதத்தை" யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. மாறாக 'பயங்கரவாதம்" செய்யும் நபர்களை, சமூக விழிப்புணர்வற்ற நீங்கள் தான் உற்பத்தி செய்கின்றீர்கள் என்ற உண்மை, உங்களையே அழிக்கும்.

இந்த ''பயங்கரவாதம்" போட்டி போட்டு நேரடி ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, November 29, 2008

இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது

பம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர். உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர" செய்தி ஊடகங்கள் இஸ்லாமிய 'பயங்கரவாதம்" என்று மூளைச்சலவை செய்கின்றன.

அறிவு, நேர்மை என எதும் கிடையாத கும்பல்கள் எல்லாம் கொக்கரிக்கின்றது. ஐயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

ஒரு மருத்துவர் நோய் வரக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, அதற்கு தான் மருந்து கொடுத்து அந்த நோயைக் சுகப்படுத்துகின்றனர். இன்று 'பயங்கரவாதம்" என்ற சமூக நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்த வேண்டும். இதுதானே அறிவும், நேர்மையுள்ள ஒருவன் செய்ய வேண்டிய பணி. இல்லாத எல்லோரும் 'பயங்கரவாத"த்தின் தோற்றத்துக்கு துணை போபவர்கள் தான்.

இந்து பயங்கரவாதத்தின் அடிப்படை

இது சாதி அடிப்படையிலானது. தனக்குக் கீழ் 'கீழ் மக்களை" உற்பத்தி செய்கின்றது. இதை மூடிமறைக்க முஸ்லீம் மக்கள் மேல், இந்து.................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலித் தலைவர் பிரபாகரன் சுதப்பி விட்டார்

'நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்" என்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

'நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல..... ஆனால் இந்தியப் பேரரசுடன் அறுந்து போன உறவை மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம்".

போராடும் மக்கள் சக்திகளோடு அல்லாமல், மக்கள் விரோத இந்திய அரசோடு உறவுக்கு ஏங்குகிறார் புலிகளின் தேசியத் தலைவர். தென்னாசிய நாடுகள் மேலும், இந்திய தேசமெங்கும் வாழும் மக்கள் மேலும், அதிகாரத்தையும் அடக்குமுறையும் ஏவிவிட்டிருக்கும் ஆளும் சக்திகளின் உறவைத்தான், தேசியத் தலைவர் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்.

இந்த ஆளும் வர்க்கத்துக்கு எதிரான.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பரவசம் !

உயிரிலிருந்து

உள்ளெழும்புகிறது நேசம்
பல சமயங்களில்
.சொற்கள் கடந்த கவிதையாய்
சூழ்ந்து நிற்கிறது பரவசம்.
உண்மைகளை ஏந்தி வாழ்வதற்கும்,
பதாகையோடுஇணைந்து பயணிப்பதற்கும்,
வானில் எழும் பறவையாய்
உலகையே உள்வாங்கி .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, November 28, 2008

இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது

பம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர். உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர" செய்தி ஊடகங்கள் இஸ்லாமிய 'பயங்கரவாதம்" என்று மூளைச்சலவை செய்கின்றன.

அறிவு, நேர்மை என எதும் கிடையாத கும்பல்கள் எல்லாம் கொக்கரிக்கின்றது. ஐயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

ஒரு மருத்துவர் நோய் வரக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, அதற்கு தான் மருந்து கொடுத்து அந்த நோயைக் சுகப்படுத்துகின்றனர். இன்று 'பயங்கரவாதம்" என்ற சமூக நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்த வேண்டும். இதுதானே அறிவும், நேர்மையுள்ள ஒருவன் செய்ய வேண்டிய பணி. இல்லாத எல்லோரும் 'பயங்கரவாத"த்தின் தோற்றத்துக்கு துணை போபவர்கள் தான்.

இந்து பயங்கரவாதத்தின் அடிப்படை

இது சாதி அடிப்படையிலானது. தனக்குக் கீழ் 'கீழ் மக்களை"
..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

உயிர்த்தெழு !

மெளனத்தை உடை.
மர உதடு திற
பேசு !
..பூமியின் புன்னகையை
மீட்டுத் தரும்
வேட்கையோடு

.. முன்முளைத்த மரபுகளை
முறித்தெறியும் வேகத்தோடு
பேசு !........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, November 27, 2008

ஆளும் வர்க்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது பம்பாய் 'பயங்கரவாதம்"

பம்பாய் தாக்குதல் செப் 11 இல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலைப் போன்று, மீண்டும் உலகளாவில் பரப்பரப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு ஈராக்காக, ஆப்கானிஸ்தானாக, பாகிஸ்தானாக இந்தியாவை மாற்றப் போகின்றீர்களா இல்லையா என்பதை, இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

'பயங்கரவாதம்" என்று எதை நீங்கள் கருதுகின்றீர்களோ, அது எதனால் எப்படி ஏன் உருவாகின்றது என்பதை இனம் காணவும், அதற்கு காரணமானவர்களை எதிர்த்து சமூகம் போராடதவரை இது போன்ற 'பயங்கரவாதத்தை" யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. மாறாக 'பயங்கரவாதம்" செய்யும் நபர்களை, சமூக விழிப்புணர்வற்ற நீங்கள் தான் உற்பத்தி செய்கின்றீர்கள் என்ற உண்மை, உங்களையே அழிக்கும்.

இந்த 'பயங்கரவாதம்" போட்டி போட்டு நேரடி ஓளிபரப்பு ஊடாக பரபரப்பாக்கப்பட்டு, ஊடகவியல் வியாபாரம,; விளம்பரம் ஊடாக அரங்கேறுகின்றது. பெண்ணின் சதை முதல் 'பயங்கரவாத" அவலம் வரை, பணம் பண்ணுவதற்குத் தான் ஊடகவியல் சுதந்திரம் உதவுகின்றது. சமூக விழப்புணர்வுக்காக அல்ல.

கொள்ளையடித்த நாகரீக கனவான்களால் நிதிச் சந்தையைக் குப்புறக் கவிழ்த்த போது, இதே ஊடகவியல் பீதியை விளம்பரம் செய்தது போன்று, '
பயங்கரவாதமும் ... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பம்பாய் 'பயங்கரவாதம்" ஆளும் வர்க்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது

பம்பாய் தாக்குதல் செப் 11இல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலைப் போன்று, மீண்டும் உலகளாவில் பரப்பரப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு ஈராக்கா, ஆப்பகானிஸ்தானாக, பாகிஸ்தானாக இந்தியாவை மாற்றப்போகின்றீர்களா இல்லையா என்பதை, இந்திய மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

'பயங்கரவாதம்" என்று எதை நீங்கள் கருதுகின்றீர்களோ, அது எதனால் எப்படி ஏன் உருவாக்கின்றது என்பதை இனம் காணவும், அதற்கு காரணமானவர்களை எதிர்த்து சமூகம் போராடவரை இது போன்ற 'பயங்கரவாதத்தை" யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. மாறாக 'பயங்கரவாதம்" செய்யும் நபர்களை, சமூக விழிபுணர்வற்ற நீங்கள்தான் உற்பத்தி செய்கின்றீர்கள் என்ற உண்மை, உங்களையே அழிக்கும்.

