தமிழ் அரங்கம்

Wednesday, February 11, 2009

தவறை திருத்த மறுப்பதன் மூலமே, தமிழினம் மேலும் ஆழமாக அழிகின்றது

தவறை புரிந்துள்ளதாக தம்மைக் காட்டிக்கொண்டு நியாயவாதம் செய்பவர்கள், ஓரு நாணயத்தின் இரண்டு பக்கமாகவும் இருக்க முனைகின்றனர். ஓரு பக்கம் தவறு உண்டு என்பதும், மறுபக்கம் தவறை தொடர்வதுமாக உள்ளனர். இவர்கள்தான் ஆபத்தான நயவஞ்சகப் பேர்வழிகள். தமிழினம் அழிக்கப்படும் இன்றைய நிலையிலும், அதில் குளிர்காய்கின்ற குள்ளநரிக் கூட்டங்கள்.

எம் போராட்டத்துக்கு ஏன் இந்தக் கதி எற்பட்டது? அதை திருத்த மறுக்கின்ற, அந்த தவறை சொல்ல மறுக்கின்ற, அதற்கு எதிராக போராட மறுக்கின்றவர்கள் தான், தமிழினத்தின் அழிவில் பிழைக்கின்றவர்கள்.

புலிகளின் பின் நின்ற பலர், புலிக்கு வெளியில் நிற்பதாக பாசாங்கு செய்தபின் இன்று புலியுடன் ஓட்டிக்கொண்ட ஓட்டுண்ணிகள், போராட்டத்தின் தவறே இன்றைய எம் நிலைமைக்கு காரணம் என்று வெளிப்படையாக கூறுகின்றனர். அதேநேரம் புதிய தவறை நியாயப்படுத்திக்கொண்டு மூச்சுவாங்க அடியும் வாங்குகின்றனர்.

இவர்கள் தவறாக கருதுவதோ புலிப்பாசிசம் தன்னைத்தான் அம்பலப்படுத்தும் வகையில் செய்தவையைத்தான். அம்பலப்படமல்................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, February 10, 2009

இலங்கையை ஆளும் வர்க்கம், பாசிசத்தை ஏன் தெரிவு செய்தது

இந்தத் தெரிவில் முக்கிய பங்கு புலிக்கு உண்டு. சமாதானம் மேல் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள், யூ.என்.பி யை ஆதரித்து அவர்களை வெல்லவைத்து தம்மை தோற்கடித்த விடுவார்கள் என்று புலிகள் பயந்தனர். சமாதானம் மூலம் தம் எதிர்காலம் சிக்கலுக்குள்ளாவதை தடுக்கவும், யுத்தம் மூலம் தம் நிலையை இலகுவாக்க முடியும் என்று புலிகள் நம்பினர்.

இந்த அடிப்படையில் யுத்தத்தை வெல்ல விரும்பிய புலிகள், அப்பாவி வேஷம் போட்ட மகிந்தாவை தம் தேர்தல் பகிஸ்கரிப்பு மூலம் தெரிவு செய்தனர். தமிழ் மக்களை தேர்தலில் வாக்களிக்கவிடாது தடுத்து, தேர்தல் பகிஸ்கரிப்பாக மாற்றி யூ.என்.பி யைத் தோற்கடித்தனர். வன்னியில் ஓரேயொருவர் வாக்கு போட்டபோது, அவனின் கட்டை விரலையே புலிகள் வெட்டினர். இப்படி யூ.என்.பிக்கு வீழ்ந்த ஓரு வாக்கு மூலம், மகிந்த வெற்றி பெற்றார். மகிந்தாவை வெல்ல வைத்த இந்த இரகசிய சதிப் பேரத்தின் பின்னணியில், சில சலுகைகளை மகிந்தாவிடம் புலிகள் கோரினர். பணம் முதல் கருணாவை தம்மிடம் ஒப்படைத்தல் வரை அது நீண்டது.

புலியைப் போல் மகிந்தாவும் பாசிட்டாக இருந்ததால், சிலதைக் கொடுத்து புலிகளை இலகுவாக ஏமாற்ற முடிந்தது. புலிகள் தாம் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, அதை எதிர்கொள்ள வடக்கில் 'மக்கள் படை" என்ற பெயரில் தொடர்ச்சியான தாக்குதலை இராணுவம் மீது நடத்தினர்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, February 9, 2009

ஒரு திடீர் தீர்வு!

யாரெல்லாம் இன்றைய யுத்தத்தை ஆதரிக்கின்றரோ, அவர்கள் தமிழினத்தின் காவலராக நண்பராக மகுடம் சூட்டப்படும் சதி இன்று அரங்கேறி வருகின்றது. இது எப்படி சாத்தியம்? உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இரகசிய நிகழ்ச்சிநிரல்கள் இதை மறுக்கவில்லை.
கருணாநிதி முதல் இலங்கை அரசு வரை போற்றப்படவும், புலிகள் தூற்றப்படவும் கூடிய நிலைமை, இந்த சமூக அமைப்பில் ஏற்படும். இந்த வகையில் ஓரு சதி அரங்கேறுகின்றது.

தமிழரின் உரிமையின் பெயரில் இலங்கை, இந்தியா, நோர்வே முதல் ஏகாதிபத்தியங்கள் வரை, எல்லோரும் கூடி ஒரு இரகசிய சதியை இந்தியாவில் வைத்து தொடங்கியுள்ளனர். இந்த வகையில் புலிகளின் அழிப்பைத் தொடர்ந்து, ஒரு திடீர் தீர்வு தமிழருக்கு கொடுக்கப்படும்.

இதை இவ்வளவு காலமும் தருவதற்கு புலிகள் தடையாக இருந்ததாக காட்டி, தாம் இதை கொடுப்பதற்காகவே புலிகளுடன் போராடியதா..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சுயநிர்ணயத்தை மறுக்கும் போலி (சி.பி.எம் சந்திப்பு) கம்யூனிஸ்டுகளின் கழுதை அரசியல்

போலி மார்க்சியம் பேசி இந்தியாவின் வர்க்கத் போராட்டத்தை மறுதலித்துவிட்ட போலிகள், இன்று இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை மறுக்கின்றது. இதன் மூலம் இலங்கை பேரினவாதத்துக்கு கொம்பு சீவி உதவும் அதேநேரம், இந்திய மேலாதிக்கவாதிகளின் விஸ்தரிப்பு கொள்கைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றனர். இப்படி இதற்குள் மார்க்சியத்தை விளக்க, மார்க்சிய மேற்கோளைக் கொண்டு, இந்த சி.பி.எம் கழுதைகள் கனைக்கின்றது.

'இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு" என்று 'சந்திப்பு" இணையத்தை நடத்தும் சி.பி.எம் கழுதை கே.செல்வப்பெருமாள், இந்திய வர்க்கப் போராட்டத்தை தாம் எப்படி மறுதலித்தனரோ அதே பாணியில், மார்க்சிய மேற்கோள்களை திரித்து பயன்படுத்துகின்றது. வர்க்கப் போராட்டத்தை தம் சொந்த வர்க்க அரசியலில் மறுத்துவிட்ட பின், இவர்கள் பயன்படுத்தும் மார்க்சிய மேற்கோள்கள் இவர்கள் அளவில் அர்த்தமற்ற போகின்றது. இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணயத்தை மறுக்க பயன்படும் மேற்கோள்கள் கூட, மக்களின் உரிமையை மறுக்க தம் திரிபுக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.

இந்த சி.பி.எம் கழுதைகள் 'இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு" என்ற பெயரில் 'மாநில சுயாட்சியை வழங்கிடவும்" என்று கனைக்கின்றது. இந்த கழுதைக்கு.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, February 8, 2009

"வன்னி மக்ககளை மீட்கின்ற அரசும்"! "வன்னி மக்களைக் காக்கிற புலிகளும்"

என்னடா கொடுமை இது? சோத்துப் பருக்கைகளைக் கூட பெற நாதியற்ற யுத்தத்தை நடத்திக் கொண்டும், அதற்குள்ளே வன்னி மக்களை இருத்திக் கொண்டும் இலங்கை மக்கள் எல்லோரையும் ஏமாந்த சோணகிரியாக்கி வருகிறார்கள். "வன்னி மக்ககளை மீட்கின்ற அரசும்"! "வன்னி மக்களைக் காக்கிற புலிகளும்"! மெண்டு.

உலக உணவுத் திட்டத்தினர் உணவுகளை வன்னிக்குள் கொண்டு செல்ல முடியாமல் திண்டாடுகிறார்கள். இந்நிலையில, வன்னிக்குள் அவர்களைக் கூட்டிச் சென்று வருவதற்கான முயற்சியை தமிழ் கூட்டமைப்பினர் ஏன் முயலக் கூடாது? பட்டினிச் சாவுக்குள்ளும் அம்மக்கள் சிக்கி தவிக்காத படி உடனடியாகவே புலிகள் அம்மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி விட வேண்டு மென்றும் ஏன் கோரக் கூடாது? ஏன் புலம்பெயர் தமிழர்கள் இந்த விடயத்தில் அருளாமல் இருந்து வாருகிறார்கள். "யுத்தத்தை நிறுத்து, யுத்தத்தை நிறுத்து" என்று மூக்காலே சிந்துவதைத் தவிர, நாவில எதுவும் எழாதோ?

அது எப்படி நடக்கும். தனி ஒரு மனிதனில் நம்பிக்கை வைத்து தமிழீழ யுத்தத்தை நடத்துவதும், அது போல தனிமனிதர்களில் -வெளிநாட்டவரில்- நம்பிக்கை வைத்து யுத்தத்தை நிறுத்தக் கோருவதும் தமிழ் அதிசயப்பிறவிகள் காலங்காலமாக நடத்தி .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழரினுரிமை ஊடாக அரங்கேறவுள்ள அரசியல் பிழைப்புத்தனம்


கருணாநிதி முதல் இலங்கை அரசு வரை போற்றப்படவும், புலிகள் தூற்றப்படவும் கூடிய நிலைமை, இந்த சமூக அமைப்பில் ஏற்படும். இந்த வகையில் ஓரு சதி அரங்கேறுகின்றது.

தமிழரின் உரிமையின் பெயரில் இலங்கை, இந்தியா, நோர்வே முதல் ஏகாதிபத்தியங்கள் வரை, எல்லோரும் கூடி ஒரு இரகசிய சதியை இந்தியாவில் வைத்து தொடங்கியுள்ளனர். இந்த வகையில் புலிகளின் அழிப்பைத் தொடர்ந்து, ஒரு திடீர் தீர்வு தமிழருக்கு கொடுக்கப்படும்.

இதை இவ்வளவு காலமும் தருவதற்கு புலிகள் தடையாக இருந்ததாக காட்டி, தாம் இதை கொடுப்பதற்காகவே புலிகளுடன் போராடியதாக கூறுவர். இதன் மூலம் தமக்கு எதிரான முந்தைய நிலையை மறுக்க இது உதவும். இப்படி தி.மு.க முதல் இலங்கை ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலியல்லாத அரசியல் வெற்றிடமும் பாசிசம்தான்

புலியொழிப்பு ஊடாக, இலங்கை பாசிசத்தையே வெளிப்படையாக தெரிவுசெய்கின்றது. அந்த பாசிசம் தமிழின அழிப்பாக மகுடம் சூட்டுகின்றது. கோத்தபாய வார்த்தையில் சொன்னால், தாம் அல்லாத அனைத்தும் புலி. அதாவது இரண்டு விடையம் தான் இருக்கமுடியும்; என்றான்.

ஓன்று புலிக்கு ஆதரவு. மற்றது புலி அழிப்புக்கு ஆதரவு. மற்றும்படி கருத்து எழுத்து சுதந்திரம் என்பது, சமூகத்துக்கு கிடையாது. இதைத்தான் இந்த அமெரிக்கா பாசிட் அறிவித்துள்ளான். இப்படி ஒன்று புலி அல்லது புலியை அழிக்கும் தாம் மட்டுமே இருக்க முடியும். இதுவல்லாத அனைத்துக்கும் இந்த நாட்டில் இடமில்லை என்றான்.

இந்த பாசிசத்தைத் தான், புலி சொன்னது, செய்தது. இன்று அதையே வெளிப்படையாக மகிந்தாவின் தம்பியும், யுத்தத்தை நடத்தும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவும் கூறுகிறான். இன்று நடைபெறும் காணாமல் போதல்கள், கடத்தல்கள், இனம் தெரியாத படுகொலைகள்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Saturday, February 7, 2009

புலிகளைக் காப்பாற்றும் பேராசைகளால், வன்னி மக்களின் இரத்த சகதிக்குள் ...

தமிழ் மக்களைக் காக்க வக்கற்ற `சோளக்காட்டு பொம்மை` அரசியல், இதே ஐரோப்பிய நகரங்களில் `பொங்கு தமிழாக` யுத்தப் பிரடணம் செய்து விட்டு இன்று யுத்த நிறுத்தத்தைக் கோருகிறது. இன்றைய உலக ஒழுங்குக்கான நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ள முடியாத நெருப்புக் கோழிகளாகத் தலைகளைப் புதைத்த புலம் பெயர் தமிழர்கள், புலிகளைக் காப்பாற்றும் பேராசைகளால், வன்னி மக்களின் இரத்த சகதிக்குள் தம் தலைகளை அறியாமல் புதைப்பதை தீவிரப்படுத்துகிறது.

