தமிழ் அரங்கம்

Thursday, July 16, 2009

போலி ஜனநாயகம் பெற்றெடுத்த மன்னராட்சி

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நடக்கும் தேர்தல், பல்வேறு மொழி, இன, மத, சாதி, பிரதேச வேறு பாடுகளால் சூழப்பட்டிருக்கும் நாட்டில் நடக்கும் பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் என்றெல்லாம் இந்தியாவின் ஜனநாயக மாண்பைப் பார்த்து வெளி நாட்டினர் வியப்படைவதுண்டு.

என்ன இருந்தாலும் ஜனநாயகமாயிற்றே! ஆனால் இந்த ஜனநாயகத்தின் மாண் பினை உள்ளிருந்து வேறு வழியில்லா மல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கொரு முறை நடக்கும் கூத்து.

இந்தக் கூத்தில் நவவிரசங்களும் காட்டாறாய் பெருக்கெடுத்து ஓடும். காலை எழுந்ததும் அனிச்சைச் செயலாகப் பல் துலக்குவது போல.....
.... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, July 15, 2009

ஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா? எதிரியா? : தோழர் மருதையன் செவ்வி

ஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா? எதிரியா? : தோழர் மருதையன் ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலத்து ஊடக வியாபாரிகளோ, புலிப் பினாமிகளாக நடித்துத்தான் வியாபாரம் செய்கின்றனர்


இந்தச் சூழல் சார்ந்து, அனைத்தும் உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் காட்டமுனைகின்றனர். அதுவே வியாபாரத்தின் தந்திரம். இதற்காக அரசை எதிர்ப்பார்கள். இதற்கு சமூக நோக்கம் அவசியமில்லை என்பார்கள்;. தாங்கள் அரசை எதிர்ப்பதால், தங்களைத் தாங்கள் புரட்சியாளர்கள் என்கின்றார்கள். தாங்கள் மக்கள் நலனுக்காகத்தான் அரசை எதிர்ப்பதாக, வேறு கூச்சல் போடுவார்கள்.

இந்த ரகத்தைச் சேர்ந்தவர் தான், குளோபல் இணையத்தை நடத்தும் வியாபாரியான குருபரன். அண்மையில் ராஜபக்சவின் மகன் நாமல் தாக்கப்பட்டதாக வந்த செய்தியும், அதற்கு ஆதாரமாக வெளியிட்ட படத்தில் செய்த தில்லுமுல்லுகளையும் நாம் அம்ப.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புரட்சிக்கு சேகுவேரா! பொறுக்கித்தின்ன ஜெயலலிதா!!

நாங்க சே குவேராவைச் சொன்னாலும்
ஜெயலலிதா பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.

முதலாளித்துவப் போதையில்

மூழ்கிக் கிடக்கும் மக்களை
அந்தப் பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும்!

தோழர்... மக்கள் இன்னும் தயாராக இல்லை

அப்புறம் பாருங்க... நேரா புரட்சிதான்!
அது வரைக்கும்?............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, July 14, 2009

நேபாள புரட்சியும் சர்வதேச உறவுகளும்: ஜோன் மாக்

நேபாளத்தின் புரட்சிகர உள்நாட்டு யுத்தமானது ஏப்பிரல் 2006 இல் மன்னர் கயேந்திரா மீதான மக்களது வெற்றியுடன் உண்மையிலேயே முடிவுக்கு வந்தது. 2006 நவம்பரில் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையின் மூலமாக இந்த வெற்றியானது சட்டபூர்வ அந்தஸ்தையும் பெற்றுக்கொண்டது.
இந்த உடன்படிக்கையானது தற்போது நேபாள இராணுவம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் நேபாள அரச இராணுவம், நேபாள கொன்யூனிஸ்ட்டு கட்சி (மாவோ) யையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் தன்னை ஜனநாயகமயப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த கட்டுரை எழுதப்படும் வரையில் இது நடைபெறவில்லை. இந்த இராணுவமானது இப்போதும் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினாலேயே தலைமை தாங்கப்படுகிறது. இந்த இராணுவமானது, அமெரிக்க “ ஆலோசகரின்” உதவியுடன், சட்டத்தையோ அல்லது அதன் தண்டனைகளையோ பற்றிக் கவலைப்படாமல் உள்நாட்டு யுத்தத்தை மூர்க்கத்தனமாக முன்னெடுத்தது. ஆயினும் இப்போது நேபாளத்தில் நடைபெறும் புரட்சிகர மாற்றங்கள் பற்றி குறைத்து மதிப்பிடாமல் இருப்பது முக்கியமானது. இன்று நேபாள இராணுவத்திற்கும், புரட்சிகர ஆயுத படைகள் (புரட்சிகர மக்கள் இராணுவம்) இற்கும் சமாதான உடன்படிக்கையின்படி சாராம்சத்தில் சமமான
................முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இலங்கையில் இராணுவ ஆட்சியை...


இதற்கமைய இலங்கையில் அனைத்து சிவில் கட்டமைப்புகளையும் இல்லாதொழிக்கின்றது. நாட்டின் சிவில் சட்டம், சிவில் ஒழுங்கு என அனைத்தையும் முடக்கி வருகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குகின்றது. அதை அடித்தும் மிரட்டியும் படுகொலை செய்தும், முற்றாக அதை செயல் இழக்க வைக்கின்றது. மறுபுறத்தில் தேர்தல்கள் என்பது ஊர் உலகத்தை ஏமாற்ற, சடங்குக்காக அவை நடத்தப்படுகின்றது. வன்முறை மூலமான தேர்தலில் முறைகேடுகள் ஊடாக பாசிசம் தன் கொடியை பறக்க விடுகின்றது.

மறுபக்கத்தில் நாட்டின் உயர் அதிகாரங்கள், சிவில் கட்டமைப்புகள் இராணுவத்திடம் வழங்கப்படுகின்றது. தம் பாசிச பயங்கரவாதத்தை நிறுவ, வெளிநாட்டு தன்னார்வ....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, July 13, 2009

சிங்களப் பேரினவாத பாசிசம், இலங்கையில் இராணுவ ஆட்சியை நிறுவ முனைகின்றது


இதற்கமைய இலங்கையில் அனைத்து சிவில் கட்டமைப்புகளையும் இல்லாதொழிக்கின்றது. நாட்டின் சிவில் சட்டம், சிவில் ஒழுங்கு என அனைத்தையும் முடக்கி வருகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குகின்றது. அதை அடித்தும் மிரட்டியும் படுகொலை செய்தும், முற்றாக அதை செயல் இழக்க வைக்கின்றது. மறுபுறத்தில் தேர்தல்கள் என்பது ஊர் உலகத்தை ஏமாற்ற, சடங்குக்காக அவை நடத்தப்படுகின்றது. வன்முறை மூலமான தேர்தலில் முறைகேடுகள் ஊடாக பாசிசம் தன் கொடியை பறக்க விடுகின்றது.

மறுபக்கத்தில் நாட்டின் உயர் அதிகாரங்கள், சிவில் கட்டமைப்புகள் இராணுவத்திடம் வழங்கப்படுகின்றது. தம் பாசிச பயங்கரவாதத்தை நிறுவ, வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்கள் மேல் கடும் கண்காணிப்புடன் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றது.

ஒரு குற்றக் கும்ப............
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பிரபாகரனின் மூன்றாவது மகனை படுகொலை படத்தை முதலில் வெளியிட்ட சிங்கள இணையம் இலங்கையில் தடை

புதிய படம் இணைப்பு - பாசிட் ராஜபக்சவின் மகன் நாமல் தமிழ் நாசி முகாமில் தாக்கப்பட்டதாக வெளியிட்ட படம் போலியானது


சிங்களப் பேரினவாத பாசிட்டுகள் அப்பாவி மக்களை தன் நாசிய முகாமில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்கின்றது. தண்ணீருக்கு மணிக்கணக்காக கியூ, மலம் கழிக்க கியூ. மருத்துவரை சந்திக்க கியூ. அங்கும் காணாமல் போதல், கடத்தல் என்று இனக் களையெடுப்பு நடக்கின்றது. பெண்கள் தங்கள் பெண் உறுப்புகளுடன், மனிதனாகவே வாழமுடியாத அவலங்கள். எந்தனை கொடுமைகள், கொடூரங்கள் அங்கு நிகழ்கின்றது.

இந்த மக்கள் முன் எந்த சிங்க
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, July 12, 2009

பாசிட் ராஜபக்சவின் மகன் நாமல் தமிழ் நாசி முகாமில் தாக்கப்பட்டதாக வெளியிட்ட படம் போலியானது


சிங்களப் பேரினவாத பாசிட்டுகள் அப்பாவி மக்களை தன் நாசிய முகாமில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்கின்றது. தண்ணீருக்கு மணிக்கணக்காக கியூ, மலம் கழிக்க கியூ. மருத்துவரை சந்திக்க கியூ. அங்கும் காணாமல் போதல், கடத்தல் என்று இனக் களையெடுப்பு நடக்கின்றது. பெண்கள் தங்கள் பெண் உறுப்புகளுடன், மனிதனாகவே வாழமுடியாத அவலங்கள். எந்தனை கொடுமைகள், கொடூரங்கள் அங்கு நிகழ்கின்றது.

இந்த மக்கள் முன் எந்த சிங்கள பாசிட்டுக்கள் சுதந்திரமாக செல்ல முடியாது. எப்படி தமிழ் பாசிட்டுகள் அங்கு அடி உதையின்றி வாழமுடியா......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்

Saturday, July 11, 2009

இரும்புப்பிடிக்குள் தள்ளிய இலக்கற்ற போர்

எகிறிமிதித்து ஆணவத்தில் இலக்கற்று வீழ்ந்துபோய்
சந்ததியே சதிவலைக்குள்
சிறகடிக்கும் சிட்டுக்களின் இறகுகள் ஒடிக்கப்பட்டு
எதிரியின் கூண்டுக்குள்
புத்தகம்காவி புள்ளிமானாய் துள்ளித்திரிந்தவர்கள்
கத்திக்குளற இழுத்தெடுத்து
பெற்றவர் உறவுஅற்று எம்இனத்தை கொத்திய கரங்களிலே
கொண்டுபோய் வீழ்த்தியது
.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, July 10, 2009

புலித்தலைவரின் வாரிசுகளாக தம்மைத்தாம் தக்கவைத்துக் கொள்ள முனையும் மாபியாக்கள்


இந்த இரு கும்பலும் தங்கள் சொந்த சுயலாபத்துக்காகவே, தமிழ்மக்கள் பெயரால் தமிழ் மக்களுக்கான போராட்டத்தை மழுங்கடிக்கின்றனர். மக்கள் தம் சொந்த வாழ்வு சார்ந்த எதார்த்த உண்மைகள் உணர்ந்து செயல்படுவதைத் தடுக்கும் இந்தக் கும்பல், தங்கள் சொத்து, வியாபாரம், அதிகாரம், நாட்டாமை என்ற எல்லைக்குள், தமிழ் மக்களை அடக்கி வைக்கமுனைகின்றனர்.

இவர்களுக்கு இடையில் நடக்கும் பினாமி சொத்துகள் சார்ந்த முரண்பாடு, உண்மைகளை மறுதலிக்கின்றது. இதன் மூலம் புலியின் புலத்து அதிகாரத்தை கைப்பற்றுவதும் அல்லது அதைத் தக்கவைப்பதன் மூலமும், பினாமிச் சொத்தை தம் வசப்படுத்த முனைகின்றனர்.