இந்த 'பயங்கரவாதம்" போட்டி போட்டு நேரடி ஓளிபரப்பு ஊடாக பரபரப்பாக்கப்பட்டு, ஊடாகவியல் வியாபாரம் விளம்பரம் ஊடாக அரங்கேறுகின்றது. பெண்ணின் சதை முதல் 'பயங்கரவாதம்" அவலம் வரை, பணம் பண்ணுவதற்குத் தான் ஊடாகவியல் சுதந்திரம் உதவுகின்றது. சமூக விழப்புணர்வுக்காக அல்ல........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, November 26, 2008

"சுதந்திர உலகம்"

உலகளவில் கொள்ளையடித்தவர்களால் உருவாகியுள்ள உலக நெருக்கடி, தெளிவாக எமக்கு ஒன்றை கற்றுத் தருகின்றது. அரசுகள் என்பது மக்களை ஏய்க்கும் கொள்ளைக் கோஸ்டிகளை வழிநடத்தும் திருட்டுக் கோஸ்டி என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இவர்களின் 'ஜனநாயக" ஆட்சியில் சர்வதேச நெருக்கடிக்கு காரணமாக இருந்தவர்கள் மீதோ, மக்களின் நிதியைக் கொள்ளையடித்தவர்கள் மீதோ எந்த நீதி விசாரணையும் கிடையாது. பணத்தைத் திருடி வைத்துள்ளவர்களிடமிருந்து அதை மீளப் பறிமுதல் செய்தது கிடையாது.

பணம் எங்கும் காணாமல் போகவில்லை. அவையோ சிலரின் தனிப்பட்ட சொத்தாகியுள்ளது. மக்கள் அன்றாடம் உழைத்து கிடைத்த கூலியை வங்கியில் போட, கூலி கொடுத்தவனே மீள திருடிய கதை தான் இந்த உலக நெருக்கடி. இந்த சர்வதேச குற்றத்தை இழைத்த கொடுங்கோலர்களை பாதுகாப்பது தான், இன்றைய நெருக்கடிகள் மீதான தீர்வுகள். இதை பாதுகாக்கும் வகையில், கொள்ளைக் கோஸ்டிகளின் கையில் சட்டங்கள்.

அந்த நெருப்பின் அவலம் உங்கள் செஞ்சத்தைப் பற்றவில்லையா?

வீட்டில் புரையேறும்போதும்
யாரோ நினைப்பதாய்
உறவு பாராட்டும் உள்ளங்களே
வெளியே சிலர் போராடும்போது
நீங்கள் உறவாக நினைத்ததுண்டா?
தனது நெல்லுக்கும் கரும்புக்கும்
நியாயா விலை கேட்கிறான் விவசாயி
அவனது தற்கொலைக்கான மருந்தையும்
அந்நியக் கம்பெனிகளிடம்
வாங்கச் சொல்லி
வர்த்தகச் சட்டம் போடுகிறது அரசு.
கடனும் வட்டியுமே
கண்ணிகைகள் ஆனதனால்
தூக்கம் தொலைந்து……………..முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, November 25, 2008

 எதுங்கடா சமத்துவம் ?

காக்கி சட்டை மேசட்டை
போட்டுகிட்டு
கார்பரேஷன்ல வேல பாக்குற
சுந்தரேசு அண்ணனுக்கு மட்டுந்தான்
பீ,மூத்திரம் அள்ளுர வேல.
பழையபடியே....

பழைய சோறு கொழம்பு.....

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, November 24, 2008

அதிகாரத்தைக் கோரும் பிள்ளையானும் அது அவசியமில்லை என்று கூறும் கருணாவும்

மன்மோகன் சிங் : நவீன தருமன்

"நல்ல காலம் முடிந்தது'' இப்படி அலறுகிறது, இந்தியாடுடே வார இதழ். 21,000 புள்ளிகளாக இருந்த பங்குச் சந்தை வளர்ச்சி, 10,000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து விழுந்த பிறகு; பங்குச் சந்தை சூதாட்டத்தால் உலகக் கோடீசுவரர்களான இந்தியத் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு சடசட வெனச் சரியும்பொழுது, இப்படித்தான் ஓலமிட முடியும்.

பங்குச் சந்தையும், தகவல்தொழில்நுட்பத் துறையும், ரியல் எஸ்டேட் வியாபாரமும், சுற்றுலா உள்ளிட்ட சேவைத் துறையும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களும் இந்தியாவை வல்லரசாக்கி வருவதாகக் கூறி வந்தார்கள். ஆனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி இந்தத் தொழில்கள் அனைத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது; தாராளமயம் உருவாக்கியிருந்த நீர்க் குமிழி உடைந்து விட்டது. ஆளும்வர்க்கம் பீற்றிக் கொண்ட 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, வேரோ விழுதோ அற்ற வளர்ச்சி என்பது நிரூபணமாகிவிட்டது.

அரசு, பொருளாதாரத்தில் தலையீடு செய்வதை "லைசென்ஸ் ராஜ்ஜியம்'', "கோட்டா ராஜ்ஜியம்'' எனத் தூற்றிய முதலாளிகள், இன்று அரசாங்கம் உதவ வேண்டும் எனத் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார்கள். ஆட்குறைப்புச் செய்வதன் மூலம், புதிய முதலீடுகளைச் செய்யாமல் பணத்தை இரும்புப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக் கொள்வதன் மூலம் அரசையும் மக்களையும்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, November 23, 2008

ஊடகக் கிரிமினல்கள்

மனித அவலத்தை திரித்தும் புரட்டியும் பிழைக்கும் தம் நக்குத்தனத்தைத்தான், ஊடகக் கிரிமினல்கள் தமது 'ஊடாக சுதந்திரம்" என்கின்றனர். இதையே அவர்கள் 'ஊடக ஜனநாயகம்" என்கின்றனர். நிலவும் எல்லா பாசிசத்தையும் மிதமிஞ்சிய வக்கிரத்துடன், அதை தம் பங்குக்கு மக்களின் மேல் அள்ளிக்கொட்டிக் கொண்டு, தம்மைத் தாம் தம்பட்டம் அடிக்கின்ற பிழைப்புவாதக் கூட்டம் தான் இந்தக் கிரிமினல்கள்.

இலங்கை முதல் புலம்பெயர் நாடுகள் வரை, மொத்தத்தில் மக்களின் அவலத்தை மூடிமறைத்து, பாசிசங்களுக்கு சேவை செய்தையே தமத சமூக அறமாக பறைசாற்றி நிற்கின்ற பிழைப்புத்தனமே இவர்களின் ஊடகவியலாகின்றது. இந்த ஊடக கிரிமினல்களிடம் அறிவு, பண்பு, மனித நேயம், மனித நேர்மை என எதுவும் இவர்களிடம் கிடையாது. பாசிசத்தைக் கொப்பளித்த மக்களின் முகத்தில் காறித் துப்புகின்ற இழிவு கெட்ட பண்பு தான், இவர்களின் மொத்த சமூக அறிவாகும்.