உலகமே சுற்றி நின்று புலிகள் மீது போர் தொடுப்பதாகக் கூறுகின்ற இவர்களே அவர்களிடம் கருணை மனுக்களைக் கொடுக்கின்ற பரிதாப நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளனர். சுட்டுவிரலை நீட்டி இந் உலகத்திடம் தமிழ் மக்களின் தார்மீக உரிமைகளைக் கோர முடியாத புலிகள், தம் கைவிரல்களுக்குள்ளேயே தமது கதையை மெளனமாக எண்ணத் தொடங்கி விட்டனர்.

புலிகளின் கைகளில் மாட்டியிருக்கும் வன்னி மக்கள் - அவர்களின் வெளியேற்றத்துக்கான மறுப்பு, சிங்கள பெளத்த இனவாதிகளின் இன
......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, February 6, 2009

அர்த்ததமற்றுப் போகும் போராட்டங்கள்


புலிகள் தம் தற்காப்பை, தம் இருப்பை தம் சொந்தப் போராட்டம் மூலம் அணுக வேண்டும். அவர்கள் தம் சொந்த வழியில் இதற்கு விடை காணவேண்டும். அதைச் செய்ய வக்கின்றி, மக்களை பணயம் வைத்து, அவர்களை கொன்று குவித்து, இதன் மூலம் அரசியல் பேரம் பேச முனைவது, அடிமுட்டாள் தனமான பயங்கரவாதத் தற்கொலையாகும்.

இதன் பின்னணியில் புலிகள் நடத்தும், நடத்தவிருக்கும் போராட்டங்கள் புலிப் போராட்டம் போல் ஒரு அடி கூட முன்னேறுவதில்லை. அடிசறுக்கி வீழ்கின்றது. கடந்தகாலத்தில் அரசியல் பேச்சுவார்த்ததையை எப்படி தோற்கடித்து தாம் தோற்றனரோ, அப்படி இந்த போராட்டங்களும் நடக்கின்றது.

மக்களை கொன்று குவிக்கும் காட்சிப் படங்களை காட்டி, தமிழ் மக்களை அணி திரட்டியது போல், உலகத்தை அணி திரட்ட முடிவதில்லை............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஈழமக்கள் மேல் மலம் கழிக்கும் சந்திப்பு :


இந்தக் கழுதை இதை விமர்சிக்க எடுத்துக்கொண்ட அடிப்படையோ, புலிகளின் பாசிசம் தான். இதைத்தான் இலங்கை முதல் ஏகாதிபத்தியம் வரை, தம் சொந்த மேலாதிக்க கனவுக்கு பயன்படுத்துகின்றது.

புலிப்; பாசிசத்ததை எதிர்கொள்வது எப்படி? இதை மார்க்சியம் எப்படி அணுகக் கோருகின்றது? அது எம் சொந்த மக்களின் பிரச்சனை. மக்களாகிய நாங்கள் தான், அந்தப் பாசிசத்தை எதிர்கொண்டு போராடி அதை அழிக்க வேண்டும். இதை முதலில் மார்க்சியவாதி அங்கீகரிக்க வேண்டும். இந்த பாசிசம் எங்களுடைய பிரச்சனை. இதைச் சொல்லி இந்தியாவோ, ஏகாதிபத்தியமோ தலையிட முடியாது.

தெளிவாக இதில் இந்தியா தலையிடமுடியாது. அப்படி தலையிட எந்த அதிகாரமும் அதற்கு கிடையாது. அதுவே அத்துமீறல், ஆக்கிரமிப்பு. இப்படி தலையீட்டால், ஆக்கிரமித்தால், அதற்கு எதிராக போராடுவது மார்க்சியர்களின் சர்வதேசியக் கடமை. இதையா நீங்கள் செய்கின்றீர்கள்?

தேசிய சுயநிர்ணய............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, February 5, 2009

ஈழமக்கள் மேல் மலம் கழிக்கும் சந்திப்பு : இந்திய மேலாதிக்கத்துக்கு கம்பளம் விரிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள்


இந்தக் கழுதை இதை விமர்சிக்க எடுத்துக்கொண்ட அடிப்படையோ, புலிகளின் பாசிசம் தான். இதைத்தான் இலங்கை முதல் ஏகாதிபத்தியம் வரை, தம் சொந்த மேலாதிக்க கனவுக்கு பயன்படுத்துகின்றது.

புலிப்; பாசிசத்ததை எதிர்கொள்வது எப்படி? இதை மார்க்சியம் எப்படி அணுகக் கோருகின்றது? அது எம் சொந்த மக்களின் பிரச்சனை. மக்களாகிய நாங்கள் தான், அந்தப் பாசிசத்தை எதிர்கொண்டு போராடி அதை அழிக்க வேண்டும். இதை முதலில் மார்க்சியவாதி அங்கீகரிக்க வேண்டும். இந்த பாசிசம் எங்களுடைய பிரச்சனை. இதைச் சொல்லி இந்தியாவோ, ஏகாதிபத்தியமோ தலையிட முடியாது.

தெளிவாக இதில் இந்தியா தலையிடமுடியாது. அப்படி தலையிட எந்த அதிகாரமும் அதற்கு கிடையாது. அதுவே அத்துமீறல், ஆக்கிரமிப்பு. இப்படி தலையீட்டால், ஆக்கிரமித்தால், அதற்கு எதிராக போராடுவது மார்க்சியர்களின் சர்வதேசியக் கடமை. இதையா நீங்கள் ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?

இலங்கையில் யுத்த பிரதேசமல்லாத இடங்களில் வாழும் இருபது லட்சம் தமிழர்களும், மிக அமைதியாகவே தாமும் தம்பாடுமாக வாழ்கின்றனர். இதற்குள் யுத்த பூமியில் சிக்கியுள்ள தம் உறவினர்களுக்காக ஏங்கும் ஒரு பிரிவினரும், இனம் காணப்பட்டவர்கள் காணாமல் போதலைச் சுற்றியும் எழும் பதற்றமும் பரபரப்பும் ஆங்காங்கே வெளிப்படுகின்றது. மற்றும்படி தம் இனம் அழிவதையிட்டு, அக்கறையற்ற வாழ்தலையே, எம் மண்ணில் வாழும் தமிழ் சமூகம் தன் வாழ்வாக தேர்தெடுத்துள்ளனர்.
தம் இனம் மீதான யுத்தம், பேரினவாத கொக்கரிப்புகள் என்று எதையும், சமூகம் எதிர்கொள்ளத் தயாராகவில்லை. புலம்பெயர் சமூகம் மட்டும், இடைக்கிடை புலியைச் சுற்றி உருவெடுத்து ஆடவைக்கப்படுகின்றது. மண்ணில் வாழும் மக்கள் அமைதியாகி, நடைப் பிணமாகிவிட்டனர். பேரினவாதத்தை நக்கும் கண்ட கண்ட நாய்கள், மக்களை மேய்க்;கும் நிலையில் மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலைமை எப்படி உருவானது.

உண்மையில் இதை புலிகள் தான் உருவாக்கினர். தாம் அல்லாத எந்த செயலையும், எம் மண்ணில் உயிர்வாழ அனுமதிக்கவில்லை. மொத்தத்தில் அதை அழித்தன் விளைவு, சமூகம் செயலற்ற தன்மைக்கு சென்றுள்ளது. சமூகத்தில் எதைச் செய்தாலும் புலிகள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற பாசிச சர்வாதிகாரம், அவர்கள் மேலான அழித்தொழிப்பின் போது ..........

தமிழ் மக்களை கொன்றுகுவிக்க ஏகாதிபத்தியம் காட்டும் பச்சைக்கொடி


குறுகிய வட்டம், குறுகிய சிந்தனை, மறைமுக எதிரி பற்றிய நல்லெண்ண பார்வைகள், எல்லாம் இன்றும் புலியூடாக சிந்திக்கின்ற பார்க்கின்ற அவலம். தொடர்ந்தும் மனித அவலத்தை புலிக்கு ஊடாகவே, பார்க்கப்படுகின்ற அவலம்;. இப்படி மனித அழிவிலும், அதை சொல்வதிலும் சுதந்திர மனிதனாக மக்கள் மாறவில்லை.

இருந்த போதும், விடுதலைப் புலிகள் கூவி இனி விடியாது என்பது அனைவருக்கும் தெட்டத் தெளிவாகிவிட்டது. பேரினவாதமோ கொக்கரிக்கின்றது. எம் பரிதாபகரமான நிலையோ, இதுதான். இந்த நிலையில் மக்களை விடுவி அல்லது அனைவரையும் சேர்த்தே கொல்வோம் என்கின்றது சிங்கள பேரினவாதம். அதற்கு மேலாக அங்கே உள்ளவர்கள் அனைவரும் புலிகள் என்று முத்திரை குத்தி, அழிக்கத் தயாராகின்றது பேரினவாத பாசிசம்.

எப்படி, எந்த நிலையில் மக்களை கொல்வது என்பதற்கு பேரினவாதம் நாள் குறிக்கின்றது. இதற்கு துணையாக சிங்கள பேரினவாதத்தை ஏகாதிபத்தியம் கைதூக்கி............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, February 4, 2009

மேற்கு நாட்டு மக்கள் கண்டுகொள்ளாத போராட்டம்


பலர் நம்புகின்றனர் இது ஊடகத்துக்கு வந்துவிட்டால், மேற்கு மக்கள் வீதிகளில் இறங்குவார்கள் என்று. அவர்கள் இதை புரிந்துகொள்வார்கள் என்று. ஏகாதிபத்தியம் கருணை காட்டுமென்று.

தம் கண்ணை குருடாக்கியவர்கள் என்ன நினைக்கின்றனர். தாங்கள் தவறல்ல, தம் செய்கைகள் தவறல்ல, நம் நடத்தைகள் தவறல்ல என்று நம்புகின்றனர். விளைவு மேற்கு மக்கள் பற்றிய அவநம்பிக்கையாகின்றது. அவர்கள் பற்றிய தவறான புரிதல், தனிப்பட புலம்ப வைக்கின்றது. தவறு அவர்களது அல்ல, மாறாக தவறுகளே நீங்கள் தான்.

கடந்த வரலாற்றை மீளத் திரும்பிப் பாருங்கள். நீங்கள் எப்போதாவது, அந்த மக்கள் நடத்திய போராட்டத்துடன் இணைந்து போராடியிருகின்றீர்களா!..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ் மக்களை கொன்றுகுவிக்க ஏகாதிபத்தியம் காட்டும் பச்சைக்கொடி


குறுகிய வட்டம், குறுகிய சிந்தனை, மறைமுக எதிரி பற்றிய நல்லெண்ண பார்வைகள், எல்லாம் இன்றும் புலியூடாக சிந்திக்கின்ற பார்க்கின்ற அவலம். தொடர்ந்தும் மனித அவலத்தை புலிக்கு ஊடாகவே, பார்க்கப்படுகின்ற அவலம்;. இப்படி மனித அழிவிலும், அதை சொல்வதிலும் சுதந்திர மனிதனாக மக்கள் மாறவில்லை.

இருந்த போதும், விடுதலைப் புலிகள் கூவி இனி விடியாது என்பது அனைவருக்கும் தெட்டத் தெளிவாகிவிட்டது. பேரினவாதமோ கொக்கரிக்கின்றது. எம் பரிதாபகரமான நிலையோ, இதுதான். இந்த நிலையில் மக்களை விடுவி அல்லது அனைவரையும் சேர்த்தே கொல்வோம் என்கின்றது சிங்கள பேரினவாதம். அதற்கு மேலாக அங்கே உள்ளவர்கள் அனைவரும் புலிகள் என்று முத்திரை குத்தி, அழிக்கத் தயாராகின்றது பேரினவாத பாசிசம்.

எப்படி, எந்த நிலையில் மக்களை கொல்வது என்பதற்கு பேரினவாதம் நாள் குறிக்கின்றது. இதற்கு துணையாக சிங்கள பேரினவாதத்தை ஏகாதிபத்தியம்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தப்புத் தாளமும்,வழி தவறிய பாதமும்

தமிழ் மக்களைக் காக்க வக்கற்ற `சோளக்காட்டு பொம்மை` அரசியல், இதே ஐரோப்பிய நகரங்களில் `பொங்கு தமிழாக` யுத்தப் பிரடணம் செய்து விட்டு இன்று யுத்த நிறுத்தத்தைக் கோருகிறது. இன்றைய உலக ஒழுங்குக்கான நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ள முடியாத நெருப்புக் கோழிகளாகத் தலைகளைப் புதைத்த புலம் பெயர் தமிழர்கள், புலிகளைக் காப்பாற்றும் பேராசைகளால், வன்னி மக்களின் இரத்த சகதிக்குள் தம் தலைகளை அறியாமல் புதைப்பதை தீவிரப்படுத்துகிறது.

உலகமே சுற்றி நின்று புலிகள் மீது போர் தொடுப்பதாகக் கூறுகின்ற இவர்களே அவர்களிடம் கருணை மனுக்களைக் கொடுக்கின்ற பரிதாப நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளனர். சுட்டுவிரலை நீட்டி இந் உலகத்திடம் தமிழ் மக்களின் தார்மீக உரிமைகளைக் கோர முடியாத புலிகள், தம் கைவிரல்களுக்குள்ளேயே தமது கதையை மெளனமாக எண்ணத் தொடங்கி விட்டனர்.