இப்படி புலத்தில் இரண்.......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ரகுமானுக்கு ஆஸ்கர்: எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் (கோடீ சுவரனான சேரி நாய்) திரைப்படத்திற் காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். அமெரிக்கா வின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடாக் அரங்கத்தின் மேடையில் விருதைக் கையில் ஏந்தியபடி, "எல்லாப் புகழும் இறைவனுக்கே!' எனத் தமிழில் உற்சாகமாக மொழிந்தார்.


அடுத்த கணம் இந்தியா முழுவதும் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள், ஒரே குரலில் "ஜெய் ஹோ#' (வெற்றி உண்டாகட்டும்!) என ஆரவாரிக்க தொடங்கினர். ஒரு வாரத்திற்கும் மேலாக ஆரவாரம் அடங்கவில்லை. ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசினார், எனவே இது தமிழுக்கு, தமிழனுக்கு கிடைத்த வெற்றி என ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றொரு புறம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது ஒரு மாபெரும் அங்கீகாரம், யாரும் சாதிக்காத சாதனை என ஆரவாரம்.

ஒட்டு மொத்தமாக இவ்வாண்டு ஆஸ்கர் விழாவை இத்திரைப்படம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாக மேலைநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. இத்திரைப்படத்தின் இணை இயக்குனராகப் பணியாற்றிய லவ்லீன் டாண்டன், ""ஏ.ஆர்.ரகுமான் போல இன்னும் பல திற....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மூக்குள்ளவரை ! - பார்த்திபன்


இந்தக் கதையும் அப்படித்தான். உருவகக் கதையை அடிப்படையாகக் கொண்ட, இந்தக் கதையின் கரு, இன்றைய சமகால அரசியல் போக்கில் உள்ள போலித்தனங்களையும், வன்முறையையும் எள்ளி நகையாடுகின்றது. அரசியல் இல்லாத மௌனம் கூட கிடையாது என்பதை, மிக நுட்பமாக இக்கதையூடாக சொல்ல முனைகின்றார்.
உங்கள் விமர்சனங்களையும், கருத்துக்களையும் பார்த்திபன் எதிர்பார்க்கின்றார்.

தமிழரங்கம்16.03.2009


மூக்குள்ளவரை !
"சுட்டும் விழிச்சுடரே.... எங்கையோ பற்றிக்கொண்டதே.." எண்டு அஸின் ஆட, ரசிச்சுப் பாத்துக் கொண்டிருக்கேக்கதான் எனக்கு வயசு போட்டுதெண்டு கவலை வந்திது. பண்டரிபாய், சௌகார்ஜானகி ரசிகரை எங்கடை காலத்திலை பாத்து சிரிச்சது இப்ப ஞாபகம் வர, ஒரு மாதிரித்தான் இருக்குது. இன்னும் ஒரு பத்து வருசத்திலை, ரஹ்மானின்ரை அல்லாட்டி யுவனின்ரை ஸ்பீற் பீற் கேட்டுக்கொண்டிருந்தா என்னைப் பாத்து சின்னனுகள் சிரிக்குமோ எண்டு ஒரு பியூச்சர் பயம் வரேக்கை...

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

இந்த நேரத்தி....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, July 9, 2009

இனவழிப்பு யுத்தத்தில் 350 மக்கள் தான் இறந்தனராம்;! அரசு பாசிசம் மூலம் கூறுகின்றது

அரச பாசிசம், தன் வதைமுகாமில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு இப்படி அறிவிக்கின்றது. தன் போர்க்குற்றத்திலான உண்மைகளை எல்லாம், இப்படி தன் பாசிச வழயில் பொய்யாக்க முனைகின்றது. அறிவு நாணயம் எதுவுமற்ற வகையில், தங்கள் இரும்புப்பிடிகொண்ட உருட்டல் மிரட்டல்கள் மூலம், உலகத்தையே தலைகீழாக்கி காட்ட முனைகின்றனர் பாசிட்டுகள்.

இந்த பேட்டி, அரச "ஜனநாயகம்;" எப்படிப்பட்டது என்பதையும், அது கையாளும் பாசிச வக்கிரத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. குற்றவாளிக் கும்பல்கள், நாட்டை ஆளும் விதமும், ஆள விரும்புகின்ற விதமும் இது. இப்படி இலங்கையில் மகிந்த சிந்தனை எவ்வளவு அகோரமானது என்பதையும், கொடூரமானது என்பதையும், இது எடுத்துக் காட்டுகின்றது. புலிகள் பகுதியில் மருத்துவப் பணியாற்றிய மருத்துவர்கள் மிரண்ட படி, விழுங்கியும், திணறியும், சமாளித்தளித்த பேட்டி, பாசிசத்தின் முகத்தை எடுத்துக்காட்டுகின்றது. இந்த மருத்துவர்களை அரசு தன் வதைமுகாமில் வைத்து....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து ஜ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக் கூத்து - புதிய ஜனநாயகம்

முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு கண்காணிப்பு முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகின்றனர்.

இப்படி தட்டிக்கேட்க ஆளின்றி இலங்கை அரசு நடத்திவரும் அட்டூழியங்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஆத்திரத்தை தோற்றுவித்து அவர்களும் மேலைநாடுகளில் தொடர்ச்சியாக போராடி வந்தனர். இது இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவு நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதை தணிப்பதற்கு மேலைநாடுகள் முயன்றபோது கை கொடுத்ததுதான் ஐ.நா.சபை தீர்மானம்.

சுவிட்சர்லாந்து தலைநகர...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, July 8, 2009

புலித்தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும் - புதிய ஜனநாயகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் உண்மையானவிசுவாசம் கொண்ட அணிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாம் நெஞ்சிலே சுமந்த அந்தத் தேசியத் தலைவன் பிரபாகரன் வீரச்சாவை எய்தினார் என்றெண்ணி வீர அஞ்சலி வீர வணக்கம் செலுத்துவதா அல்லது அவர் பாதுகாப்பானதொரு இடத்தில் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை இன்னமும் நம்பி ஆறுதல் அடைவதா என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

ஆனால், ஈழத்தின் வன்னிமுள்ளிவாய்க்கால் களப்பிரதேசத்தில் உண்மையில் நடந்தது என்னவென்று இதுவரை நமக்குக் கிட்டியுள்ள தகவல்களைத் தர்க்கரீதியில் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் முடிவுக்கு வர முடிகிறது:

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ""இறுதிப் போர்'' அறிவிப்பு செய்து, மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்திய சிங்கள இராணுவம், பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திப் புலிகளின் தலைமையகமாக விளங்கிய கிளிநொச்சியைக் கைப்பற்றியது.

அடுத்து, புலிகள் பின் நகர்ந்து சென்ற முல்லைத் தீவை முற்றுகையிட்டு, புலிகள் நிலை கொண்டிருந்த புதுக்குடியிருப்பையும்
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, July 7, 2009

நோர்வே இலக்கிய சந்திப்பில், ஆறு பாசிச முகமெடுத்தாடிய மகிந்தா

புலத்து இலக்கியச்சந்திப்பு இம்முறை மகிந்தா அரசின் "ஜனநாயகத்" தூண்களின் துணையுடன், அதன் பாசிசப் பல்லவியுடன் தான் அரங்கேறியது. "ஜனநாயகத்தை" புலிப் பாசிசத்திடம் இருந்து மீட்டதாக கூறும் கூட்டத்தின் கும்மியடிப்புடன் தான், இம்முறை இலக்கியச் சந்திப்பு என்னும் "ஜனநாயகம்" புழுத்தது. மக்களின் ஜனநாயகத்தை மறுக்கும் "ஜனநாயக பேர்வழிகள்", ஜனநாயகத்தின் பெயரில் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் தமக்கு மட்டும் "ஜனநாயகத்தைக்" கோரி, அதன் மூலம் மக்கள் ஜனநாயகத்தையே மறுத்தவர்கள்.

இவை எல்லாவற்றையும் மூடிமறைக்க, அனைத்துக்கும் "ஜனநாயகம்" என்று சொந்த மூகமுடியை முன்னிறுத்துகின்றனர். எல்லாவிதமான மனித விரோதங்களையும் கூட, நாம் ஒன்றாக கூடிப்பேசுவது தான் "ஜனநாயகம்" என்ற நிலைக்குள், ஜனநாயகத்தை தரம் தாழ்த்திவிடுகின்றனர், "ஜனநாயகம்" பற்றி பிரமை பிடித்தவர்கள்.

வர்க்க சமூக அமைப்பில் அதாவது ஆளும் வர்க்கமும் ஆளப்படும் வர்க்கமும் ஒன்றாக கூடி அமர்ந்து ஒன்றாக பேசுவது தான், "ஜனநாயகம்"...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும்

மாமரத்து நிழலில்
அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை
கிளையில் கட்டிய ஊஞ்சல்
கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள்
வரப்பு வடலியில் கட்டியகுருவிக்கூடு
குண்டகற்று நிபணர்குளாம் துருவி ஆய்கிறது


கொத்திச்சாறி நாற்றுநட்டு களைபிடுங்கி
அருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்புறக்கி
கஞ்சியாக்கியவ............
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, July 5, 2009

ஆதவன் தீட்சண்யா என்ற ஒரு மானுடவிரோதி, அதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றான்

இடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியம் பேசியபடி மானுட விரோதியாக உள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கும், தமிழ் தேசியத்தின் பெயரில் புலியிசம் பேசும் தமிழ்நதிக்கும் இடையில், பல மானிடம் சார்ந்த விடையங்கள் கொச்சைப்படுத்தப் படுகின்றது. இவை இந்திய எழுத்தாளர் தளத்தில், இவை மலினப்படுகின்றது.
தங்கள் பிழைப்புவாத எழுத்துக்கு ஏற்ப, சமகால நிகழ்வுகள் பச்சோந்திகளாக வாழ்வதுதான், எழுத்தாளர்களின் தார்மீகமான நிலையென்று நிலைநிறுத்த முனைகின்றனர்.

இப்படிப்பட்டவர் தான் ஆதவன் தீட்சண்யா. இவர் மனு விரோதியல்ல, மானுட விரோதி. இவர் போர்த்தியுள்ள துண்டுக்கு ஏற்ப, "புதுவிசை" இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் இருப்பவர். இதற்கமைய அவரின் மானுடத்துக்கு எதிரான கோட்பாடு, நடுவீதிக்கு வந்துள்ளது.

இதற்கு தமிழ்நதி எழுப்பிய கேள்வி உதவியது. அவர் கேள்வி "சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன......
..... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, July 4, 2009

சிங்களப் பேரினவாத நாசி முகாமில் என்ன நடக்கின்றது!? வன்னி மண்ணுக்கு என்ன நடக்கப் போகின்றது!?

வன்னி நிலம், வன்னி நீர், வன்னி மக்கள் என்று அனைத்தையும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பேரினவாத அரசு விற்று வருகின்றது. வன்னியின் "அபிவிருத்தி", "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில, இவை அரங்கேறுகின்றது. மக்களின் சுதந்திரமான வாழ்வு, சுதந்திரமான உழைப்பு, சுதந்திரமான நடமாட்டம் என அனைத்தும், இனவாதிகளுடன் சேர்ந்து மண்ணை ஆக்கிரமிக்கும் பன்நாட்டு நிறுவனங்களால் "அபிவிருத்தி" என்ற பெயரில் பறிக்கும் கூட்டுச்சதி இங்கு அரங்கேறுகின்றது.