செய்தி ஊடகங்கள் உண்மைக்கு பதில் புனைவையும், கற்பனைகளையும், திரிபுகளையும், மிதமிஞ்சிய பரபரப்பையும், அதையொட்டிய விளம்பரங்களையும், பக்கச்சார்பாக திணிப்பதையே பாசிசங்கள் வழி காட்டுகின்றன. இந்தப் பொது வேலைத்திட்டத்துக்கு அமையத்தான், இலங்கையின் மொத்த ஊடகவியலும் தரம் கெட்டு இயங்குகின்றது.

இப்படி இந்த கிரிமினல்கள் .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்!

முகம் தெரியாத தோழர் ஒருவர் எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளும் பதில்களும், அரசியல் முக்கியத்துவம் கருதி பிரசுரிக்கின்றோம்.

1. புலிகளும் ஆயுதத்தை கீழே போட்டால் என்னாகும்? புலிகளுக்கு பதிலாக தங்களது தீர்வு என்ன?

2. புலிகள் வழி தவறானது என சொன்னால் எனது நண்பன் கேட்கிறான் சரி வேறு என்ன தீர்வு என்று? இந்த கேள்விக்கு என்ன பதில் நான் அளிக்க?

3. புலிகளின் பாசிசம் என்ற விசயத்தை பேச ஆரம்பித்ததும் இந்த கேள்வி வந்தால் என்ன பதில் சொல்லலாம்?

இவைகள் தான் கேள்விகள். ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கேள்விகள். புலிகளை விமர்சிக்கும் போது அவர்களை ஆதரிப்போர், தமது அரசியலற்ற சொந்த குருட்டுத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு திருப்பியடிக்கும் தர்க்கமும் இதுவேயாகும்.

புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் என்ன நடக்கும்?.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, November 22, 2008

ஒரு வர்க்கத்தின் சொர்க்கம், நரகங்களின் மேல் தான் நிர்மணிக்கப்படுகின்றன

தனிமனித செல்வக் குவிப்பு, அமெரிக்காவில் உயர்ந்த கட்டத்தை அடைந்துள்ளது. 2004இல் அமெரிக்காவின் முதல் 500 மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் வருடாந்தரம் குறைந்தபட்சம் ஒரு கோடி டாலருக்கு மேல் சம்பளமாக பெற்றனர். மிகப் பெரிய 25 நிறுவனங்களின் தலைவர்கள் குறைந்த பட்சம் 3.5 கோடி டாலரை சம்பளமாக பெற்றனர். இதை எங்கிருந்து எப்படி பெறுகின்றனர் என்றால் மக்களின் அன்றாட உழைப்பு தான்.

1979இல் அமெரிக்கா லட்சாதிபதிகள் எண்ணிக்கை 5.2 லட்சமாகும். மொத்த மக்கள் தொகையில் 0.4 சதவீதமாகும். 1996இல் 13 லட்சம் பேர் லட்சாதிபதிகளாக இருந்தனர். இவர்கள் அமெரிக்கச் சனத் தொகையில் ஒரு சதவீதம் பேராவர். இவர்கள் அமெரிக்க நிலத்தில் 22 சதவீதத்ததை வைத்திருந்தனர். படிப்படியாக மக்களை சூறையாடுவதன் மூலம், கோடீஸ்வரர்கள் பெருக்கெடுக்கின்றனர். அமெரிக்காவில் ஒரு கோடி டாலருக்கு மேல் சொத்துடைய சமூக விரோதிகள் எண்ணிக்கை 1995இல் 1.19 லட்சமாகியது. இது 1998இல் 2.75 லட்சமாகியது. இந்த மூன்று வருடத்தில் கோடி டாலருக்கும் அதிகமான சொத்துடையோர், இரண்டு மடங்கையும் தாண்டிக் கொழுத்துள்ளனர். இதே மூன்று வருடத்தில் அமெரிக்காவில் வீடுகளின் எண்ணிக்கை 3 சதவீதத்தால் அதிகரித்தது. ஆனால் 10 லட்சம் பெறுமதியுடைய மாடமாளிகைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தால் அதிகரித்தது. மேல் இருக்கும் உயர் வர்க்கத்தின் படிநிலைக் கட்டமைப்பு செல்வக் குவிப்பு மேல் நோக்கி நகர்த்துகின்றது. கீழ் உள்ள சமூகக் கட்டமைப்பின் படிநிலையில் செல்வம் படிப்படியாக அகன்று விடுகின்றது. செல்வம் மேலும் கீழுமாக, நேர்எதிர்வீதத்தில் நாள் தோறும் மறுபங்கீட்டைச் செய்கின்றது.

இதன் விளைவு மேல்நோக்கி கொழுக்க, கீழ்நோக்கி ஏழைகளின் புதைகுழிகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள 14 ஆயிரம் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங்களின் ஆண்டு வருமானம், அமெரிக்காவில் அடிநிலையில் உள்ள 2 கோடி குடும்பங்களின் மொத்த வருமானத்துக்குச் சமமானதாகும். இது சமூகப் பிளவின் வீச்சையே எடுத்துக்காட்டுகின்றது. உண்மையில் 1999இல் அமெரிக்காவில் இருந்த முதல் 400 பணக்காரரின் சொத்தின் பெறுமானம் ......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

முசுலீம்கள் மீது மோடி வாரியிறைத்த அவதூறுகளையே திர்ப்பாகத் தந்துள்ளது.)

குஜராத் மாநிலத்திலுள்ள கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில், சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து போனதை விசாரித்து வந்த நானாவதி கமிசன், இச்சம்பவம் பற்றி இந்து மதவெறிக் கும்பல் எந்தப் பொய்யைப் பிரச்சாரம் செய்து வருகிறார்களோ, அந்தப் பொய்யையே தீர்ப்பாக அளித்திருக்கிறது.

"இச்சம்பவம் உள்ளூர் (கோத்ரா) முசுலீம்கள் திட்டம் போட்டு நடத்திய சதிச் செயல்; குஜராத் முதல்வர், அவரது அமைச்சர்கள், அம்மாநில போலீசு அதிகாரிகளுக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது; குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியும், மறுவாழ்வும் அளிப்பதில் குஜராத் மாநில அரசு எவ்விதச் சுணக்கமும் பாரபட்சமும் காட்டவில்லை'' என நானாவதி கமிசன், தனது தீர்ப்பின் முதல் பாகத்தில் அறிவித்திருக்கிறது. ""இச்சம்பவம், உள்ளூர் முசுலீம்களின் சதிச் செயல் என்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் சதிச் செயல்'' என நானாவதி கமிசன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தால், நரேந்திர மோடி இன்னும் மகிழ்ந்திருக்கக் கூடும்!

காங். கூட்டணி மைய அரசைக் கைப்பற்றிய பிறகு, ரயில்வே அமைச்சகம் கோத்ரா சம்பவம் பற்றி விசாரிக்க யு.சி. பானர்ஜி என்ற முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு கமிசன் அமைத்ததும்; அக்கமிசன் ""கோத்ரா சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்து'' எனத் தீர்ப்பளித்திருப்பதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு சம்பவம், நேரெதிரான இரண்டு தீர்ப்புகள் சுவாரசியமான முரண்பாடுதான்.