புலிகளின் கைகளில் மாட்டியிருக்கும் வன்னி மக்கள் - அவர்களின் வெளியேற்றத்துக்கான மறுப்பு, சிங்கள பெளத்த இனவாதிகளின் இன அழிப்புக்கா.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

அப்பாவி மக்களை கொல்லக் கோரும் போராட்டங்கள்

புலிப் போராட்டங்களோ எப்போதும் எதிர்நிலைத்தன்மை வாய்ந்தவை. மக்களின் விடிவிற்கு பதில், துயரத்தை துன்பத்தையும் விதைக்கின்றது. இன்று மக்களின் அவலமும், அவர்கள் படுகொலை செய்யப்படுகின்ற பரிதாபமும்; ஒருபுறம். புலிகள் தாம் தப்பிப்பிழைக்க இதை மக்கள் மேல் திணிக்கின்றனர்.
மறுபக்கத்தில் பேரினவாதம் கொக்கரிக்கின்றது, மக்களை விடுவி அல்லது உன்னுடன் சேர்த்து மக்களையும் கொல்வேன் என்கின்றது. மக்களுக்காக தான் தாங்கள் போராடுவதாக கூறுபவர்கள் என்ன சொல்கின்றனர், யுத்தத்தை நிறுத்து என்று கூறி வீதிகளில் இறங்குகின்றனர். அவன் நிறுத்தமாட்டான் என்பது இன்று அறிவுபூர்வமாக தெளிவாகியுள்ளது.

இல்லை நிறுத்துவான் என்ற உங்கள் நம்பிக்கைக்கு புறம்பாக, யுத்தத்தைத் நிறுத்தாவிட்டால், என்ன செய்வது!? அங்கு சிக்கியுள்ள மக்களையும்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, February 3, 2009

விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்


இன்று பலரும் மேக்கப் செய்து உங்களை பாதுகாத்து விடலாம் என்று நினைக்கின்றனர். ஏன் அப்படி முனைகின்றனரும் கூட. அது இனி சாத்திமில்லை என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். ஏன் இந்த நிலைமை? எதனால் இது நடந்தது? தற்போதாவது உங்கள் மீதான அழித்தொழிப்பு நிகழும் கணத்தில் கூட, உங்களால் வரலாற்றுக்கு சொல்ல கூடிய, தவறுகளை திருத்தக் கூடிய இறுதிச் சந்தர்ப்பங்கள் இன்னமும் உண்டு.

நாம் கடந்த மூன்று சகாப்தமும் உங்களுடன் ஒரு எதிர் போராட்டத்தை நடத்தியவர்கள். நாம் கோரியது எல்லாம், போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும்படிதான். இன்றும் அதைத்தான், இந்த கணத்திலும் நாம் கோருகின்றோம்.

வரலாறு உங்க...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்


இன்று பலரும் மேக்கப் செய்து உங்களை பாதுகாத்து விடலாம் என்று நினைக்கின்றனர். ஏன் அப்படி முனைகின்றனரும் கூட. அது இனி சாத்திமில்லை என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். ஏன் இந்த நிலைமை? எதனால் இது நடந்தது? தற்போதாவது உங்கள் மீதான அழித்தொழிப்பு நிகழும் கணத்தில் கூட, உங்களால் வரலாற்றுக்கு சொல்ல கூடிய, தவறுகளை திருத்தக் கூடிய இறுதிச் சந்தர்ப்பங்கள் இன்னமும் உண்டு.

நாம் கடந்த மூன்று சகாப்தமும் உங்களுடன் ஒரு எதிர் போராட்டத்தை நடத்தியவர்கள். நாம் கோரியது எல்லாம், போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும்படிதான். இன்றும் அதைத்தான், இந்த கணத்திலும் நாம் கோருகின்றோம்.

வரலாறு உங்களை தூற்றக் கூடாது. இன்று உங்களைப் போற்றுபவர்கள் தான், நாளை உங்களை முதன்மையாக தூற்றுவார்கள். அப்போது ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா…

கேள்வி: தமிழீயத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பைநீங்கள் கருதுகிறீர்கள்?

பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும்.மேலும் மக்களால்
ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சிமட்டும் அங்கிருக்கும்.
நான் பலகட்சி ஜனநாயகத்துக்குஎதிரானவன்.
அந்த ஒரு கட்சி ஆட்சி மூலமாகத்தான் ஈழத்தைதுரிதமாக நாங்கள் முன்னேற்ற
முடியும். ஒரு சோசலிசஅமைப்பில் மக்களுடைய தேவைகள் மிக முக்கியமானவை.

கேள்வி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை வைத்திருப்பீர்களா?

பிரபாகரன்: இல்லை..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, February 2, 2009

தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் போராட்டம்

வன்னி மக்களின் அவலம், அவர்கள் எதிர் கொள்கின்ற உணர்வுகளில் ஒரு சிறு துளியை பகிர்ந்து கொள்ளும் உணர்வுகளுடன், பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். புலிகள் தாம் ஏற்படுத்திய மனித அவலத்தை, தம் பாசிச வலையமைப்பு ஊடாகவே, மக்களுக்கு இந்த உணர்வுகளை கொடுத்துள்ளனர். ஆனால் அது அவர்களுக்கு எதிராக மாறிவருகின்றது.

இந்த மனித அவலத்தில் இருந்து வன்னிமக்களை மீட்க முடியாது என்ற தெளிவும், அது சார்ந்த பட்டறிவும், உணர்வாகி மக்களை புலிகள் விடுவிக்க கோரும் உணர்வாக புலிக்கு எதிராக மாறிவருகின்றது.

மக்களின் அவலத்தை பார்த்து போராடச் சென்றவர்கள், புலிகளுமல்ல, புலியிசத்தை ஏற்றுக் கொண்டவர்களுமல்ல. மாறாக புலிகள் தம் பிரச்சாரத்துக்காக உருவாக்கியுள்ள மனித அவலத்தை பார்த்து, அதற்கு எதிரான உணர்வுகளுடன் ஈடுபடுகின்றனர்.

காலகாலமாக சிங்கள பேரினவாதம் கையாண்டு வந்த தமிழின அழித்தொழிப்பு, அது கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறியாட்டங்கள்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்

ஒரு கடைந்தெடுத்த வலதுசாரிய பாசிச புலிகளுக்கும் சிங்கள பேரினவாத போர்வெறியர்களுக்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுக்கும் இரத்தப்பலியாகிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் மேலான எல்லா அடக்குமுறைகளும் கொன்றழிப்புகளும் இன்றல்ல நேற்றல்ல ஆரம்பம்.
இதுவே நாங்கள் வாழ்ந்த வாழும் சூழல்.

இந்திய இராணுவ நடவடிக்கையின் போது :
- சிதறிக்கிடந்த அப்பாவி பொதுமக்களின் பிணங்களை தெருநாய்கள் குதறுவதிலிருந்து மீட்டெடுத்த வேளை.

- புலிகளுக்கு எதிரான (தமிழ்மக்களுக்கு) கண்மண் தெரியாத எறிகணைத்தாக்குதலில் குற்றுயிரும் குலையுயிருமாய் சதைக் குன்றுகளாய் கை கால் அவயவங்கள் சிதைக்கப்பட்டு ஊனப்பட்டு எழுந்து நகரமுடியாதபடி இரத்தக் காயங்களுடன் புழுதியில் அழுந்திக் கிடந்த குழந்தைகளை பெண்களை முதியவர்களை இளைஞர்களை மழையாய் பொழிந்த துப்பாக்கிச் சன்னங்களுக்கிடையில் அப்புறப்படுத்திய பின்னாலும் தகுந்த மருத்துவ வசதியின்றி அவர்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையிலிருந்த வேளை.

- மீட்கப்பட்டவர்கள் உயிர் ஊசலாடியபடி கண்முன்னே அவர்கள் கிடந்து மரணித்துப் போனவேளை அவர்களின் கைகளை வெறுமனே பற்றிக் கொண்டு உடனிருப்பதைப் தவிர காப்பாற்றும் மார்க்கங்கள் யாவும் அடைபட்டிருந்த வேளை.

-திலீபன் என்ற உண்ணாநிலைப் போராளி இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கெதிராய் உயிர்ப்பலியான வேளை.

-ஒரு அந்திய இராணுவமாய் இந்திய “அமைதிப்படை” வந்து அழிக்கும் படையாய் தமிழ் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட போது, வீடுவீடாய் உருவாக்கிய இழவுகளும் செய்த அட்டூழியங்களும் பாலியல் கொடுமைகளும் கட்டுக்கடங்காது போன வேளை..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, February 1, 2009

சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?


நீ தமிழன் என்றால், பாசிச புலியை ஆதரி என்று மிரட்டப்படுகின்றோம். இல்லையென்றால், பேரினவாத கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றோம். சர்வதேசியத்தை கைவிட்டு, வர்க்கம் கடந்த தமிழனாக மாறி புலிப் பாசிசத்தை ஆதரிக்க மறுக்கும் நாம், தமிழ்நாட்டு சர்வதேசியவாதிகளிடம் இருந்து எமக்கான ஊக்கத்தை எதிர்பார்த்தோம். ஆனால் அங்கிருந்து அவை வெளிப்படுவதற்கு பதில்;, தமிழன் என்ற அடையாள உணர்வூடாக புலியை விமர்சிக்காத கருத்துக்களாக வெளிவருகின்றது. எமக்கோ கிடைப்பது நெத்தியடிதான்.

இன்றைய நிலைக்கு வலதுசாரிய பாசிசப் புலிகள் காரணம் என்பதும், அவர்கள் தம் தோல்வியை தடுக்க மக்களை பணயமாக வைத்து பலியிடுகின்றனர் என்பதும் வெளிப்படையான உண்மை.

இது இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரமோ, இந்திய ஆளும் வர்க்கங்கள் முதல் பார்ப்பனியம் வரை இட்டுக்கட்டியவையல்ல. அ..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

அன்று உண்ட நஞ்சும், இன்று மூண்ட தீயும்...

அன்று சிவகுமாரன் உண்ட நஞ்சு, அவன் கையில் இருந்த ஆயுதம் அவன் மனதில் இருந்த உறுதியான போராட்ட உணர்வு இவைகள் அனைத்தையும் மீறி அவனை மரணத்துக்குத் தள்ளியது. அவன் அன்று எடுத்த எடுப்பில் தனது உயிரை மாய்த்து

விடவில்லை. அவன் உண்ட நஞ்சு கூட ஒரு நொடிப் பொழுதில் தன்னை அழித்துவிடும் நஞ்சாகக் கூட அது இருந்திருக்கவில்லை!

சிறையும் வீடுமான அவனது போராட்ட வாழ்கை, அன்றைய மிதவாதத் தமிழ்த் தலைமைகளின் மீதான வெறுப்பு ஒர் ஆயுதப் போராட்டத்துக்கான அவசர வருகையாகவே அது இருந்தது. அவன் மரணப்படுக்கையில் இருந்த போது கூட, அவனது உயிர் மீண்டு வருவதற்கான மாற்று மருந்துகளும் அவனுக்கு அருகிலேயே இருந்தன. ஆனால் அவன் சந்தோசமாக தமிழ் மண்ணுக்காக இறந்து போவதையே விரும்பினான்.

அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதால், சிறையிலிருந்தும், சித்திரவதைகளிலிருந்தும் தான் மீண்டு வர முடியாதென்றும், இனித் தன்னால் இந்த மக்களுக்காக போராடுவதற்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் இந்த அரசு விட்டுவைக்காது என்பதையும் உணர்ந்தான். அதனால் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்தத் தமிழ் மக்களுக்காகக் கொடுத்து.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பாரதி இன்றிருந்தால்…

சிங்களத் தீவினிற்கோர்
பாலமைப்போம் - என்ற
என்
நடபுப்பாலம்
மக்களை ஆக்கிரமிக்கும்
பாலமானதடி கிளியே!


மன்னனும் நானே
மக்களும் நானே
கண்ணனும் நானே
போரிடவும் –
போராட வைப்பவரும்
நாமேயென.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மனித அவலத்தை நிறுத்த, யுத்தம் நிறுத்தம் ஒரு தீர்வா!? அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா!?


மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால், அரசு மற்றும் புலியல்லாத ஒரு சூனியப்பிரதேசத்துக்குள் மக்களைச் செல்ல அனுமதிக்க வேண்டும். இது மட்டும்தான் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றும்.

இதைக் கோராத வரை, இதை நடைமுறைப்படுத்தாத வரை, புலி பலிகொடுப்பவராக, அரசு பலியெடுப்பவராக மாறி இரத்த ஆற்றில் அரசியல் செய்வார்கள். அதைத்தான் இன்று செய்கின்றனர்.

எதார்த்தம் ஒன்றாக இருக்க வேறு ஒன்றாக அதைப் புரிந்துகொள்வது, யுத்த நிறுத்தத்தை கோருவதாக உள்ளது. இது மனித அழிவை நடைமுறைப்படுத்துவதாக மாறுகின்றது. 60 வருடங்களுக்கு மேலாக பேரினவாதம் தமிழினத்தை அழித்துவருகின்றது. அதனிடம் மக்களை பலியிட அனுமதிப்பது ஏன்?! இது எப்படி சரியாகும்;. சரி புலிகள் கூறுவது போல், மக்கள் புலிகளுடன் நிற்பதாக வைப்போம். அதற்காக அவர்க...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Saturday, January 31, 2009

தமிழினத்தை ஒடுக்கி வாழ்பவர்களிடமிருந்து, மக்கள் விடுவிக்கப்பட்ட வேண்டும்

தமிழினத்துகாக உணர்வுபூர்வமாக குரல்கொடுப்போர் கிடையாது. புலிக்காக தமிழினத்ததை உச்சரிக்கின்றவர்கள், தமிழினத்தின் மேல் அழிவுகளை ஏற்படுத்தி அதைக் காட்டியே அரசியல் செய்கின்றனர். இந்த புலியின் ஈனச் செயலைக்காட்டியே, பேரினவாதம் தமிழ் மக்களை மீட்கப்போவதாக கூறி குண்டுகளை தமிழ் மக்கள் மேல் சரமாரியாக பொழிகின்றது.