வன்னி இனி, வன்னி மக்களுக்கானதல்ல, அவை பன்நாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானதாகின்றது. இதற்குப் பெயர் தான் "அபிவிருத்தி", "வடக்கின் வசந்தம்".

இதற்காக மக்களை வதைக்கும் ஒரு நாசிய இன முகாம்களில், தமிழ் மக்களை அடைத்து வைத்துள்ளனர். மிருகங்களை பழக்கும் அதே உத்தியை, இங்கு கையாளுகின்றனர். கையேந்த வைத்து, பண்ணை அடிமைகளாக, நாயிலும் கீழாக மக்க
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மக்கள் பலம் வெல்லுமென குரலெழுப்பு

எம் மக்கள் இடரிலும் துயரிலும்
இதயம் வெடிக்கவில்லை ஈரமெழவில்லை
இடித்துரைக்கும் ஓர்மம் எழவில்லை
கோரமெதிர்த்து கொடும்பகை வீழ்த்தும் போராய் எழுக
கலையும் இலக்கியமும் மக்களிற்கானது…...இல்லையென்பாயெனின்....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, July 3, 2009

அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும்

எத்தனையோ மக்களை அனாதையாகக் கொன்றவர்கள் புலிகள். ஆனால் தன் தலைவரை அதே மாதிரி கொன்று போட்டுள்ள போது எதுவும் நடவாத மாதிரி நடிக்கின்றனர். பிரபாகரனின் உடலை தங்கள் தலைவரின் உடலல்ல என்று கூறி, மீண்டும் அவரை அனாதையாகவே தூக்கியெறிந்தனர். இப்படி அனாதையாக மடிந்த பிரபாகரனுக்கு, இன்று யாரும் அஞ்சலி கூட செலுத்த முன்வரவில்லை.

ஆனால் இதைக் கச்சிதமாக செய்து முடித்தவர்கள், தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர். மறுபக்கத்தில் பினாமிச் சொத்தைக் கைப்பற்ற, இந்த நாடு கடந்த தமிழீழம் உதவும் என்றும் நம்புகின்றனர். இதற்கமைய ஒரு துரோகத் தலைமை ஒன்றை, புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பும் அறிக்கைகள், விளக்கங்கள்.

மக்கள் புழுதியை வாரித் திட்டுகின்றனர். வழுதியோ தங்கள் துரோகத்தை, நாடு கடந்த தமிழீழம் மூலம் மூடிமறைக்க முனைகின்றார். பத்மநாதன், உருத்திரகுமார், வழுதி என்று அனைவரும் சேர்ந்து நடத்திய இந்த துரோகத்தை, தியாகமாக காட்;ட முனைகின்றனர். இதையே சமூகத்தின் விளைநிலமாக்க முனைகின்றனர்.

வேடிக்கை என்னவென்றால் யா....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, July 2, 2009

மைக்கல் ஜாக்சன் என்ற அமெரிக்கத் தொழுநோயை, ஏகாதிபத்திய அமெரிக்கா உலகுக்கும் ஏற்றுமதியாக்கியது

உடல் அசைவை, உடலின் மொழியாக்கியவன் மைக்கேல் ஜாக்சன். இந்த திறமையை கடைவிரித்து, நுகர்வாக விற்றது அமெரிக்கா ஏகாதிபத்தியம். அவனின் வேகமான அசைவை, மாறி வந்த உலக ஒழுங்குக்கு ஏற்ப அமெரிக்கா வடித்தெடுத்தது. இப்படி மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவின் கதாநாயகனானான். இதனால் பணத்தில் மிதக்கத் தொடங்கியவன், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் துணையுடன் உலகப் புகழ் பெற்றான்.

இதன் மூலம் உழைக்கும் மனித வர்க்கத்தின் போராடும் ஆற்றல் சீரழிக்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையுடன், அதை தன் உடலுக்குள் அவன் வடியவிட்டான். அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதர்களின் ஆற்றல்களையும் திறமைகளையும் மக்கள் நலனுக்காக அல்லாது, மக்களை சுரண்டிச் சூறையாடும் வண்ணம் அவைகளை தெரிந்தெடுத்து முன்னுக்குத் தள்ளியது. இக்காலத்தில் தான் பொப் மாலி மக்கள் பற்றி பாடிய பாடல்கள் புகழ்பெற்று இருந்தது. இது ஏகாதிபத்திய நலனுக்கு எதிரானதாக இருந்தது.

இந்த இடத்தில் தான் மைக்கேல் ஜாக்சனை ஏகாதிபத்தியங்கள் உலகுக்கு அறிமுகம் செய்து வைத்;தது. மக்களுக்காகவல்லாத பாடல்க....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, July 1, 2009

வழுதியும் புரளியும்

தூசுதட்டி எழும் துகள்கள் நாசிக்குள் ஏறி
முச்சுத்திணறல் வருகி;றதாம்
அடித்துவீசும் காற்ரே அடங்கிப்போ
வானில் கலக்கட்டும்
வருங்காலத்தலைமுறையின் சுவாசத்துள் படியட்டும்
முப்புதாயிரத்துடன் முடிவதாயில்லை
மெல்லக்கொல்லும் வழிமுறை
புதியஅண்ணன்மார் வரவுக்காய்
மீண்டும் புரளிகள.......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது.

இலங்கையில் யுத்தத்தின் பின்னான அமைதியும் சமாதானமும், பண்பாட்டுச் சிதைவைத் தமிழ்ப் பிரதேசங்களில தேசிய மயமாக்கியுள்ளது. எங்கும் பணமும், பணப் பண்பாடுகளுமே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளது. இந்தப் பணம் உருவாக்கிய ஆடம்பரம், அந்தஸ்த்து, திமிருடன் கூடிய வக்கிரம், சிறுபான்மையினரின் பண்பாக இருந்த போதும், அவர்களே சமூகத்தின் முழுமையையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளனர்.

இந்தப் பண்பாட்டுக் கலச்சாரச் சிதைவு தமிழ் பிரதேசங்கள் எங்கும், இலங்கைத் தமிழர் செறிவாக வாழும் பிரதேசங்களில் பொதுவாக நடக்கின்றது. இந்தச் சிதைவு பொருளாதார ரீதியான சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி அதிகரிப்பால் தேசியமயமாகின்றது. இந்த சமூக ஏற்றத் தாழ்வு பொதுவாகவே இரண்டு தளங்களில் பிரதானமாக நடக்கின்றது.

இதுவும் மூன்று வகையை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, June 30, 2009

இன ஐக்கியத்துக்குப் பதில், இன ஆக்கிரப்பை முன்னிறுத்தும் "ஜனநாயக" நாய்கள்

சிங்கள இராணுவ இயந்திரம் மூலமான பௌத்த ஆக்கிரமிப்பையும், சிங்களக் குடியேற்றத்தையும் நியாயப்படுத்துகின்றனர், தனக்கு மட்டும் "ஜனநாயகம்" கோரிய மரமண்டைகள்.

இப்படி இன்று தமிழ்ப்பகுதியில் அரசால் கட்டப்படும் பௌத்த கோயில்கள், சிங்கள பேரினவாத மேலாதிக்கத்தின் அடையாளங்கள். இனவழிப்பு சிங்கள இராணுவ இயந்திரத்தைக்கொண்டு, மக்களின்; விருப்புக்கு மாறாக நிர்மாணிக்கப்படும் இனவாத அடையாளங்கள். இரண்டு மக்களும் சேர்ந்து இதைக் கட்டவில்லை. இனத்தை அழித்த சிங்கள இராணுவ இயந்திரமே, இதைச் செய்கின்றது.

இதன் மேலான பொது விவாதம் மீது, தமக்கு மட்டும் "ஜனநாயகம்' கோரிய கூட்டம் ஏன் கட்டக் கூடாது என்கின்றது. சிங்களப் பகுதியில் பௌத்தமல்லாத மதங்களில் கோயில்கள் இல்லையா என்கின்றது!? சிங்கள் குடியேற்றத்தைக் கூட தமிழ்ப் பகுதியில் ஏன் நடத்தக் கூடாது என்கின்றது. சிங்களப் பகுதியில் தமிழ்மக்கள் வாழவில்லையா என்கின்றது!?

அரை லூசுத்துமான "ஜனநாயகம்", தனக்கு மட்டும் "ஜனநாயகத்தைக்" கோரியது. இது மகிந்தாவின் பாசிசத்தின் பின், ஓடி நக்குகின்றது. இந்த கூட்ட...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, June 29, 2009

இனக் (புலி) களையெடுப்பை நியாயப்படுத்தும் மூதேவிகள்

ஜனநாயக வேஷம் போட்டு குலைக்கும் கூட்டம், இனக்களையெடுப்பை புலிக் களையெடுப்பாக சித்தரிக்கின்றது. நாட்டில் அமைதி மற்றும் யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்கின்றது. இப்படி மகிந்தாவின் பாசிசத்துக்கு முன்னால், விளக்கு பிடித்துச் செல்லுகின்றனர். கேட்பாட்டு ரீதியாக, நடைமுறை ரீதியாக, இதை அவர்கள் செய்யத் தயாராகவே உள்ளனர். இவர்கள் வேறு யாருமில்லை, தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசும், "ஜனநாயக" மூதேவிகள்.

புலிப் பாசிசம் இதே போன்றே 30 வருடமாக தமிழ் மக்கள் மத்தியில் களையெடுப்பை நடத்திய போது, நாங்கள் அதற்கு எதிராகப் போராடினோம். அரசு இன்று அதே போன்ற களையெடுப்பையே நடத்துகின்றது. அன்று எந்த அடிப்படையில் எதிர்த்தோமோ, அதே அடிப்படையில் இன்றும் நாம் மட்டும் எதிர்க்கிறோம். அன்று தேசியத்தின் பெயரில் புலிகள் இதைச் செய்தனர். இன்று "ஜனநாயக"த்தின் பெயரில் அரசு இதைச் செய்கின்றது. இப்படி பாசிசத்தின் இரு வேறு முகங்கள். அதே போல் "தேசியம், ஜனநாயகம்" என்று, பாசிசம் முன்னெடுக்கும் களையெடுப்பை, மனிதவிடுதலையாக காட்டி கொஞ்சும் பச்சோந்திகள் கூட்டம்.

யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்ற தர்க்கத்தை முன்வைத்து, இன்று "ஜனநாயகம்" பேசும் மூன்றாம்தரப் பேர்வழிகள் நியாயப்படுத்துகின்றனர். இப்படி அரசு சார்பாக இயங்கும் வானொலிகள், தொலைக்காட்சிகள், இந்த தர்க்கத்.....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, June 28, 2009

தம் பெண்களைக் கூட்டிக் கொடுத்து வாழக் கூடியவர்கள்தான், மகிந்தாவின் பாசிசத்தை ஆதரிக்கின்றனர்.