இந்து மதவெறிக் கும்பலின் ஊதுகுழலான துக்ளக் ""சோ'', ""பானர்ஜி கமிசனின் அறிக்கை, பீகார் சட்டசபை தேர்தலுக்காக லல்லு பிரசாத் யாதவ்வால் அரங்கேற்றப்பட்ட நாடகம்'' என ஒதுக்கித் தள்ளுகிறார். சோவின் தர்க்கவாதம் உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனாலும், நானாவதி கமிசனின் அறிக்கையை நீதிநெறி பிறழாதத் தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, November 21, 2008

பேரினவாதத்தின் வெற்றியை தடுத்து நிறுத்துவது எப்படி?

தமிழ் மக்களாகிய எம் கையில் அது உள்ளது. ஆனால் நாம் அடிமைகளாக்கப் பட்டுள்ளோம். செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, நாம் நடைப்பிணமாகியுள்ளோம். தமிழ் மக்களையே அழித்தொழிக்கும் பேரினவாத யுத்தத்தை ஒட்டி, தமிழ் மக்களாகிய நாம் எந்தக் கருத்தையும் சுதந்திரமாக கூற முடியாத அவலம். தமிழ் மக்களாகிய நாம், எம் சொந்தத் தலைவிதியைத் தீர்மானிக்க முடியாத வகையில் எமக்கு எதிராக பல துப்பாக்கிகள்.

ஒன்றலல் இரண்டல்ல. பல. புலிகள், துரோகக் குழுக்கள் முதல் பேரினவாதம் வரை, தமிழ் மக்கள் மேல் தம் துப்பாக்கியை நீட்டி வைத்து, இது தான் உங்கள் தலைவிதி என்கின்றன. சாதாரணமான மனித உரிமை முதல் இனத்தின் சுயநிர்ணயவுரிமை வரை மறுத்து, இது தான் தீர்வுகள் என்கின்றனர். இதைத்தான் இன்று தமிழ் மக்களாகிய நாம் அனுபவிக்கின்றோம்.

இதை மூடிமறைக்க, இவர்கள் மக்களுக்கு வித்தைகள் காட்டமுனைகின்றனர். சலுகைள், தீர்வுகள், தேர்தல்கள், பதவிகள், பந்தாக்கள், பிரதேசவாதங்கள், முதல் ஒரு வெற்றிகரமான ஒரு இராணுவத் தாக்குதல், இதன் மூலம் தமிழ் மக்களையே மீள மீள ஏமாற்றி விடவே முனைகின்றனர். இதுவே தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதை என்று சொல்லமுனைகின்றனர். ........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அம்பானியின் கனவைத் தகர்த்த விவசாயிகள் எமுச்சி!

மராட்டிய மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த கயர்லாஞ்சியில் ஏழை தலித் பூட்மாங்கே குடும்பத்தினர் 2006ஆம் ஆண்டு சாதி இந்துக்களால் கொடூரமாக வேட்டையாடப்பட்ட கதையை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.

இந்தக் கிராமத்தில் பூட்மாங்கே குடும்பத்தினருக்கு வறண்டு போன ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தங்களுக்குத் தேவைப்படும் வசதியோடு ஒரு வீடு கட்ட அந்த தலித் குடும்பம் விரும்புகிறது. ஒரு தலித் படோபமாக வீடு கட்டுவதா என்று சாதி இந்துக்கள் அதை வன்மத்துடன் எதிர்க்கின்றனர். மேலும் இரண்டு ஏக்கர் நிலத்தை கிராமத்தின் பொதுப்பாதைக்கு தேவை என்று வஞ்சகமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்த அநீதியை அந்தக் குடும்பத்தின் தாயான சுலேகாவின் உறவினர், அருகாமை கிராமத்தில் இருப்பவர், போலீசிடம் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறார். ஆனால் போலீசு இந்தப் புகார் எதையும் பதிவு செய்ய மறுக்கிறது.

ஒரு தலித் குடும்பத்தினருக்கு இவ்வளவு திமிரா என்று சினமடைந்த சாதிவெறிக் கும்பல் அந்த உறவினரைப் போட்டு அடித்ததோடு சுலேகாவையும் அவளது இளவயது மகளான பிரியங்காவையும் நிர்வாணமாக்கி கும்பலாக பாலியல் வன்முறை செய்து அருகாமை ஓடையில் கொன்று போடுகிறது. மேலும் சுலேகாவின் இருமகன்களான ரோஷனும், சுதீரும் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். குடும்பத் தலைவரான பையாலால் பூட்மாங்கே மட்டும் இந்தக் கொடூரத் தாக்குதலிருந்து தப்பிக்கிறார்.

Thursday, November 20, 2008

புலிகளின் தோல்வியுடன், இனம் காணவேண்டிய பச்சோந்திகள்


புலிகள் மற்றும் புலியெதிர்புக் கும்பலால் மட்டும் இது நிகழவில்லை. இவர்களோ முழு அரசியலையும் தம் கையில் எடுத்து, தமிழ்மக்களை தம் அரசியல் நடத்தைகள் மூலம் தோற்கடித்தனர். இதில் முதன்மையாக புலிகள் இருந்தனர். புலிகள் தமிழ் மக்களை தம் சொந்த எதிரியாகவே பார்த்தனர். தமிழ் மக்களின் ஜனநாயகமும், தமிழ் மக்களின் உரிமைகளும் தமக்கு எதிரானதாக புலிகள் கருதினர். இதனடிப்படையில் முழு தமிழ் மக்களையும் கருவறுத்தனர். இந்த புலிகளின் பாசிசத்துக்கு முகம் கொடுக்க முடியாது போனவர்கள் தான், பெரும்பாலான புலியெதிர்ப்பு நிலையெடுத்தவர்கள். இவர்கள் கொண்டிருந்த மக்கள் விரோதக் கருத்துகள், பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கும் இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கும் நேரடியாக துணை போகத் தூண்டியது. இதன் மூலம் அவர்கள் புலிகளைப் போல், தமிழ் மக்களை அடக்கியொடுக்கினர்.

இப்படி தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட்ட இரு பிரதான போக்குகள், எம்முன் வெளிப்படையாக உள்ளது. இதை விட உள்ள மற்றைய போக்கோ, சந்தர்ப்பவாத அரசியலை அடிப்படையாக கொண்டு இயங்கியது. புலிகளின் தோல்வியும், எதிர்காலத்தில் எழுகின்ற மக்கள் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஏகாதிபத்தியக் கொள்ளையும் சி.பி.ஐ.-இன் மொன்னைத்தனமும்

Wednesday, November 19, 2008

புலி ஒழிப்பையா பேரினவாதம் நடத்துகின்றது?

இல்லை. மாறாக தமிழ் மக்களை ஒழித்துக்கட்டுகின்றனர். தமிழ் மக்களின் ஒவ்வொரு உணர்வையும், புலிப் பாசிசத்தை மூலதனமானக் கொண்டு பேரினவாதம் வேட்டையாடுகின்றது. தமிழ் மக்களின் இருப்பே இன்று கேள்விக்குள்ளாகி நிற்கின்றது.

