தமிழ் அரங்கம்

Wednesday, January 7, 2009

புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை

புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை

கேலிக் கூத்தாகிய போராட்டம், துன்பவியலாக முடிகின்றது

கடமைகளுள்ள உரிமைகளையோ, உரிமைகளுள்ள கடமைகளையோ தமிழ் மக்கள் கொண்டிருக்கவில்லை. அதாவது கடமைகளில்லாத உரிமைகளையோ, உரிமைகளில்லாத கடமைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். இப்படி இதிலிருந்து மக்கள் பலாத்காரமாக அன்னியமாக்கப்பட்டனர். மக்கள் மந்தைகளாக, ஆடு மாடுகள் போல் எந்த உரிமையுமற்ற நடைப்பிணமாக வாழ்வதைத்தான், தமிழ்மக்களின் உரிமைகள் கடமைகள் என்றனர்.

இதை மூடிமறைக்க ஆர்ப்பாட்டமான பேச்சுகள், பொய்கள், நிச்சயமற்ற உளறல், தடுமாற்றம், குழப்பம், தெளிவற்ற பிதற்றல், இதுவே மனித அறிவாகியது. இவை கடமைகளுள்ள உரிமைகளையும், உரிமைகளுள்ள கடமைகளையும் இழந்த மக்கள் முன், (புலித்) தேசியமாகியது.

திட்டம் கிடையாது, நோக்கம் கிடையாது. மக்கள் பற்றிய எந்த அக்கறையும் கிடையாது. துவக்கெடுத்தவர்களும், சுட்டவர்களும், கடத்தல்காரர்களும், கொலைகாரர்களும் கதாநாயகர்களாகி, விடுதலையின் பெயரில் ஒரு இனத்தையே அழித்துவிட்டனர். புலிகள் மட்டுமல்ல, இன்று அரசின் பின் மண்டியிட்டு தொழும் தொழுநோய்க்காரர்கள் அனைவரும் இந்தப் பாதையில் தான் பவனிவந்தவர்கள்.

மக்களோ தம் வரலாற்றை தாங்கள் விரும்பியவாறு உருவாக்க விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் விரும்பியவாறு எல்லா நேரமும், வரலாற்றை உருவாக்க முடிவதில்லை. மக்களின் அறியாமை, அவர்களின் விழிப்புணர்வற்ற தன்மை, செயலற்ற தன்மை, அவர்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. இதனால் எல்லாம் கேலிக்கூத்தாகி, மனித வரலாறே துன்பவியலாக மாறிவிடுகின்றது. மக்களை மந்தைகளாக மாற்றி, அவர்களை தம் அதிகாரத்தின் கொலுசில் கட்டி விடமுனைகின்றனர்.

மக்களின் பெயரில் சில.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, January 6, 2009

ஈழப்போரட்டத்தை புரிந்துகொள்ள உதலும் 6 நூல்கள்

இவை ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற, பல்வேறு அவலங்களை பிரதிபலிக்கும் நூல் தொகுப்புகள். ஈழத்தமிழர் பற்றி பிழைவாத அரசியல் பேசுகின்ற ஒருபக்க (புலி சார்பு) செய்திகளுக்கும் தரவுகளுக்கும் மாறாக, ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற பல்வேறு கொடூமைகளைளின் உண்மைத்தன்மைகளை, வெளிக்கொண்டுவரும் நூல்கள் இவை.


ஈழத்தமிழரின் இன்றைய அவல நிலைமைக்கு சிங்கள பேரினவாதம் மட்டும் காரணமல்ல. மாறாக பேரினவாதத்தை எதிர்த்து போராடியதாக கூறிய குறந்தேசிய புலிகளும், எப்படி காரணமாக இருந்தனர் என்பதை இந்த நூல்கள் ஊடாக நாம் புரிந்து கொள்ளமுடியும்.


ஒரு போராட்டம் மக்கள் போராட்டமாக முன்னனெடுக்காத வரை, எந்தளவுக்குத்தான் ஈழத் தமிழருக்கு தர்மீக ஆதாரவை தமிழர்கள் வழங்கினாலும், அது ஈழத்தமிழருக்கு பயன்படுவதில்லை. இவைகள் ஏன் என்பதை; புரிந்துகொள்ளவும், இந்த நூலாசியரின் பல நூல்கள் உதவுகின்றது.
இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 - 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும் பெற முடியும்.
கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை - 600 002.தொலைபேசி: 044 - ௨௮௪௧௨௩௬௭

௧. இரக்கமற்ற கோழைகளின் அரசியலும் மனித அவலாங்களும்
முன்னுரை


அவலமும் துயரமும் நிறைந்த ஒரு சமூகம்தான் தமிழ் இனம். இன்று எனது தமிழ் சமூகத்தின் இருப்பபே கேள்விக்குள்ளாகியுள்ளது. இப்படி எந்த நம் ப pகையுமற்ற நிலையில், எந்தத் துரும்புமின்றிசிதைக்கப்பட்டுள்ளது. மக்களை தலைமை தாங்கி செல்லும் வகையில், எந்த மாற்றும் கிடையாது.இந்தப் போக்கினை அம்பலப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் இது. பல்வேறு மனித அவலங்களை ஒருங்கே பேச முனைகின்ற இந்த நூல், உங்களுடன் இதைபற்றி உரையாடமுனைகின்றது.

சிங்களப் பேரினவாதிகளும், புலிகளும், புலியல்லாத அரசு சார்பு குழுக்களும், தமிழ் மக்களை இரக்கமற்ற வகையில் தமது அடிமைகளாகவே நடத்துக்கின்றனர். மக்கள் அந்த கொடூரத்தை எதிர்கொள்ள முடியாது, அடங்கி ஒடுங்கி கைகட்டி நிற்கின்றனர். இப்படி இருத்தல் தான், தமிழ் மக்களுக்கு அழகு என்று பரஸ்பரம்கூறிக்கொள்கின்றனர்.

இதை மீறி எதையும் ஆக்கப+ர்வமாகச் செய்யமுடியாது. அவை செய்யக்கூடாத ஒன்று. இப்படி எதையும் இவர்கள் அனுமதிப்ப தில்லை. இது மீறப்படும் போது, காணமல் போதல், கடத்தல், படுகொலை மூலம் பதிலளிக்கப்படுகின்றது. காலத்துக்கு காலம், இப்படி மாறி மாறி, தமிழ் இனத்தையே அழித்து சிதைத்து வந்தனர்,வருகின்றனர்.

இந்த மனித துயரத்தை மனதால் நினைத்துப் பார்க்க முடியாது. இதை எழுத்தில் கொண்டு வரமுடியாது. அந்தளவுக்கு இந்த துயரம் கொடூமையானது, கொடூரமானது. அன்றாடம் இதை வாழ்வாகஅனுபவிப்பவன் படுகின்ற வேதனைகள், படு பயங்கரமானவை. உரிமையை கோரிய சமூகம், இன்று வாழ்வையே பறிகொடுத்து நிற்கின்ற பரிதாபம். சின்னச் சின்ன அற்ப உணர்வுகளைக் கூட, துயரம் நிறைந்த வாழ்வாக அனுபவிக்கின்ற ஒரு இனமாக தமிழினம் சிதைந்துவிட்டது. சாதாரணமான வாழ்வைக் கூட இயல்பாகவாழமுடியாத வகையில், மக்கள் விரோத சக்திகளின் கொடூரமான நடத்தைகள் செயல்கள் பதிலளிக்கின்றன.இதனால் குடும்ப உறுபினர்களை இழந்து புலம்பும் குழந்தை, மனைவி, தாய். இப்படி பல உறவு சார்ந்த சமூகச் சிதைவுகள். அவர்களின் சொந்த அன்றாட வாழ்கையில் தொடரும் பற்பல சோகங்கள். இதை அற்பத்தனமாகவே எடுத்து, கண்டும் காணமல் விட்டுவிடுகின்ற புறக்கணிப்புகள். மனித உணர்வுகள் மீது, உணர்ச்சியற்று கல்லாகிப் போன சமூகத் தன்மை. இதில் கணவனை இழக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும், மனித உணர்ச்சியும் உணர்வும் சார்ந்த பாலியல் நெருக்கடிகள். சமூகத்தில் இதை கண்டு கொள்ளாத அசாமந்தமான வக்கிரமானபோக்குகள். ஒழுக்கமென்ற பெயரில், சமூக அதிகாரம் கொண்ட அதிகார மையங்கள். இப்படி எண்ணற்ற உளவியல் சார்ந்த, மனம் சார்ந்த மனித துயரங்கள். கண்ணுக்கு புலனாகாத வகையில், சமூகத்தினுள் சீழ் பிடித்து நாறுகின்றது.

இதன் மேல்தான் ஜனநாயகம் தேசியம் என்று, ஒன்றையொன்று எதிராக நிறுத்தியபடி அரசியல் நடனம் ஆடுகின்றனர். இவர்கள் மூச்சுக்கு மூச்சு மக்களின் விடுதலையைப் பற்றி பேசுகின்றனர். இந்த நூல் இதை அம்பலப்படுத்துவதுடன், சாதாரண மனிதனின் உள்ளடத்துடன் உணர்வுடன் நின்று பேச முற்படுகின்றது.இப்படி மனித அவலங்களை பற்றி, மக்களுடன் பேச முற்படுகின்றது இந்த நூல். நாம் தீர்வாக ஒன்றை மட்டுமே கூற முற்படுகின்றோம்.

நாங்கள் வாழ்வில் உணர்கின்ற எங்களது பிரச்சனைக்கு, ஒரு தீர்வைத் தேடி நாங்கள் போராடாத வரை, மாற்று தீர்வு என எதுவும் எமக்கு கிடைக்கப்போவதில்லை. எப்படிப் போராடுவது என்பது கூட, நாம் எமது சொந்த சூழல் சார்ந்து கற்றுக்கொள்வதில் தான் அடங்கியுள்ளது. இதைவிட மாற்று எதையும், யாரும் தங்கத்தட்டில்ஏந்தி வந்து தரப்போவதில்லை.
2.மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்!
முன்னுரை
சமகாலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு மனிதவிரோதசெயல்கள் மீதான ஒரு தொகுப்பு நூல் இது. மனிதத்தை நோக்கியும், மனிதத்தை நேசித்தலை நோக்கி முன்னேறுதல் என்பது அன்றாடம் அடிசறுக்குகின்றது. அதுவென்னவென்று கேட்கின்ற அளவுக்கு, அது அர்த்தமிழந்த ஒன்றாக பல்லிளித்து நிற்கின்றது. நாள்தோறும் மனிதனுக்கு எதிரான புதிய சதிகள், திட்டங்கள். பாவம் தமிழ்பேசும் மக்கள். மனிதனுக்கு எதிரான நிலைகளில், நிலைமைகளில் அன்றாடம் நடக்கும் அதிரடி மாற்றங்கள், அதிர்வுகள். அவற்றில் சிலவற்றை இந்த நூல் மூலம் உங்களுடன் பேச முனைகின்றேன்.
சமாதானம், அமைதி தொடங்கிய பின், ஒன்று இரண்டு என்று தொடங்கிய தொடர் கொலைகள், இன்று அன்றாடம் இரட்டை இலக்கத்தை எட்டி நிற்கின்றது. பலர் திடீர் திடீரென காணாமல் போகின்றனர். ஏன், எதற்கு காணாமல் போகின்றனர், கடத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர் என்று யாருமே புரிந்துகொள்ள முடியாத வகையில் அவை தொடருகின்றன. இதை எதிர்ப்பதாக பாசாங்கு செய்தபடி ஆதரிப்பதே, ஒவ்வொரு அரசியல் எதிர் தரப்பினரதும் அன்றாட அரசியலாக உள்ளது. இந்த மனித அவலங்களை இட்டு அக்கறைப்படுவது கூட கிடையாது. கொலை, கொள்ளை, கடத்தல், இதுவே தமிழ் மக்களின் உரிமையுடன்தொடர்பானதாக காட்ட முனைகின்றனர். இதற்குள் பிரிவுகளும், பிளவுகளும், கோட்பாடு சார்ந்து நிகழ்கின்றது.

மக்களின் நலனை எட்டி உதைத்து கொள்வது முதல், மக்களின் எதிரிகளுடன் கூடிக் கும்மாளம் அடிப்பதே அரசியலாகி, அதை நியாயப்படுத்துவதே அரசியலாகிவிட்டது என்ற நிலை. மக்கள் நலனைக் கோரினால், அது பலருக்கு ஆச்சரியமான விடயமாகிவிடுகின்றது. விசித்திரமான மனிதனைப் பார்ப்பது போல் பார்க்கின்றனர். இது புலிகள் மட்டுமல்ல, புலியல்லாத தரப்பு நிலையும் இதுதான். இப்படி இரண்டு தரப்பு பாசிஸ்ட்டுகளுக்கு இது ஆச்சரியமாக அல்லாமல் எப்படித்தான் இருக்கும் எங்கும் எதிலும் பாசிசம. அவர்களின் நடைமுறை முதல் கொள்கை கோட்பாடு அனைத்தும் பாசிசமாகிவிட்டது. பேரினவாதம் இதன் கீழ் தான் பலமடைகின்றது. தனது பாசிச நடத்தையை செங்கோலாக காட்டி, அதையே ஜனநாயகமென்கின்றது. சமாதானம், அமைதி, தீர்வு என்று போடும் அரசியல் வேஷங்கள் எல்லாம் அலங்கோலமாகி நிற்கின்றது.