மகிந்தாவின் பாசிசம் மக்களுக்கானதே என்று வைக்கின்ற வாதங்கள் அனைத்தும், தவிர்க்க முடியாதவை என்கின்றனர். இதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம், புலியின் கடந்த இதற்கு ஒப்பிட்டு நியாயம் செய்கின்றனர். நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ, இதை ஏற்றேயாக வேண்டும் என்கின்றனர்.

இப்படிப்பட்ட இவர்கள் நாளை தாம் வாழ வழியில்லை என்றால் என்ன செய்வார்கள்? தம் பெண்டுபிள்ளைகளை விபச்சாரத்துக்கு விட்டு வாழக் கூடியவர்கள். இவர்களின் வாழ்வு சார்ந்த சிந்தனை முன், வேறு மாற்று வழி எதுவும் கிடையாது. தமிழ்மக்கள் பற்றி இவர்கள் வைக்கும் நிலைப்பாடு சார்ந்த இந்த நிபந்தனை, பெண்டுபிள்ளைகளை விபச்சாரத்துக்கு விடுவதையே கோரும். இந்த வகையில் தான் இன்று, தமிழ்மக்களை அணுகுகின்றனர். இவர்கள் வைக்கின்ற தீர்வுகள், நியாயங்கள், தர்க்கங்கள் என்று அனைத்தும், இதற்குள் அடங்கிக் கிடக்கின்றது. "கவுரவமான" பூர்சுவா வர்க்க நிலையில் வாழ்ந்தபடி, மக்களுக்கான எந்த அரசியலையும் வைக்க வக்கற்றவர்கள். மகிந்த பாசிசத்தின் நன்மைகள் பற்றியும், அதன் தவிர்க்க முடியாத தன்மை பற்றியும் உபதேசிக்கின்றனர். இதற்கு இணங்கி வாழ் என்று, மற்றவனுக்கு உபதேசம் செய்யும் மாமாக்கள தான் இவர்கள்.

மக்களை ஒடுக்கியும், அவர்களை சுரண்டியும், அவர்கள் (சுய) உரிமைகளை மறுத்தும் நிற்கும் பாசிச அரசை எதிர்த்தால், இது புலியை ஆதரிப்பதாகவும் புலியை மீள கொண்டு வரமுனைவதாகவும், மீண்டும் நாட்டில் அமைதியிழக்க செய்யும் முயற்சி......
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

நேசசக்திகளை இணைக்காவரை தேசப்போர் வெல்லாது

சுத்தியலும் அரிவாழும் இலட்சினை
சோமவன்ச வார்த்தையெல்லாம் இனவெறி
கழனியாற்ரில் மிதந்ததெல்லாம் மறந்தாய்பதவிக்
கதிரைக்காய் பறந்தின்று அலைந்தாய்
பச்சைத்துரோகி நீ
கத்திக்குளறாதே ராஜபக்ச தமிழருக்கு ஒன்றும்
கொட்டிக்கொடுக்கான்
வெட்டிப்புடுங்கான் தெரியுமுனக்கு
வேசத்தைக்கலைத்திறங்கு தேசத்தில் மக்களிடம்
இல்லையெனில் விமல் வீரவன்ச வளியில்
போயுறங்கு ராஜபக்ச மடியில்.............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

அரசியல் படுகொலைகளை சாதியமாக திரிக்கும் வலதுசாரிய மனுதர்மம்

தமிழீழத்தின் பெயரில் நடந்தேறிய வலதுசாரிய பாசிசப் படுகொலைகளை, சாதியப் படுகொலையாக திரித்து சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல் தான் 'மறைவில் ஐந்து முகங்கள்". தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் உயர்சாதியினர் மீது நடத்துகின்ற சாதிப் படுகொலைகளே தமிழீழத்தில் நடப்பதாக திரிக்கும் உயர்சாதிய வெறியர்கள், மனுதர்ம அடிப்படையில் நீதியைக் கோருகின்றனர்.

ஒரு வரலாற்று திரிபு, ஒரு அரசியல் திரிபாக இங்கு புகுத்தப்படுகின்றது. தமிழ் தேசிய வலதுசாரிய பிற்போக்கு அரசியலை ஆராய, விமர்சிக்க மறுக்கின்ற போது அது சாதியமாக திரிபுறுகின்றது. ஏன் இந்த கொலைகளை தமிழீழத்தின் பெயரில் செய்கின்றனர் என்பதையும், இதன் பின்னுள்ள வர்க்க அரசியலைக் கூட இந்த நாவல் திரித்து மூடிமறைக்க முனைகின்றது. உண்மையில் தமிழ்தேசியம் தமிழீழப் பாசிசமாக உருவானபோது, வலதுசாரி அரசியல் தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாகின்றது. தனது சொந்த வலதுசாரிய பிற்போக்கு அரசியலை பாதுகாக்க, கொலைகார அரசியல் வரலாற்றையே இந்த நாவல் தனக்கு ஏற்ப திரிக்கின்றது. தனது உயர்சாதிய மனுதர்மத்தை முன்னிலைப்படுத்தி, நடப்பது உயர் சாதியப் படுகொலைகளே என்று இந்த நாவல் தர்க்கித்து சித்தரிக்க முனைகின்றது.

உண்மையில் 'மறைவில் ஜந்து முகங்கள்" என்ற நாவலின் அரசியலே, சாதியம் தான். ஆனால் இயக்க படுகொலைகளைப் பற்றி இந்த நாவல் பேசுவதால்.......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, June 27, 2009

மகிந்த பாசிசத்துக்கு ஒளிவட்டம் கட்டி கூத்தாடும் பாசிச பக்தர்கள், மக்களுக்கு என்ன தான் சொல்லுகின்றனர்

மக்களின் விடுதலைக்காக ஒரு அரசியலை முன் வைத்து, அவர்களுக்காக போராட முடியாதவர்கள் யார்? இதைச் செய்யாத அனைத்தும், மக்களுக்கு எதிரானது. இதுவே, வெளிப்படையான உண்மை.

இப்படி மக்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் முன்னிற்க முடியாதவர்கள், மகிந்தாவின் பாசிசத்துக்காக குலைக்கின்றனர். புலிப் பாசிசத்துக்கு பதில், மகிந்தாவின் பாசிசத்தை தமிழ்மக்கள் மத்தியில் திணிக்கவே படாதபாடு படுகின்றனர். புலியை தமிழ்மக்கள் மத்தியில் ஒழித்தல் தான், இவர்களின் குருட்டுக் கண்ணுக்கு முன்னாலுள்ள பேசும் பொருள்.
இதைச் செய்யவே, மகிந்தாவை நம்பலாமா என்ற கேள்வி கேட்டு, எப்படியோ நம்பித்தான் ஆக வேண்டும் என்கின்றனர். இதைத் தவிர வேறு வழிதான் என்ன என்று எதிர் கேள்வி கேட்டு, பாசித்துக்காக கூத்தாடுகின்றனர்.

இந்த பாசிச கூத்தாடிகள் பெரும்பாலும் நன்றாகப் பிழைக்கத் தெரிந்தவர்கள், சமூகத்தை மடக்கி கதைக்கத் தெரிந்தவர்கள். இவர்கள் ......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, June 26, 2009

ஜனநாயகம் என்றால் என்ன?

எடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

ஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மக்களை நம்புவதா!? மகிந்தாவை நம்புவதா!?


இன்று அரசின் கூலி எழுத்தாளர்கள் முன்வைக்கும் மையமான பிரச்சாரம் இதுதான். சுற்றிச் சுழன்று இதற்குள் மனிதவாழ்வை திரித்துக் காட்ட முனைகின்றனர். இதன் மூலம் புலியெதிர்ப்பு பேசிய கூட்டத்தை அரசு சார்பு அரசியல் மயமாக்கி, அரசை நம்பக் கோரும் பிரச்சாரத்தை முன் தள்ளுகின்றனர். வேறு மாற்றுவழி தமிழ் மக்களுக்கு இல்லை என்கின்றளர். இப்படி இதற்குள் தர்க்கம் செய்யும் பாசிசக் கூட்டம், மக்கள் அரசியல் எதையும் கொண்டிருப்பதில்லை, அதை நம்புவதும் கிடையாது. இப்படி செயற்படுபவர்களில் சிலர் இலங்கை இந்திய இரகசிய அரசியல் ஏஜண்டுகள்.
இவர்கள் முன்தள்ளும் தர்க்கங்கள், புலிப் பாணியிலானது. எப்படி புலிகள் மக்களை நம்பாது செயற்பட்டனரோ, எப்படி தர்க்கம் செய்தனரோ அதை ஒத்தது. அன்று புலிக்கு, இன்றோ அரசுக்காக தர்க்கம் செய்கின்றனர். எதிர்த்தால், வேறு வழி தான் என்ன என்கின்றனர். அரசின் செயல்களை ஆதரிக்கின்ற நியாயவாதங்களை இதன் மூலம் முன்தள்ளுகின்றனர். புலியின் அதே பிளேட்டை மாற்றிப் போட்டு, ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, June 25, 2009

நீங்கள் சமூகத்தின் பங்காளியாக மாற, இரண்டு இணையங்கள்; அறிமுகம்

இன்று தமிழ்மக்கள் அறிந்திருக்கவும், அதில் நாம் பல விடையத்தை கற்றுக்கொள்ளவும், இரண்டு இணையங்கள் உள்ளது. இன்று தமிழ்மக்கள் தம்மைத்தாம் அறிந்து கொள்ள வேண்டிய காலம். சகல அறநெறிகளையும் இழந்து நிற்கின்றது எமது சமூகம். சமூகம் தன் சொந்த அறியாமையில் இருந்து மீள, கற்றல் மிக முதன்மையானது.

ஆனால் அதைக் கற்கின்ற சமூகக் கூறுகள் எல்லாம், 30 வருட இனவழிப்பு யுத்தத்தில் அழிக்கப்பட்டுவிட்டது. இதைப் பகுதியளவில் தன்னும், மீட்கும் இரண்டு இணையங்கள்.

அடிப்படைக் கல்வி முதல் வாழ்வுசார் கல்வியை பெறும் வகையில், இவ் இரண்டு இணையங்களும் உள்ளதால் அதை .....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?


இந்த ஆலை தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையாகும். தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுள் 9 பேர் தப்பி வர வழியில்லாமல் தீக்குள்ளேயே சிக்கி எரிந்து கரிக்கட்டையாகிப் போனார்கள். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுள் 8 பேர் சிகிச்சைப் பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து இறந்து போனார்கள். அநியாயமாக இறந்து போன இத்தொழிலாளர்களுள் சண்முகம் என்பவர் மட்டும்தான் நாமக்கல்லுக்கு அருகிலுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர். மீதமுள்ள அனைவரும் பீகார் மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடித் தமிழகத்திற்கு வந்த அயல் மாநிலத் தொழிலாளர்கள்.

இவ்வாலையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்த சண்முகத்திற்கு ஒன்பது வயதில் மகள் இருப்பதோடு, அவரது மனைவி வளர்மதி தற்பொழுது கருவுற்றிருக்கிறார். இறந்து போன பீகார் தொழிலாளர்கள் அனைவரும் அவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் சுமைக்கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அத்தொழிலாளர்களுள் ஒருவரின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, June 24, 2009

நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள் என்று குமுறிய பெண் - பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடனான சிறிய உரையாடல் மேலான தொகுப்பு

வன்னிமுகாமில் உள்ள இளம் பெண் ஒருவருடனான உரையாடலின் போது, அள்ளிக் கொட்டிய குமுறல் தான் "நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள்" என்று திட்ட வைத்தது. அடக்கி ஒடுங்கிக் கிடக்கும் கோபங்கள், போராட்டங்கள், இப்படித்தான் குமுறி வெடித்தெழுகின்றது. சமாதான காலத்தில் இதே பெண், தமிழீழம் மிக விரைவில் மலரும் என்றவர். அப்படியா என்ற போது, எம்மை எள்ளி நகையாடிக் கதைத்தவர்.