எப்படி தமிழினத்தை அழிப்பது என்பதில் மட்டும் தான், தமிழினத்ததை ஓடுக்கிவாழும் சிங்கள தமிழ் வலதுசாரி பாசிசக் கும்பல்களுக்குள் முரண்பாடு. அப்பாவி மக்கள் இவர்களுக்கு இடையில் சிக்கிகிடப்பதையும், அவர்கள் பலியாடுகளாக பலியிடப்படுவதையும் மூடிமறைக்கும் உணாச்சியூட்டல்கள். பாதிக்கப்படும் மக்களின் உண்மை நிலையை எதிர்கொண்டு போராட மறுப்பதன் மூலம், பலியிடல் என்பது அரசியல் நிகழ்ச்சியாகின்றது. உண்மையில் மக்களை பலியிடல் என்பது, போராட்டத்தின் உள்ளடகத்தில் ஊக்கம் பெறுகின்றது. அதுவோ அரசியல் ரீதியாக அங்கீகாரம் பெறுகின்றது. இதற்கு எதிராக, யுத்த முனையில் இருந்து மக்களை விடுவிக்க கோரி போராடுவது துரோகமாக முத்திரை குத்தப்படுகின்றது. மக்கள் கொல்லப்படுவதும், கொல்ல வைப்பதும் அரசியலாகிவிட்டது. இதைப்பற்றி இதற்குள் பேசுவதும் மனிதாபிமான விடையமாகிவிட்டது. இதை அலை அலையாக கட்டமைக்கும் பிரச்சாரங்கள், உணர்ச்சியூட்டல்கள் மூலம்........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

முத்துக்குமாரன் தற்கொலையும், தனிநபர் பயங்கரவாதமும்

இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்று திட்டமிட்ட வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது. இரண்டாவது உணர்வுகளின் அடிப்படையில் தற்செயலானது. இவை இரண்டும், அரசியல் ரீதியாகவே தற்கொலைதான்.

புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுஎதான் வழிகாட்டியுள்ளது. மக்கள் விடுதலைக்கு வழிகாட்டாத புலிப்போராட்டமோ, தற்கொலையை தேர்ந்தெடுத்தது. அதையே தன் தோல்வியிலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றது.

சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அவர்களைச் சார்ந்து போராட முடியாது போன நிலையில் தான், புலியிசம் மனித அவலத்தை தன் அரசியலாக உற்பத்தி செய்கின்றது. இதேபோன்று, தமிழ்நாட்டு போலி தமிழ் தேசிய உணர்வாளர்களில் நம்பிக்கை இழந்து, தனிமனித தற்கொலை மூலம் தனிமனிதர்கள் தீர்வை நாடுகின்றனர். அது அனுதாப அலையாக மாறி வடிகின்றது. இப்படி இவை தனித்தனி அவலமாக வெடிக்கின்றது.

சமூகத்தை அணிதிரட்டி அவர்கள் போராடுவதன் மூலம் தான், எதையும் சாதிக்க முடியும் என்ற அடிப்படையான விடையத்தை நிராகரித்து, தனிமனிதன் தன்னைத்தா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, January 30, 2009

பிரச்சாரத்துக்காக தமிழ்மக்களை பலியெடுக்கும் புலியிசம்

மக்கள் விரோத யுத்தத்தை நடத்திய புலிகளின் பிடியில் சிக்கியுள்ள ஒவ்வொருவரும் பலியாடுகள்தான். அவர்கள் தம் சுயநலத்துடன் மக்களைப் பலியிட்டு, அதையே தம் அரசியலாக பிரச்சாரம் செய்கின்றனர். இதைவிட புலியிடம் மாற்று அரசியல் கிடையாது. தம் மீதான அழிவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள, இராணுவ அரசியல் வழியேதும் மாற்றாக கிடையாது.
மக்கள் கொல்லப்படுவதன் மூலம், அதைப் பிரச்சாரம் செய்து தம் பாசிச அரசியல் இராணுவ இருப்பை தக்கவைக்க முனைகின்றனர். இந்த எல்லைக்குள் தான், மனித அவலங்களை புலிகள் அரங்கேற்றுகின்றனர்.

இந்த வகையில் இரண்டு மக்கள் விரோத இராணுவங்களினால், பரஸ்பரம் தம் வக்கிர உணர்வுடன் மக்கள் பலியிடப்படுகின்றனர். மக்களையிட்ட எந்த அக்கறையும் கிடையாது. மக்கள் தம் மீதான இந்த யுத்தத்தை வெறுத்து வாழ்கின்றனர். மக்கள் இதன் மேல்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தயவு செய்து அவர்களைப் போக விடுங்கள். காலில் விழுந்து மன்றாடுகிறேன்....

"பொதுமக்களை வெளியேற்ற 48 மணி நேர கெடு!
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 05:46.46 PM GMT +05:30 ]
இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், அடுத்த நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளப்போவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், 'இந்த கால அவகாசத்துக்குள் விடுதலைப்புலிகள், பொதுமக்களை தங்களது இடத்திற்கு திரும்பி அனுப்பிவிட வேண்டும். என்று ராஜபக்சே கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த போர் நிறுத்தம் இலங்கை அரசின் போர் தந்திரம். பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு திரும்ப கால அவகாசம் தருகிறோம் என்று உலகில் நல்ல மதிப்பைப் பெற்றுவிட்டு 48 மணி நேரத்திற்கு பிறகு கடும் தாக்குதல் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
-தமிழ்வின்"
"புலியிச"த்தை அடிப்படையாகக்கொண்ட ஈழவிடுதலைப்போரின் படுதோல்வியின் இறுதிக்கட்டத்தில் புலியிசத்தின் பெயரால் கொள்ளை கொள்ளையாக தமது உயிர்களை மாய்த்து அழிந்துகொண்டிருக்கும் போராளி இளைஞர்களின் அவலம் ஒருபுறமாய்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, January 29, 2009

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்…

இர‌ண்டு இராணுவ‌ங்க‌ளுக்கு இடையில் - த‌மிழில்: டிசே த‌மிழ‌ன்


"வ‌ன்னியிலுள்ள‌ இலுப்பைக்க‌ட‌வையில் என‌து வீடு இருக்கிற‌து. தை இர‌ண்டாந்திக‌தி, 2007 காலை ஒன்ப‌து மணிக்கு கிபீர் (இல‌ங்கை விமான‌ப்ப‌டையின் ஜெட்ஸ்) வ‌ந்த‌ன‌. அவை எங்க‌ள் கிராம‌த்தில் குண்டுக‌ளை வீசின‌, நில‌ம் அதிர்ந்துகொண்டிருக்க‌, குண்டின் சித‌ற‌ல்க‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ற‌க்க‌த்தொட‌ங்கின‌. ப‌ல‌ ம‌க்க‌ளுக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌து போல‌வே நானும் காய‌ப்ப‌ட்டேன். இவ்வாறே நான் என‌து காலை இழ‌ந்தேன்."ஸ்ரெல்லா, செந்த‌ளிர்ப்பான‌ முக‌மும் வனப்புமுள்ள 13 வ‌ய‌துடைய‌வ‌ள். நான் அவ‌ளை ஆவ‌ணி 05, 2008ல் ம‌ணிய‌ங்குள‌த்தில் ச‌ந்தித்தேன்; இல‌ங்கை வ‌ட‌க்கிலுள்ள‌ வ‌ன்னியில் இருக்கும் ம‌ணிய‌ங்குள‌ம் கிராம‌ம், அவ்வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌ம் வ‌ரை த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டிலிருந்த‌து. ஸ்ரெல்லா அவ‌ள‌து வாழ்வின் முக்கிய‌ க‌ட்ட‌த்திலிருந்தாள், அவ‌ள‌து ம‌ன‌மும்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

காந்தியின் அரிஜன ஏடு அம்பலப்படுத்தும் காங்கிரசின் கோகோ கோலா!


1950 பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராகப் போராட்டம் நடத்தி அடிமைத் தளையறுத்து, இந்தியக் குடிமக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்கான அரசியல் சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டதாகப் பெருமையுடன் நினைவு கூறப்படும் ஆண்டு. இதே ஆண்டில்தான் அமெரிக்க அடிமைத்தனத்தின் திரவ வடிவமான கோகோ கோலாவும் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1977இல் வெளியேற்றப்பட்டு 1993இல் நரசிம்மராவ் அரசியல் புத்தம்புது காப்பியாக மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட கோக், பெப்சி பானங்கள் இன்று இந்தியச் சந்தை முழுவதையும் அநேகமாகக் கைப்பற்றி விட்டன.
2004ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இக்குளிர்பானங்களின் ஆண்டு விற்பனை 400 கோடி லிட்டர்கள். அதாவது, 2000 கோடி பாட்டில்கள்.
எனினும் உலகத்தரத்தை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாம். ஆண்டொன்றுக்கு ஒரு அமெரிக்க குடிமகன் சராசரியாக 800 கோலா பாட்டில்களைக் காலி செய்வதாகவும் இந்தியர்கள் இவ்விசயத்தில் மிகவும் தங்கியிருப்பதாகவும் வருந்துகிறார்கள் கோக் அதிகாரிகள்.
இந்த இலட்சியத்தை எட்டும் பொருட்டுத்தான் தாமிரவருணியை கோக்கிற்கு தாரை வார்த்திருப்பதுடன்,நெல்லை மாவட்டம் முழுவதிலும் கோக் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குத் தடையும் விதித்திருக்கிறது போலீசு. இந்தியாவைக் கோலா குடியரசாக்கும் இந்த இலட்சியத்தில் அதிமுக., காங். உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. இந்நிலை திடீரெனத் தோன்றவில்லை. இந்தப் பரிணாம வளர்ச்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது.
1950இல் கோகோ கோலா இந்தியாவில் காலடி எடுத்து வைத்தவுடனேயே காந்தியால் தொடங்கப்பட்ட அரிஜன் பத்திரிகையில் அதற்கெதிரான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றின் சுருக்கத்தைக் கீழே தருகிறோம்.
அரிஜன் நவம்பர் 4, 1950 இதழில்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, January 28, 2009

இரத்த நிலமாகி வரும் , வன்னி

இன்று வன்னி மக்களின் சோகம் சொல்லி அடங்காது. புலிகள் தமது ஆயுதங்களையும், ஆயுதத் தள பாடங்களையும் பொன்னாக நம்பி பாதுகாத்து வருகிறார்களே தவிர, தமது இரத்த சொந்தங்களான வன்னி மக்களை ஒரு சுண்ணாம்புக் கட்டியிலும் கேவலமான பொருளாகவே கைவிட்டுள்ளனர்.

அரசோ, தனது சிங்கள பெளத்த இன வெறி அடையாள யுத்தத்தை, அபிவிருத்தி என்னும் பேரில் மடைதிறந்து பாயப்போகும் முற்றுகைப் பொருளாதாரத்துக்கான- விளை நிலத்துக்கான- யுத்தத்தை வெறும் சிறிய கோடாக மூடி மறைத்து விட, புலிகளை அப்புறப் படுத்தும் யுத்தத்தை பெரிய கோடாக அதன் மீதே கீறிவிட்டு, மீட்பு யுத்தமென துார்த்து மெழுக நினைக்கிறது. இதற்கு புலிகளின் போசக்கற்ற அரசியல் துணை போவது அசப்பில் தெரிகிறது.

வன்னியின் வீதியில் வாழும் மக்களின் நிழலுக்குள்ளேயே வந்து குந்தியிருக்கும் சாவின் கொடுமையை, அவர்கள் சிந்தி வரும் இரத்தச் சகதியை இவர்கள் தத்தமது இருப்புக்கான மேச்சலாக்கி வரும் கொடுமையை ஜுரணிக்கவே முடியவில்லை.

சதுரங்க ஆட்டமாக ஆடப்படும் இவ் யுத்தத்தில் -பகடைக் காயாக உருட்டப்படும் இம்மக்களின் உயிர் மீதான விளையாட்டு, இந்தத்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, January 27, 2009

ராஜீவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது,..


1983 ஜூலைப் படுகொலைக்குப் பிறகிலிருந்து, குறிப்பாக பாசிச ராஜீவின் மரணத்தின் போது வீச்சான பிரச்சாரத்தில் இருந்தது எமது அமைப்புகள்.
ராஜீவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது, “ராஜீவ் ஒரு முறையல்ல பல முறை கொல்லப்படவேண்டியவன்” என்று துணிவாகப் பிரச்சாரம் செய்தது எமது அமைப்புகள்தான். புலிகளுக்கு ஆதரவாக ‘நட்சத்திர’ அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகள், தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் எல்லாம் எலிகளைப் போல் பொந்துகளில் புகுந்து கொண்டிருந்ததுவும் நிகழ்ந்தது. வேண்டுமானால் உங்கள் அண்ணன் மார்களைக் கேட்டுப் பார்க்கவும். “ராஜீவின் கொலைக்குக் காரணம் தமிழகத்திலிருக்கும் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் அமைப்புகளே….” என்று புலிகள் அமைப்பின் கிட்டு வாய்க்கூசாமல் பேசியதையும், அதனைத் தொடர்ந்து எமது தோழர்கள் கடுமையான வழக்குப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

இன்றைக்கு புலிகளை சாகசவாதிகளாகச் சித்தரித்துப் பேசுவதுதான் சீசனாக இருக்கிறது. அந்த சீசன் அரசியலில்தான் அனைத்து புலியாதரவு அமைப்புகளும் பேசிவருகின்றனர். மகஇக இதுபோன்ற சீசனுக்கு எதிராக இயங்குவதுதான் வழக்கம். புலியரசியலுக்கு துதிபாடாமல் சிங்கள பேரிணவாதத்தைக் கண்டித்தால் புலிகளே அதனை ஏற்றுக் கொள்வதில்லை, நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, January 25, 2009

ஒப்பனை கலையும் "தமிழீழம்"

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மிகவும் பலவீனமானது. காலனித்துவத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மத்திய தர வர்க்கத்தின் தலைமை எவ்வளவு பலவீனமானதோ, அதை விடவும் பல்மடங்கு பலவீனமானது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம். இதை எவ்வளவு ஆயுதங்களைக் கொண்டு வந்து குவித்தும்,கற்பனைக்கு எட்ட முடியாத தீர வீரச் செயல்களைக் கொண்டும் இப் பலவீனங்களை மூடி மறைத்து விடவோ அல்லது சரிக்கட்டி விடவோ யாராலும் முடியாது. இவை எல்லாம் மத்தியதர அறிவுஜீவித்தனத்துக்கு புரியாதது ஒன்றும் உலக அதிசயமான விசயங்கள் அல்ல.