இதில் உள்ள 28 கட்டுரைகள், இதன் ஒருபகுதியை உங்கள் முன் அம்பலமாக்குகின்றது. இவை http://www.blogger.com/undefined என்ற இணையத்தில் அன்றாடம் வெளியாகியவற்றில் ஒரு பகுதிதான்.சமூகத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும், இக்கட்டுரைகள் வழிகாட்டும் என்று நம்புகின்றோம்.
பி. இரயாகரன்.25.02.௨௦௦௭
முன்னுரை

இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து யுத்த நிறுத்தம் கடந்த இரண்டு வருடங்களாக அமுலில் உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் என்ன நடந்தது? உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது, சூனியம் நிலவுகின்றது. புலிகளும் அரசும் பேச்சுவார்த்தை ஊடாக நடத்திய இழுபறிகளையே, மக்களுக்குப் பொதுவாகக் காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல.

இதற்கு நேர்மாறாக யாரும் கற்பனை செய்ய முடியாத, ஒரு பாரிய மாற்றம் ஒன்று நடந்து முடிந்து விட்டது. உண்மையில் ஏகாதிபத்தியத்தின் தலையீட்டையும், அதன் விளைவுகளையும்; யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. உண்மையில் என்றைக்கும் இல்லாத ஒரு மாற்றம் நடந்து முடிந்துவிட்டது. இலங்கை அரசியல் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் எந்த சக்தியாலும், மீண்டு வரமுடியாத ஒரு மாற்றம் நடந்துவிட்டது. உதாரணமாக நாட்டில் பொது கக்கூஸ் கட்டக் கூட ஏகாதிபத்தியங்களின் உதவி அவசியமாகிவிட்டது. யுத்த சிதைவில் இருந்தது மீள உலகவங்கியின் அனுமதி ஒவ்வொருத் துறைக்கும் கெஞ்சிக் கேட்க வேண்டிய நிலையுள்ளது. வடக்கு - கிழக்கில் யுத்தம் சிதைத்த வீடுகளைப் புனரமைக்க நஷ்டஈடு கொடுப்பதற்காக, ஒரு வீட்டுக்கு 75 ஆயிரம் ரூபாவை உலகவங்கி வழங்க அனுமதித்தது. இது போதாது என்று கூறி உலக வங்கியிடம் கெஞ்சிய நிலையில், அதை 1,10,000; ரூபாவாக உயர்த்த உலக வங்கி இணக்கம் தெரிவித்ததை பெருமையாக அறிவிக்கின்றனர். இந்த வகையில் வடக்கு - கிழக்கில் மூன்று லட்சம் வீடுகளைப் புனரமைக்கும் திட்டம் ஒன்று, உலக வங்கியின் நிதியுடன் அனுமதி பெறப்பட்டுள்ளது. மார்ச் 2004-ல் வெளியான மற்றொரு அறிக்கையில் 2500 ரூபாவுக்கு குறைவான வருமானம் உடைய, 1983-க்கு பின் யுத்தம் காரணமாக வீடுகளை இழந்தோருக்கு வீடுகளை அமைத்து கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவை ஒன்றும் கற்பனை அல்ல.

இதில் உலக வங்கிக்கு என்ன சமூக அக்கறை? கடந்த இரண்டு வருடமாக சாதாரண பத்திரிக்கைச் செய்தியில் இருந்து, மிகக் குறைந்தபட்ச தரவுகளை அடிப்படையாக கொண்டு, என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக ஆதாரமாக இந்த நூலின் முதல் பாகம் விவாதிக்க முற்படுகின்றது. ஒரு நாடு எப்படி மறுகாலனியாக்கத்தின் உள் சென்று விட்டது என்பதை, மறுக்க முடியாத ஆதாரத்துடன் உங்களுக்கு முன்வைக்கின்றது. அமைதி, சமாதானம் என்ற விரிந்த தளத்தில், இந்நூல் உங்களை சுயமாகச் சிந்திக்கத் தூண்டுகின்றது.

இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் என்ன நடந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டது. முதல் பகுதி ஒரு வருடத்துக்கு முன்பு எழுதப்பட்டது. சமாதான ஒப்பந்தத்தின் பின்னான முதல் வருடத்திய நிலையை ஆராய்கின்றது. இரண்டாம் பகுதி பிந்தைய வருடத்தை அடிப்படையாக கொண்டு முழுமையை ஆராய்ந்து அம்பலப்படுத்துகின்றது. மூன்றாம் பகுதி சம காலத்தில் நடந்த முக்கிய விடயங்கள் மற்றும் முக்கியமான பல கட்டுரைகளை உள்ளடக்கியது.

2004 தேர்தல் யூ.என்.பி வேட்பாளர் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு முதல் கண்டனத்தையும், மிரட்டலையும் அமெரிக்காவே புலிக்கு எதிராகவிடுத்தது. இந்தக் கொலையைச் சொந்தக் கட்சி (ய+.என்.பி) முதல் இலங்கையின் ஜனநாயகக் கட்சிகள் என்று சொல்லும் எந்தக் கட்சிகளும் கூட இதைக் கண்டிக்கவில்லை. ஏகாதிபத்தியமே இலங்கையை ஆட்சி செய்கின்றனர் என்பதையே இவை காட்டுகின்றன. இந்தக் கண்டனம் அமெரிக்கா வெளியுறவு அமைச்சில் வைத்து விடப்பட்டது. இது ஒவ்வொரு சிறிய சம்பவமும் அமெரிக்காவால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும், கண்காணிக்கப்படுகின்றது என்பதையும் உணர்த்தியது. புலிகளுக்கு எதிரான குறிப்பான மிரட்டல் என்பது, எதையும் அமெரிக்கா செய்யும் தயார் நிலையில் உள்ளது என்பதையும் கோடிட்டுக் காட்டியது.

பொதுவாக அமைதி, சமாதானம் நோக்கிய பயணங்கள், உலகெங்கும் அங்கும் இங்குமாக தொடர்கின்றது. இலங்கையை நோக்கி ஏகாதிபத்திய பிரதிநிதிகள் இடைவிடாத தொடர் பயணங்களை நடத்துகின்றனர். ஏகாதிபத்தியம் கடன், உதவி, முதலீடு என்ற பெயரில் நிதியை வெள்ளமாக இலங்கையை நோக்கி நகர்த்துகின்றனர். இலங்கையின் ஏற்றுமதி பெருக்கெடுத்துள்ளது. இறக்குமதி கட்டுக்கடங்காத வகையில் பெருகியுள்ளது. அன்னிய முதலீடுகள் பல மடங்காகியுள்ளது. தன்னார்வக் குழுக்களின் தங்குமிடமாக இலங்கை மாறிவிட்டது.

புலிகள் அன்னியப் பொருட்களை வாங்கி விற்கும் தரகு வர்த்தகத்தில் கால் பதித்துவிட்டனர். எதிர்கால முதலீட்டை நோக்கி அசையா சொத்துகள் வாங்கி குவிக்கப்படுகின்றது. உள்ளுர் உற்பத்திகள் மற்றும் சேவைத்துறையை புலிகள் படிப்படியாக தமது தனிப்பட்ட சொத்தாக்கி வருகின்றனர். புலிகள் புதிய முதலீட்டாளராக மாறிவிட்டனர். பல புதிய புலி முதலாளிகள் உருவாகி வருகின்றனர். அதற்கான நிதியை வரைமுறையற்ற வரி மூலம் திரட்டுகின்றனர். எங்கும் பணத்தை மையமாக வைத்த நடவடிக்கைகள், பெருகுகின்றது. பெரும் சொத்துக் குவிப்பின் ஊடாக, புதிய பணக்கார புலிகள் படிப்படியாக மிதக்கின்றனர். யாழ்குடா மேட்டுக்குடி சார்ந்த பிரான்ஸ் நகராகிவிட்டது. யாழ்நகரக் கடைகள் ஆடம்பரப் பொருட்களை விற்கும் தரகுச் சந்தையாகிவிட்டது. புலிகள் பல பத்து முதலீட்டை பல்வேறு வழிகளில் முதலீடு செய்துள்ளனர். பலவற்றை கட்டுப்படுத்தி பலாத்காரமாக அடிபணிய வைக்கின்றனர்.

மறு தளத்தில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை மக்கள் என்றுமில்லாத ஏழைகளாகியுள்ளனர். வாழ வழியற்ற நிலையில் மக்கள் வெளிநாடு செல்வது கடந்த இரண்டு வருடத்தில் பெருகி வருகின்றது. உள்ளுர் சிறு உற்பத்திகள் அழிக்கப்பட்டு நலிந்து போய்விட்டது. வேலை இழப்பும், வருமானம் இன்மையும் பெருகிவருகின்றது. மக்களின் நுகர்வுகள் ஏற்றுமதியாகின்றன. இறக்குமதிகள் பெரும் பணக்காரர்களின் நலன்கள் சார்ந்து மாறிவிட்டது. வறுமை ஊடாக கல்வி மறுப்பு தேசிய கொள்கையாகிவிட்டது. மக்களின் சொத்தான அரசுத்துறைகளை அன்னியருக்கு தாரைவார்ப்பதன் மூலம் தனியார் மயமாகிவிட்டது. தேசிய உற்பத்திகள் முடக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. சமுதாயப் பிளவு விரிந்து அகலமாகிவிட்டது.

இந்த நூல் எழுதி அச்சுக்கு அனுப்ப இருந்த நேரத்தில் கருணா-பிரபாகரனின் பிளவு அரங்குக்கு வந்தது. இந்த நிலையில் இந்த நூல் இரண்டு பக்கத்திற்கும்; விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் வேறுபாடற்ற இவர்கள், பிரதேசவாதிகளாகவே இரண்டு பகுதியிலும் அரங்கில் புகுந்துள்ளார்கள். மக்களைப் பற்றி இருவருக்கும் சிறிதும் அக்கறை கிடையாது. ஏகாதிபத்தியத்தின் தொட்டில் தாலாட்டு பெறும்; உரிமையையே, தத்தம் தரப்பில் உரிமையாகக் கோருகின்றனர். இங்கு இரட்டைப்பிள்ளை தாலாட்டை கருணா கோர, பிரபாகரன் ஒரு குழந்தைதான் ஏகாதிபத்திய தாலாட்டில் வாழ முடியும் என்கின்றார். இதையொட்டி ஒரு கட்டுரை இந்த நூலில் இணைத்துள்ளேன்;. இக்கட்டுரை ஒரு சஞ்சிகையில் வெளிவருவதற்காக எழுதப்பட்டது. இக் கட்டுரையுடன் பின்னிணைப்பு அவசியம் கருதி இணைக்கப்பட்டுள்ளது. எதார்த்தத்தில் மக்களை மந்தை நிலைக்கு தாழ்த்தி, அறியாமையைத் தமது மூலதனமாக்குகின்றனர்.

ஒட்டு மொத்தமாக இவை அனைத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் மந்தை நிலைக்குள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ், சிங்களத் தலைவர்கள் விதிவிலக்கின்றி ஏகாதிபத்தியத்திடம் எப்படி நாட்டை விற்றுள்ளனர் என்பதை, இந்த நூல் ஆதாரத்துடன் நாட்டுப் பற்று உள்ளவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றது. புலிகளும், துரோகக் கட்சிகளும்கூட தமது குறைந்தபட்ச அடையாளத்தை எப்படி தொலைத்து வருகின்றனர் என்பதை ஆராய்ந்தளிக்கின்றது. மேலும் சிங்களக் கட்சிக்கு இடையில் வேறுபாடுகள் மறைந்து விட்டதையும் ஆராய்ந்தளிக்கின்றது. நாட்டை ஏகாதிபத்தியத்திடம் விற்பதில், தமிழ் மற்றும் சிங்கள (முஸ்லீம், மலையக கட்சிகளும் கூட) கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்பதை இக்கட்டுரை துல்லியமாக அம்பலப்படுத்துகின்றது. துரோகக் குழுக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக தம்மை அடையாளம் காட்டியவர்களும் எப்படி தம்மை அரசியல் ரீதியாக இனம் காட்ட முடியாது போயுள்ளனரோ, அது போல் புலிகளுக்கும் துரோகக் குழுக்களுக்கும் இடையில் அரசியல் வேறுபாடுகள் அற்றுப் போனதை இந்த நூல் தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. மக்களுக்கு எதிரான இவர்களின் துரோகத்தை இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது.

இலங்கையில் நடக்கும் ஒட்டு மொத்த காட்டிக் கொடுப்பை, இலங்கையில் யாரும் அம்பலப்படுத்தி போராட முன்வரவில்லை. அந்தப் பணியின் அங்கமாகவே இந்த நூல் உங்களுக்கு பல்வேறு தடைகளைக் கடந்து கிடைக்கின்றது. இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்த கொள்ள விரும்பும், சமூகத்தின் பால் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் இந்த நூல் ஒன்றிணைய அறைகூவுகின்றது.
முன்னுரை

"கொடுமையின் சுமை அழுத்தும்போது மனிதன் ஊமையாகி விடுகின்றான்.'' மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிஸ்ட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசிச வழிமுறைகளில் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டுகின்றனர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதைச் செங்கம்பளமாக்கி அதன் மேல் தான் எப்போதும் வீரநடை போடுகின்றனர். இது குறித்து கார்ல் மார்க்ஸ் "கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்'' என்கிறார்.

சதி, சூழ்ச்சி, நேர்மையீனம், வக்கிரம், அராஜகம், சூறையாடல், தரகுத்தனம், வன்முறை என ஒட்டு மொத்தமும் ஒருங்கிணைந்து இலங்கை அரசியலில் குடிகொண்டுள்ளது. அடிப்படையான நேர்மை, மக்கள் பற்றிய அக்கறை, விமர்சனம், சுயவிமர்சனம் என எதையும் எமது மண்ணில் இனம் காண முடியாத ஒரு வறண்ட சூனியத்தில், விதைக்கப்படும் விதைகள் தான் இக்கட்டுரைகள். இந்த நிலையில் மனித இனம் சந்திக்கும் மனித அவலங்களை உள்ளடக்கிய வகையில், பல தலைப்புகளைக் கொண்டதே இந்த நூல். சமகால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொகுப்பே இந்த நூல். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலானவை, மரணதண்டனைக்கு உரியவையாகவே உள்ளது. மரணத்தை எதிர்கொள்ளும் ஒரு தயார்நிலையில் தான், இந்தக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. இவை தீதீதீ.tச்ட்டிடூஞிடிணூஞிடூஞு.Nஞுtt என்ற எமது இணையத்தளத்தில் உடனுக்குடன் பிரசுரிக்கப்பட்டு வந்தன.