அந்தளவுக்கு நம்ப வைக்கப்பட்ட ஒரு பிரமையில் வாழ்ந்தவர்கள். புலிகளோ தங்கள் பாசிச சுய ரூபங்களை மூடிமறைத்து, தம்மைப் பற்றி ஏற்படுத்திய பிரமிப்பை யுத்தத்தின் போது தகர்த்தெறிந்தனர். எப்படிப்பட்ட பாசிட்டுக்கள் தாங்கள் என்பதை, மக்கள் முன் நிர்வாணமாகவே நிறுவினர்.

இன்று அதே பெண் இந்தக் காட்டுமிராண்டிகளின் இனவழிப்பு யுத்தத்தினால் சொந்த வடுவுடன் குமுறி எழுந்தாள். அரச நாசி முகாமில் உணவுக்காக நெரிபட்டு கீழே வீழ்ந்ததால், தனக்கு கிடைக்க இருந்த ஒரு குழந்தை வயிற்றில் வைத்தே அழிந்து போனது. அதற்கு சரியான மருத்துவமின்றி, மீண்டும் கடுமையான உடல் நிலைக்கு சென்றார். இன்று இப்படி அவரின் கதையுள்ளது. அவரின் சொந்த தமக்கை ஒரு கண் பறிபோன நிலையில், உடலில் பல காயங்கள் நோய்கள் உடன், தனது நான்கு சிறு......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

சி.பி.எம்மின் தேர்தல் தோல்வி: தேய்கிறது கழுதை !


“டெல்லியின் அதிகார மையங்களை ஆட்டிப் படைக்கும் சக்தி”, “இடதுசாரிகளின் ஆதரவில்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது”, “காங்கிரசு பா.ஜ.க. அல்லாத இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணி தேசிய அரசியலில் தீர்மானகரமான சக்தியாகத் திகழும்”, “2009இல் காங்கிரசு அல்லாத ஆட்சியே டெல்லியில் அமையும்” என்றெல்லாம் சவடால் அடித்துவந்த சி.பி.எம். கட்சியின் கனவுகளும் நப்பாசைகளும் சுயதம்பட்டங்களும் இன்று புஸ்வாணமாகி விட்டன. கடந்த நாடாளுமன்றத்தில் 3வது பெரிய ஓட்டுக் கட்சியாக இருந்த சி.பி.எம். இப்போது 8வது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, சி.பி.எம்.இன் கோட்டையாகக் கருதப்படும் மே.வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் அக்கட்சி 35 தொகுதிகளை இழந்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான படுதோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது.

Tuesday, June 23, 2009

அரச எடுபிடிகள் முன்னின்று நடத்தும் இலக்கியச் சந்திப்பு

தமிழ்மக்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்புரட்சி மடிய, மற்றொரு எதிர்ப்புரட்சி அரங்கேறுகின்றது. அது மக்கள் கோட்பாடற்ற இலக்கியச் சந்திப்பு ஊடாகவும் கூட, தன்னை நிலைநிறுத்த முனைகின்றது. இந்த முன்முயற்சியின் ஒரு அங்கம் தான், நோர்வே இலக்கியச் சந்திப்பு.

எத்தனை ஆயிரம் மக்கள் செத்தாலும் கவலைப்படாது, கொலைகாரக் கும்பல்கள் பேரினவாத அரசுக்கு ஆள்பிடிக்க கூட்டும் சந்திப்பு. கொலைகார அரசை முன்நிறுத்தி, அதை ஆதரிக்கும் கும்பலின் சொந்த முயற்சியுடன் தான் நோர்வே இலக்கியச் சந்திப்பு அரங்கேறுகின்றது.

இந்த சந்திப்பின் பேச்சாளர் பட்டியலில் கலையரசன், ரஞ்சி போன்றவர்கள் மார்க்சியம் மூலம் தான் மக்கள் விடுதலை சாத்தியம் என்று நம்புகின்றவர்கள் இவர்கள். மார்க்சியம் மூலம் தான் அனைத்தையும் பகுத்தாய வேண்டும் என்று சிந்திப்பவர்கள். ஆனால் இந்தச் சந்திப்பு பற்றியோ, கடந்த 20 வருடத்தில் இதன் சாதக பாதகங்களை மார்க்சிய அடைப்படையில் பார்த்தா, இவர்கள் கலந்து கொள்கின்றனர்!? கடந்த 30 வருடத்தில் புலிப்பாசிசம் தன் எதிர்ப்புரட்சி மூலம் தமிழ்மக்களை இந்த நிலைக்....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, June 22, 2009

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் குழிதோண்டி புதைத்தோம் என்று சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்

வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் இருந்து புலிகளையும் பாலசிங்கத்தையும் மீட்கும் போது கிடைப்பதோ, சமூக அறியாமை என்னும் சூக்குமமே. அவை ஒரு நூலுக்குள் அடக்க முடியாதவை. அதில் இருந்து ஒரு சிறிய பகுதியே இக்கட்டுரை. உங்கள் நம்பிக்கைகள், அதிதமான பிரமைகள் எல்லாவற்றையும் இது வெட்ட வெளிச்சமாக்கி தகர்க்கின்றது.

புலிகள் தமது கடந்த கால வரலாற்றை மட்டுமல்ல, நிகழ் காலத்தையும் மிக வேகமாகவே குப்பைத் தொட்டியில் போட்டு புதைப்பது, அவர்களுக்கு கைவந்த கலை. வற்றாத புதையல் போல், அவர்களின் வரலாற்றுக் குப்பையைக் கிண்டிக் கிளறினால் கிடைப்பதோ, தேசியத்தை விலைபேசுவது, சுயநிர்ணயத்தை இழிவுபடுத்துவது, மக்களை ஏமாளிகளாக்குவது தான். இந்தப் பாசிட்டுகளுக்கு இதுவே கைவந்த கலையாக உள்ளது. மோசடித்தனம், ஏமாற்றுதல், பொறுக்கித்தனம் என்று சமூகத்தை இழிவாடி, அதன் மூலம் பொறுக்கித் தின்னுகின்ற எல்லா கீழ்நிலைப் பண்பாட்டையும், புலிகள் தமது சொந்த வக்கிரம் மூலம் தமது பண்பாடாக்கியுள்ளனர்.

தமிழ் மக்களையும், சுயநிர்ணயத்தையு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பணம் கொடுத்து சுதந்திரத்தையும், உயிரையும் விலைக்கு வாங்க வேண்டிய மனித அவலம்


உற்றார் உறவினர் என்று, யாரும் அவர்களுடன் சுதந்திரமாக உரையாட முடியாது. ஏன் "மக்கள் தெரிவு செய்த ஜனநாயக" பராளுமன்ற உறுப்பினர்கள் கூட, அங்கு சுதந்திரமாக செல்லவோ, உரையாடவோ முடியாது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வன்னியில் மருத்துவம் செய்த வைத்தியர்கள், இந்த மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட சிறையில் அடைத்துள்ளது. தங்கள் குற்றங்கள் உலகறியக் கூடாது என்ற ஓரே காரணம்தான், அனைத்து நடைமுறையாகியுள்ளது. குற்றவாளிக் குடும்பத்தின், பாசிச அதிகாரமாக மாறி நிற்கின்றது.

இந்த நாசிய முகாமினுள் செல்பவர்கள் கமரா முதல் தொலைபேசிகளையும் எடுத்துச் செல்ல முடியாது. வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களுக்கு இதில் கடுமையான தடைகள், விதிகள். வன்னியிலும், முகாமிலும் நடந்த குற்றங்கள் உலகம் அறியக் கூடாது என்ற....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

நாடாளுமன்றமா? லயன்ஸ் கிளப்பா?


அத்வானி, மாயாவதி, ஜெயலலிதா ஆகியோரின் பிரதமர் கனவு கானல் நீராகிவிட்டது. மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கிய ‘மார்க்சிஸ்டு’ கட்சி அதன் கோட்டையிலேயே கலகலத்து விட்டது. 200 தொகுதிகளில்தான் வெற்றிபெறும் எனக் கணிக்கப்பட்டிருந்த காங்கிரசு கூட்டணி 262 தொகுதிகளில் வென்றிருக்கிறது. தொங்குநிலை நாடாளுமன்றமும் குதிரை பேரமும்தான் தேர்தலின் முடிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, காங்கிரசு கூட்டணி நிலையான ஆட்சியை எளிதாக அமைத்துவிட்டது.

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாய நசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தலைவிரித்தாடின. இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலத்தீன் அமெரிக்க மக்கள், தங்கள் நாடுகளில் நடந்த தேர்தல்களில் ‘இடதுசாரி’ கட்சிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தி வருகின்றனர். இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஐரோப்பிய மக்கள் முதலாளித்துவம் ஒழிக என முழங்கி வருகின்றனர். ஆனால், இந்தியாவிலோ தனியார்மயத்திற்கு மாற்று வேறில்லை எனக்கூறி வரும் மன்மோகன் சிங் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த “வரலாற்றுப் பிழை”க்கு யாரைப் பொறுப்பாக்குவது?

Sunday, June 21, 2009

"சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" - விடுதலைப் புலிகளிள்

"சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" - விடுதலைப் புலிகளிள் ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

"தமிழ்த் தேசியவாதத்தை அழிக்க வர்க்க கண்ணோட்டமாம்"!?

தேசியத்தில் வர்க்கமில்லை என்று, தமிழ் தேசியத்தை அழித்தவர்கள், இப்படி சன்னி கண்டு புலம்புகின்றனர். வேடிக்கையான குதர்க்கம். தமிழ்மக்களை தமிழ்தேசியத்தின் பெயரில் அழித்தவர்கள், தமது புலித் தமிழ் தேசியத்தை வர்க்கக் கண்ணோட்டம் அழிக்கப் போவதாக குமுறுகின்றனர். வேல் தர்மா என்ற இணைய பதிவாளர் "ஈழப் பிரச்சனையும் வர்க்கக் கண்ணோட்டமும்" என்ற தலைப்பில், தமிழ்மக்களை அழித்த புலித்தேசியத்தைப் பாதுகாக்க பொங்கி எழுகின்றார்.

அதை அவர் 'ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் அடிவருடிகள் தமிழ்த் தேசியவாதத்தை அழிப்பதற்கு வர்கக் கண்ணோட்டம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து வைத்திருக்கின்றனர்" என்று, எம்மைப் பார்த்து குமுறிய வண்ணம் கூச்சல் எழுப்புகின்றார். வர்க்கம் என்ற சொல்லை கண்டு, அதை ஆரியவாதம் என்று பகுதறிவற்ற அரைவேட்காட்டுடன் புலிப்பாசிசம் புலம்புகின்றது. வர்க்கம் தமிழனைப் பிளக்கின்றதாம். புலித் தமிழ்த்தேசியத்தின் பெயரில், வர்க்கமில்லை என்று கூறி, தமிழனையே பிளந்து போடாத பிளவையா வர்க்கம் பிளந்தது!?