உலகமயமாக்கலும், இலங்கையில் பாசிசமயமாகலும்

இலங்கை கொந்தளிப்பான யுத்த சூழலுக்குள் சிக்கி பாசிசமாக சிதைகின்ற போதும், உலகமயமாதல் அதனூடாகத்தான் அமுலுக்கு வருகின்றது. பயங்கரவாதம் என்ற போர்வையில், ஏகாதிபத்திய அனுசரணையுடன் இலங்கையில் யுத்தம் திணிக்கப்படுகின்றது. இதை பேரினவாதம் புலி ஒழிப்புக் கோசத்தின் கீழ், தமிழின அழிப்பாக நடத்துகின்றது. இதன் மூலம் இலங்கை தழுவிய பாசிசத்தை நிறுவிவருகின்றது. முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, January 23, 2009

விடுதலைப்புலிகள் தவறுகளை உணர்ந்து திருந்தி விட்டார்கள்!?

குமுதம் சஞ்சிகைக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய பேட்டி, தமிழ் மக்களையே கேனப்பயலாக்குகின்றது. விடுதலைப்புலிகள் தவறுகளை எல்லாம் உணர்ந்து திருந்தி விட்டதாக கூறுகின்ற, பிழைப்புத்தனத்தை அம்மணமாக்கிவிட்டது. பலர் புலிகள் திருந்திவிட்டதாக கூறி, தமிழ் மக்களாகிய நாம் எல்லோரும், முஸ்லீம் மக்கள் உள்ளிட புலியின் பின் அணிதிரள்வதுதான் பாக்கி என்கின்றனர்.

தமிழ் மக்களே! முஸ்லீம் மக்களே! வாருங்கள் புலிகளுடன் சேர்ந்து போராட! என்றனர். எம் ஓற்றுமைக்கு தடையாக இருந்தவர்கள் எம்முடன் இல்லை என்றனர். நாங்கள் எந்த தவறும் இழைக்காதவர்கள், இருந்தும் தவறுகளை திருத்திவிட்டோம் என்றனர். இப்படி பிழைப்புவாத பொறுக்கிகளின் வில்லுப்பாட்டு ஒருபுறம்.

புலிகளோ நாங்கள் கடைந்தெடுத்த பாசிட்டுகள் தான் என்பதையும், எந்த உண்மையையும் பொய்யாக பிரச்சாரம் செய்யும் கோய்பல்ஸ்சுகள் தான் என்பதையும், நடேசன் தன் பொலிஸ் மொழியில் அறிவித்துள்ளார். மனிதவிரோதமே எம் சொந்த மொழி. தமிழினம் அழிந்தால் என்ன, செத்தால் என்ன, நாங்கள் மனித விரோதிகளாகவே தொடர்ந்தும் இருப்போம் என்பது புலிகளின் இலட்சிய தாகம்.

ஐயோ தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர், ஆக்கிரமிப்பு யுத்தம், தற்காப்பு யுத்தம், புலிகளை விட்டால் வேறு என்ன செய்ய முடியும், புலிகள் திருந்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இருள் மனிதர்கள்

நடந்து நடந்து இரண்டு பேரும் அய்யனார் கோயிலைத்தான் தாண்டியிருக்கிறார்கள். இன்னும் கரைப் பாதையேறி ஒரு கல் தொலைவு நடந்து கல்வெட்டாங் கிடங்கிற்குள் இறங்கி மேடேறி பனைக்கூட்டம் தாண்டி அப்பண்டு முதலாளி தோட்டங் கடந்து பைபாஸ் ரோடு போக வேண்டும். அங்கிருந்து டவுன் ஆஸ்பத்திரிக்கு குறுக்கும் நெடுக்குமாய் தெருக்களுக்குள் நுழைந்து போனாலும் அந்த தூரம் மட்டும் ஒரு மைல் தாராளமாய் இருக்கும்.

அக்னி நட்சத்திரம் முன்னேழு பின்னேழு முடிந்து ஒரு ஏழுநாள் ஆனபின்னாலும் வெயிலின் உக்கிரம் தீயாய் உடம்பில் விழுந்து எரிந்தது. அறுபதைத் தாண்டிய வயதாகிப் போன பங்கஜத்தம்மாளுக்கு ஈழை நோய் கண்டிருந்தது. முந்திச் சேலையால் தலையை முக்காடிட்டு கூன் விழுந்த உடம்பைத் தாங்கிப் பிடிக்கிற மாதிரி கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அடியை எண்ணி எண்ணி வைத்து நடந்தாள். போய்ச் சேர வேண்டுமே என்ற அந்த நடைதான் அவளுக்கு விரசல்.

நெஞ்செலும்புகளின் இடையில் தோல்படிந்து எண்ணி விடும்படியாக அவை வெளித்தெரிந்தன. இடுப்பில் இருந்த கைகளை இறக்கி இரண்டு தொடைகளிலும் ஊன்றி கரைப்பாதையில் ஏறி பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

தூரத்தில் வந்து கொண்டிருந்த வயித்துப் பிள்ளைச் சூலி முனிச்சிக்கு ரொம்பவும் முடியவில்லை. வாயிலிருந்து நாக்கு லேசாக வெளித்தள்ள கிந்தி கிந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். வெயிலும் தூரமும் வயிறு பருமனும் அவளைக் கிறங்கடித்து விட்டது. முழு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, January 22, 2009

வன்னியில் என்ன நடக்கின்றது!?

பலருக்கும் புரியாத புதிர். அங்கு ஏதாவது அற்புதம் நடக்கும் என்று நம்பும் எல்லையில் கனவுகள்;. ஆயுதங்கள் முதல் விமானம் வரை கொண்டுள்ள புலிகள், மூச்சு விடமுடியாத பாசிச நிர்வாகத்தை அச்சாகக் கொண்டுள்ள புலிகள், இன்று என்ன செய்கின்றனர் எனத் தெரியாது பலர் புலம்புகின்றனர். இந்த எல்லையில் ஆய்வுகள், அறிக்கைகள் வேறு.

1980-1983 இல் போராட்டம் தொடங்கிய போது, 'சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்ற பழமொழியை எமது தந்தைமாரும் ஊரில் வயதானவர்களும் கூறினர். ஆனால் ஆயுதத்தை வழிபட்ட எம் தலைமுறை, அதை எள்ளி நகையாடியாது, இழிவாடியது. அதுவோ இன்று எம் இனத்தையே அழித்துவிட்டது. ஆக்கிரமிப்பு யுத்தம், தற்காப்பு யுத்தம் என்று, என்னதான் தொப்பியை புரட்டிப் போட்டாலும், சொந்த மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியவர்களின் அழிவு அரங்கேறுகின்றது. அவர்கள் தம் அழிவின் போது, மக்களை யுத்தமுனையில் திணித்து கொன்றுவிடுகின்ற அதே அரசியல் வக்கிரமும் அரங்கேறுகின்றது.

கடந்த 30 வருடமாக மணலால் கட்டிய கோட்டையில், ஆயுதத்தைச் செருகி அதையே தமது வழிபாட்டுப் பொருளாக்கினர். எல்லாம் அவன் செயலே என்று நம்புமளவும் வீங்கியவர்கள், செயல்கள் செய்கைகள் மூலம் கற்பனையில் ஒரு விம்பத்தையே உருவாக்கினர். புலித்தேசியம் பாசிசமாக, மக்களின் சுயநிர்ணய உரிமையோ உரிமை மறுப்பாக்கியது. எதுவும் தம்மை மீறியில்லை என்ற அளவுக்கு, முழுச் சமூகத்தையும் அச்சமூட்டி பீதியடைய வைத்தவர்கள், மக்களை செயலற்றவர்களாக்கினர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சி.பி.எம்.அணிகளே, உங்கள் மனசாட்சியையும் பேச விடங்கள்!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் "இடது முன்னணி' யின் முதல் அமைச்சரவையில் (1977–80) நிதி அமைச்சராக இருந்தவர் அசோக் மித்ரா. மைய அரசில் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியுள்ள இவர், "எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி'' போன்ற ஆங்கில ஏடுகளில் கட்டுரைகள் எழுதி வருபவர். சி.பி.எம். கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் அசோக்மித்ரா, நந்திகிராமத்தில் சி.பி.எம். கட்சியின் குண்டர்படையும் போலீசும் நடத்திய கொடூரத் தாக்குதலையடுத்து "ஆனந்தபசார்' பத்திரிக்கையில் (கடந்த 2008 ஏப்ரலில்) எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவத்தைக் கீழே தருகிறோம். நந்திகிராமம் பற்றி காழ்ப்புணர்வோடு நாம் எழுதுவதாக சி.பி.எம். அணியினர் கருதி வரும் வேளையில், அவர்களின் முகாமில் இருந்தே மனசாட்சி உள்ள ஒருவரின் உள்ளக் குமுறல் இது!

கடந்த இரண்டு வாரங்களாக மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராமத்தில் நடந்தவை பற்றி நான் ஏதும் சொல்லாமல் இருந்தேன் என்றால், அது நான் சாகும் வரை எனது மனதைப் பிடித்து உலுக்கிக் கொண்டு இருக்கும்; வேதனையால் துடித்துக் கொண்டு இருந்திருப்பேன். ஒரு காலத்தில் எனது தோழர்களாக இருந்தவர்களுக்கு எதிராக இப்போது நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களின் கட்சியும் அதன் தலைமையும்தான் கடந்த 60 ஆண்டுகளாக எனது ஆதர்சமாகவும் இலட்சியக் கனவின் மையமாகவும் இருந்தன.

Wednesday, January 21, 2009

தமிழீழம் என்ற கோரிக்கை அரசியல் ரீதியாகவே மரணித்துவிட்டது

தமிழ்பேசும் மக்களின் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமலேயே, தமிழீழம் என்ற கோரிக்கை மரணித்துப் போனது. உண்மையில் இந்தக் கோரிக்கை இன்று மண்ணில் வாழ்கின்ற மக்கள் மனங்களில், வெறுப்புக்குரிய ஒன்றாக, மனித அவலத்தை தந்த ஒன்றாக மாறிவிட்டது. இது மக்களை அரவணைத்துச் செல்லவில்லை. நன்மைக்குப் பதில் தீமையையே விதைத்தது.

இது தன்னகத்தே சமூக விரோதத்தை தன் உணர்வுகளாக்கி, அதை ஆதிக்கம் பெற்ற ஒன்றாக்கியதன் மூலம் மக்களின் உரிமைகளையே பறித்தது. மக்கள் தம் உரிமைக்காக ஆதரித்த போராட்டம், அவர்களுக்கு எதிராக மாறியது. இது மக்களின் உரிமைகளையே பறித்தது.

தமிழீழக் கோரிக்கையுடன் புறப்பட்டவர்கள் உள் இயக்கப் படுகொலை, இயக்க அழிப்பு என்று தொடங்கி மொத்த இனத்தையும் தனக்கு எதிராக மாற்றினர். இதன் மூலம், தமிழீழக் கோரிக்கையை அர்த்தமற்றதாக்கினர்.

இந்த தமிழீழக் கோரிக்கை, வெறும் லேபலாக மாறியது. இதன் பின்னணியில் புலிப் பாசிசக் கும்பலாகவும், அதற்கு எதிரான அரச கூலிக் கும்பலாகவும், தமிழீழக் கோரிக்கையுடன் புறப்பட்ட குழுக்களை சிதைவடைய வைத்தது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர், உரிமைகள் எதுவுமற்ற வெறும் கோசமாகியது. 'தேசியம்" புலியின் துப்பாக்கி முனையில், அவர்களின் இருப்பு சார்ந்தாக எஞ்சியது. இது மக்களை அவர்களின் அரசியல் சுயவுரிமைக்காக அணிதிரட்டவில்லை. மாறாக..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஜார்ஜ் புஷ்ஷீக்குச் செருப்படி! அமெரிக்க ஆதிக்கத்தின் மேல் விழுந்த இடி!

டிசம்பர் 14, 2008 நள்ளிரவு நேரத்தை ஈராக்கும், உலகமும் அவ்வளவு எளிதாக மறந்து விடாது. அன்றுதான், ஈராக் மக்களுக்கு "ஜனநாயகத்தை'' வழங்கியிருப்பதாகச் சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ் ஜுனியருக்கு ஈராக் மக்களின் சார்பாக, அந்நாட்டைச் சேர்ந்த முந்தாஸர் அல்ஜெய்தி என்ற பத்திரிகையாளர் செருப்படி கொடுத்தார்.