இந்தநூல் இலங்கை முதல் சர்வதேச நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. இருந்தபோதும் இந்த நூல் இலங்கையை மையமாகக் கொண்டே உள்ளது. சுனாமி, இலங்கையில் தொடரும் படுகொலைகள், சில மரணங்கள், புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள், இழுபறியான மக்கள் விரோதப் பேரங்கள் முதல் ஏகாதிபத்தியங்களின் சதிராட்டங்கள் வரை பலவற்றை இத்தொகுப்பு நூல் கொண்டுள்ளது.

உலகளவில் மனித இனம் சந்திக்கும் தொடர் அவலங்களின் ஒரு பகுதியாக இலங்கை மக்கள் அனுபவிக்கும் அவலங்களையிட்டு யாரும் வாய்திறப்பதில்லை. இது எமது சொந்தத் தலைவிதியாக உள்ளது. பினாமியமும், வாய் திறவாது சூழலுக்கு இசைந்து போகும் மௌனங்களும், மக்களின் அனைத்துவிதமான வாழ்வியல் சமூக ஆதாரங்களையும் அழித்து வருகின்றது. மறுபுறம் மிகக் கடும் எதிர்தரப்பாக மாறி நிற்போர் கூட, மக்களைச் சார்ந்து நிற்பதில்லை. மாறாக ஒரு கைக்கூலிக் கும்பலாகவே சீரழிந்து, அன்றாடம் சிதைந்து வருகின்றனர். ஏகாதிபத்தியத்தின் தலையீட்டையும், மறுகாலனியாதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத்தரப்பும் ஏதோ ஒரு வகையில் தமக்குள் முரண்படுகின்றனர். இந்த முரண்பாடு பல படுகொலைகளைக் கூட நடத்தி முடிக்கின்றது. அவை அனைத்தும் மக்களின் நலன் என எதையும் முன்வைப்பதில்லை.

தமது கருத்துக்கள், உரைகள், திட்டங்கள், பேச்சு வார்த்தைகள், நிகழ்ச்சிகள், நடைமுறைகள் என்று அனைத்து விதமான நிகழ்வுகளிலும், மக்களின் சமூகப் பொருளõதார வாழ்வியல் உள்ளடக்கத்தைப் பேச மறுத்து நிற்கின்றனர். மக்களுக்கு எதிராகவே அனைத்தையும் திட்டமிடுகின்றனர். இந்த நிலையில் மக்கள் விரோதக் கும்பலின் அனைத்து விதமான பிரிவுகளையும் போக்குகளையும் இந்த நூல் அம்பலப்படுத்த முனைகின்றது. மக்களின் நலன் என்பது, என்ன என்பதை எடுத்துக் காட்ட முனைகின்றது. ஒரு புரட்சிகரமான விமர்சன அணுகுமுறை எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதை, இந்த நூல் புரட்சிகர உணர்வுடன் கற்றுத் தரமுனைகின்றது.
தோழமையுடன்பி. இரயாகரன்
5.இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்

முன்னுரை

தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சனை தேசிய போராட்டமாகத் தவறி, ஒரு இனவாத யுத்தமாக பரிணமித்த வரலாற்றுப் போக்கை இந்த நூல் அம்பலம் செய்கின்றது. இதன் மூலம் குறுந் தேசிய இனவாதப் போராட்டத்தை தேசிய போராட்டமாக மாற்றுவதன் தேவையை, மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இந்த சிறு நூலின் ஊடாக உங்கள் முன் வைக்கின்றேன்.

பெரும்பான்மை இனங்கள் மற்றும் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படையான தேசிய நலன்களை, சகல இனவாத தேசியவாதிகளும் எப்படி குறுகிய நலனில் வைக்கின்றனர் என்பதையும் இந்த நூல் தெளிவாக்குகின்றது. இதன் மூலம் இலங்கையின் தேசிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவாக்குகின்றது. பரஸ்பரம் இனங்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரிப்பதும், மக்களின் நலனை முதன்மைப்படுத்திய தேசியத்தை முதன்மைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அரசியல் ரீதியாக தெளிவாக வைப்பது நூலின் மைய நோக்கமாகும்.

சுயநிர்ணயம் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கு எவ்வளவு அவசியமானதோ, அதே அளவுக்கு இலங்கையின் சுயநிர்ணயம் அவசியமானது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், அவர்கள் நடைமுறைப்படுத்தும் மறுகாலனியாக்க உலகமயமாதலுக்கு எதிராகவும் தேசியத்தை முன்னிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை, இந்த நூல் தெளிவுபடுத்துகின்றது. மக்களின்; இன ஐக்கியம் இதற்கு எவ்வளவு அவசியமானது என்பதை இக்கட்டுரை தெளிவுபடுத்துன்றது. இனவாதிகள் பிரித்தாளும் இனவாதக் கோசங்களின் ஊடாக தேச விரோதிகளாக இருப்பதுடன், ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக இருக்கின்றனர். இவர்கள் ஏகாதிபத்திய உலகமயமாதலின் உற்பத்தி கூறுகளையும், அதன் பண்பாட்டு கலாச்சார கூறுகளையும் எதிர்ப்பவர்கள் அல்ல. இது அவர்களின் தேசியம் பற்றி அளப்பதற்கு ஒரு அடிப்படையான அளவு கோல் மட்டுமின்றி, உலகமயமாதலை வரவேற்பவர்களாகவும் ஒரு தரகர்களாகவும் இருக்கின்றனர்.

இடைக்கால தீர்வு என்ற போர்வையில் முன்வைக்கின்ற அனைத்தும் வரலாற்று ரீதியாக இனவாதத்தையும், தொடர்ந்த நிரந்தரமான ஒரு அரசியல் பிழைப்புவாத வழியாகவே முன்வைக்கின்றனர். உலகமயமாதல் தேசியத்தை அழிப்பதற்குரிய தூண்களாக இனத் தேசியத்தை பயன்படுத்துகின்றனர். இனபிரச்சனைக்கு ஒரு ஜனநாயக பூர்வமான தீர்வை முன்வைப்பதற்குப் பதில், அதீதமான சலுகைகளை முன்வைப்பது அல்லது மற்றொன்றை மறுப்பது இலங்கையின் எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளினதும் இன்றைய நிலையாகும்;. இது சமாதானத்துக்கும், மக்களின் அடிப்படையான வாழ்வியலுக்கும் எதிரானது. ஒரு சமாதானத்துக்கு அவசியமானது, இனவாத யுத்தத்தின் மீதான அனைத்து ஜனநாயக விரோதமான கோரிக்கைகளையும் செயல்களையும் இவற்றுக்கிடையில் பக்கம் சாராது விமர்சிப்பதும் செயற்படுவதுமாகும்;. ஆனால் துரதிஸ்டவசமாக இலங்கை இனவாத அரசியல் களத்தில் உள்ளவர்கள், இதில் ஏதோ ஒன்றைச் சார்ந்து நின்று, மற்றையவற்றை அதீதமாக விமர்சிப்பதன் மூலமும், செயற்படுவதன் மூலமும் இனவாதம் ஆழமாக மேலும் புரையோடுகின்றது. சமாதானமும், மக்களின் வாழ்வியலும் மேலும் இனவாத யுத்த கொடூரங்களால் பலியிடப்படுகின்றது.

விமர்சனமும், மாற்று செயல்முறையும் மட்டுமே சமாதானத்துக்கும், அடிப்படையான மக்களின் விடுதலைக்கும், மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் அடிப்படையான செயல் முறையாகும்;. இது இனவாதம் மற்றும் குறுந்; தேசிய இனவாதம் என்று அனைத்தையும் எதிர்த்து ஜனநாயகக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி போராடி இனத்தேசியத்துக்கு பதில் தேசியத்தை உருவாக்க வேண்டும்.

இந்த சிறு நூலுக்குரிய கட்டுரைகளை சமர் கட்டுரைகளாகயாக எழுதத் தொடங்கினேன். சமூக முக்கியத்துவம் கருதி அவை சிறு நூலாகவே வெளிவருகின்றது. இந்த நூலில் பயன்படுத்திய புள்ளிவிபரங்கள், பத்திரிகைகள் மற்றும் வேறு நூல்களில் எடுக்கப்பெற்றன. இந்த புள்ளிவிபரங்கள் சில முழுமையற்றவையாக இருந்தாலும், இதன் பொதுத் தன்மைகளும் சமூக விளைவுகளும் சரியானவையாகும்;. நூலின் மையமான அரசியல் செய்தியை இவை எந்த விதத்திலும் பாதிக்கமாட்டாது. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையில் தொடங்கிய இந்த சிறு வெளியீடு, பல்வேறு விடையங்களை முழுமையாக இங்கு ஆய்வுக்கு எடுக்கவில்லை. ஆனால் குறிப்பான விடையத்தை முதன்மைப்படுத்தியே இதை எழுத நேர்ந்தது

6.தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.

முன்னுரை

அண்மைக்காலமாக மார்க்சியத்துக்கு எதிரான போக்குகள் தீவிரமடைந்துள்ளது. சோவியத்திலும், சீனாவிலும் அப்பட்டமான முதலாளித்துவ முன்னெடுப்புகள் தொடங்கியதுடன் மார்க்சியம் மீது முன்பை விட அதிகமாக சேறு வீசப்படுகின்றது. இன்று ஈழப் போராட்டம் இராணுவ வாதத்திற்குள் சிக்கி உள்ள நிலையில், குறைந்த பட்ச ஜனநாயக இயக்கத்தைக் கூட விட்டு வைக்காத இன்றைய நிலையில், கடந்த கால சமூக அக்கறைக்குரியவர்கள் உதிரியாகவும், சிறு குழுக்களாகவும் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தனர்.

பெயர்கின்றனர். இந்தப் புலப் பெயர்வின் நீடித்த சமூக அக்கறை, அவர்களின் பொருளாதார வசதியுடன் சிதையத் தொடங்கியது. முன்னைய சமூக அக்கறைக் குரியவர்கள் பலர் இளம் வயது இளைஞர்களாக இருந்ததுடன், உழைப்பில் ஈடுபடாது கவர்ச்சிகரமான இராணுவ செயற் தளத்தில் புகுந்தவர்கள், முதன் முதல் பணத்தை தமதாகக் கண்டது முதல் அவர்கள் சமூக அடிப்படையுடன் தமது நிலைக்கு ஏற்ப ஒரு புதிய கோட்பாட்டுத் தளத்தைத் தேடத் தொடங்கினர், தொடங்கி உள்ளனர்.

இதே நேரம் இந்தியாவில் உள்ள புரட்சிகரப் பிரிவுகளுடன் நெருங்கிய பல முன்னைய தொடர்புகளை முன்பு பேணியவர்கள், தமது சமூக அடிப்படை மாற்றத்துடன் புதிய கோட்பாட்டுத் தளத்தை தேடி அலைந்தனர்.

இந்தியாவில் எழுந்து வரும் சமூக நெருக்கடிகளும் அதனால் எழும் போராட்டங்கள் அடிப்படை மார்க்சிய வரையறைக்குள் எழுவது தவிர்க்க முடியாத போக்காக இருந்தது. இந்தியாவில் ஏகாதிபத்தியமும் உள்ளுர் ஆளும் தரகு நிலப்பிரபுத்துவப் பிரிவுகளும் மார்க்சியத்திற்கு எதிரான பல வண்ண வகை கோட்பாடுகள், மனித உரிமை அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள் ...... என பலவகைச் செயல் தளத்தை உருவாக்கி வறுமையில் வாழும் மக்களுக்குள்ளும், போராடும் மக்களுக்குள்ளும் அனுப்பி வைத்தன, வைக்கின்றன. இதில் கோட்பாட்டுத் தளத்தில் தன்னார்வக் குழுக்கள் மற்றம் மார்க்சியத்தின் பெயரில் பல வண்ண வகைக் கோட்டுபாடுகளை முன் தள்ளினர், தள்ளுகின்றனர். இதன் மூலம் முன்னணி சமூகப் புரட்சியாளர்களை வென்றெடுத்து சீர் அழித்தல், அல்லது குறைந்த பட்சம் மார்க்சியம் மீது ஐயசந்தேகத்தை எழுப்புவது, வர்க்கப் போராட்டத்திற்கு பதில் வேறு போராட்ட வடிவத்தை முன் தள்ளுவது என பல வகைக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர்.

இந்த வகையில் மார்க்சியத்திற்கு பதிலீடாக வர்க்கமற்ற போராட்ட அமைப்புகள், தனக்குள் சாதியடிப்படையைத் தக்கவைத்துக்கொண்ட தலித்திய அமைப்புகள், வர்க்கம் கடந்த பெண்ணிய அமைப்புகள், வர்க்க முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்க முன் தள்ளும் தேச விடுதலை அமைப்புகள் எனப் பலவகை உருவாக்கி வௌவேறு கோட்பாட்டு அடிப்படையை மார்க்சியத்துக்கு புறம்பாக முன்வைக்கப்படுகின்றது, முன்வைக்க முயல்கின்றனர்.