புலிகளின் பாசிச பயங்கரவாதத்தை உலகுக்கு காட்டியபடி, அழிப்பது தமிழ் மக்களின் அடிப்படையான வாழ்வியலைத்தான. இந்த அடிப்படையான உண்மையை புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி மறுதலிக்கின்றது. இந்த வகையில் புலிகளும், புலி எதிர்ப்பும் பேரினவாதத்துக்கு தத்தம் அரசியல் வழிகளில் உதவுகின்றனர்.

ஒருபுறம் பேரினவாதம் தமிழ் மக்களையல்ல புலிகளையே அழிப்பதாக புலியெதிர்ப்பு கூச்சல் போடுகின்றது. மறுபுறம் தமிழ் மக்களுக்காகவே தாம் மரணித்துக்கொண்டிருப்பதாக புலிகள் ஓப்புக்கு ஒப்பாரி வைக்கின்றனர்.

பேரினவாதம் வழமைபோல் தனது பேரினவாத வழிகளில் புலிகளின் பெயரில் யுத்தத்தை செய்கின்றது. தமிழ்பேசும் மக்களின் எந்த பிரச்சனையும், இவர்களாக தீர்க்கப்படப் போவதில்லை. தமிழ் மக்களை புலிகளின் பெயரில் அழித்தொழிக்க, காலத்தை இழுத்தடிப்பதைத் தாண்டி,.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலிகளின் தோல்வியை நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம்?

மக்களின் வரலாற்றில் எது நடக்கக் கூடாதோ, அது இன்று அவர்கள் வரலாறாகி விடுகின்றது. மக்களிள் துயரமும் துன்பமும் விடுதலையின் பெயரில் வாழ்வாகி விடுகின்றது. இதை போராட்டம் என்று கூறி, தன் சொந்த முடிவை தானே தெரிவு செய்து கொண்டது.

இப்படிப் புலிகள் தம் தோல்வியையும், அழிவையும், தாமே தெரிவு செய்து தம் சொந்த வழியில் ஏற்படுத்திக் கொண்டனர். இதை நாம் தீர்மானிக்கும் சக்தியாகவோ, தடுக்கும் சக்தியாகவோ இருந்தது கிடையாது.

மறுபக்கத்தில் புலிகளின் சொந்த அழிவையிட்டு சிலர் மகிழ்வது போல், சிலர் அழுவது போல், இதை நாம் எடுக்கவில்லை. அப்படியானல் நாம் இதை எப்படிப் பார்க்கின்றோம்? மக்கள் இதையிட்டு என்ன நினைக்கின்றனர்? இவையெல்லாம் எம் முன்னுள்ள அடிப்படையான கேள்விகள்.

இந்த கேள்விகள், விருப்பங்கள், பார்வைகள், இதையொட்டிய கருத்துகள் இந்த நிலைமையை மாற்றிவிடாது என்ற உண்மை ஒருபுறம். மறுபுறத்தில் இதை பற்றிய தெளிவு தான், மனித குலத்தை எதிர்காலத்தில் மாற்றி அமைக்கும். இதன் அடிப்படையில் தான், எம் எதிர்வினைகள்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, November 18, 2008

ஏகாதிபத்தியக் கொள்ளையும் சி.பி.ஐ.-இன் மொன்னைத்தனமும்


சூதாடி முதலாளித்துவம் அடித்த கொள்ளையின் விளைவாக, உலகம் முழுவதும் கொள்ளைநோய் போலப் பரவி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து உலக முதலாளித்துவத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரமுகர் முன்வைத்திருக்கும் ஆலோசனைகள் இவை. அந்தப் பிரமுகர் யாராயிருக்கும் என்று யூகிக்க முடிகிறதா? மன்மோகன் சிங்? கமல்நாத்? அலுவாலியா? ப.சிதம்பரம்? இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா என்பதுதான் சரியான விடை. நியூயார்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுக்குழுவின் நிதி மற்றும் பொருளாதாரக் குழுவின் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில் கண்டெடுத்த முத்துக்கள் இவை. (பார்க்க: தினமணி 15.10.08)

Monday, November 17, 2008

புலிகளின் தோல்வியை நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம்?

மக்களின் வரலாற்றில் எது நடக்கக் கூடாதோ, அது இன்று அவர்கள் வரலாறாகி விடுகின்றது. மக்களிள் துயரமும் துன்பமும் விடுதலையின் பெயரில் வாழ்வாகி விடுகின்றது. இதை போராட்டம் என்று கூறி, தன் சொந்த முடிவை தானே தெரிவு செய்து கொண்டது.

இப்படிப் புலிகள் தம் தோல்வியையும், அழிவையும், தாமே தெரிவு செய்து தம் சொந்த வழியில் ஏற்படுத்திக் கொண்டனர். இதை நாம் தீர்மானிக்கும் சக்தியாகவோ, தடுக்கும் சக்தியாகவோ இருந்தது கிடையாது.

மறுபக்கத்தில் புலிகளின் சொந்த அழிவையிட்டு சிலர் மகிழ்வது போல், சிலர் அழுவது போல், இதை நாம் எடுக்கவில்லை. அப்படியானல் நாம் இதை எப்படிப் பார்க்கின்றோம்? மக்கள் இதையிட்டு என்ன நினைக்கின்றனர்? இவையெல்லாம் எம் முன்னுள்ள அடிப்படையான கேள்விகள்.

இந்த கேள்விகள், விருப்பங்கள், பார்வைகள், இதையொட்டிய கருத்துகள் இந்த நிலைமையை மாற்றிவிடாது என்ற உண்மை ஒருபுறம். மறுபுறத்தில் இதை பற்றிய தெளிவு தான், மனித குலத்தை எதிர்காலத்தில் மாற்றி அமைக்கும். இதன் அடிப்படையில் தான், எம் எதிர்வினைகள் அமைகின்றன.

நாம் புலிகளின் சொந்தத் தோல்வியை எதிர்மறையில் கற்றுக்கொள்ளக் கோருகின்றோம். பல ஆயிரம் ஆயுதம் ஏந்திய உறுப்பினர்கள் முதல் விமானங்கள் கொண்ட ஒரு இயக்கம்,..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, November 16, 2008

ஆப்பை வைக்கும் கருணாவும், ஆப்பிளுக்கும் பிள்ளையானும்

கிழக்கின் ஜனநாயக விடிவெள்ளிகள் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளுகின்றனர். ஜனநாயகத்தை அள்ளிக்கொடுத்த பேரினவாதம், அதிகாரத்துக்காக கொலை செய்வதை அங்கீகரிக்கின்றது. தமக்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது என்பதே, புலிகள் முதல் ஜனநாயக பாராளுமன்றம் வரையான பொதுவான நியதி. இப்படி இலங்கையில் இரண்டு பாசிசம் கொடிகட்டிப் பறக்கின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவராக பிரபாகரன் இருக்க, அவருக்காக கொலை செய்து கிழக்கின் தலைவரானவர் தான் இந்தக் கருணா. அதை அவர் என்றும் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இன்று அதே கருணா, தான் தலைவராக இருக்க செய்யும் கொலை தான் ரகுவின் கொலை. திடீர் திடீரென பிள்ளையான் முகாமில் நடக்கும் உட்கொலைகள் முதல் செய்தவர்கள் காணாமல் போதல் அனைத்தும் கருணாவின் ஜனநாயக திருவிளையாடல் தான்.