அல் ஜெய்தி வீசிய செருப்பு புஷ்ஷைத் தாக்காமல் குறித் தவறிச் சென்றிருக்கலாம். ஆனால், அதற்காக யாரும் வருத்தப்படவில்லை. புஷ்ஷை நோக்கி அடிப்பது போல ஒருவரது கை நீண்டிருந்தால்கூட உலகம் மகிழ்ந்திருக்கும். அந்தளவிற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈராக் மக்களாலும், பெரும்பாலான உலக மக்களாலும், ஏன் அமெரிக்க மக்களாலும் வெறுக்கப்படுபவர் என்பது ஊரறிந்த உண்மை.


ஈராக் மக்கள் அல் ஜெய்தியைக் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்கள். அவரை விடுதலை செய்யக் கோரி ஈராக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. பல நாடுகளில் அல் ஜெய்தியின் வீரத்தைப் பாராட்டிக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இன்று இணையதளத்தில் பிரபலமான விளையாட்டு எது தெரியுமா? ஜார்ஜ் புஷ்ஷின் உருவத்தைச் செருப்பால் அடிக்க வேண்டும். விளையாடுபவர் குறி தவறாமல் அடிக்க அடிக்க அவர் பக்கம் புள்ளிகள் ஏறிக்கொண்டே போகும். இவ்விளையாட்டில் வென்றால் "ஆம், உங்களால் முடியும்!'' என்ற பாராட்டு உங்களுக்குக் கிடைக்கும். இந்த செருப்படியை உலகமே கொண்டாடுகிறது என்பதற்கு இவையெல்லாம் சாட்சியங்கள்.


அல் ஜெய்தியின் செயலை நாம் .......................................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, January 19, 2009

கருப்பு ஓபாமாவை வெள்ளை மாளிகை தேர்வு செய்தது ஏன்?

அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இனவேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல், அமெரிக்காவின் கனவை, அதன் முன்னோர்களின் இலட்சியத்தை அந்த இரவின் வெற்றிச் செய்தி உறுதி செய்திருப்பதாக ஒபாமா அந்த மக்களிடத்தில் உரையாற்றினார்.


2004க்கு முன்னர் ஒபாமா என்றால் யாரென்றே பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குத் தெரியாது. 2007இல் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் பலரும் வியப்புடன் பார்த்தனர். கென்யாவைச் சேர்ந்த ஆப்பிரிக்கருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளையினப் பெண்மணிக்கும் பிறந்த ஒபாமா, தனது தாய்வழிப் பாட்டியிடம்தான் வளர்ந்தார். அவ்வகையில் அவர் கருப்பின மக்களின் போராட்டம் நிறைந்த அவல வாழ்க்கையை பெரிய அளவுக்கு உணர்ந்தவர் அல்ல. நல்ல கல்விப் புலமும், பேச்சுத் திறனும் கொண்ட ஒபாமாவுக்கு 90 சதவீதக் கருப்பின மக்களும், வெள்ளையர்களில் ஏறக்குறைய பாதிப்பேரும் வாக்களித்துள்ளனர்.

ஓபாமா ஒரு கானல் நீர்

கொடூரமான வெள்ளை அமெரிக்கா எகாதிபத்தியத்தில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து உலகம் உள்ளது என்பதை, ஓபாமா வெற்றி பற்றிய குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றது. மூன்றாம் உலக நாட்டு மக்கள் முதல் ஏகாதிபத்திய நாட்டு மக்களும் கூட நம்பிகையுடன் ஓபாமாவை பார்க்கின்றனர்!

சிலர் உலகையே ஆளும் கறுப்பு இனத்தவரின் ஆட்சி என்கின்றனர். வேறு சிலர் சிறுபான்மையினத்தவரின் ஆட்சி என்கின்றனர். மற்றும் பலர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்கின்றனர்.

உலகில் ஒரு மாற்றம் வரும் என்று, குடுகுடுப்புக்காரன் மாதிரி பலரும் கருத்துரைக்கின்றனர். ஆளும் வர்க்கம் முதல் ஆளப்படும் வர்க்கம் வரை இந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏகாதிபத்திம் முதல் மூன்;றாம் உலக நாடுகள் வரை இந்த எதிர்பார்ப்பில் மயங்கி நிற்கின்றனர். அனைத்து வர்க்கங்களும் இலகற்ற எதிர்ப்பார்ப்பில், எதோ மாற்றம் வரும் என்று நம்புகின்றனர். உலக ஊடாகவியல் இதற்கு எண்ணை வார்த்து ஊற்றுகின்றது. ஆம் உலகம் மாறப்போகிறது. எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என்கின்றனர்.

ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் ஓ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மக்களின் அறியாமையே ஓபாமாவின் மூலதனம் மட்டுமின்றி வெற்றியும் கூட

அமெரிக்க சமூக அமைப்பை பற்றி மக்களின் அறியாமைதான், ஓபாமா பற்றி பிரமைகளும், நம்பிகைகளும். இது ஏதோ ஒரு மாற்றம் வரும் என்ற எதிர்பார்புகளாகின்றது. மக்களின் செயலற்ற தன்மையும், விழிபற்ற மூடத்தனமும், ஓபாமா மீதான நம்பிக்கையாகின்றது.

இதை ஓபாமா மட்டும் தனது மூலதனமாக்கவில்லை. உலகின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் இதை மூலதனமாக்கி, மக்களின் முட்டாள் தனமான நம்பிக்கை மீது சவாரி செய்கின்றன. ஊடாகங்கள் ஆளும் வர்க்கங்களின் இருப்பு மீதான் நம்பிக்கையை ஊசுப்பேற்றி, மக்களை மேலும் மூடர்களாக்கின்றன. இந்த சமூக அமைப்பில் ஊடாகவியல் என்பது, மக்களின் மூடத்தனத்தையும் அறியாமையும் கட்டமைப்பதுதான்.

இப்படி இவர்களால் வழிபட்டுக்கு உட்படுத்தப்படும் ஓபாமா, இந்த சமூக அமைப்பில் எதைத்தான் மாற்றமுடியும்!?

அமெரிக்கா என்பது, உலகை அடக்கியாளும் ஓரு ஏகாதிபத்தியம். இதுதான் அதன் அடையாளம். இதை ஓபாமா மாற்றிவிடுவரா!? அமெரிக்கா..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்

நாற்பத்து நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகக் களை கட்டியிருக்கும் அமெரிக்காவில் இந்த முறை சுவாரசியம் தருபவர் பாரக் ஒபாமா. குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்ற முடிவு தற்போது வந்துவிட்டது. கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற வகையில் ஒபாமா வென்றால் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கூறுகிறார்கள்.


சற்றே முன்னிலையில் இருப்பதாக மதிப்பிடப்படும் ஒபாமாவை வெள்ளை நிறவெறி அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஹவானாத் தீவைப் பின்புலமாகக் கொண்ட அவர் அமெரிக்கரே இல்லை என்றும், அவரது உறவினர்களில் சிலர் முசுலீம்களாக இருப்பதால் அவரும் முசுலீம் என்றும் பிரச்சாரங்கள் நடக்கின்றன.


மற்றொருபுறம் ஒபாமா நிறுத்தப்பட்டிருப்பதை வைத்து அமெரிக்கா நிறவெறியைக் கடந்து வந்துவிட்டதெனவும், கருப்பின மக்களின் விடுதலையில் மற்றுமொரு மைல்கல் இது எனவும் சிலர் பேசுகிறார்கள். இங்கேயும் முதல் தலித் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், முதல் தலித் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் முதலானவர்கள் நியமிக்கப்பட்டபோது.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சுரண்டிக் குவிக்கும் அமெரிக்காவின் வெம்பிய வடிவத்தை, பாதுகாப்பதுதான் ஓபாமாவின் கடமையாகும்

ஓபாமா தலைகீழாக நின்றாலும், இதை மாற்றமுடியாது. இதைச் செய்வதுதான் ஓபாமாவின் ஜனநாயகக் கடமை. இதைத் தாண்டி ஓபாமா, எதையும் மக்களுக்காக மாற்றப்போவதில்லை. இது இப்படியிருக்க, இனம் தெரியாத மாற்றம் பற்றி நடுதர வர்க்கத்தின் குருட்டு நப்பாசைகள் ஒருபுறம்.

மிகக் குறைந்தபட்சமான சமூக சீர்திருத்தத்தைச் செய்வதாக இருந்தால் கூட, அதற்கு நிதி வேண்டும். இதற்கு செல்வத்தை குவித்து வைத்திருப்பவனிடமிருந்து, செல்வத்தின் ஒருபகுதியை மீளப் பெறவேண்டும்;. அத்துடன் அடிநிலையில் உள்ள எழை எளிய மக்களுக்கு இன்று கிடைப்பது பறிபோகாத வண்ணம் (சுரண்டாத வண்ணம்) முதலில் பாதுகாக்கவேண்டும். அதாவது பணக்காரன் மேலும் பணக்காரணாகாத வண்ணம் தடுத்து நிறுத்தி, அவனிடம் குவிந்துள்ள செல்வத்தின் ஒரு பகுதி எடுத்த மீள எழை எளிய மக்களிடம் கொடுக்கவேண்டும். இதுவே குறைந்தபட்டசமான சமூக சீர்திருத்துக்கான அடிப்படையாகும். சாரம்சத்தில் சுரண்டிக்குவிக்கும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உலக மக்களுக்காக இதையா ஓபாமா மாற்றப்போகின்றார். கேனத்தனமாக பதில் சொல்லாதீர்கள்.

இதை ஓபாமாவால் நிறைவேற்ற முடியுமா எனின், முடியாது. செல்வத்தைக் குவிக்கும் உலகமயமதாலை கைவிட்டுவிடுவரா எனின்,..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

யார் இந்த ஓபாமா?

மக்களை பிரச்சனைகளை தீர்க்கமுனையும் ஒரு அழகிய கறுப்பு முகம். இப்படித்தான் உருவகப்படுத்தப்படுகின்றர். இதன் பின்னால் இருப்பதோ, சூதும் நயவஞ்சகமும் கடத்தனமுமாகும்.

இந்த ஓபாமா எப்படி வழிபாட்டுக்குரியவரானர். மக்களின் அவலம்தான், இதற்கு எதிர்மறையில் பதிலளிக்கின்றது. சமூக அவலம் ஓபாமா மூலம் தீரும் என்ற எதிர்பார்ப்பு, இதில் மண்டிக்கிடக்கின்றது.

உண்மையில் வெள்ளை அமெரிக்காவில் ஒரு கறுப்பன் ஆட்சிக்கு வந்தது என்பது, கறுப்பர்களுக்கு விடிவு காலம் என்ற பிரமை உருவாக்கியுள்ளது. மேற்கு உலகமாகட்டும், அமெரிக்கவாகட்டும், இயல்பாகவே வெள்ளை நிறவெறியின் அடையாளமாகும். வெள்ளை மேலாதிக்கம்தான் உலகம் என்ற அடிப்படைக் கோட்பாடுக்கு எதிரான எதிர்வினைதான், ஓபாமா மீதான வழிபாடாகின்றது. மறுபக்கத்தில் வெள்ளையினவெறி அமெரிக்க எப்படி ஓபாமாவுக்கு வாக்களித்தது. கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்கா..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி! அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல், உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு

அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல், உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் நடத்திவரும் ஈராக் போருக்கு எதிரான அமெரிக்க மக்களின் கருத்தை இத்தேர்தல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா என்பவர், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படவிருப்பதும், அதிபர் தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது.


அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக், ஆப்கன் மீது நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரினாலும்; உள்நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்கள், ஒரு மாற்றத்தை விரும்புவதாகவும்; அம்மாற்றத்தைப் பிரதிபலிப்பவராக ஒபாமா இருப்பதாகவும் பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மேலும், அமெரிக்காவில் வெள்ளை இனவெறி முன்னைப்போல கோலோச்சவில்லை என்பதற்கு பாரக் ஒபாமாவின் தேர்வு எடுப்பான சான்று என்றும் கூறப்படுகிறது.


ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள பாரக் ஒபாமாவை எதிர்த்து, ஜான் மெக்கெய்ன் என்ற வெள்ளை இன கிழட்டு நரியைக் குடியரசுக் கட்சி களத்தில் இறக்கிவிட்டுள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேல்தலில், ஒபாமா தோற்று, ஜான் மெக்கெய்ன் வெற்றி பெற்றால், அது ஜார்ஜ் புஷ் மூன்றாம் முறையாக பதவியேற்பதற்குச் சமமானதாகும்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது?

இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக, பொதுவாக இரண்டு வழிகள் தமிழர் தரப்பில் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டும் மக்களின் சொந்த நிலைப்பாட்டுக்கே எதிரானவை. இப்படி

1.புலிகளால் புலித் தமிழீழம் வைக்கப்படுகின்றது.

2. புலியெதிர்ப்பு அணியால் புலியொழிப்பு வைக்கப்படுகின்றது.

இப்படி ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு அரசியல் போக்கும், தத்தம் இந்த வழிகள் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சனையை தாம் தீர்க்க முடியும் என்கின்றனர்.

சரி தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்றால், அதை வரட்டுத்தனமாக ஒருமையில் திணிக்கின்றனர். அதை வெறும் பேரினவாதமாகவும், வெறும் புலியாகவும் காட்டுகின்றனர். இதற்கு அப்பால் சிந்திக்க, செயல்பட யாரையும் அனுமதிப்பதில்லை. குறிப்பாக அதன் அரசியல் சாரத்தை முன்வைக்க மறுப்பவர்கள். முன்வைக்க முனைபவர்களை ஒடுக்குவதே, இவர்களின் வர்க்க அரசியல் நிலையாகும். வலதுசாரிய அரசியலின் கடைந்தெடுத்த கேடுகெட்ட போக்கிரிகளே இந்தக் கோட்பாட்டின் பிரதிநிதிகள்.