இன்று இந்தியாவில் இப்படிப் பல மொழியில் பலர் உள்ள நிலையில், தமிழில் ரவிக்குமார் -அந்தோனிசாமி மார்க்சை குருவாகக் கொண்ட நிறப்பிரிகை குழு, எஸ், வி இராஜதுரையைக் கொண்ட குழு எனப் பலவாக பல உள்ளது. இதில் அ.மார்க்ஸ் - ரவிக்குமார் போன்றவர்கள் மிகத் தீவிரமாக மார்க்சியத்துக்கு எதிரான கோட்பாட்டுத் தளத்தை உருவாக்குவதில் இயங்குகின்றனர். ஒரு புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்துக்கு இருக்கக் கூடிய மக்கள் ஆதரவுடன் கூடிய ஒரு அமைப்பு வடிவங்கள் இந்தியாவில் உள்ளன. அவர்களால் ஒரு பெரிய நிதியைச் செலவழித்து தமது அரசியல் கருத்து தளத்தை விரிவு படுத்த முடியாத புரட்சிகர நிலை உள்ள போது, அ. மார்க்ஸ் போன்றோர் மிகப் பெரிய நிதி ஆதரவுடன் தொடர் வெளியீடுகளை தனிநபர்களாக வெளியிடும் மர்மத்தை காலம் தான் அம்பலப்படுத்தும்.

இவர்களின் ஐரோப்பிய பயணங்கள், ஏகாதிபத்திய கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்கள் என்பன உடனுக்குடன் இவர்களிடம் கிடைப்பதும், அதை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வெளியீடுகளை வெளியிடும் செயலின் மர்மமும், அதன் நிதிப்பலமும் மர்மமாகவே உள்ளன.

இங்கு (பிரான்ஸ்) கம்யூனியச எதிர்ப்பு கோட்பாடு தொலைக்காட்சியில் காட்டப்படவுடன் அல்லது வெளிவந்தவுடன், அதை சிறிது காலத்தில் அ.மார்க்ஸ் சார்ந்த கும்பல் தமிழில் எழுத்து வடிவம் கொடுக்கின்றனர். எதிர்காலத்தில் சர்வதேசமயமாகி உள்ள தொலைக்காட்சியில் இவர்கள் தோன்றி தமிழில் மார்க்சிய எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய நீண்ட காலம் செல்லாது என்பதை நாம் முன்கூட்டியே கூறிவைக்க விரும்புகின்றோம்.

ஈழத்து முன்னாள் முன்னணி சமூக அக்கறைக்குரியவர்கள், தமது சமூக அடிப்படையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, தேடிய கோட்பாட்டு அடிப்படையை அ.மார்க்ஸ்சும் அவரது கும்பலும் இவர்களுக்கு வழங்கினர். இவர்கள் அ.மார்க்ஸ்-ரவிக்குமாரின் கோட்பாட்டை பல தளத்தில் முன்னெடுத்து "மனிதம்", உயிர்ப்பு, "சரிநிகர்" என பல தளத்தில் தமது சிலந்தி வலை விரித்து செயற்படத் தொடங்கி உள்ளனர்.

இதைவிட ஜெர்மனி, நோர்வே போன்ற நாடுகளில் தமது தன்னார்வக் குழுக்குள் பலரை இணைத்து பெரும் நிதித் தளத்துடன் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் அனுப்பி எடுக்கின்றனர். ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பில் ஈடுபட்ட பலர் இந்த சிலந்தி வலையில் சிக்கி உள்ளதுடன், மேலும் பலர் இதில் சிக்கிவிடும் நிலையில் உள்ளனர். மறுபுறம் மார்க்சியத்திற்கு எதிரான கோடுபாட்டுத் தளத்தை ஏதோ ஒரு வகையில் பெறுகின்றனர். இன்னுமொரு பிரிவினர் ரொக்சியக் கோட்பாடுகளுக்குள் சென்று வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக, தீவிரமாக வர்க்கப் போராட்டத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இலங்கையில் கொழும்பு தப்பி வந்த பலர் இன்று ஏகாதிபத்திய நிதித்தளத்துக்குள் விழுந்து தாளம் போடத்தொடங்கியுள்ளனர். இன்று மார்க்சிய விரோத மற்றும் மார்க்சியத்தை திரித்தும், புதிய கோடுபாடுகளை முன்தள்ளுவதை எதிர்த்தும் இந்த சிறிய பிரசுரத்தை எழுதுகின்றோம்.

இது அவர்கள் முன்வைக்கும் சில எல்லா வண்ண மார்க்சிய விரோதக் கோட்பாட்டையும் எடுத்து கேள்விக்கு உள்ளாக்கின்றது. குறிப்பாக குரு அ. மார்க்ஸின் கோட்பாட்டையும், மற்றவர்களின் கோட்பாட்டுத் திரிபுகளையும், கேள்விக்கு உள்ளாக்கி அம்பலமாக்கும் வகையில் இச்சிறு பிரசுரம் முயல்கிறது.

முதலில் அந்தோனிசாமி மார்க்ஸ் -ரவிக்குமார் உட்பட நிறப்பிரிகை குழு சார்பாக வெளியிட்ட "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற புத்தகத்தில் உள்ள மார்க்சிய விரோதக் கோட்பாட்டை இப்பிரசுரம் கேள்விக்கு உள்ளாக்கி அம்பலப்படுத்துகின்றது.

பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல... மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்!

கி.பி.1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர் சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர் சியாட்டில் அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிரபலமான கடிதம் இது. ஐரோப்பாவில் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை உலுக்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் முதலாளித்துவத்தைச் சகிக்க வொண்ணாத பண்டைப் பொதுவுடைமையின் குரலாய் இது ஒலிக்கிறது. அறிவியல் பூர்வமான பொதுவுடைமை, முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கத் தொடங்கிய அதே வேளையில், மனித குலத்தின் மழலை முதலாளித்துவத்தின் முகத்தில் காறி உமிழ்கிறது. உலக முதலாளித்துவத்தின் முகத்தில் அந்த எச்சில் இன்னும் வழிந்து கொண்டிருக்கிறது.

நிலத்துக்கு வெதுவெதுப்பூட்டும் வானத்தை நீ எப்படி விலைக்கு வாங்க முடியும்? எப்படி விற்க முடியும்? நல்ல வேடிக்கை. காற்றின் தூய்மையும், தண்ணீரின் ஒளியும், எங்களுடைய தனிச்சொத்துகளல்ல் பிறகு அவற்றை எப்படி நீ வாங்க முடியும்?

பூமியின் ஒவ்வொரு துகளும் எங்களின் மக்களுக்குப் புனிதமானது.

பளபளக்கும் ஊசி இலைகளும்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, January 5, 2009

மக்கள் எப்படி புலிகளை தோற்கடித்தனர் என்பது தான் புலியின் வரலாறு

மக்களுக்கு வெளியில் இயற்கை மட்டும்தான் உண்டு. இதற்கு வெளியில் வேறு எதுவும் கிடையாது. ஏன் எந்த புனிதமும், எந்த அவதார புருஷர்களும் கூடக் கிடையாது. மக்கள் தான், தம் வரலாற்றையும் தனக்கு எதிரான சக மனிதன் கொடுமைகளையும் எதிர்கொண்டாக வேண்டும். இதற்குள்ளேயே தான் மனித வரலாறுகள் போராட்டங்கள் என அனைத்தும்.

அதிகாரத்தின் மொழியை நிர்வாணமாக்குவது என்றால், அதை வைத்து போராடுவதே மக்களின் மொழி. தன் சக மனிதனுக்கு நடக்கும் அவலத்தைக் கண்டு கொதிக்காத மனிதம், மனிதமல்ல. சிங்கள பேரினவாத இராணுவம் தமிழ் பெண் என்பதாலும், தனக்கு எதிராக போராடியது என்பதாலும், ஒரு பெண் என்பதாலும், பெண்களையே நிர்வாணப்படுத்தி நடத்துகின்ற இழிவான மலிவான பாலியல் வக்கிரத்தையும் அது வெளிப்படுத்தும் அதிகார மொழியையும், மக்களுக்கு தெரியாத வகையில் மூடிமறைக்க முடியுமா!? இந்தக் கேடுகெட்ட நடத்தையை மக்கள் பார்க்காமல், யார் தான் பார்க்க முடியும்? அதையாவது சொல்லுங்கள்! சரி, ஏன் மக்கள் பார்க்கக் கூடாது! அதையாவது சொல்லுங்கள்.

நிர்வாணமான உடல் என்றால், அது ஆபாசமா!? எம் உடல் எமக்கு ஆபாசமானதா? அதை ஆபாசமாக்கி ரசிப்பவனும், மக்களும் ஒன்றா? ஆபாசமாக காண்பதும், காட்டுவதும், இந்த ஆணாதிக்க சமூக அமைப்பின் சிந்தனை முறையாகும். இப்படி உடலைப் பார்ப்பவன் சிந்திப்பவன்தான், ஒ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

கறுப்பின ஒபாமாவும் காசாக் கொலைகளும்

ஒபாமா அமெரிக்காவின் ஆரம்பம் களைகட்டத் தொடங்கியுள்ளது காசாவில். கசாப்புக்கடையாய் விரிகிறது காசா நகரம். குழந்தைகள், கர்ப்பிணிகள் வெற்றுடலாய் வீழ தெருவெங்கும் மரண ஓலம். இஸ்ரேலின் காசா மீதான ஆக்கிரமிப்புக்கு பின்னாலும் இத்தனை கொடுமையான படுகொலைகளுக்குப் பின்னாலும் அமெரிக்க ஆசீர்வாதம் இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு கொடுக்கு கட்டி விடுகிறது.

கிளர்ந்தெழும் மக்களின் ஊர்வலங்கள் எதிர்ப்பு பேரணிகள் எல்லாவற்றையும் துச்சமாக மதித்து காசாவை துவம்சம் செய்யும் இஸ்ரேலுக்கு முன்னால் எதுவும் செய்ய திராணியற்று கறுப்பின அமெரிக்க அதிபர் ஒபாமா கைகட்டி மவுனம் சாதிக்கிறார் என்று நம்புபவர்களும், உலகமே இனி அமைதிப் பூங்கா தான் அமெரிக்க கறுப்பின அதிபரின் வருகை நன்மைகளாக விளையப் போகின்றது என்பவர்களும் இதோ காசாவுக்கு செல்லுங்கள். இஸ்ரேல் செய்யும் அறுவடைகளில் உங்களுக்கும் பங்குண்டல்லவா?

பாலஸ்தீன மக்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்க முனையும் இஸ்ரேல் அமெரிக்க கூட்டு சதிக்கு இன்று தலைமை தருவது வேறு யார் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, January 4, 2009

கிளிநொச்சியின் வீழ்ச்சி எதன் எழுச்சி? - -ரவி

1985 நடுப்பகுதி. இராணுவம் கவசவாகனங்களுடன் அதிகாலை 4 மணிக்கே ஊரைச் சற்றிவளைத்திருந்தது. ஒலிபெருக்கி அறிவிப்பின் பின்னர் பொது இடத்துக்குப் போக வேண்டும். இளைஞர்கள் யுவதிகள் பிரித்து நிறுத்தப்படுவார்கள். முழந்தாளில் வெயிலுக்குள் மணிக்கணக்கில் நிற்கவேண்டும். சந்தேகத்துக்கு உரியவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். மற்றவர்களுக்கு அடிஉதை... பெரிசாக இப்போதையளவுக்கு போர் என்று ஒன்று இருக்கவில்லை. இயக்கங்கள் பல இருந்தன. இராணுவ வாகனங்கள் பெருவீதிகளை சூழ்ந்தபோது செய்தி வேகமாகப் பரவியது. நித்திரையால் எழுந்து ஓடிக்கொண்டிருந்தோம். அருகில் சக இயக்கத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் கையில் பிஸ்ரல்களுடன் எங்களுடன் சேர்ந்து ஓடினார்கள். "என்னடா நாங்கள்தான் ஒண்டுமில்லாமல் ஓடுறம். நீங்கள் ஆயுதத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறியள்" என்றேன் நக்கலாக. பலமாகச் சிரித்த அவன் "ஒரு பேச்சுக்கு தமிழீழம் கேட்டால் அதுக்கு இப்பிடியா (ஜே.ஆர் ஜெயவர்த்தனா) அடிக்கிறது??" என்றபடி ஓடிக்கொண்டிருந்தான்.

சுற்றிவளைப்பு படிப்படியாக வியூகம் கொண்டு இப்போ போராக இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறுவது போன்று கனத்திருக்கிறது. கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி ஏற்படுத்தியுள்ள உணர்வுகள் அதிர்ச்சி ஏமாற்றம் மகிழ்ச்சி கவலை உற்சாகம் என இலங்கை மக்கள் புலம்பெயர் தமிழர்கள் தமிழகம்... என தாக்கம் செலுத்தியுள்ள நேரம் இது. இரு நாடுகளுக்கு இடையிலான போரொன்றில் வெற்றிபெற்றது போன்ற உணர்வலைகள் ஆட்சியதிகார நிறுவனங்கள் தொடக்கம் ஆட்டோ வரையில் தேசியக்கொடியை உயர்த்தியிருக்கிறது. போரை எதிர்த்து குரல் கொடுத்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தாம் செய்த கேக்கின் மேல் தற்போதைய அரசு ஐசிங் செய்திருக்கிறது அவ்வளவுதான் என தனது உண்மை முகத்தை திறந்து காட்டியிருக்கிறது. கருணாவை புலியிலிருந்து பிரித்தெடுத்தது தமது ராஐதந்திரம் எனவும் அதனாலேயே புலிகளின் வீழ்ச்சி நிகழ்ந்தது என்பதும் அவர்களது வாதம். ஆக ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியினதும் இனப்பிரச்சினைத் தீர்வு அல்லது வழிமுறை அல்லது எதுவென்பது மீண்டும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

புலிகளின் அழிவு என்பது தமிழ்மக்களை அரசு வென்றெடுப்பது. ராஐபக்ச சிங்களத்தில் உச்சரிப்பை எழுதி தமிழ்பேசும் விளையாட்டு தமிழர்களை வென்றெடுக்காது. அவர்களு ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பெண்ணை நிர்வாணமாக்கும் பேரினவாதக் கொடுமையை, தமிழ்மக்களுக்கு மூடிமறைக்க கோருகின்றனர்?