தமிழனை நிர்வாணமாக்கி, அவர்களைக் கொத்திப் பிளந்தவர்கள் யார்? இப்படி தமிழனைப் பிளந்து, அவனையே துரோகியாக்கியவர்கள் யார்? தமிழனை நாயிலும் கீழாக ஒடுக்கியவர்கள் யார்? நீங்கள் தான். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் உரிமைகளை மறுத்தும்,.........
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இழப்பு உனக்கேது மண்ணில் மக்களிற்கே

குண்டுகட்டிவெடித்துச் சிதறி;
கொஞ்சமா இழந்தோம்
நெஞ்சத்து ஈரமற்று
இறந்த இராணுவத்தின் எண்ணிக்கை மட்டுமே கணக்குப்பார்த்தவன்
வெடித்துச்சிதறிய பிள்ளைகட்காய் இரக்கப்பட்டதாயில்லை
அடித்துப்பிடியுங்களென்று பணம்கொடுத்து
காருக்குள் புலிப்பொம்மையும்
கார்த்திகைக்கு மண்டபத்தில் மலரும்தூவியவன்
புலத்துத்தமிழன்
வருடாந்த உரைகட்;காய் வாழ்வைதொலைத்தவர்கள் எத்தனை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, June 20, 2009

சிங்கள மக்கள் மேலான உனது தாக்குதல்தான், தமிழன் மேலான அவர்களின் கண்காணிப்பாகியது

போராட்டத்துக்கு விரோதமான உனது செயல்கள் தான், தமிழருக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சிங்களமக்களின் எதிர்வினையாகியது. நீ அரசுக்கு எதிராக மட்டும் போராடி, சிங்களமக்களின் அவலங்களுக்கு நீ குரல் கொடுத்து இருந்தால், உன்னை அவர்கள் போற்றியிருப்பார்கள். உன்னை அவர்கள், தங்கள் எதிரியாக பார்த்திருக்கமாட்டார்கள்.

தமிழனை தெய்வமாக மதித்திருப்பார்கள். 1971, 1989-1990 தங்கள் குழந்தைகளை இந்த இராணுவத்திடம் பறிகொடுத்த மக்கள், அதை பழிவாங்க உன்னுடன் சேர்ந்து நின்றிருப்பார்கள். ஆனால் நீ இன்னமும் சிங்கள மக்களை தமிழனின் எதிரியாக காட்டுவது நிற்கவில்லை. உனது ஆட்டம் முடிந்து விட்டது, நிற்பாட்டு. நீயே தமிழனுக்கே எதிரானவன். அதையே உன் வரலாறாக நிறுவியிருக்கின்றாய். நீ வேறு, தமிழன் வேறு. அது போல் சிங்கள மக்கள் வேறு, சிங்கள அரசு வேறு. உன்னுடைய குறுந்தேசிய தமிழ் இனவெறியை, தமிழர்களின் உணர்வாக காட்ட முனைகின்றாய். தமிழ் தேசிய உணர்வுக்கும், உன்னுடைய இனவெறி உணர்வுக்கும் இடையில் உள்ள மெல்லிய இடைவெளியை கொண்டுதான், தமிழினத்தையே நீ அழித்தவன்.

இப்படிப்பட்ட நீ தான் சொல்.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தாய்லாந்து: பாசிச ஆட்சிக்கெதிராக ஏழைகளின் போர்!


இதில் பங்கேற்க சென்றிருந்த இந்தியாவின் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத்தும் மற்ற பிற நாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பாக தாய்லாந்து தலைநகர் பாங்காங் திரும்பினர். பல்வேறு உலகத் தலைவர்கள் சந்திக்கும் கூட்டங்களில் உலகமயத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் தமது எதிர்ப்பை காட்டுவது வழக்கம்தான்; அதுவும், ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்று ஏற்றிருந்தார்கள். ஆனால், இங்கே ஒரு கூட்டமே ரத்து செய்யப்படும் அளவுக்கு நடந்ததை பல நாடுகளால் ஜீரணிகக்க முடியவில்லை. அப்படி தாய்லாந்தில் என்னதான் பிரச்சினை?

இதுவரை பதினாறுக்கும் மேற்பட்ட இராணுவப் புரட்சிகள் நடந்திருக்கும் தாய்லாந்தில் இன்னும் மன்னர் பரம்பரையினர் அங்கீகாரத்தோடு வாழ்கின்றனர். ஏழ்மையும், செல்வமும் கூரிய முரண்பாடுடன் பிரிந்திருக்கும் நாட்டில், ஏழைகளுக்கு எந்தக் காலத்திலும் பெயரளவு ஜனநாயகம்கூடக் கிடைத்ததில்லை.ஐந்து வருடங்களுக்கு முன்னர் தாக்சின் என்பவரது தலைமையில்.....................முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, June 19, 2009

தவைவர் மரணிக்கவில்லை : இது ஒருபுறம் மனநோய் மறுபுறம் தமிழனை ஏமாற்றும் மோசடி

இறந்த ஒருவரை இறக்கவில்லை என்று கூறுவது, ஒரு சமூகம் தன் பகுத்தறிவைக் கூட இழந்து நிற்கின்றது என்பதே அர்த்தமாகும். இப்படி இறக்கவில்லை என்பது ஆகப் பெரும்பான்மையிடம் உளவியல் சார்ந்த நோயாக இருப்பதைக் நாம் காணமுடியும். சிறுபான்மையிடம் இது பிழைப்பு சார்ந்தது. பினாமி சொத்துச் சார்ந்த அரசியல் மோசடி.

இப்படி பிழைப்பு சார்ந்த அரசியல் மோசடிக் கும்பல், இந்த உளவியல் நோயைக் கொண்டே வாழ முனைகின்றது. மக்கள் பெயரால் தான் சுரண்டியதை தனதாக்கி அதைக் காப்பாற்றவும், அதைக் கொண்டு அது வாழவும் முனைகின்றது. இதற்கு தலைவர் உயிருடன் இருப்பதாக காட்ட வேண்டியுள்ளது. அதாவது பூசாரி எப்படி இல்லாத கடவுளை இருப்பதாக கூறி, பக்தனை ஏமாற்றி பிழைப்பது போன்றதுதான் இதுவும்.

இங்கு மனிதனின் சொந்த பகுத்தறிவுக்கு இடமில்லை. பிரபாகரனை இருப்பதாக கூறுபவர்கள், அவரை உலகறிய காட்டிவிடுவது தானே அறிவுபூர்வமானதாக இருக்கும். இதற்கு வெளியில் எந்த உண்மையும் கிடையாது. போலியான எந்த தர்க்கமும், உண்மையானதாக .....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பாக். இராணுவம் – தாலிபான் மோதல்: நிழலா? நிஜமா?


அந்நாட்டிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாநிலத்திலுள்ள மாலாகண்ட் பகுதியில் “அமைதியை” ஏற்படுத்த, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இநிபாஸ் ஹரியத் இ முஹமதி என்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்போடு பாகிஸ்தான் அரசு ஓர் உடன்பாடு செய்துகொண்டது. இதன்படி, மாலாகண்ட் பகுதியில் ஸ்வாட் சமவெளியையும் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நிஜாம் இ அத்ல் என்ற ஷரியத் நீதிமன்றங்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். இதற்கு கைமாறாக, தெஹ்ரிக் இநிபாஸ் அமைப்பு தனது சகோதர அமைப்பான தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினை ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுமாறு செய்ய வேண்டும். ஆனால், நடந்த்தோ பாகிஸ்தான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது.

Thursday, June 18, 2009

'சிங்களவன் உடன் எப்படி நாங்கள் சேர்ந்து வாழ்வது?" அவன் …

அவன் உன்னைப்பற்றி என்ன நினைக்கின்றான் என்பதற்கு முதல், நீ அவனைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்பதுதான் முதன்மையானது. நீ சேர்ந்து வாழத் தயாரா!? அதற்காக முயன்றாயா!? எப்படி, எந்த வழியில்!?

சிங்கள அரசு தான் உன் எதிரி. சிங்கள மக்கள் அல்ல. இந்த வேறுபாட்டை எப்போதாவது உன் வாழ்வில் நீ எண்ணிப்பார்த்ததுண்டா!? தமிழனை, முஸ்லீமைக் கூட, எதிரியாக்கியவன் அல்லவா நீ. ஏன் உன் சிந்தனை, நடைமுறை எல்லாம் அதுவாகவே இருந்தது. அதைத்தான் தேசியத்தின் பெயரில் புலித் தேசியம் உனக்கு, உன் சிந்தனையாக ஊட்டியது.

துரோகிகள், கைக்கூலிகள், ஒட்டுக்குழுக்கள் மக்களின் எதிரியான சிங்கள அரசுடன் கூடி நிற்கின்றானே ஒழிய, உன்னைப் போன்ற சிங்கள மக்களுடன் அல்ல. நீ ஏன் உன்னைப் போன்ற சிங்கள மக்களுடன் நிற்க முடியாது!?

இதைப் புரிந்து கொள்ளாத மூடனாய்,.......
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, June 17, 2009

உலகமயமாதல் விதைத்த ஏழ்மை அவலங்கள் : ஒளிப்பேழைகள்

உலகமயமாதல் விதைத்த ஏழ்மை அவலங்கள்

நாடு கடந்த தமிழீழம்: எஞ்சிய தமிழினத்தை அழிக்கமுனையும், புலத்துப் புலிகளின் புலுடாப் பிரகடனம்

மக்களுக்கு எதிரான கடந்தகால புலிப் பாசிசத்தை, சுயவிமர்சனம் விமர்சனம் செய்யாத பாசிசத்துக்கான புதுப் புலுடாப் பிரகடனம். தமிழினத்தை தொடர்ந்து தமக்குள் அடிமையாக வைத்திருக்க, வலது பாசிட்டுகள் புலுடாப் பிரகடனம்.
ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களையும், ஓடுக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களையும், ஒடுக்கப்பட்ட உலக மக்களையும் சார்ந்து நின்று போராட மறுக்கும் வலதுசாரிய புலிப் பாசிசம், நாடு கடந்த தமிழீழ புலுடாப் பிரகடனத்தைச் செய்கின்றது.

கடந்த காலத்தில் தமிழினத்தை அழித்த கும்பல், இன்று இதன் மூலம் தாம் வாழ நாடு கடந்த புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.

இதன் மூலம்

1. புலத்தில் பினாமிகளின் பெயரில் உள்ள பாரிய புலிச் சொத்துகளை, புலித் துரோகிகள் தமதாக்க புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.

2. தொடர்ந்தும் புலத்து மக்களை.....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ரமாபாய் நகர் துப்பாக்கிச்சூடு தீர்ப்பு: தானாகக் கனியவில்லை !


இந்து மதவெறிக் கும்பல் ஆட்சியிலிருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு “யாரோ” சில சமூக விரோத சக்திகள் அக்காலனியில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்தினர். ஆதிக்க சாதி திமிர் பிடித்த அக்கிரிமினல்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கக் கோரி ரமாபாய் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உரிமைக்காகப் போராட்டத்தில் இறங்குவதை இந்து மதவெறிக் கும்பலால் சகித்துக் கொள்ள முடியுமா? சட்டம்ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அப்போராட்டத்தை ஒடுக்கியது, இந்து மதவெறிக் கூட்டணி அரசு.