இப்படி அரசின் துணையுடன் கிழக்கில் ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கின்றது. இதை ஆதரித்துக் கும்மியடிக்கும் புலம்பெயர் குஞ்சுகள். பாராளுமன்ற பதவிகள்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய பிறப்பு என்ன?

"இயக்கவாத மாயை உருவாக்கிய "விடுதலைப் போராட்டம்"முடிவுக்கு வருகிறது,அதன் மீட்சியாக இன்னொரு வகையிலான புதிய அரசியல் கோரிக்கை முன்னெழும்.அது,முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக இருக்கும்.தென்கிழக்காசியிவில் நிலவிய புரட்சிகர அபாயத்திலிருந்து கிழக்காசிய ஆளும் வர்க்கங்கள் தற்காலிகமாக விடுபடுகின்றன.இனி நிகழப்போகும் புலிகளின் மீள் உருவாக்கத்திலிருந்து,புதிய தெரிவுகள்-புதிய பாணிலிலானஇயக்க அமைப்பாண்மையைக் கோரிக் கொள்ளும்?."

இன்றைய ஈழப்போராட்டச் சூழலில் களத்தில் போராடுவதாகச் சொல்லும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமகாலத்தினதும்-இன்றையதுமான இராணுவ-அரசியல் தோல்விகள் உண்மையில் தவிர்க்கமுடியாத ஒன்றா?,புலிகளின் கட்டமைப்புச் சிதைந்து,அந்த இயக்கம் உண்மையிலேயே அழிந்துவிடுமா?இவர்கள் எந்த வகையில் இத்தகைய நிலைமைக்கு உள்ளானார்கள்?இத்தகைய கேள்விகள் நமக்குள் தொடர்ந்து எழுகிறது அல்லவா,இவைகள் உண்மையில் நமது மக்களின்மீதான கரிசனையின் வெளிப்பாடுகளால் மட்டுமல்ல எழுகிறது............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?

யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் என்ன? இது அரசியல் ரீதியானதே ஒழிய இராணுவ ரீதியானதல்ல. ஆனால் இதைக் காண மறுப்பதும், இதை இராணுவ ரீதியாக காண்பதும் புலி மற்றும் புலியல்லாத புலியெதிர்ப்பு தரப்பின் இன்றைய கண்ணோட்டமாகவே உள்ளது.
ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.

இந்த அவலமான துயரமான நிலையில், இந்த யுத்தம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. இன்று இந்த யுத்தம் தோல்வி கண்டுவரும் நிலையில், ஒரு இனத்தின் மொத்த அழிவும் நிதர்சனமாகியுள்ளது. புலிகள் ஒருபுறமும், மறுபக்கமாக புலியெதிர்ப்பு ஒநாய்க் கூட்டமும், மக்களை தமது எடுபிடிகளாக்கி, தாம் நினைத்த தமது மக்கள் விரோத வக்கிரங்களை தமிழ் மக்களின் தீர்வாக காட்டுகின்றனர்.

இந்த நிலையில் புலிகள் என்றுமேயில்லாத அளவுக்கு இராணுவ ரீதியாக தோற்றுக் கொண்டிருக்கின்றனர். பேச்சவார்த்தை என்ற அரசியல் மேசையில் தோற்றவர்கள், அதைத் தொடர்ந்து இன்று இராணுவ அரங்கில் தோற்பது தொடங்கியுள்ளது. அரசியல் மேசையில் தோற்று வந்த ஒரு நிலையில், வெல்வதற்காக அவசரமாகவே ஒரு தலைப்பட்சமாக வலிந்த ஒரு இராணுவ அரங்கைத் தொடங்கினர்.

இப்படி உத்தியோகப+ர்வமாக அறிவிக்கப்படாத.................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, November 15, 2008

புலியின் தோல்வி தவிர்க்க முடியாதது

புலிகள் தாமே தேர்ந்தெடுத்த தோல்வி இது. இது பேரினவாதத்தின் சொந்த இராணுவ வெற்றியல்ல. இது தமிழ் மக்களின் சொந்த வெற்றியுமல்ல. தமிழ்மக்களோ அனைத்துத் தரப்பாலும் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்கள் மேல் புலிப் பாசிசத்தை நிறுவிய புலிகள், அதன் மூலம் மக்களை தோற்கடித்து அதை இராணுவத்தின் வெற்றியாக்கியுள்ளனர்.


புலிகளின் தோல்வி பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாதவர்கள் கூட, இது நடந்துவிடும் என்று இன்று நம்பத் தொடங்கியுள்ளனர். புலிப் பினாமிகளான கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட, புலிகளை தோற்கடித்தாலும் விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்று பேசுமளவுக்கு நிலைமை வேகமாக மாறிச்செல்கின்றது.

தொடர்ந்தும் தொடரும் போராட்டம் பற்றி வேடிக்கை காட்டுகின்றனர். புலிகளின் இந்த பொம்;மைகள், வாய்வீச்சைத் தவிர வேறு எதுவும் செய்ய லாயக்கற்ற பினாமிகளின் உளறல்கள் இவை. சுயநிர்ணயம் என்றால் என்ன என்ற தெரியாத மலட்டுச்சமூகத்தை உருவாக்கியுள்ள புலிகள், அனைத்தையும் அழித்து விட்டு கதை சொல்கின்றனர். புலிகள் அழிந்தவுடன், பேரினவாதத்தின் கோமணத்தை எடுத்துக் கட்டும் முதல்தரமான பொறுக்கிகள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் எமக்கு கிடையாது.

புலிகளை தோற்கடிக்கும் புறநிலையான நெருக்கடிகள் எவை

அனைத்தையும் இராணுவ வடிவில் கட்டமைத்த புலிகள், சமூகத்தை தம் பாசிச கட்டமைக்குள் அடக்கியொடுக்கினர். இதன்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மின்வெட்டு : பற்றாக்குறையா? மோசடியா?


ஏற்கெனவே நிலவி வரும் கடுமையான மின்வெட்டின் காரணமாக, தமிழகத்தின் தொழிலும் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. கோவை, சேலம், ஈரோடு, கரூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஜவுளித் தொழிலும், ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலும் ஏறத்தாழ முடங்கி விட்டன. தீப்பெட்டி, உப்பு, மீன் பதப்படுத்தல், அச்சகம் முதலான சிறு தொழில்கள் அனைத்தும் நசிந்து விட்டது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வேலையிழந்து வாழ்விழந்து நிற்கின்றன. பல கிராமங்கள் மின்வெட்டால் வாரக்கணக்கில் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்வெட்டால் குடிநீர் விநியோகம் பல நாட்களுக்குத் தடைப்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.