இன்று இதையே அனைத்து தமிழ் ஊடகவியலும் செய்கின்றது. மறுபக்கத்தில் இதை நாம் தமிழ் மக்களிடம் எடுத்துச் செல்வதையே தவறு என்கின்றனர். நிர்வாணக் காட்சியை மூடிமறைக்கும் புனிதத்தின் பெயரில், இந்த கொடுமையை மறைப்பதன் மூலம் இதற்கு துணை போகின்றவர்கள், எம்மையும் இதைச் செய்யக் கோருகின்றனர். பேரினவாதம் காலாகாலமாக எம் பெண்களுக்கு செய்துவந்த பாலியல் கொடுமைகளை, பத்தோடு பதினொன்றாக்க முனைகின்றனர்.

எம் செயல் இதற்கு எதிரானது. நாம் இதை தமிழ் மக்களின் முன் வைத்து, உன்னைப்போன்ற பெண்ணுக்கு அல்லது உன் இனத்துப் பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைப் பார் என்கின்றோம். இப்படி நாம் செய்வது தவறு என்கின்றனர் புலித்தேசியம் பேசுபவர்கள். மக்களிடம் இதை எப்படி சொல்லமுடியும் என்பது, அவர்கள் பாணியிலான ஆட்சேபனை. அவர்கள் கூறும் காரணம் நிர்வாணமான உடல், இங்கு காட்சிக்கு வருகின்றது என்பது தான். அப்படியாயின் இதை யார் தான் பார்க்க முடியும்!? மக்களின் பெயரில் போராட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள அதி புனிதர்களா!? மக்கள் என்ன, இதைப் பார்த்து ரசிக்கும் காம வெறியர்களா!? இதற்கு எதிராக போராட முடியாத மந்தைகளா!?

நாங்கள் மக்களை நம்புகின்றோம். அவர்கள் தான் இதற்காகவும் போராட முடியுமென்று கருதுகின்றோம். இதற்கு வெளியில் நாம் யாரையம் நம்புவது கிடையாது. மக்களை ஆபாசம் பிடித்த காம வெறியர்களாக, இதைப் பார்க்க முடியாதவர்களாக, நீங்கள் கருதுவது போல் நாங்கள் கருதவில்லை. இதை மக்கள் தான் நிச்சயமாகப் பார்க்கவேண்டும். இதை ரசித்து செய்த காம வெறியன் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மக்கள் பார்க்காவிட்டால், இந்த அநியாயத்தை யார் தான் பார்ப்பது

........நிர்வாணமான உடல் என்பது, காட்சிப்படுத்தப்படக் கூடாத ஒரு பொருளல்ல. எந்த நோக்கில், எந்த அடிப்படையில் என்பதில் தான், அது தங்கியுள்ளது. இதை ஆயிரக்கணக்கில் பார்வையிட்டவர்கள், இதை வக்கிர உணர்வுடன் பார்ப்பதில்லை. அதை அப்படி அவர்கள் பார்ப்பதாக நம்பும் நீங்கள் தான், அந்த உணர்வுடன் பார்ப்பது வெளிப்படுகின்றது. மக்கள் அப்படிப் பார்ப்பதாகக் கூறி மக்களை ஏமாற்ற முனைகின்றீர்கள். மக்கள் பார்க்காவிட்டால், இந்த அநியாயத்தை யார் தான் பார்ப்பது. அதைச் சொல்லுங்கள். சில புனிதர்களா!? அதற்கு என்ன அடையாளம்!? நாம் மக்களை நம்பிப் போராடுபவர்கள். இதனால் மக்கள் முன் வைக்கின்றோம். இது எம் போராட்ட மரபில் கிடையாது என்பதால் தவறாகாது.

இந்தக் காட்சியை பார்ப்பவர்கள், எம்மை மீறி நடக்கும் எமக்கு எதிரான எதார்த்தத்தைக் கண்டு சினந்து வெடிக்கும் கோப உணர்வுடன் தான் பார்க்கின்றனர். புலித்தேசியத்தால் ஏற்பட்டுள்ள, சொந்த கையாலாகாத்தனத்தை எண்ணி வெட்கப்படுகின்றனர். ஏன் இந்த நிலைமை என்று, சொந்தமாகவும் சுயமாகவும் சிந்திக்கின்றனர். இதனால் இதை மூடிமறைக்க கோருவது, அருவருக்கத்தக்கது. ........

Saturday, January 3, 2009

கருத்தாக அனுமதிக்க முடியாதவையும், நிர்வாணப்படுத்தும் அரசியலும்


அமெரிக்கா முதல் இலங்கை வரை, பயங்கரவாத ஒழிப்பில் இவையின்றி மனிதம் அழிக்கப்படுவதில்லை. இப்படி அழிப்பில் ஈடுபட்டவர்கள், கொண்டாடி மகிழ்ந்ததை தான் அவர்கள் பதிவாக்கினர். இது தான் ஈராக்கில் நடந்தது. வக்கிரமான இந்தக் காட்சிகள் உள்ளடங்க இவை பயங்கரவாத ஒழிப்பின் ஒரு அம்சமாக, இதுவோ எமக்கு அதை அம்பலப்படுத்தும் ஆவணமாகியது.

இப்படி நாம் வெளியிட்ட வீடியோ ஆவணம், புலித்தேசியம் பேசியவர்கள் எல்லாம் இருட்டடிப்பு செய்துள்ள நிலையில், இதுவோ பேரினவாதத்துக்கு நிகராகவே மூடிமறைக்கப்படுகின்றது. அதேநேரம் புலித்தேசியம் பேசுவோரிடமிருந்து ஈமெயில்களும், பதிவுகளும் எம்மை நோக்கி வந்தன.

இதில் அறிவுப+ர்வமற்ற குதர்க்கங்கள் முதல் எம்மைத் தூசணத்தால் குதறியவை என்று பல அடங்கும். இவை எமக்கு அன்றாடம் வருபவை தான், ஆனால் தற்போது சற்று அதிகம். இறந்த அந்த பெண்கள் மேல் பேரினவாத இராணுவம் எதைச் செய்ததோ, இதற்கு சற்று மேலாக எனது தாயைக் கூட தாம் புணர்வோம் என்று மிரட்டுகின்றார்கள். இப்படி வந்த பதிவுகள் அனைத்தும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பேரினவாத கொண்டாட்டங்களும், தமிழினத்தின் பரிதவிப்பும்


பாலியல் வதை செய்யப்பட்ட பெண்ணின் உடலம் பற்றிய காட்சியை வெளியிட்டது தவறு என்று எமக்கு வந்த ஈமெயில்களை ஒட்டியும், பேரினவாத அரசு இந்தக் காட்சி மீது ஒரு விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ள நாடகத்தை ஒட்டியும், நாம் எழுதிக் கொண்டிருந்ததை தற்காலிகமாக நிறுத்தியே இக்கட்டுரை.

கிளிநொச்சியை பேரினவாதம் கைப்பற்றிய நிகழ்வு, பேரினவாதம் பாட்டாசு வெடிக்கவைத்து கொண்டாடும் கொண்டாட்டமாக மாறியுள்ளது. மறுபக்கத்தில் தமிழினமோ கையறு நிலையில் ஏற்பட்டுள்ள பரிதவிப்போ, ஈடிணையற்ற சோகமாக மாறியுள்ளது. ஒரு நாட்டில் வாழும் மக்களின் இரண்டு விதமான எதிர்வினைகள். தமிழினம் தம்மைத்தாம் பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழலில் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது.

இங்கு புலிகளிள் வெற்றி தோல்வி என்பதல்ல, தமிழ் மக்களின் பிரச்சனை. தமிழ் மக்கள் மேல் பேரினவாதம் கடந்த 60 வருடத்துக்கும் அதிகமான காலத்தில் எதைச் செய்ததோ, அதை மறுபடியும் கிளிநொச்சி வெற்றி மூலம் செய்துள்ளது. புலிகள் தோன்ற முன்னமே தமிழினம் இலங்கையில் தன் ஜனநாயக உரிமையை இழந்து, அதற்காக போராடியது. அதை இன்று ஏறிமிதித்துச் செல்வதே பேரினவாதத்தின்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இப்படிக் கூட சொரணையற்று இருக்க முடியுமா?

மக்கள் எப்படி எல்லாம் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி வேதனைப்படுகிறோமே,மக்கள் எப்படி எல்லாம் வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி எவ்வளவு சொரணையற்று இருக்கிறோம்?

நாகப்பட்டினம்: சுனாமியால் சேதப்பட்ட வீடுகள் 30,300. மும்பையில் காங்கிரசு தேசியவாத காங்கிரஸ் கூட்டரசால் தரைமட்டமாக்கி அழிக்கப்பட்ட வீடுகள் 84,000.
"எந்த ஒரு முதலமைச்சருமே தங்களுக்குப் பிறகு புகழ்மிக்க பாரம்பரியத்தை விட்டுவிட்டுச் செல்லவே விரும்புகிறார்கள்'' என்று சொல்கிறார் மகாராட்டிர முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்; அதாவது, மும்பையைச் சுத்தமாக்கி அழகுபடுத்தி வைத்திருப்பதையே தான் விரும்புவதாக அவர் சொல்கிறார். திருவாளர் தேஷ்முக் ஏதோ ஒரு விதத்தில்தான் மக்களால் நினைவு கூறப்படுவதை விரும்புகிறார்.

நிச்சயம் அவர் நினைவில் வைக்கப்படுவார். ஒரே நாளில் 6,300 வீடுகளை அவரது அரசாங்கம் துடைத்து அழித்திருக்கிறது. தாங்கள் அத்துமீறிக் கைப்பற்றி வைத்திருக்கும் எல்லைப்புற நகரங்களின் மீது, பரபரப்பான சந் தடி மிகுந்த ஒரு பிற்பகல் பொழுதில், இசுரேலிய இராணுவம் பெரிய சாதனையாக எண்ணி எடுக்கின்ற நடவடிக்கையை மட்டுமே இதனோடு ஒப்பிட முடியும்; டாங்கிகள் மற்றும் விமானப்படைத் தாக்குதலின் பின்பலத்தோடு அவர்களின் புல்டோசர்கள் இடித்துத் தள்ளக்................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, January 2, 2009

புலிகளின் அழிவு நெருங்க,நெருங்க...

"இலட்சம் மக்களை உயிர்ப்பலிகொண்டவொரு ஈழப்போராட்டம் இறுதியில்அந்த மக்களைப் பூண்டோடு அழித்து,அரசியல் அநாதைகளாக்கிச் சென்றுவிடப்போகிறது! பணத்தைச் சுருட்டி வைத்திருக்கும் வெளிநாட்டுப் புலிகளுக்குப் புலித் தலைமை அழிந்துஇலங்கையில் போர் முடிவுக்கு வருவது மிகவும் அவசியமானது.கையிலிருக்கும் பெருந்தொகை பணத்தை அங்கே,மூலதனமாக இடுவதற்கு அவசியாமான புலி அழிப்பு ஒரு வகையில் இவர்களும்எதிர்பார்ப்பதே."

அரச பயங்கரவாத வான் தாக்குதற் கொலைகளும்,அதைக்காரணமாக்கிய இராஜ தந்திரங்களும் ஈழத்தமிழ்பேசும் மக்களை உயிர்திருப்பதற்கான சாத்தியப்பாட்டிலிருந்து மெல்ல மெல்லப் பெயர்த்தெடுத்து கொலைக் களத்துக்குள் தள்ளி விடுகிறது.இதுவரையான அனைத்துக் கொலைகளும் தனிநபர் பயங்கரவாதத்திலிருந்தும்-இயக்கப் பயங்கரவாதத்திலிருந்தும் அரச பயங்கர வாதமாக வியாபித்துக் கொண்டு, நமது சமூகத்துள் வாழும் சாதரண மக்களின் வாழ்வாதராத்தைப் பறித் தெடுக்கிறது.வன்னி விடுவிப்பு யுத்தம்,பயங்கரவாதத்துக் எதிரான யுத்தம் எனும் பெயரில் ஆளும் மகிந்த அரசு செய்யும் இக் கொடூரமான யுத்தம் வெறுமனவே புலிகளை வேட்டையாடும் யுத்தமென்றும் கூடவே, அது தமிழ்பேசும் மக்களை விடுவிப்பதற்கான யுத்தமெனும் போர்வையில் இன்று தமிழர் குடிப்பரப்பெங்கும் வான் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.இவற்றை அரசியல் பகமையைக்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

அன்னை' தெரசாவின் : 'தேவன் இல்லை - ஆன்மா இல்லை -இயேசுவே .... நீரும் இல்லை"

"பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?''

""என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.''

""என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.''

துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் "அன்னை' தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.

1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த "அவிசுவாசத்தை' எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின்............வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, January 1, 2009

கருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம்

கருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-1

விவசாயத்தை நாசமாக்கும் சாராய ஆலை

காரைக்காலைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தலைமையிலான ஆறுபேர் கொண்ட கும்பல்,புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி, ''போல்ட்நட்'' தயாரிக்கும் ஆலைத் தொடங்கப் போவதாக அறிவித்தது. பின்னர் பாட்டில் தண்ணீர் தயாரிக்கப் போவதாகக் கூறிப் பஞ்சாயத்து அனுமதி பெற்றது. இப்போது ''கால்ஸ்'' என்ற நிறுவனத்தின் பெயரில் சீமைச்சாராய வடிப்பு ஆலைக்கான எல்லா கட்டுமான வேலைகளையும் வேகமாகச் செய்து வருகின்றது. இரண்டு பெரிய ஆழ் குழாய் (சுமார் 480 அடி ஆழம்) கிணறுகளைத் தோண்டி அன்றாடம் 6 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை இப்போதே உறிஞ்ச ஆரம்பித்து விட்டது இந்த ''கால்ஸ்'' கும்பல். இது தவிர, இன்னும் பத்து ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டி ஆலையை இயக்கத் தீர்மானித்துள்ளது.