Tuesday, June 16, 2009

மக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்

நாடுகடந்தெனினும் காசியண்ணா கனவு மெய்ப்படப்போகிறது
மேதகு எல்வாம் முடித்து மிதவாத தலைவர்களிடம்
தமிழன் தலைவிதியை தள்ளியுள்ளார்-
மண்ணில் எந்த முற்போக்குமௌவண்ணம்
துடைத்தளித்து துரத்தி யதார்த்தவாதி ராஜபக்ச
காலில்விழப்பாதி மீதியெல்லாம் புலத்தில் பிரகடனம்

இனிப்பழம் பழுக்கும் வெளவால் வரும்
பதின்முணாம் சட்டம் எழும்....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

நாம் உடனடியாக செய்ய வேண்டியதும், எமது அரசியல் திசைவழியும்


அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் தம் தப்பபிப்பிராயங்களைக் களைந்து, தம் பொதுஎதிரியை எதிர்க்க கூடிய ஒரு கூட்டு அரசியல் பலத்தைப் பெறுவதே, இன்றைய அரசியல் தெரிவாக எம் முன்னுள்ளது. இந்த வகையில், எமது அனைத்து அரசியல் செயல்களை இன்று ஒருங்கிணைத்தல் அவசியமாகும். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் ஒன்றிணைதல், அதற்கான அரசியல் முன்முயற்சியை எடுத்தல் அவசியமானது. அதற்காக அனைத்து தடைகளையும் கடத்தல் அவசியமாகும்.

இந்த செயல் சிங்கள இனவாத அரசுடனல்ல. சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைவதாகும். பலர் இன்று கிடைப்பதைப் பெறுவது பற்றியும், சிங்கள அரசுடன் சேர்ந்து நிற்பது பற்றியும், புலியின் அழிவுடன் சேர்ந்து இதையே ஓப்பாரியாக முன் வைக்கின்றனர். இதற்கு மாறாக நாங்கள் இலங்கையில் வாழும் அனைத்து ஓடுக்கப்பட்ட .....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, June 15, 2009

நேபாள ஆட்சிக் கவிழ்ப்பு: இந்திய மேலாதிக்கச் சதி, ஓட்டுக்கட்சிகளின் துரோகம்!


மன்னராட்சி ஒழிக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் முடிந்து, ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான பாதையில் அந்நாடு அமைதியாகப் பயணித்துக் கொண்டிருப்பதாக நிலவும் கருத்தைத் தகர்த்து, அந்நாடு மீண்டும் அரசியல் போராட்டங்களால் குலுங்குகிறது. இந்தியாவின் மேலாதிக்கச் சதிகளுக்கும் இந்தியக் கைக்கூலி அரசியல் சக்திகளுக்கும் எதிராக, “அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! நாட்டு விரோத சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கைக்கூலி இராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்! சதிகார அதிபர் ஒழிக!” என்ற முழக்கங்களுடன் வீதியெங்கும் மக்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்களாலும் சாலை மறியல் போராட்டங்களாலும் அந்நாடு அதிர்கிறது.

நேபாள மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக மாவோயிஸ்டுகள் பத்தாண்டு காலத்திற்கும் மேலாக நடத்திய ஆயுதப் போராட்டத்தின் விளைவாக, 2006ஆம் ஆண்டில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் எழுச்சியில் மக்கள் இறங்கினர். “மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்; அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தி புதிய அரசியலமைப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் நேபாள ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட வேண்டும்” என்ற மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை இம்மக்கள்..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

முன்னணிக்கான அரசியல் திட்டமும், அதன் நோக்கமும்

மூன்று பத்தாண்டுகளாக நிலவிய ஆயுதப் போராட்டம், இன்று ஒரு தீர்வுமின்றி முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இதற்கு அரசியல் அடிப்படையாக இருந்த இன முரண்பாடு, அரசியல் ரீதியாக இன்னமும் முடிவுக்கு வந்துவிடவில்லை. மாறாக மிக மோசமான ஒரு இனவழிப்பு, பாசிச வடிவத்தை எட்டியுள்ளது. இதை இன்று எதிர்கொள்ளும் தமிழர் தரப்பின்றி, தமிழினம் அனாதையாகியுள்ளனர்.

பொறுக்கிகளும், புறம்போக்குகளும், சந்தர்ப்பவாதிகளும், பாசிட்டுகளுமே, தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் அரசியல் நிலையை எட்டியுள்ளனர். இதற்கு ஏற்ப பேரினவாதப் பாசிசம் தலைவிரித்தாடுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் உட்பட, அனைத்துவிதமான சுதந்திரங்களையும், உரிமைகளையும் தமிழ் மக்கள் மட்டுமின்றி, இலங்கை மக்கள் அனைவரும் இழந்து வருகின்றனர். ஒழுங்குபடுத்தப்பட்ட பாசிசம், நிறுவனமாகி வருகின்றது.

யுத்தத்தின் முடிவும், இலங்கை தழுவிய பாசிசமும், புதியதொரு சூழலை உருவாக்கியுள்ளது. நிலைமை மிகத் தீவிரமாக மாறியுள்ளது. இலங்கையில் நிலவிய இரண்டு பாசிசப் போக்கில், ஒன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அரச பாசிசம், மூர்க்கமாக மாறி நிற்கின்றது. அனைத்துவிதமான அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், அது தானே மறுத்து நிற்..........
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, June 14, 2009

இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்


1.முன்னுரை : இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்

2.தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

3.இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்

4.கல்வியும் தமிழ் தேசியமும்

5.தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்

6.பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்

7.வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு

8.பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வியும், சிறுபான்மை இனங்களின் கல்வியும்

9.மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்

10.வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்

11.யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்

12.இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்

13.மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்

14.மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும்

15.ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.

16.மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு

17.மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்

18.மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்

19.இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்

20.இனவாதமும் சுயநிர்ணயமும்

21.உலகமயமாகும் தேசிய பொருளாதாரமும்

22.இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்

மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்

மலையக மக்களின் கடும் உழைப்பே, இலங்கையின் அனைத்து இனங்களினதும் சமூக வாழ்வை நலன்களை உயர்த்தின. மலையக மக்கள் பிழியப்பட்டு கிடைத்ததை உறிஞ்சி வாழ்ந்த மற்றைய இனங்கள், அந்த மக்களை தொடர்ச்சியாக கேவலப்படுத்தவும் ஒடுக்கவும் பின்நிற்கவில்லை. மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வையும் பற்றி புரிந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களை இலங்கையின் ஒரு தேசிய இன மக்களாக அங்கீகரிக்காத தேசியம், சிறுபான்மை இனமான தேசிய இறைமைக்காக போராட தேசியம் அடிப்படையிலேயே பிற்போக்கானது.

Saturday, June 13, 2009

பன்றிக் காய்ச்சல்: பன்றிகளை குற்றவாளியாக்காதீர்கள்!


கடந்த 10 ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா என வகை வகையான நோய்கள் தோன்றிப் பரவின. இந்நோய்களால் பல்லாயிரக்கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் வந்திருக்கும் புதுவித நோய்தான் பன்றிக் காய்ச்சல். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளை இந்த நோய் ஆட்டிப் படைக்கிறது. இந்நோய்க்குப் பயந்து பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. பத்திரிக்கைகளும், இதர செய்தி ஊடகங்களும் இந்த நோய் குறித்து மக்களை எவ்வளவு பயமுறுத்த முடியுமோ அந்தளவுக்குப் பயமுறுத்தி வருகின்றன. அமெரிக்கா சென்று திரும்பிய சில இந்தியர்களுக்கு இந்தக் காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

Friday, June 12, 2009

குற்றங்களை மூடிமறைக்கும் அறிவியலும், அரசியல் பித்தலாட்டங்களும்

மக்களுக்காக நிற்க முடியாதவர்கள், அனைத்தையும் புலி அல்லது அரசுக்கூடாக பார்த்தவர்கள், இன்று இதற்கூடாகவே சிந்தித்துக் காட்ட முனைகின்றனர். பாரிய குற்றங்களைக் கூட, எதிர்த்தரப்பின் செயலாக சித்தரிக்கின்ற திருகுதாளங்களும், அரசியல் பித்தலாட்ட முயற்சிகளும். இலங்கையில் நடந்தவற்றுக்கு எதிராக ஒரு சுயாதீனமாக விசாரணையைக் கூட கோர மறுக்கின்ற தர்க்கங்கள், புரட்டல்கள். கடந்தவை எவையும் போர் குற்றங்களல்ல என்று, காலம், நேரம், இடம், சூழலைக் காட்டி அரசியல் பித்தலாட்டங்கள்.

இன்று புலிப் பாசிசத்தை அழித்துவிட்ட அரச பாசிசம் தானே அனைத்துமாகி, பிசாசாக மாறி நிற்கின்றது. இந்தப் பாசிச அரசைப் பாதுகாக்;கின்ற, அறிவுசார் தில்லுமுல்லு அரசியல் வேலைகள். புனைபெயரில் உலாவும், புலுடாப் பேர்வழிகள்.

இவர்கள் மனிதனுக்கு எதிராக இழைத்த குற்றங்களையும், அதன் அரசியல் அடித்தளத்தையும் பாதுகாக்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்கு விபச்சாரம் செய்யும் ஊடகத்துறை. இழிவான நடத்தைக்கு ஏற்ப, கள்ள மௌனங்கள். வேறு சிலர் நடத்தவற்றை, ......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஈழம், புலி, புலம்


பாராளுமன்ற சொகுசுகளுக்காக தமிழ்மக்களை விற்ற தமிழர்விடுதலைக்கூட்டணி, இந்தியாவுக்குச் சோரம் போன ரெலோ தலைமை, தொடர்ந்த ஈ.பி.ஆர்.எல் எவ் தலைமை, ஈ.என்.டி.எல்.எவ் தலைமை, இலங்கை அரசுக்கு சோரம் போன புளொட் தலைமை, ஈ.பி.டி.பி தலைமை, ரி.எம்.வி.பி தலைமை, புலிகளைச் சரணடைந்த ஈரோஸ் தலைமை, யாரோ ஒரு தரப்பினரிடம் சரணடைய முயற்சித்த/ சரணடைந்த புலித் தலைமை….. என்று தமிழ்மக்களின் இன்றைய அவலத்துக்கு அனைத்துத் தலைமைகளும் காரணமாயின. இதில் புலிகள் மீது மட்டும் குற்றத்தைச் சுமத்திவிட்டு மற்றையவர்கள் தப்பிவிட முடியாது.

பெரும் இருபது நாடுகள் (G 20) மாநாடு: அமெரிக்காவின் நயவஞ்சகம், இந்தியாவின் துரோகம்!