Friday, November 14, 2008

மாத்தையாவும் பிரபாகரனும் - பிள்ளையானும் கருணாவும்

செம்மறித் தமிழர்களுக்கு எல்லோரும் நாடகம் காட்டுகின்றனர். மோதலும் - சமாதானமும் என்று, போட்டோவில் காட்சியளிக்கின்றனர். ஆம் அன்று மாத்தையாவும் பிரபாகரனும் இப்படித்தான் தமிழ் மக்களுக்கு கதை சொன்னார்கள். கடைசியில் மாத்தையாவின் கதை அனைவரும் அறிந்ததே.

காலில் இரும்பிலான விலங்கு ஓட்டப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, எலும்புகள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டான் மாத்தையா. தலைவர் உபதலைவர் சண்டை, இப்படித்தான் புலிகளின் வரலாற்றில் முடிந்தது. கொல்லப்பட்ட மாத்தையா ஒன்றும் புனிதமானவனல்ல. இதையே அவனும் அன்றாடம் செய்தவன். புலியின் அதே விதி, அவனையும் விட்டுவைக்கவில்லை.


இதேபோல் இன்று பிள்ளையான் கருணா மோதல். இலங்கை அரசின் கைக்கூலிகளுக்குள் நடக்கும் எலும்புச் (பதவிச்) சண்டை. ஆளையாள் கொல்வதில் தொடங்கிய இந்தச் சண்டை, ஒருவர் கொல்லப்படும் வரை தொடரும். அதுவரை நாடகங்களும் தொடரும். இவை அனைத்தும், தமிழ் மக்களின் பெயரில் அரங்கேறுகின்றது.

கருணா புலியை விட்டு விலகிய பின், இலங்கை அரசின் கைக்கூலியாக மாறினான். இருந்தபோதும் மக்கள் விரோதியாக புலிகளில் இருந்தாலும், புலிகளின் கொலைக் கும்பலுக்கு முன்னால் சுதந்திரமாக நடமாட முடியவி;ல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு பிள்ளையான், கருணாவின் முதுகில் குத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினான். கருணாவின் விசுவாசிகளைக் கொன்றான்.

பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரத்துக்கு ஏற்ற........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

உத்தப்புரம் : இதுதான் சூத்திர ஆட்சி!

மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சித்ரா எனும் இளம்பெண் காச நோயினால் இறந்து விட்டார். அப்பெண்ணின் பிணத்தைப் பார்த்து அழுதிடக் கூட அவரைப் பெற்ற தந்தை வரவில்லை. உடன்பிறந்த சகோதரர்கள் மூவரும் வரவில்லை. அவர்கள் மட்டுமல்ல, பிணத்தைப் புதைக்கக் கூட அங்கு ஆண்களே வர முடியவில்லை.

உத்தப்புரத்திலுள்ள தாழ்த்தப்பட்டோர், கொடிக்கால் பிள்ளைமார் குடியிருப்பிற்குள் வரக்கூடாதென்பதற்காக, 300 அடி நீளச் சுவர் ஒன்றை எழுப்பி 18 ஆண்டுகளாக சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தனர், அச்சாதியினர். இந்த ஆண்டு ஏப்ரல்மே மாதங்களில் "மார்க்சிஸ்ட்' கட்சி இச்சுவரை இடிக்கக் கோரிப் போராடியது. "மார்க்சிஸ்ட்' கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் அங்கு வரப்போவதாய் அறிவித்தார். உடனே, வெறும் 15 அடி நீளச்சுவரை மட்டும் அவசரமாய் தமிழக அரசே இடித்துப் பொதுப்பாதை ஒன்றை உருவாக்கியது.

Thursday, November 13, 2008

அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்புப் போர் : ஒட்டகம் மூக்கை நுழைத்த கதை


கடந்த செப்டம்பர் 3ஆம் நாளன்று பாகிஸ்தானின் மேற்கே, ஆப்கானின் எல்லையை ஒட்டியுள்ள வஜீரிஸ்தான் எனும் பழங்குடியின மாகாணத்திலுள்ள ஜலால்கேல் கிராமத்தில் அமெரிக்கப் படைகள் ஹெலிகாப்டரில் வந்திறங்கின. ஹெலிகாப்டர்களின் பேரிரைச்சலால் அச்சத்தோடு கிராம மக்கள் வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்தனர். நிராயுதபாணிகளான அக்கிராம மக்கள் மீது அமெரிக்கப் படைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தின. அதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம். அக்கிராம மக்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருக்க, அமெரிக்கப் படைகள் எவ்விதச் சலனமுமின்றி பறந்து சென்றன.

ஜலால்கேல் கிராமத்தில் நடந்ததைப் போலவே கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் எல்லைப்புற பகுதியில் அமெரிக்கப் படைகள் நான்குமுறை அத்துமீறி நுழைந்து, கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்


இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, November 11, 2008

 (வன்னி) மக்களின் உண்மை அவலத்தை யாரும் பேசுவது கிடையாது!

(வன்னி) மக்கள் பற்றி புலிகள் என்ன நினைக்கின்றனரோ, அதுபோல் அரசு என்ன நினைகின்றனரோ, அதைபற்றி மட்டும்தான் பேசுகின்றனர். உண்மையில் இவர்கள் சொல்வதற்கு எதிராகவும் அல்லது ஆதாரவாகவும் குலைக்கின்றனர். இப்படி மனித வாழ்க்கை திரிக்கப்பட்டு, குறுகிய பிரச்சார நோக்கின் அடிப்படையில் தான் உலகில் முன் கொண்டு வரப்படுகின்றது.

ஈழத்துப் புலிப்பினாமிகள் முதல் தமிழ்நாட்டில் கடைகெட்டுப் போன பிழைப்புவாதிகள் வரை, இதைத் தாண்டி மக்களை மக்களாக யாரும் பார்க்கவில்லை. அந்த (வன்னி) மக்களின் பிரச்சனைகள் என்ன? அவர்கள் என்ன நினைக்கின்றனர்? என்பது பற்றியெல்லாம், யாருக்கும் எந்த அக்கறையும் கவலையும் கிடையாது. இதுதான் உண்மை.

இந்த மக்களிள் அவலமோ மிகப்பெரியது. அது மக்களுகே உரிய அவலம். எந்த நாதியுமற்ற நிலையில், கேட்பாரற்று நசிந்து நலிந்து கிடக்கின்ற சமூக அவலம்.

இவைகள் அனைத்தும் வன்னி மக்களின் உற்றார் உறவினர் நண்பர்களிடையே மட்டும், பகிர்ந்து கொள்ளப்படும் துயரங்களாக உள்ளது. எந்த ஊடாகமும் இதைப் பேசுவது கிடையாது. அவையோ புலி - அரசு என்ற வட்டத்தைச் சுற்றி, அதை திரித்தும் புரட்டியும், கதைகள் எழுதுகின்றன, கதைகள் சொல்கின்றன. துயரம்பற்றி தம் குறுகிய நோக்கத்துக்காக, திரித்தும் பரட்டியும் ஒரு பக்கமாக மட்டும் பிரச்சாரம் செய்கின்றனர்.