இதனால் இதை சாதிப்பதில் பேதம் எதுவுமற்ற மனித விரோதிகள். இதனால் பேய்களுடனும் பிசாசுகளுடனும் கூடி இதை சாதிக்க முனைவதா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, January 18, 2009

எம்.எஸ்.சுவாமிநாதன் : வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா?

"கார்ப்பரேட் கம்பெனிகள் கனிவுடனும் சமுதாய அக்கறையுடனும் அளிக்கும் தொகையைப் பயன்படுத்தி, நாட்டு மக்களின் பசியைப் போக்கத் திட்டங்கள் தீட்ட வேண்டும். சிறுகுறு விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்கி இலாபம் ஈட்டும் வகையில் அத்திட்டங்கள் அமைய வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ஒத்துழைப்போடு சத்துணவு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிப் பசியைப் போக்க வேண்டும்'' என்று அண்மையில் உபதேசித்திருக்கிறார், ஒரு மாபெரும் விவசாய விஞ்ஞானி.

"எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி ஏழை விவசாயிகளுக்கு சத்துணவு படைக்க வேண்டும். அதை இலவசமாகக் கொடுக்காமல், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து, கூலியாக சத்துணவளிக்க வேண்டும்'' என்றும், இதற்கு "காந்தி மாவட்டத் திட்டம்'' என்று பெயரும் சூட்டியுள்ளார், அந்த உலகம் போற்றும் விஞ்ஞானி.

Saturday, January 17, 2009

சி.பி.எம். – அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி : 'பச்சையான" பிழைப்புவாதம்

போயஸ் தோட்டத்திற்கு நவம்பர் மாதம் ஐயும் — அதாவது வலதும், டிசம்பர் மாதம் எம்மும் — அதாவது இடதும் விஜயம் செய்தார்கள். ஐக்கு பரதன், தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றோரும், எம்முக்கு பிரகாஷ் காரத்தும்,
வரதராசனும் தோட்டத்தில் உள்ளேன் ஐயா சொல்லி, அம்மாவுடன் பேசிவிட்டு வந்தார்கள். அதிலும் காரத்துடன் சென்றிருந்த தோழர்கள் புரட்சித் தலைவிக்கு பிடித்த இளம் பச்சைச் சட்டையில் சென்றிருந்தார்களாம்.

அம்மாவுக்கு இணையாக தோழர்கள் அமர்ந்த அந்த நாற்காலியை வாண்டையார், சேதுராமன், சுப்பிரமணிய சுவாமி, அத்வானி, ஜஸ்வந்த் சிங், மோடி, வைகோ முதலானோர் ஏற்கெனவே தேய்த்திருக்கிறார்கள் என்பதால், அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுதான். தானைத் தலைவியின் முன் சற்று சங்கோஜத்துடன் பேசிய தோழர்களுக்கு மோடிக்கு கொடுக்கப்பட்ட விருந்து போல வரவேற்பு இல்லையென்றாலும், சந்திப்பு அணுக்கமாகத் தான் நடந்தது. புரட்சித் தலைவிக்கு பிரகாஷ் காரத் கொடுத்த பெரிய பூச்செண்டு படம் எல்லாப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றன.

அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மைய அரசு பணிந்ததை ஒரு வருடமாக எதிர்ப்பது போல எதிர்த்து, மிரட்டுவது போல மிரட்டி, எச்சரிப்பது போல எச்சரித்து, அழுவது போல அழுது, இன்னும் பல செய்து பார்த்து, இறுதியில் காங்கிரசு கூட்டணி அரசு, "போடா வெண்ணை'' என்று தூக்கி எறிந்ததும் வேறு வழியின்றி ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள், போலிகள். ஒருவேளை காங்கிரசு அரசு கவிழ்ந்தால், அடுத்த தேர்தலில் என்ன செய்வது என்ற கவலை அவர்களை வாட்டியது. முன்னெச்சரிக்கையாக அடுத்த தேர்தலில் பா.ஜ.க தோற்று, காங்கிரசு வென்றால் மீண்டும் ஆதரவு உண்டு என்பதைத் தோழர்கள்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, January 16, 2009

மரணக் காவியங்கள்

எனது இருப்புக்காய்
உன்னைக் கொல்வேன்


என் சோதரா,
மரணத்துள் நானும் நீயும் நீந்துகிறோம்

நிழல்கள் எம்மைத் துரத்துகின்றன
வேதனைக்காகவேனும்
அழும்படி கட்டளையிடும் அவை
வேளா வேளைக்கு
எச்சரிக்கை செய்ததாகவும் புலம்புகின்றன

காற்றின் உதைப்பில்
பட்டம்விட்டே பழகியவர்கள் நாம்
எந்தெந்தத் திசைகளில் என்ன காற்றென்பதை மறந்து
நீ விளையாட்டைத் துவக்கினாயோ
அன்றி நானோ கேள்விகள் தொலைந்த..........

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் திருத்தம் : பொடாவின் மற அவதாரம்!

கடந்த நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஒன்றைத் தொடங்குவதற்கான சட்டம், ஏற்கெனவே இருந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை (UAPA ""ஊபா'') திருத்தி புதிய சட்டம் எனமிரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை இந்திய அரசு அவசரமாக உருவாக்கியுள்ளது. உருப்படியாக எந்த விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டங்களின் மூலம், நாட்டை அரசு பயங்கரவாத போலீசு ராஜ்ஜியமாக காங்கிரசு கூட்டணி அரசு மாற்றியமைத்துள்ளது.

அணுவிசை பாதுகாப்பு, விமானக் கடத்தல் தடுப்பு, கொடிய பேரழிவுக்கான ஆயுதங்கள் தடுப்பு, நக்சல் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான 8 வகை சட்டங்களால் தண்டிக்கப்படக் கூடிய பயங்கரவாதக் குற்றங்கள் நிகழ்ந்திருந்தால், அவற்றை இனி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும். இந்த அமைப்பின் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு, அவை இரகசியமாக விசாரணையை நடத்தும். சி.பி.ஐ. போன்ற மையப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று ஏற்கெனவே இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, தற்போதைய தேசிய புலனாய்வு அமைப்பு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளை வெறும் தகவல் தெரிவிக்கும் உறுப்புகளாக மாற்றிவிட்ட இச்சட்டம், மாநில அரசுகளி.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, January 15, 2009

2006 இல் எழுதியது : தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான்

எந்தளவுக்கு தமிழீழக் கனவின் சாத்தியப்பாடு கேள்விக்குள்ளாக்கி சிதைகின்றதோ, அந்தளவுக்கு அது வீங்கி வெம்புகின்றது. எங்கும் எதிலும் தொடர்ச்சியான நெருக்கடிகளும், சோகமான விளைவுகளும் தொடருகின்ற இன்றைய நிலையில், அதை வலிந்து புலி அரசியல் வரவழைத்துக் கொண்டேயுள்ளது. இதைப் பயன்படுத்தி பிழைப்புவாத அரசியல் பொறுக்கிகளும், கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் தமிழீழக் கனவைக் கவ்விக்கொண்டு ஊரைக் கூட்டி ஊளையிடுகின்றன. இந்தக் கும்பல் தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கிவிட்டு, வெள்ளத்தின் போக்கில் அடித்துச் செல்ல வைத்துள்ளனர். எது நடக்கும் எது நடக்காது என்று தெரியாத ஒரு சூனியத்தில் மக்கள் வாழ்வுக்காக தத்தளிக்கின்றனர்.

சொந்த அரசியல் வேலைத் திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியில் சாதிக்க முடியும், என்ற நடைமுறை ரீதியான சாத்தியமான வேலைத்திட்டத்தை அவர்களால் முன்வைக்க முடியாது போயுள்ளது. மாறாக தன்னிச்சையான தன்னியல்புக்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். உண்மையில் இதை பற்றி அவர்களுக்கே எதுவும் தெரிந்து..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

வழக்குரைஞர்கள் சங்கமா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா?

"மும்பய் தாக்குதலின்பொழுது உயிருடன் பிடிபட்ட முசுலீம் தீவிரவாதி முகமது அஜ்மலின் மீதான வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். அவருக்காக வக்கீல் ஆஜராகவில்லை என்றால், அது மனித உரிமை மீறலாகிவிடும். இதற்காக அஜ்மலுக்காக ஆஜராக நான் தயார். இதற்காக பாகிஸ்தான் தூதரகம் என்னை அணுக வேண்டும். ஆனால், அஜ்மலைத் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாது'' என அறிவித்திருந்த மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் மகேஷ் தேஷ்முக்கின் வீட்டையும் அலுவலகத்தையும் சிவசேனா குண்டர்கள் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். அதே சமயம், அஜ்மலுக்காக வாதாட முன்வந்த மற்றொரு வழக்குரைஞர் ப.ஜனார்த்தன் சிவசேனா குண்டர்களால் தாக்கப்படவில்லை. அவர் ஓய்வு பெற்ற "அட்வகேட் ஜெனரல்'' என்பதுகூட அவரின் "அதிருஷ்டத்திற்கு''க் காரணமாக இருக்கலாம்.

இந்து மதவெறி பிடித்த சிவசேனா குண்டர்களின் இந்தத் தாக்குதலைப் பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. சிவசேனாவின் இந்தச் சட்டவிரோதமான மிரட்டல் நடவடிக்கையை நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர, மேல்தட்டு "இந்துக்கள்'' மனநிறைவோடு ஆதரிக்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும், பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் அஜ்மலுக்காக யாரும் வாதாடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்பொழுதுள்ள............

Wednesday, January 14, 2009

இந்தியா மாயை


புலிகள் உட்பட பல பிரதான இயக்கங்களை, இந்தியாவும் இந்திராவுமே தம் கூலிப்படையாக வளர்த்தெடுத்தனர். அது அவர்களின் பின்புலமாகவும் இருந்தது. தமிழ்நாட்டில் இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்கப்;படுகின்றதது, பல முகாம்கள் உள்ளன, பிரபாகரன் உட்பட பல தலைவர்கள் உங்கேயே உள்ளார்கள் என இலங்கையரசு கேட்டால், தற்போது பாகிஸ்;தான் சொல்லும் பாணியில் இல்லையேன்றே இந்திரா பாராளுமன்றத்தில்கூட பதிலளிப்பார். அப்பேர்ப்பட்ட இனிப்பான காலமது.

தமிழ்த்தேசிய இயக்கங்களை வலுவேகமாக - வலுவாக வளர்த்தெடுத்த இந்தியா இன்று அதில் ஒன்றான புலிகளை தோற்கடிப்பதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றது. இன்றைய புலிகளின் கிளிநொச்சி வீழ்ச்சிக்கு இந்தியாவின் பங்கு முக்கியமானதே.

புலிகளுக்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு ராஜீவ் படுகொலையும் ஓருகாரணம். அதனாலேயே பிரபாகரன் பிடிபட்டால் தாருங்கள் என்கின்றது இந்தியா.

புலிகள் ராஜீவை கொலை செய்ததன்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

வடமாநிலத் தேர்தல் முடிவுகள் : ஜனநாயகம் பணநாயகமானது

தில்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடாக நடந்து கொண்டிருந்தபொழுது பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் வி.கே.மல்கோத்ரா பற்றி, "மல்கோத்ராவைவிடத் தீவிரவாதம் மேல்'' என்ற நகைச்சுவைத் துணுக்கு அரசியல் வட்டாரத்திலும் வாக்காளர்கள் மத்தியிலும் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்ததாம். தில்லி கோட்டையை எளிதாகக் கைப்பற்றிவிடும் என நம்பப்பட்ட பா.ஜக., "அங்கு மண்ணைக் கவ்வியது ஏன்?'' என்ற கேள்விக்கு இந்தத் துணுக்குதான் இரத்தினச் சுருக்கமான பதில்.

ஜெய்ப்பூர், அகமதாபாத், தில்லி நகரங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள், அதனைத் தொடர்ந்து மும்பயில் முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களால் நான்கு மாநிலங்களிலுமே (தில்லி, இராசஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர்) தனக்கு வெற்றி கிடைத்துவிடும் எனக் கனவு கண்டு வந்தது, பா.ஜ.க. மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வென்று, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டபோதிலும், தில்லியிலும், இராசஸ்தானிலும் பா.ஜ.க.விற்குக் கிடைத்துள்ள தோல்வி, அக்கட்சியின் நாடாளுமன்றக் கனவை ஆட்டங்காண வைத்துவிட்டது.

Tuesday, January 13, 2009

இந்தியாவும் தமிழீழமும்


தோல்விக்கான காரணத்தை இராணுவபலம், அன்னிய சக்திகளின் உதவி என்று கூறி நிற்கின்றனர். ஒரு விடுதலை போராட்டத்தை இவர்கள் இன்று பட்டியலிடும் அத்தனை சக்திகளும் ஒடுக்குவார்கள். இதைத் தெரிந்திருக்க வேண்டியது தான் ஒரு விடுதலை இயக்கத்தின் அடிப்படை கூட. அப்படி தெரியாமல், எப்படி போராட முடியும். ஏகாதிபத்தியம் முதல் உள்ளுர் நிலப்பிரபுக்கள் வரை, தேசியத்தின் எதிரி என்பதை சொல்லாத போராட்டம், அவர்களைச் சார்ந்து நின்றது. இப்படி மக்களைச் சார்ந்து நிற்காத வண்ணம் எதிரியைச் சார்ந்து போரட்டத்தை நடத்தியவர்கள், இன்று அவர்களால் அழிகின்றனர்.