Wednesday, December 31, 2008

மண்ணுக்குள் தலையைப் புதைக்கும் பெண்ணியல்வாதிகள்

சிறிலங்கா பேரினவாத அரசின் ஆணாதிக்க படைகள், தாம் யுத்த முனையில் கைப்பற்றிய பெண் புலி உறுப்பினர்களின் உடலை நிர்வாணப்படுத்தி, அதை தம் பாலியல் வக்கிரத்துடன் கொத்தித் தின்ற ஒரு வீடியோ ஆவணத்தை நாம் வெளியிட்டிருந்தோம். இந்த நிகழ்வுக்கு எதிரான கண்டனங்கள், போராட்டங்கள் அரசியல் உள்நோக்குடன், குறுகிய தம் அரசியல் வக்கிரத்துடன் பொதுவாக தவிர்க்கப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் தான் பெண்ணியல்வாதிகள் என்று தம்மைத் தாம் கூறித் திரிந்தவர்கள், இதற்கு எதிரான எந்த விதமான எதிர்ப்பும் எதிர்வினையுமின்றி உள்ளனர். இதை தம் அரசியல் வக்கிரத்துடன் கூடிய பெண்ணியத்தின் பின், மூடிமறைக்கின்றனர்.

 

இலங்கை பெண்ணியல்வாதிகள் முதல் புலம்பெயர் பெண்ணியல்வாதிகள் வரை, இந்த பேரினவாத வக்கிரத்தை கண்டுகொள்ளாதவர்களாக இருப்பதும், இதில் உள்ள அரசியல் சூக்குமமும் வெளிப்படையானது.

 

இவர்களின் பெண் அரசியல், மக்களைச் சார்ந்ததல்ல. குட்டிபூர்சுவா எல்லைக்குள் சொந்த மன வக்கிரங்களை கொட்டிப் புலம்பி ஓப்பாரி வைப்பதுதான், இவர்களின் உயர்ந்தபட்ச பெண்ணியமாக இருந்தது. மக்களுடன் சேர்ந்து இயங்கும் பெண்ணியத்தை நிராகரித்தவர்கள், அந்த மக்களின் சுமைகளுடன் சேர்ந்து குரல்கொடுத்தது கிடையாது. இதனால் பேரினவாத இராணுவத்தின் செயல், இவர்களின்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.


பொருளாதார நெருக்கடி : எரிகிற வீட்டிலும் பிடுங்கும் வக்கிரம்

"எதைத் தின்றால் பித்துத் தெளியும்?'' இந்தக் கேள்விதான் இப்பொழுத் மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தையும் குடைந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் வங்கியில் இருந்து 2,60,000 கோடி ரூபாய் சந்தையில் கொட்டி விட்டோம்; முதலாளிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டியையும் இயன்றவரைக் குறைத்து விட்டோம். ஆனாலும், பங்குச் சந்தை சரிந்து கொண்டே போகிறதே எனத் திகைத்துப் போய் நிற்கிறார்கள், அவர்கள்.

பங்குச் சந்தைக் சரியச் சரிய, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் (நவ. 22 நிலவரப்படி ரூ. 50.20) சரிந்து கொண்டே போகிறது. தரகு முதலாளிகளோ சந்தையில் பணத்தை இன்னும் கொட்ட வேண்டும்; வட்டியை இன்னும் குறைக்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்கள். இதற்கு மேலும் பணம் வேண்டும் என்றால், அரசு வங்கிகளின் சாவிகளை அம்பானிடாடாவிடம் ஒப்படைத்துவிடுவது தவிர வேறு வழியில்லை.

Tuesday, December 30, 2008

பேரினவாத பாலியல் இழிசெயலுக்கு எதிராக எழுந்துள்ள குரல்கள்

பேரினவாதம் இராணுவம் அண்மையில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் என் கருதப்படும், குறைந்து இரு பெண்களை இழவுபடுத்தி அலங்கோலப்படுத்தி ஒளி (வீடியோ) ஆவணத்தை நாம் வெளியிட்டு இருந்தோம். நாம் வெளியீட்டதை விட
எமக்கு கிடைத்த மூலம் மேலும் துலக்கமானவை, துல்லியமானவை. எந்த விசாரனைக்கு அவை வழங்கப்;படும். அதற்கு எமது பூரணமான ஓத்துலைப்பு உண்டு.

தற்போது இதற்கு எதிரான போராட்டம்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மோதல் கொலையா? கட்டுக்கதையா?

தில்லியில் கடந்த செப்டம்பர் 13 அன்று குண்டு வெடித்த ஆறாவது நாள் செப்டம்பர் 19 அன்று, அந்நகரின் தென்பகுதியில் உள்ள ஜாமியா நகரில், ''பாட்லா ஹவுஸ்'' என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் தில்லி போலீசின் சிறப்புப் பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில், ''இரண்டு முசுலீம் தீவிரவாதிகள் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்; இருவர் தப்பியோடிவிட்டதாகவும்; ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டிருப்பதாகவும்'' அறிவிக்கப்பட்டது.

''கொல்லப்பட்ட தீவிரவாதிகளான முகம்மது பஷீர் என்ற அடிஃப் மற்றும் முகம்மது பக்ருதீன் என்ற சஜித் ஆகிய இருவரும் தில்லி குண்டு வெடிப்புக்குக் காரணமான இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்; அடிஃப்தான் அந்த அமைப்பின் தளபதி; ஜெய்ப்பூர், அகமதாபாத் நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் இவர்கள்தான் காரணம்'' என்று தில்லி போலீசு அறிவித்தது.
இந்த மோதல் நடந்த அடுத்த சில தினங்களிலேயே சாகிப் நிஸார், ஷீஷன் உள்ளிட்ட பல முசுலீம் இளைஞர்கள் ஜாமியா நகரிலிருந்து கைது செய்யப்பட்டனர். ''இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைமையை அழித்தொழித்து விட்டதாக'' அறிவித்தார், தில்லி போலீசின் இணை கமிசனர். இம்மோதலின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தில்லி போலீசின் மோதல் கொலை நாயகன் எனப் புகழப்படும் போலீசு ஆய்வாளர் மோகன் சாந்சர்மா மோதலின்பொழுது சுடப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.

Monday, December 29, 2008

கயாலாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்

.......... குடிசைக்குள் புகுந்த ஆதிக்க சாதிவெறியர்கள், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்தி, கையோடு கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் அவர்களைக் கொடூரமாகத் தாக்கினர். அதோடு அந்த நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டு வந்து பையாலாலின் மனைவியையும், மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறிப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்து நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்களுள் ஒருவரும் இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை.

பிறகு, ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு பையாலாலின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண்குறிகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு அவர்களை அரைகுறை உயிரோடு வானத்துக்கும் பூமிக்குமாகத் தூக்கியெறிந்து பந்தாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை இந்த "விளையாட்டு' நடந்தது.

குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத இச்சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, December 28, 2008

முக்கிய அறிவித்தல் : பேரினவாத கயவர்கள் எம் பெண்கள் மேல் கூத்தாடும் ஓளிநாடாவை பெறுவது பற்றிய விபரம்

பேரினவாதம் கையாண்ட கொடூரமானதும், பாலியல் ரீதியான செயல் அடங்கியதுமான 90 செக்கன் ஓளிநாடாவை பொறுப்புள்ள அமைப்புகள், தம்மை உறுதி செய்து எம்மிடம் பெறமுடியும். எம் இணைய ஈமெயில் மூலம் தம்மை உறுதி செய்து, ஈமெயில் மூலம் இதை பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தனிப்பட்ட துஸ்பிரயோகத்தை தடுப்பதும் அவசியமானது. சிங்கள பேரினவாதத்தை சேர்ந்த ஆணாதிக்கவாதிகள் இதை எந்த நோக்கில் கையாண்டனரோ, அந்த நோக்கில் இதை பயன்படுத்தும் தனிநபர்கள் எங்கும் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் எமக்கு கிடையாது.

நேர்மையாக தம்மை அடையாளப்படுத்தி............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சிங்கள இராணுவம் பெண்களை நிர்வாணப்படுத்தி குதறுவதை, மூடிமறைக்கும் புலித் தேசியம்

90 செக்கனே கொண்ட இந்த ஒளிநாடாவை, புலித்தேசியம் ஏன் மூடிமறைக்கின்றது? மகிந்த சிந்தனையும் புலியிசமும் ஏன் இதில் ஒன்றாக கூடி நிற்கின்றது. இதை அவர்கள் மூடிமறைக்க, ஒரேயொரு காரணம் தான் உண்டு. இதை நாமே முதலில் வெளியிட்டோம் என்பதும், மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு இணையத்தில் இது வெளியாகியதுதான் காரணம்.

இந்த இணையம் மக்களுக்கு தெரியக்கூடாது என்ற அக்கறையும் கரிசனையும், இதை மூடிமறைக்கவும் மகிந்தவுடன் இதில் கூடி நிற்கவும் தயாராக உள்ளதையே இது அம்பலமாக்கியுள்ளது. தமிழ் மக்களுக்கு ஒரு ஆதாரபூர்வமான விடையத்தை மறைக்கவும், அந்தக் குற்றத்தை மூடிமறைக்கவும் புலியிசம் பின் நிற்கவில்லை.

இந்தக் காட்சி வெளிப்படுத்துவது, சர்வதேச குற்றங்களுக்கு நிகரான போர் குற்றத்தை, இறந்த பெண்களை மேலும் பாலியல் ரீதியாக குதறும் காட்டுமிராண்டித்தனத்தை. ஆனால் இதை மூடிமறைக்க முனைவதன் பின்னுள்ள அரசியல்தான், தமிழ் இனத்தின் தோல்விக்கான சமூக அடிப்படையாகும்.

மகிந்த சிந்தனை தமிழ் இனத்தை எப்படி
வேட்டையாடினாலும்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலிகளை மீறிப் போராடும் மக்களும் புலி உறுப்பினர்களும்

மகிந்த சிந்தனையும் பிரபாயிசமும், மனிதத் தன்மையற்ற கெடுபிடியான இரக்கமற்ற ஒரு மக்கள் விரோத யுத்தத்தையே நடத்திவருகின்றது. இதில் சிக்கி தவிக்கும் மக்களையிட்டு எந்த அக்கறையற்ற சுயநலமே, இன்று எங்கும் புரையோடிக்கிடக்கின்றது. இதனால் பாதிக்கப்படும் மக்களையி;ட்ட எமது அக்கறை தான், இதை செய்பவர்கள் இவர்கள் மேலான எமது கடும் விமர்சனமாக மாறுகின்றது.

இதனால் எமக்கு மகிந்த சிந்தனை மேலும், பிரபாயிசம் மேலும் எந்தவிதமான கருசனையும் அக்கறையும் கிடையாது. அதுவோ வெறுக்கத்தக்கது. வெந்த புண் மேல் வேல் பாய்ச்சும் வகையில், வரண்டு போன பாசிசத்தால் வக்கிரமடைந்து கிடக்கின்றது.

இதுவோ, மக்கள் மேல் ஈவிரக்கமற்ற வகையில் இயங்குகின்றது. மற்றவன் அழிவில், தான் வாழ நினைக்கின்றது. இது குறுகிய தன்னல நோக்கம் கொண்டது. அப்பாவி தமிழ் மக்கள் மேல், பலாத்காரமாகவே இந்த யுத்தம் திணிக்கப்பட்டுள்ளது. இந்த யுத்தம் ஏன், எதற்கு என்று தெரியாது, மக்கள் அதில் பலியாகின்றனர்.

தப்பிச் செல்ல முனையும் முயல்கள் போல், மக்கள் அங்குமிங்கும் நெளிந்தோட முனைகின்றனர். அவர்கள் அனுபவிப்பதோ சொல்லொணாத் துயரங்கள். தம்...................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Saturday, December 27, 2008

தொலைக்காட்சியும் தமிழர் பண்பாடும்

தொலைக்காட்சியும் தமிழர் பண்பாடும் உரை பேரா.ஷாஜகான் கனி

ஆதிக்க சாதிவெறியர்கள் கொட்டம் : தமிழகத்தின் அவமானம்


· நவம்பர் 2ஆம் தேதியன்று உத்தப்புரம் சென்றுவிட்டுத் திரும்பிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் காரை எழுமலை எனும் கிராமத்தின் அருகே தேவர்சாதி வெறியர்கள் அடித்து நொறுக்கினர். எழுமலையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டுவிட்டதாக கூறியே இத்தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலைக் கண்டித்து நடந்த சாலைமறியல் போராட்டத்தின்போது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் கொல்லப்பட்டார்.

· உத்தப்புரத்தில் கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வரும் அடுத்தடுத்த மோதல்களில் ஆதிக்க சாதியினர் மீது சாதாரண கிரிமினல் சட்டத்தின் கீழ் கூட வழக்குப் பதிவு செய்யாமல், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது வெடிமருந்துச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்; போலீசார் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறதென்பதை அங்கு சென்று வந்த உண்மையைக் கண்டறியும் குழுவினர் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளனர் போலீசினுடைய.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, December 26, 2008

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்

இதில் இணைத்துள்ள வீடியோ இணைப்பு, மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி, பொதுவாக ஆணாதிக்க வக்கிரத்துடன் தான் பரவிவருகின்றது.


இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோத குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

பேரினவாதம் வெறும்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சுனாமி ஏற்படுத்திய சமூக அழிவையே மிஞ்சும் அதிகார வர்க்கங்களின் சூறையாடல்

சு னாமி ஏற்படுத்திய சமூகச் சிதைவுகளையே மிஞ்சும் வகையில், இடைத்தரகர்களின் வக்கிரம் அந்த மக்களின் வாழ்வியல் உரிமையையே இல்லாததாக்குகின்றது. ஒருபுறம் பாதிக்கப்பட்ட மக்கள், மறுபுறம் பாதிக்கப்படாத மக்கள் என்று இருதளத்திலும் இந்தச் சமூக அவலம் அக்கம் பக்கமாகவே நிகழ்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களும், பாதிக்கப்படாத மக்களும் கூடிவாழும் வாழ்வியல் உரிமையையே இடைத்தரகர்கள் தமது அதிகாரங்கள் மூலம் மறுக்கின்றனர். மக்களுக்கு இடையில் இந்த இடைத்தரகர்கள் பெருமளவில் பெருகியுள்ளதுடன், ஒரு ஒட்டுண்ணியாகி நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதிக்கப்படாத மக்கள் கொடுத்த உதவிகளின் பெரும்பகுதியை, இந்த இடைத்தரகர்கள் சூறையாடிக் கொள்கின்றனர்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்ற நிவாரணங்களை விட, இடைத்தரகர்களின் வீடுகளுக்குச் சென்ற நிவாரணங்கள்தான் அதிகம். இது தொடருகின்றது. அதேநேரம் பெரும் அளவிலான மக்களின் உதவிக்கு என்ன நடந்தது என்பதை யாரும் அறிய முடியாத சூனியமாகவே உள்ளது. இதுவும் கூட மக்களின் ........... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, December 25, 2008

சீமானும் செல்வியும்

இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்கள் அண்மையில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் கைதுகளைக் கண்டித்தும் தமிழக அரசின் கருத்துச் சுதந்திர மறுப்பு எதோச்சதிகாரத்தைக் கடுமையாகச் சாடியும் வலைப்பதிவுகளில் தோழர்கள் எழுதிக் குவித்துள்ள கட்டுரைகளைப் படிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நீண்ட நாட்களாகவே பேசியும் எழுதியும் வருபவன் என்ற முறையில் உள்ளபடியே எனது கண்கள் பனிக்கின்றன. இந்த வலைப் பதிவாளர்களல்லவா எனது தோழர்கள் எனத் திரும்பத் திரும்ப எனது உதடுகள் முணுமுணுக்கின்றன.

“நீ சொல்லும் கருத்தில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை, ஆனாலும் அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக் கொடுத்துப் போராடவும் நான் தயார்” என்ற வோல்தயரின் புகழ்பெற்ற கூற்றை வெறுமனே வீம்புக்கு உச்சரிப்பவர்களில் நானும் ஒருவனல்ல. அந்தக் கூற்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மகிந்தவின் பாசிச சிந்தனையிலான புலித்தடை

இலங்கையில் புலியை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ள பின்னணியோ, மிகவும் ஆபத்தான பாசிசமாகும். புலிப் பாசிசமோ மக்களை யுத்தப் பணயப்பொருளாக வைத்துக் கொண்டு நடத்துகின்ற மனித விரோத யுத்தத்தையே, தனக்கு சாதகமாக கொண்டு பேரினவாதம் அறிவிக்கும் புலித் தடை சூழ்ச்சிமிக்கதும், ஆபத்தானதுமாகும். இதன் மூலம் தமிழினத்தை அழித்தொழிக்கும் யுத்தத்தை, சர்வதேச ஆதரவுடன் பேரினவாதம் நடத்த முனைகின்றது.

புலிகள் தம் பிடியில் வைத்துள்ள வன்னி மக்களை 26.12.2008 முன்பாக விடுவிக்காவிட்டால், புலியை தாம் தடை செய்யப்போவதாக கூறுகின்றது மகிந்தாவின் பேரினவாத பாசிச சிந்தனை. இந்த உத்தி மூலம் தம்மை தமிழ் மக்களின் மீட்பாளராக காட்ட முனையும் பாசிசமோ, மிகத் திட்டமிட்ட சதியை அடிப்படையாக கொண்டது.

இதன் மூலம் புலியை அழித்தொழிக்க, சர்வதேச அங்கீகாரத்தை பேரினவாத பாசிசம் கோருகின்றது. இதற்கு புலிகள் தம் பிடியில் பணயப்பொருளாhக வைத்துள்ள அப்பாவி மக்களையே, மகிந்த சிந்தனை தன் பணயப் பொருளாக்கியுள்ளது. தமிழ் மக்களின் எதிரி என்றுமில்லாத வகையில் மிக நெருக்கமாக புத்திசாலித்தனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில் இயங்குகின்றான். மிகத் திட்டமிட்ட வகையில், புலிகளிடமிருந்து மக்களை தனிமைப்படுத்தியே யுத்தத்தை செய்யும் தன் நியாயப்பாட்
.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மக்களின் அவலம், அவர்களின் தனிப்பட்ட பிரச்சனையா?


சமூகத்தின் பங்களிப்பு மறுக்கப்பட்டு, அவை தனிநபர்களின் சொந்த பிரச்சனையாக்கப்படுகின்றது. இந்த மனித அவலங்களுக்கு காரணம் யார்? மக்களா! சொல்லுங்கள்;. ஓருபுறம் அரசு என்றால் மறுபுறம் புலிகள். இதை இல்லையென்று, சொல்ல உங்களால் முடியுமா?

இப்படியிருக்க இவர்கள் காரணமில்லை என்று எப்படித்தான் கூறமுடிகின்றது. அதையும் ஒரு பக்கச்சார்பாக சொல்ல முடிகின்றது. எப்படித்தான் உங்களால் இவற்றை திரித்து பிரச்சாரம் செய்யமுடிகின்றது. இதன் மேலான உங்களின் அக்கறை, நேர்மை, உண்மை, மனிதப் பண்பு எல்லாம் போலியானது என்பதும், அவை போக்கிலித்தனமானது என்பதும் உண்மையாகின்றது.

மக்கள் மேலான உங்கள் கரிசனை என்பது, உங்களின் குறுகிய பிரச்சார தேவைக்கானதாக இருப்பது வெளிப்படையாகின்றது. உங்கள் மக்கள் விரோத யுத்தத்துக்கு, இவை தேவையானதாக இருப்பதும் அம்பலமாகின்றது. இது மக்களின் துயரங்களையும் துன்பங்களையும் தம் பங்குக்கு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, December 24, 2008

வாஜிபாயா காசிம் பாயா

வாஜிபாயா காசிம் பாயா

சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்


இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோத குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

பேரினவாதம் வெறும் புலிகளுடன் மட்டும் சண்டை செய்யவில்லை. மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்

இதில் இணைத்துள்ள வீடியோ இணைப்பு, மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி, பொதுவாக ஆணாதிக்க வக்கிரத்துடன் தான் பரவிவருகின்றது.


இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோதLink குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

பேரினவாதம் வெறும்
...........................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, December 23, 2008

மொட்டைத் தலையன் துக்ளக் சோ

அகமதாபாத் குண்டு வெடிப்பை மேலோட்டமாகக் கண்டிக்கும் துக்ளக் சோ, ஒருவேளை இராணுவம் மற்றும் உளவுத் துறைகள் பயங்கரவாதத்திற்கு எதிராக இத்தகைய எதிர் நடவடிக்கைகளில் (அதாவது குண்டு வெடிப்புக்கள்) ஈடுபட்டால், அது இரகசியமாக இருக்கவேண்டுமென ஆலோசனை கூறுகிறார். இதன்மூலம் இந்திய உளவுத் துறை அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அங்கீகாரமும் வழங்குகிறார். இசுலாமியத் தீவிரவாதிகள் குண்டு வெடித்தால், அது நிரூபிக்கப் படாமலேயே அவர்களைக் கொன்று அழிக்க வேண்டுமெனச் சாமியாடும் இந்த மொட்டைத் தலையன், இந்து பயங்கரவாதத்திற்கு மட்டும் இனப்பாசத்தோடு வக்காலத்து வாங்குவதை என்னவென்று சொல்ல? மற்ற குண்டுவெடிப்புக்களின் போது மத்திய அரசு தீவிரவாதிகளை மென்மையாக நடத்துகிறது, பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று துள்ளியவர்கள், இப்போது கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே?..................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இந்தியாவின் நிலவுப் பயணம்: வல்லாதிக்கக் கனவுக்கு வரிபணம் சூறை!


1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஸ்புட்னிக் செயற்கைக்கோளை முதன்முறையாக விண்ணில் செலுத்திய போது, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரஷ்யர்கள் தங்களைத் தாக்குவர் எனும் வதந்தி அமெரிக்க மக்களிடையே பரப்பப்பட்டது. சோவியத்துக்குத் தாம் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்க அமெரிக்காவும் ஒரு செயற்கைக்கோளை அனுப்பியது. இவ்விரு நாடுகளும் தங்களது வலிமையை நிரூபிக்க அடுத்தடுத்து செயற்கைக்கோள்களை அனுப்பி, விண்வெளி யுத்தம் நோக்கிச் சென்றன. பனிப்போர் காலகட்டத்தில் நடந்த இந்தப் போட்டி தற்போது மீண்டும் வேறுதளத்தில் தலைதூக்கியுள்ளது.

சீனா விண்வெளிக்கு மனிதனை அனுப்பியதுடன், 2007இல் பயனற்ற செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணையைச் செலுத்தித் தகர்த்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா இதனைச் செய்திருந்தாலும், அமெரிக்காவும் தனது பலத்தை நினைவூட்ட மீண்டும் ஒரு செயற்கைக்கோளைத் தனது ஏவுகணையைச் செலுத்தித் தகர்த்தது. ஜப்பானும் தன் பங்குக்கு அதிநவீன செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு அனுப்பியது.

Monday, December 22, 2008

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு துரோகம் இழைக்கும் புல்லுருவித்தனம்


தமிழ் மக்கள் விரும்புவதோ, யுத்தமற்ற சூழலில் வாழ்வதைத்தான். அது வன்னியிலா கொழும்பிலா என்பது கூட, அவர்களுக்குப் பிரச்சனையில்லை. ஏன் இந்த நிலைக்கு தமிழ் மக்கள் வந்து உள்ளனர்? ஏனென்றால், இந்த யுத்தம் எந்த உரிமைக்கான யுத்தமுமல்ல. தமிழரின் உரிமைக்கான யுத்தமுமல்ல, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்கான யுத்தமுமல்ல.

மாறாக இது மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம். அவர்களை அடக்கியொடுக்கி, யார் எப்படி ஏன் ஆள்வது என்ற முரண்பாட்டின் அடிப்படையில்; மக்கள் விரோதிகள் நடத்தும் யுத்தம். இவர்கள் யாரும், எந்த மக்கள் நலனில் இருந்தும் தாம் செயல்படுவதாக யாரும் நிறுவ முடியாது...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

உணவைக் கொடுக்கவும், உணவை வாங்கித் தின்னவும், ஊர்வலம் விடுவதையும்;தான், இவர்கள் மக்கள் போராட்டம் என்கின்றனர். மக்களை அடக்கியொடுக்கி, அவர்களை நாய்களைப் போல் தமது கட்டுப்பாட்டில் அடிமையாக வைத்திருக்கும், தம் அதிகாரத்தைத்தான் இவர்கள் மக்களின் விடுதலை என்கின்றனர்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இந்த யுத்தத்தில் அரசு வெற்றி பெற்றாலும் சரி, புலிகள் வெற்றி பெற்றாலும் சரி, அதில்

Sunday, December 21, 2008

மக்களைப் பற்றிப் பேசும் துரோகத்துக்காக போராடி மரணிப்போம்

தமிழ் மக்களைப் பற்றி பேச மறுப்பதையே, தியாகம் போராட்டம் என்கின்றனர். ஒரு இனத்தை இன்று அழித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும், இதைத்தான் கூறுகின்றனர். இதைத்தான், இன்று புலிகள் முதல் பேரினவாதம் வரை கூறுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேசாது, தேசியம், யுத்தம் பற்றி மட்டும் பேசக் கோருகின்றனர்.

தமிழ் மக்களை யார் எப்படி கொடுமைப்படுத்தினாலும், அதைப் பார்க்காது இருப்பதே தேச நலன் என்கின்றனர். எதையும் பக்கச்சார்பாக பேசவும், ஒன்றையொன்று மூடிமறைத்தும் பேசுவதே மனித சுதந்திரத்தின் அடிப்படைகள் என்கின்றனர்.

தேசியம் மற்றும் யுத்தம் என்ற பெயரில், தமிழ் மக்கள் மேல் திணித்துள்ள கொடுமைகளையும் கொடூரங்களையும் பேசுவது இன்று துரோகமாக உள்ளது. அந்த வகையில் நாம் தொடர்ந்தும் மக்களைப்பற்றி பேசுவதால், துரோகிகளாகவே உள்ளோம்.

எம்மை என்ன செய்யக் கோருகின்றனர். ஒன்றில் பேரினவாதத்தை ஆதரி அல்லது புலிப் பாசிசத்தை ஆதரி என்கின்றனர். நாம் இவ் இரண்டையும் மறுப்பதால், இவர்கள் முன் துரோகியாக மாற்றப்பட்டுள்ளோம்.

எமக்கு வெளியில் பேரினவாத தமிழின அழித்தொழிப்பு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மோதல் : ஆதிக்கசாதித் திமிருக்கு விழுந்த-பதிலடி!

கடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல், தமிழகத்தில் புரையோடிப் போயுள்ள சாதிதீண்டாமையின் கோரத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சட்டக் கல்லூரியில் சாதிவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பதிலடி கொடுத்துள்ளதன் வாயிலாக, இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

தென்மாவட்டங்களைப் போல வெளிப்படையாக இல்லையென்ற போதிலும், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஆதிக்க சாதித் திமிர் நீறுபூத்த நெருப்பாகவே நீடித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்க சாதிவெறி அமைப்புகள் சட்டக் கல்லூரியில் வேர்விடத் தொடங்கின. "முக்குலத்தோர் மாணவர் பேரவை'' அதில் ஒன்று. தாழ்த்தப்பட்ட மாணவர்களால் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிகண்ணன், அதன் முக்கிய பிரமுகர்.

கடந்த 2007ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் தகராறு செய்து அடிதடியில் இறங்கியவர்தான் பாரதி கண்ணன். ஆறு மாதங்களுக்கு முன்பு கல்லூரியின் பெயரில் இருக்கும் "அம்பேத்கர்'' என்ற வார்த்தையை நீக்கச் சொல்லி பாரதிகண்ணன் தலைமையில் ஆதிக்கசாதி மாணவர் கும்பல் தகராறு செய்தது. "சிங்கங்களே, ஒன்று சேருங்கள்!'' என்று தேவர் சாதி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து, கல்லூரி வளாகத்திலேயே இக்கும்பல் சுவரொட்டிகளையும் ஒட்டியது. இதற்குத் தாழ்த்தப்பட்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Saturday, December 20, 2008

சங்கரமடத்தை விட்டு வாப்பா

சங்கரமடத்தை விட்டு வாப்பா

பேரினவாதத்தின் வெற்றி, தமிழ் சமூகத்தை வெற்றுடலாக்குகின்றது.

எல்லாம் புலிமயமாகி அழிகின்றது. ஒருபுறம் எல்லாவற்றையும் புலிமயமாக்கி பேரினவாதம் அழிக்கிறது. மறுபுறத்தில் எல்லாம் புலியாகி அழிகின்றது. இந்த சமூக பாசிச விதிக்குள், தமிழினம் தன் மீட்சிக்கான எந்த சொந்த சமூகமாற்று வழியுமின்றி அழிகின்றது. மாற்றுக் கருத்தற்ற பாசிச அழிவுக் கருத்துத் தளத்தில், எல்லாம் பாசிச சிந்தனையாகி ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்படுகின்றது.
சமூகத்தை வழிகாட்ட வேண்டிய அறிவுத்தளத்தில், அழிவுக்கான சிந்தனை முறையே சமூக மீட்சிக்கான பாதையாகி அது சமூகத்தின் மேல் திணிக்கப்படுகின்றது. தமிழ் மக்களை பாதுகாக்கத்தான் தாம் அரசை ஆதரிப்பதாகவும் அல்லது புலியை ஆதரிப்பதாகவும் கூறி, அங்குமிங்குமாக தமிழ் மக்கள் மேல் பீச்சியடிக்கின்றனர்.

தமிழ் மக்கள் பேரினவாத அரசு மற்றும் புலிகளால் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றனர். அவர்கள் அனுபவிக்கின்ற துயரத்தையும், துன்பத்தையும், யார் தான் இன்று நேர்மையாக குறைந்தபட்சம் சொல்லுகின்றனர்.

இந்த மனித சோகத்தை பேசாத நேர்மை, உண்மை, மனித நேயம் என அனைத்தும் பொய்யானது. பித்தலாட்டம் கொண்ட அறிவு மூலம், முற்போக்கு இடதுசாரியம் மார்க்சியம் என்று வேஷம் கட்டி, தமிழ் இனத்தை தம் அழிவுக் கருத்துக்களால் நலமடிக்கின்றனர்.

இவையெல்லாம் இன்று புலிகளை வெல்லுதல் என்ற சிங்கள பேரினவாத போர்வெறி ஊடாக அரங்கேறுகின்றது. தமிழ் இனத்தின் அனைத்து சமூக வாழ்வாதாரங்களையும், சமூ................
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல! - எழுத்தாளர் அருந்ததி ராய்

எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் கட்டுரைஅவுட்லுக் இதழில் சமீபத்தில் வெளியானது. மும்பை பயங்கரவாதம் பற்றிய அக்கட்டுரையை ச்சும்மா ட்டமாஷ்-75 -க்காக மொழிபெயர்த்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். மூல கட்டுரைக்கும் மொழி பெயர்ப்புக்கும் அர்த்த வேறுபாடுகள் இருக்குமானால் அப்பிழை முழுக்கவும் என்னைச்சார்ந்ததே!


ஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல!

நமது சோதனைகளுக்கு எதிர்வினையாற்றும் உரிமையை நாம் ஏமாந்துள்ளோம். மும்பை கோரம் உச்சமடைந்த சமயத்தில், அந்த கொடிய நாளுக்கு மறுதினம், நாம் இந்தியாவின் 9/11 -ஐத்தான் பார்க்கிறோம் என நமது 24 -மணிநேர செய்தி ஊடகங்கள் நமக்கு அறிவிக்கை செய்தன. பழைய ஹாலிவுட் அச்சில் வரும் பாலிவுட் பட நாயகர்கள் போல் நாமும் நம் பங்கையும் நமக்குரிய வசனத்தையும் உச்சரிக்க எதிர்பார்க்கப்பட்டோம். எனினும் அவை நமக்கு முன்பே இப்படியாக உரைக்கப்பட்டுவிட்டதை நாம் அறிவோம்.

இப்பிராந்தியத்தில் பதற்றம் கூடிப்போன தருவாயில் அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெயின் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். 'கெட்டவர்களை' கைது செய்ய பாகிஸ்தான் நடவடிக்கையேதும் எடுக்காவிட்டால் அங்கு உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்தாக்குதலை இந்தியா தொடரலாம்; இதில் வாசிங்டன் ஒன்றும் செய்வதற்கில்லை என தன் கருத்தாக ஒரு செய்தியை வெளியிட்டார்.


ஆனால், நவம்பர் செப்டம்பர் அல்ல; 2008 2001 அல்ல; பாகிஸ்தான் ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, December 19, 2008

இந்து பயங்கரவாதமும் 'இந்து"க்களின் மௌனமும்

செப்டம்பர் 29, 2008 அன்று நடந்த மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாக்கூர், புனேவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரமேஷ் உபாத்யாய், இராணுவப் பணியிலிருக்கும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித் மற்றும் தீவிர இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டிருப்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

மராட்டியப் போலீசின் பயங்கரவாத எதிர்ப்பு படைப் பிரிவின் கையிலிருக்கும் பதிவு செய்யப்பட்ட உரையாடலின்படி அந்தப் பெண் சாமியாரும் இந்த வழக்கில் இன்னமும் தலைமறைவாக இருக்கும் ராம்ஜி கல்சங்க்ராவும் இப்படி பேசிக்கொள்கிறார்கள்: "என்னுடைய வண்டி குண்டுவெடிப்புக்குப் பயன்பட்டிருக்குமேயானால், ஏன் இவ்வளவு குறைவான நபர்கள் இறந்திருக்கிறார்கள்?'', என்று பிரக்ஞா கேட்டதற்கு கல்சங்க்ரா, "அந்தக் கூட்டத்தின் நடுவில் வண்டியை நிறுத்த என்னால் முடியவில்லை'' என்று பதிலளிக்கிறார்.

ஒருவேளை அப்படி நிறுத்தியிருந்தால் ஐந்து பேருக்குப் பதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட இந்தப் பெண்சாமியாருக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிய இந்து மதவெறியர்கள் இப்போது இவருக்கு ஆதரவு கொடுப்பதில் போட்டி போடுகிறார்கள். காரணம் வர இருக்கும் தேர்தலில் இந்து அலையைக் கிளப்பி வாக்குகளைப் பெறவேண்டும் என்பதுதான். பிரக்ஞா தீவிரமான மதவெறியைக் கக்கும் பிரபலமான பேச்சாளர். சென்ற முறை குஜராத்தில் நடந்த தேர்தலில் மோடியுடன் ஓரே மேடையில் பேசியிருக்கிறார். இது போக பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங், ம.பி பா.ஜக............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, December 18, 2008

போராடும் வீரரே வாருங்கள் தோழரே

போராடும் வீரரே வாருங்கள் தோழரே

மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தான், ஆபத்தான மக்கள் விரோதம்

எங்கும் பாசிசம், எதிலும் பாசிசம் உள்ள நிலையில், மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதமாக தன்னை மூடிமறைத்துக் கொள்கின்றது. மக்களுக்காக போராடுதலை கைவிட்டு, அது சரிப்பட்டு வராத, உருப்படாத ஒரு விடையமாக, அதை வெறும் குறுங்குழுவாதமாக சித்தரிக்கின்றது. அத்துடன் களத்தில் பாசிசத்துடன் சேர்ந்து இயங்குவதையே, எதார்த்தமான மார்க்சியம் என்று வேறு கதையளக்கின்றனர்.  

 

இலக்கியவாதிகள், ஜனநாயகவாதிகள், 'சுதந்திர" ஊடகவியலாளர்கள் என அறியப்பட்டவர்கள், இன்று மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாத நிலையெடுத்தபடி புலிக்கு பின்னால் நாயாக அலைகின்றனர். அது உங்கள் உரிமை. அதை வெளிப்படையாக நேர்மையாக  செய்ய வேண்டியது தானே.

 

இதை விட்டுவிட்டு, ஏன் எதற்கு வேஷம்!?; யாரை ஏமாற்றி, யாரின் தாலியை அறுக்க இந்த வேஷம். இந்த வேஷதாரிகள் எழுதாத எழுத்தா? மக்களின் ஆறாத் துயரை எழுதுவது கிடையாது. அப்படி ஏதாவது சொன்னால், அதை அரசு மட்டும் செய்வதாக சொல்லும் நிலைக்கு தரம் தாழ்ந்து, நாய்களின் உண்ணிகளாகிவிட்டனர்.  

 

அந்தளவுக்கு புலியை நக்கும் இந்தக் கும்பல், தன் புறம்போக்கை மூடிமறைக்க மௌனமாகவும் இரகசியமாகவும் அரசியல் செய்கின்றனர். 

 

பேரினவாத அரசுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி அம்பலப்படுத்தும் இவர்கள், புலியின் குரலாக............................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.


அமெரிக்க பயங்கரவாதம் : அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நடத்தி வரும் பயங்கரவாத போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஓப்புதல் வாக்குமூலங்கள்

ஈவிரக்கமற்ற படுகொலைகளால் ஈராக் நாட்டையும் ஆப்கனையும் குதறிக்கொண்டிருக்கும் அமெரிக்க நாசகார அரசுப் படையினரின் மத்தியில் இருந்தும் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிர்ப்புக் குரல்கள் தோன்ற ஆரம்பத்துள்ளன. சென்ற தலைமுறையில் வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த முன்னாள் படைவீரர்களின் உந்துதலால் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ''குளிர்காலப் போர்வீரர்கள்: ஈராக், ஆப்கானிஸ்தான்'' எனும் நிகழ்வு அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஈராக், ஆப்கன் போர்களில் பங்கெடுத்த அமெரிக்க வீரர்களில் 200 பேருக்கும் மேலானோர், அமெரிக்க ராணுவம் அந்நாடுகளில் செய்துள்ள படுகொலைகளையும், மனிதவிரோதச் செயல்களையும் அம்பலப்படுத்தினார்கள். நான்கு நாட்கள் நடந்த அச்சந்திப்பில் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' எனும் பேரால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர்களுக்கு எதிராக அமெரிக்கப் படை நடத்திய மனித உரிமை மீறல்கள் விலாவாரியாகப் பதிவு செய்யப்பட்டன. அமெரிக்காவின் பேரால் தாங்கள் செய்த கொடூரச் செயல்கள் மனசாட்சியை உறுத்தியதால் அவற்றை அம்பலப்படுத்துவதென்று முடிவு செய்த அப்போர்வீரர்களின் சாட்சியங்கள் தொகுக்கப்பட்டு ''குளிர்காலப் போர்வீரர்கள்: ஈராக், ஆப்கானிஸ்தான்: ஆக்கிரமிப்பின் சாட்சியங்கள்'' என்ற நூலாக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.


அந்நூலில் பதிவாகியிருக்கும் அமெரிக்க இராணுவத்தின் வான்வெளி உளவமைப்புப் பிரிவின் கீழ் ஈராக்கிற்கு சென்ற மைக்கேல் பிரிஸ்னர் எனும் முன்னாள் படைவீரரின் வாக்குமூலம் கீழே தரப்பட்டுள்ளது.




Wednesday, December 17, 2008

இலங்கைக்கு ஈழம்! இந்தியாவுக்கு காசுமீர்!


— இரண்டு மாதங்களுக்கு முன்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமாக நடைபெறத் தொடங்கியபொழுது, ஒரு காஷ்மீர் முசுலீம் முதியவர் தன்னிடம் இப்படிக் கூறியதாக எழுத்தாளர் அருந்ததிராய், ''காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை'' என்ற தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழ விடுதலையை ஆதரித்துக் கருத்துச் சொல்லியிருக்கும் தமிழக மக்களில் கூட பெரும்பாலானவர்கள் அந்த காஷ்மீர் முசுலீம் முதியவரின் கருத்தை ஆதரிப்பாளர்களா என உறுதியாகச் சொல்ல முடியாது. காஷ்மீருக்குச் சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பது ஒருபுறமிருக்கட்டும்; ஈழத்தில் உடனடியாக சிங்கள அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ஒருமித்த குரலில் கூறும் தமிழகம்; அதற்காகச் சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் போராட்டங்களை நடத்தி வரும் தமிழக மக்கள், இந்திய அரசு காஷ்மீரில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் எனக் கோரச் சொன்னால், அதிர்ந்துதான் போவார்கள்.
வாசிக்க இங்கே அழுத்தவும்.