வன்னி மக்களுடன் தொடர்பில் உள்ள ஒவ்வொருவருவரிடமும், அந்த மக்கள் பற்றிய வெளிவராத கண்ணீர் கதைகள் பற்றிய உண்மைகளும் அனுபவங்கங்களும் உண்டு. இன்று ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, November 10, 2008

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -1(பகுதி - 02) - மருதையன்

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -1(பகுதி - 02) - மருதையன்

சோமாலியா : ஏகாதிபத்தியங்களின் அட்டூழியம்! யுத்தபிரபுகளின் சூரத்தனம்!

அரபிக் கடலின் மேற்கே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உச்சியிலுள்ள ஏடன் வளைகுடாவின் செங்கடலில் இதமாக அலைவீசிக் கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 25ஆம் நாளன்று ஏடன் வளைகுடா வழியாக உக்ரேனிய நாட்டின் ""எம்.வி.ஃபைனா'' என்ற ஆயுதத் தளவாட சரக்குக் கப்பல் செங்கடலில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. திடீரென அதிநவீன ஆயுதங்களுடன் விசைப்படகுகளில் திரண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கப்பலை வழிமறித்து,

மாலுமிகளைச் சிறைபிடித்து அச்சரக்குக் கப்பலைக் கடத்திச் சென்றனர். கப்பலையும் மாலுமிகளையும் விடுவிக்க வேண்டுமானால், அக்கப்பல் நிறுவனம் 80 லட்சம் டாலர் (ஏறத்தாழ 36 கோடி ரூபாய்) தரவேண்டும் என்றும், இல்லையேல் மாலுமிகளையும் கப்பல் ஊழியர்களையும் சுட்டுக் கொன்று விடுவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

""ஐயோ! கடற்கொள்ளையர்கள்!'' என்று அலறியது அக்கப்பல் நிறுவனம். உக்ரைன் நாட்டு சரக்குக் கப்பல் மட்டுமல்ல; கடந்த ஜனவரியிலிருந்து ஏடன் வளைகுடா பகுதியில் 69 சரக்குக் கப்பல்கள் கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளன. 27 கப்பல்கள் கடத்திச் செல்லப்பட்டு கடற் கொள்ளையர்களின் பிடியில் உள்ளன. 200க்கும் மேற்பட்ட மாலுமிகளும் கப்பல் ஊழியர்களும் பிணைக் கைதிகளாக்கப்பட்டுள்ளனர்.

உக்ரேனிய ஆயுதத் தளவாட சரக்குக் கப்பல் கடத்திச் செல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாக, ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட ""எம்.வி. ஸ்டோல்ட்வலோர்'' என்ற இரசாயன சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இக்கப்பலின் தலைமை மாலுமியான கேப்டர் பிரபாத்குமார் கோயல் இந்தியராவார். அவருடன். ........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, November 9, 2008

யார் இந்த ஓபாமா?

மக்களை பிரச்சனைகளை தீர்க்கமுனையும் ஒரு அழகிய கறுப்பு முகம். இப்படித்தான் உருவகப்படுத்தப்படுகின்றர். இதன் பின்னால் இருப்பதோ, சூதும் நயவஞ்சகமும் கடத்தனமுமாகும்.

இந்த ஓபாமா எப்படி வழிபாட்டுக்குரியவரானர். மக்களின் அவலம்தான், இதற்கு எதிர்மறையில் பதிலளிக்கின்றது. சமூக அவலம் ஓபாமா மூலம் தீரும் என்ற எதிர்பார்ப்பு, இதில் மண்டிக்கிடக்கின்றது.

உண்மையில் வெள்ளை அமெரிக்காவில் ஒரு கறுப்பன் ஆட்சிக்கு வந்தது என்பது, கறுப்பர்களுக்கு விடிவு காலம் என்ற பிரமை உருவாக்கியுள்ளது. மேற்கு உலகமாகட்டும், அமெரிக்கவாகட்டும், இயல்பாகவே வெள்ளை நிறவெறியின் அடையாளமாகும். வெள்ளை மேலாதிக்கம்தான் உலகம் என்ற அடிப்படைக் கோட்பாடுக்கு எதிரான எதிர்வினைதான், ஓபாமா மீதான வழிபாடாகின்றது. மறுபக்கத்தில் வெள்ளையினவெறி அமெரிக்க எப்படி ஓபாமாவுக்கு வாக்களித்தது. கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்கா மக்களை ஆண்ட குடியரசுக் கட்சிக்கும், புஸ்சுக்கும் எதிரான கடுமையான சமூக எதிர்வினை தான், மாற்று எதுவுமின்றி கறுப்பு ஓபாமாவின் வெற்றியாகின்றது. இப்படி கறுப்பு வெற்றி தற்செயலானது.

உலகெங்கும் மக்கள் சந்திக்கின்ற மனித அவலத்தின் ஒரு வெட்டமுகம் தான், இந்த வெற்றி. அமெரிக்கா முதல் உலகம் வரை, இதன் பிரதிபலிப்பு எதார்த்தமானதாக உள்ளது. இது மாற்றம் பற்றி நம்பிக்கையையும், பிரமிப்பையும் அடிப்படையாக கொண்ட வெற்றியாக புரித்து கொள்னப்படுகின்றது.

இதை தான் செய்யப்போவதாக பீற்றிக்கொண்ட ஓபாமாவோ, மாபெரும் மோசடிக்காரனாக மாறியுள்ளார். 'அமெரிக்க மக்களிடம் ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஆர்.எஸ்.எஸ். இன் சைவப்புலி வேடம் கலைந்தது

மகாராஷ்டிராவின் மலேகான் நகரிலுள்ள பிகூ சதுக்கத்தில் அமைந்துள்ள மசூதி அருகே கடந்த செப்டம்பர் 29ஆம் நாளன்று ஆர்.டி.எக்ஸ். வகைப்பட்ட குண்டுவெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர்; 80 பேர் படுகாயமடைந்தனர். அதேநாளில் குஜராத்திலுள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தின் மோடசா நகரின் சுகாபஜாரில் குண்டு வெடித்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்; 10 பேர் படுகாயமடைந்தனர்.

மலேகான் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஒரு வெள்ளி நிற மோட்டார் சைக்கிள் சிதிலமடைந்து கிடந்தது. இரண்டு மர்ம நபர்கள் ஒரு பையை அந்த மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டுச் சென்றனர் என்றும் அவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றும் போலீசார் தமது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டனர். ரம்ஜான் பண்டிகைக்கு இரு நாட்கள் முன்னதாக மசூதி அருகே இக்குண்டு வெடிப்பு நடந்ததால், முஸ்லீம்கள் ஆத்திரமடைந்து தங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, போலீசார் மீது கல்லெறிந்து தாக்கவும் செய்தனர்.

ஏற்கெனவே மலேகான் நகரில் 2006ஆம் ஆண்டில் முஸ்லீம்கள் மீது இந்துவெறியர்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளதால், மீண்டும் அதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமலிருக்க சிறுபான்மை முஸ்லீம்கள் பயம் கலந்த எச்சரிக்கை உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 29 அன்று, மசூதி அருகே வெற்றிலைபாக்கு கடையை நடத்தி வரும் அன்சாரி என்ற முதியவர், தனது கடை எதிரே அனாதையாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு,............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்