‘‘இப்பொருளாதார மந்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்குச் சலுகை அடிப்படையில் கடன்; மேற்குலக நாடுகளின் சந்தையை எவ்விதத் தடையுமின்றி ஏழை நாடுகளுக்குத் திறந்து விடுவது; சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வேட்டையாடிக் கொண்டு வருவது; தேவைப்படும் நிதி ஆதாரங்களைச் சந்தையில் கொட்டுவது” என இம்மாநாட்டில் தீர்மானங்கள் இயற்றப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இம்மாநாடு நடந்து............
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, June 11, 2009

காலத்தின் கட்டாயம் மக்கள் களம்திறக்கும்

களமாடி மடிந்தவர்கள்..எம் இனத்தின்
காலம் விடியுமென்ற கனவுடனே சென்றவர்கள்
தலைமையை நம்பி தம்உயிரை ஈந்த…எம்பிள்ளைகள்
உடல் தேடிப்புணர்வதற்கு போரின் தர்மம் அறியா
பாசிசவெறிநாய்கள் பகலிரவாய் அலைகிறது

புலத்து ஆய்வாளப்புலிகளோ ..தலைவர்
இறுதிக்கண நினைவுகட்கு ஆருடம் சொல்கிறது
என்ன கொடுமை......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

உன்னுடைய வீறாப்பும் வெற்றிக் களிப்பும் யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை - உபாலி கூரே

உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப்படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப்புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்கவாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள்பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்கவேண்டும்.

முதலாவதாக உன்னுடைய வீறாப்பும் வெற்றிக் களிப்பும் யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை. “இலங்கை இராணுவம்தான் உலகின் மிக உயர்ந்த இராணுவம்” என்பது போன்ற உரிமைகோரல்கள் ஐயத்துக்கிடமின்றித் தவறானவை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இறுதிச் சில மாதங்களாக நடந்த இராணுவ நடவடிக்கைகளில் 6000க்கும் அதிகமான இராணுவச் சிப்பாய்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதற்கும் அதிகமானவர்கள் மோசமாகக் காயம்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இதனை, இந்திய அமைதிப்படை இரண்டு வருடங்கள் தரித்திருந்தபோது கொண்டு வந்த இழப்புகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமானது. அந்த நேரத்தில், ஜேவிபியினாலும் இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலராலும் தூண்டப்பட்டு, அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவினால் இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைமையைச் சுற்றி வளைத்தார்கள். விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ளும் இறுதிப்பேரத்தினை அண்மித்திருந்தார்கள். அந்த நேரத்தில்கூட இந்திய அமைதிப்படை ஆயிரத்துக்கும் சிறிதளவு...............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மகிந்தாவுக்கு குடைபிடிக்கும், திரோஸ்கிய அழகலிங்கத்தின் ஓட்டுண்ணித்தனம் - நன்றி - தேசம் வாசகர்கள்


அதற்கு அவர் சோசலிசம் உலகமயமாக்கல் புரட்சி என்னும் சிவப்பு சொற்களை பயன்படுத்தியுள்ளார். அவருக்கு லெனின் கூறிய சில வரிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளிவர்க்கம் பங்குபெறவேண்டும் பெரும்பான்மை பெறவேண்டும். அதன்பின்தான் அது அதிகாரத்தைப் பெறவேண்டும் என்று முட்டாள்கள் அல்லது கயவர்கள்தான் சிந்திப்......... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, June 10, 2009

பிரபாகரனின் 12 வயது மகனையே சுட்டுக்கொன்ற பேரினவாத பாசிட்டுகள் - யுத்தக் குற்றம் -3

புலிகள் சிறுவர்களை தம் படையணியில் இணைத்ததற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள், 12 வயது அப்பாவி சிறுவனை அவனின் தந்தையின் முன் படுகொலை செய்ததையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. இந்தப் படுகொலையை, மனிதவுரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கை, மீள உறுதி செய்துள்ளது.

பேரினவாத பாசிசம், இதில் எப்படிப்பட்ட குற்றத்தை இழைத்துள்ளது.

1. சரணடைந்தவர்களை படுகொலை செய்து, பாரிய யுத்த கிரிமினல் குற்றத்தைச் செய்துள்ளது

2. குழந்தைகளை.........
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிகளின் போராட்டத் தோல்வியும்… வால் பிடிகளின் கொண்டாட்டமும்…


எங்கள் தலைவன், தேசியத்தலைவன் என்று வாய் ஓயாமல் கத்தியவர்கள்… தலைவன் காலத்திலே தமிழீழம் கிடைத்து விடும் என்ற ஆழமான எதிர்பார்ப்பினை தங்களோடு வளர்த்துக் கொண்டவர்கள் இன்று மனதாலே பாதிக்கப்பட்டு விரக்தி நிலையில் உள்ளார்கள். இவர்கள் விசுவாசிகள். அமைப்பு மீதும், தலைவர் மேலும் உண்மையான விசுவாசம் கொண்டவர்கள். இப்படியொரு சந்தர்ப்பத்தில் இந்த உண்மை விசுவாசிகள் உடைந்து போவது தவிர்க்க முடியாதது. வேறு சிலரோ இன்று எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாக உள்ளார்கள். தலைவர் சாகமாட்டார் அவரை யாராலும் சாவடிக்க முடியாதென்ற மிதமிஞ்சிய கற்பனையிலும், எதிர்பார்ப்பிலும் காலத்தை கழிக்கிறார்கள்.

இன்னும் சிலர் கிடை
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

குஜராத் இனப்படுகொலை: பாதிக்கிணறு தாண்டும் நீதிமன்றத் தீர்ப்புகள்!

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் இனப் படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தாலும் குஜராத் உயர்நீதி மன்றத்தாலும் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள மூன்று தீர்ப்புகள் இந்து மதவெறி கும்பலுக்கு, குறிப்பாக அப்படுகொலையை நடத்திய நாயகன் மோடிக்கு எதிராக அமைந்திருப்பதோடு, இந்த இனப்படுகொலை தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திவரும் பொய்ப் பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.

கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ் 6 பெட்டி எரிந்து போனதை, பாகிஸ்தான் ஆதரவோடு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என ஊதிப் பெருக்கி, அவ்வழக்கை காலாவதியாகிப்போன பொடா சட்டத்தின் கீழ் நடத்தி வந்தது, குஜராத் அரசு. “இச்சம்பவத்தைத் தீவிரவாதத் தாக்குதலாகக் கருத முடியாது; எனவே, இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களை பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” என குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கோத்ரா சம்பவம் தொடர்பான தனது பித்தலாட்டங்களை எப்படியாவது நிரூபித்து விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மோடி அரசு, தனது கைக்கூலிகளைத் தூண்டிவிட்டு இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையைப் பெற்றுவிட்டது.

ஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள்

அபுகிரைப் சிறைச்சாலையில் ஈராக் மக்கள் மீது அமெரிக்கத் துருப்புக்கள் நடத்திய வக்கிரமான சித்திரவதைகள் குறித்த புகைப்படங்களும் ஒளிநாடாக்களும் சென்ற மே மாதம் முதன்முதலாகச் செய்தி ஊடகங்களின் வெளிவந்தன. உலகெங்கும் எழுந்த கண்டனங்களின் விளைவாக இந்த ஒளிநாடாக்களையும் புகைப்படங்களையும் பார்ப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதித்தது புஷ் அரசு. ஓரு கண்துடைப்பு விசாரணையும் நடக்கின்றது.

இன்னும் வெளியிடப்படாத படங்களில் மிகக் கொடூரமான வன்புணர்ச்சிக் காட்சிகளும் ஈராக்கியச் சிறுவர்களுடனான ஓரினச்சேர்க்கைக் காட்சிகளும் உள்ளதாகக் கூறுகின்றது நியூஸ்வீக் வார ஏடு.

"துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்படும் ஈராக் பெண்கள், நேரடியான உடலுறவுக்காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு நான் திகிலில்..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, June 8, 2009

பெண்களை நிர்வாணப்படுத்தியது புலியென்று, அரச ஆதரவாக ஆய்வு செய்கின்றனர்

இராணுவத்தின் வெற்றிகரமான இனவழிப்பின் போது, பெண்களுக்கு நடந்த அவமானத்தை உறுதிசெய்யும் வண்ணம் இராணுவம் எடுத்த நிர்வாணப்படத்தை அதிரடி இணையம் வெளியிட்டு இருந்தது. அதிரடியில் தொடர்ச்சியாக எழுதும், கிழக்கான் ஆதம் என்ற நபர், 'இராணுவத்தினரை விட புலிகளே செய்திருக்கச் சாத்தியங்கள் அதிகமுள்ளது." என்று எழுதுகின்றார்.

அதிரடி ஆசிரியர்கள் இதை வெளியிட்டு, தம் மறுப்பை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அதிரடியின் நிலை என்பது, பொறுப்புமிக்கதும் ஆரோக்கியமானதுமாகும். அத்துடன் இன்னும் பல படங்கள் தமக்கு கிடைத்ததாகவும் கூட அறிவித்துள்ளனர்.

கிழக்கான் ஆதம் எழுதுகின்றார் 'அப்பெண் போராளிகள் இராணுவத்தினரால் தான் நிர்வாணமாக்கப்பட்டனரா? என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அதில் காண முடியவில்லை மாறாக பல சந்தேகங்களே தொக்கி நிற்கின்றன. அவைகளை நோக்கும் போது தங்கள் சக போராளிகளால் நிர்வாணப்படுத்தப்பட்டு அவைகள் புகைப்படங்களாக்கப்பட்டு இறுதியில் பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் போலத்தான் அவை தெரிகின்றன." இங்கு பேரினவாத ஆணாதிக்க இராணுவத்தைக் காப்பாற்றும்
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

நீண்டபொழுதெனினும் மீண்டெழுவர்

தர்மச்சக்கரத்தில் உலகைச் சுழற்ற..புதிதாய்
தலைவர் வருகிறார்
புலத்து தமிழா தெருவில் இறங்கு
கொடியைத் தூக்கு
விடியலைத்தரும் சூரியதேவன்

படத்தைத் தாங்கு
உலகை வெல்ல கருத்தே கேட்கிறார்
அடங்கிப்போன ஆய்வாளர்களே
எழுதுகோல்களை எடுங்கள்
புதிய உலக ஒழுங்கின் இராஜதந்திரமாம்
வென்று காட்டுங்கள் ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, June 7, 2009

பெண்கள் மேலான பாரிய பாலியல் போர் குற்றங்கள் (படங்கள் இணைப்பு)

பேரினவாதம் தன் போர்க்குற்றத்தை மூடிமறைக்க எடுக்கும் பாரிய முயற்;சிகள் ஒருபுறம். இதற்கு மறுபுறம் இந்தியா முதல் பல நாடுகள் இன்று துணை நிற்கின்றது.

மறுபக்கத்தில் இவை ஒவ்வொன்றாக அம்பலமாகின்றது. பெண்கள் மேல் இராணுவம் நடத்திய பாலியல் யுத்தம் மூலம், யுத்தம் வெல்லப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஆணாதிக்க பண்பின் ஊடாக, யுத்தம் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் தான், சிங்கள மேலாதிக்க பாசிச திமிருடன் இன்று நாட்டை ஆளுகின்றனர். பெண்களை நிர்வாணப்படுத்தி ரசித்த ஆணாதிக்க படைக்கு, நன்றி தெரிவித்து கொண்டாட்டங்கள் வேறு. கம்யூனிசத்தின் பெயரில் இனவாதம் பேசும் ஜே.வி.பியும் அதன் தலைவரும், இந்தக் குற்றத்தை விசாரித்தால் தங்கள் பிணத்தின் மேலாகத்தான் இது நடக்கும் என்று கொக்கரிக்கின்றனர். ........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்