இந்த உண்மை உணரப்படாத நிலையில், உணர்த்தப்படாத நிலையில், அறியாமையில் நாம் வாழ்கின்றோம். அன்னிய சக்திகளின் தயவில் அன்று மக்களை தோற்கடித்த போராட்டம், இன்று மக்கள் தோற்கடிக்கும் போராட்டமாகியது. இப்படி அழுகி நாறும் வெற்றுடலைத்தான், பேரினவாதம் இந்தியா துணையுடன் அகற்றுகின்றது. மக்கள் புலிகளை தோற்கடித்தனர் என்ற உண்மையை மறுக்கும் மக்கள் விரோத அரசியல் மூலம், இன்றும் தம் தோல்வியையும் தவறுகளையும் மூடிமறைக்கவே முனைகின்றனர். தம் அடையாளமே இருக்கும் வரை, தமது தவறை தவறாக ஒருநாளும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

இன்று இந்தியா இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளை தமிழ்மக்கள் மத்தியில் இருந்து அகற்றுகின்றனர் என்பதே உண்மை.

இங்கு இதை பல தளத்தில் காணமுடியும். புலிகள் எந்த அரசியல் அடிப்படையுடனும் தமிழ் மக்களுடன பிணைந்திருக்கவில்லை............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

விசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது!

சமூகநீதிக் காவலர் என்றும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர் என்றும் புகழப்படும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், கடந்த நவம்பர் 27ஆம் நாள் மறைந்துவிட்டார். காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு நடுவர் மையம் அமைத்ததும், பல்லாண்டுகளாக அரசின் குப்பைத் தொட்டியில் கிடந்த மண்டல் பரிந்துரைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதும் வி.பி.சிங்கின் அரசியல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கவை.

அவரின் மரணத்தையடுத்துத் திராவிடக் கட்சிகள், தலித் அமைப்புகள் போன்றவைகளும், அறிவுஜீவிகள், தன்னார்வக் குழுக்களின் மனித உரிமைப்போராளிகள் போன்றவர்களும் "சமூகநீதிப் புரட்சியை ஏற்படுத்தியவர்' என்று ஏற்றிப் போற்றி, அவரைப் புனிதராக்குகின்றனர். சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?

வி.பி.சிங் தனது அரசியலை காங்கிரசு கட்சியிலிருந்து தொடங்கினார். தெலுங்கானாப் புரட்சி வெற்றிகரமாக நிலப்பங்கீட்டை நடத்தி முடித்திருந்த காலகட்டத்தில், எங்கே புரட்சித் தீ இந்தியா முழுவதும் பரவி விடுமோ என்ற அச் சத்தில் வினோபா பாவே ஆரம்பித்த மோசடித்தனமான "பூமிதான' இயக்கம்தான் இந்த முன்னாள் ராஜாவை காங்கிரசுக்குக் கொண்டுவந்தது.

Monday, January 12, 2009

கிரீஸ் : உலகமயமாக்கலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் கலகம்


ஏதென்சின் புறநகர் பகுதியான எக்சார்சியாவில், தெருவில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த கிரிகோரோ பவுலோஸ் என்ற 15 வயது சிறுவன், ரோந்து சுற்றிய போலீசாரால் டிசம்பர் 6ஆம் நாளன்று சுட்டுக் கொல்லப்பட்டான். அச்சிறுவன், போலீசு வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினான் என்பதால் சுடப்பட்டான் என்று நியாயவாதம் பேசியது போலீசு.

"இது அப்பட்டமான பொய்; கடந்த சில மாதங்களாகவே தொடரும் இளைஞர்கள் போலீசுக்கிடையேயான மோதலின் தொடர்ச்சியாக நடந்துள்ள தாக்குதல்தான் இது. கிரேக்க நாட்டில் இளைஞனாக இருப்பதுகூடக் குற்றமாகிவிட்டது; கொலைகார ஆட்சியாளர்கள் இளைஞர்களுக்கு மரணத்தையே பரிசாகத் தருகிறார்கள்'' என்று முழக்க அட்டைகளுடன் இப்பகுதிவாழ் இளைஞர்கள் உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். போலீசு வாகனங்கள் மீது கல்லெறிந்து தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர்.அடுத்தநாள், ஏதென்ஸ்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, January 11, 2009

பாசிட் மகிந்தாவின் சர்வாதிகாரம், நேர்மையற்ற ஊடகவியலுக்கு கோவணமாகின்றது

இங்கு இதில் அணி சேராத, மக்களை சார்ந்து நின்று போராடுவதுதான் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரும். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்கள், இப்படி இரண்டுக்கும் எதிராக போராட வேண்டியுள்ளது. இதுவல்லாத அனைத்தையும் அம்பலப்படுத்தி போராடுவது, தெளிவுறவைப்பது அவசரமான பணியாக உள்ளது. எல்லா எதிர்ப்புரட்சிக் கும்பலும் இதை மறுக்கின்றது. வெறும் முதலாளித்துவ ஜனநாயகம், ஊடக சுதந்திரம் என்ற எல்லைக்குள் பிரமைகளை விதைக்கின்றது. முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுக்கும் மகிந்த சிந்தனை முதலாளித்துவ ஜனநாயகத்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ராக்கிங்க்கு எதிராக, இரயாகரன் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

1985 இல் இத் துண்டுப்பிரசுரத்தை சில மாணவர்கள் சார்பாக நான் வெளியிட்டேன். அப்போது ராங்கிங் செய்தவர்களோ, 'மனநோயாளி ஒருவர் யாழ் பல்கலைக்கழத்தில்" என்று பதில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். நான் ராக்கிங்குக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தினேன். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நான் வெளியிட்ட இந்தத் துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டது.

Saturday, January 10, 2009

புலிகள் படுகொலை செய்த யாழ்பல்கலைகழக மாணவன் விமலேஸ்வரின் உரை

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)

ஊடக சுதந்திரத்தையே நக்கித் தின்னும், தமிழ் ஊடகவியல்

மானம், நேர்மை, தர்மம், உண்மை என்று எதிவுமற்றது என்றால், அது தமிழ் ஊடகவியல்தான். ஊடக தர்மம், சுதந்திரம் என்று எந்த அடிப்படையான தகுதியுமற்றதும், நக்கிதின்னும் பச்சோந்திகளால் நிறைந்தது தான் தமிழ் ஊடகவியல்;. தமிழ் இனத்தின் சாவில், தான் பிழைக்கின்ற பிழைப்பையே 'சுதந்திர" ஊடகவியலாகி அதை திண்டு செரிக்கிறவர்கள் இவர்கள்.

இந்த மானக்கேட்டை தொழிலாக செய்வதைவிட, மனிதனாக உழைத்து வாழலாம். மக்களை ஏமாற்றி அதை நக்கித் தின்பதையே தொழிலாக கொண்டு, நீங்கள் செய்யும் ஊடகவியல் 'சுதந்திரம்" மொத்தத்தில் மோசடி நிறைந்தது. செய்திகளை மூடிமுறைத்தும், திரித்தும், கற்பனையில் புனைந்தும், மக்களை ஏமாற்றுகின்ற மோசடியை செய்வதில் தமிழ் ஊடகவியல் கைதேர்ந்தது.

இதற்கு மாறானது சிங்கள ஊடகவியல். இலங்கையில் சிங்கள ஊடகவியல் வெளிப்படுத்தும் சுதந்திர உணர்வோ, தமிழ் ஊடகவியலிடம் கிடையாது. பொதுவாக சிங்கள பாசிச அரச இயந்திரத்தை குற்றம்சாட்டி பேசும் 'சுதந்திர" தமிழ் ஊடகவியல், உண்மையில் தமிழ் பாசிசத்தை சீவி முடித்து சிங்காரித்து விடுகின்றது. இப்படி புலிகளைச் சுற்றி கூடாரம் அடித்து, அவர்களுக்கு ஏற்ப குலைப்பதையே தம் ஊடாக தர்மமாக கொண்டிருந்தனர். இதைத் தாண்டி யாரும், உண்மைகளை மக்களுக்கு சொன்னதில்லை.

தேசியம் என்ற கொப்பை பிடித்துக்கொண்டு தொங்கிய இவர்கள், பாசிசத்துடன் சேர்ந்து அடிமரத்தையே வெட்டிக் கொண்டிருந்தனர். இதையே ஊடகவியல் என்றனர். தேசியத்தின் பெயரில் மனித அறநெறிகளை எல்லாம் மறுத்து நின்ற எம்மண்ணில், தமிழ் ஊடகவியல் மனித...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம்!

ஓசூர்சிப்காட் பகுதியில், பேடர்பள்ளி அருகே டி.வி.எஸ். நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ராஜ்சிரியா என்ற ஆலை உள்ளது. இவ்வாலையில் நீண்ட காலமாகப் பணியாற்றும் தொழிலாளிகளுக்கு கூட வேலை நிரந்தரமோ, அடையாள அட்டையோ, சட்டரீதியான சலுகைகள்உரிமைகளோ கிடையாது. எவ்வித உரிமைகளுமின்றி தொழிலாளிகளைக் கொத்தடிமைகளாக்கிச் சுரண்டி, இவ்வாலை இன்று 4 பிரிவுகளைக் கொண்ட பெரிய ஆலையாக வளர்ந்துள்ளது.

இவ்வாலையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதியன்று கொதிகலனில்(பாய்லர்) தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் பேரொலியுடன் கொதிகலன் வெடித்துச் சிதறி, அருகே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளிகளின் உடலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. நாகவேணி என்ற பெண் தொழிலாளி அலறியபடியே, உடலெங்கும் தீப்பற்றியெரிய ஆலைக்கு வெளியே ஓடிவந்து விழுந்து துடித்தார். இந்த விபத்தினால் ஆலையின் மேற்கூரையே பிய்த்தெறியப்பட்டுள்ளதால், இங்கு வேலை செய்த தமிழ் தெரியாத அசாமிய, கன்னட கூலித் தொழிலாளிகளின் நிலைமை என்னவானது என்றே தெரியவில்லை.

இவ்விபத்தையே மூடிமறைக்க எத்தணித்த நிர்வாகம், தீயணைப்பு வண்டி வந்தபோது, குற்றுயிராகக் கிடந்த தொழிலாளிகளை கழிவறைக்குள் அடைத்து வைத்தது. பின்னர், தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து, வேறெந்த மருத்துவநிவாரண உதவியுமின்றி வேலையிலிருந்து விரட்டியடித்தது. படுகாயமடைந்த நாகவேணி, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் ஆலை நிர்வாகத்துடன் சண்டையிட்ட பின்னர், அவரை பெங்களூ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, January 9, 2009

1986 இல் புலிக்கு எதிராக போராடிய யாழ்பல்கலைகழகம் (உரை) பாகம் : 1

இதில் பேசியவர்கள் சிலர் பின் கொல்லப்பட்டனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)

கோயபல்ஸ்சின் சீடன்தான், பேரினவாத அரசின் பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய

பேரினவாத பாசிசமோ புலிப் பாசிசத்தை உச்சிக் காட்டுகின்றது. தனது இனவெறி பாசிச குற்றங்களை எல்லாம் புலியின் மேல் போட்டுத் தப்பிக்க முனைகின்றது. புலிப் பாசிசம் இழைக்க கூடிய குற்றங்களை எல்லாம், தனக்கு சாதகமாக கொண்டு பேரினவாத பாசிசம் இயங்குகின்றது. தனது குற்றங்களை மூடிமறைத்தும், தமது குற்றங்களை புலியின் செயலாக திரித்தும் அல்லது ஒப்பீட்டளவில் தமது குற்றம் குற்றத்தன்மை குறைந்ததாக காட்டவும் முனைகின்றது.

இதைச் செய்ய கைதேர்ந்த பாசிச பேச்சாளர்களை முன்னிறுத்துகின்றது. இதன் மூலம் அனைத்தையும் தமக்கு சாதகமாக திரித்து புரட்டுகின்ற, அரசியல் சகுனிகளைக் கொண்டு பேரினவாதப் பிரச்சாரம் இயங்குகின்றது.

எங்கும் பாசிச பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றது. இனப்பிரச்சனையைத் தீர்க்க போவதாக காட்ட, ஒரு குழு. பத்திரிகைத்துறையை அடித்து நொருக்கியபடி, அதற்;கும் கண்டனம். இனத்தின் மேலான வெற்றியல்ல இது என்று கூறியபடி, வெடியை வாங்கிக் கொடுத்து வெற்றியைக் கொண்டாடும் போக்கிரித்தனம். கொலை, கப்பம், கடத்தல் இதை புலியெழிப்பாக நடத்தியபடி, அதற்கு கண்டனம். கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் மக்களின் கையில் சிங்கக்கொடியைக் கொடுத்து ஊர்வலம் விடும் ஜனநாயகம். பாசிசத்தை மூடிமறைக்க, அரசியலே கோமாளித்தனமாகின்றது. இப்படி இந்தப் பேரினவாத பாசிசம் செயலூக்கமுள்ளதாக, அனைத்தையும் திரித்துப் புரட்டுவதாக உள்ளது. மக்களை அடக்கியொடுக்குவதில் கூட, அது தனித்திறன் பெறுகின்றது. இதன் முன் புலிகள் நிலைதடுமாறி வீழ்கின்றனர்.

உண்மையில் புலிகளின் தவறுகள்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மும்பய்த் தாக்குதல் : கண்ணீரிலும் வர்க்கமுண்டு

"நாங்கள் தினந்தோறும் இறக்கிறோம்'' — மும்பய் தாஜ் விடுதியில் பதுங்கியிருந்த முசுலீம் தீவிரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தியா டி.வி., இம்ரான் பாபர் என்ற தீவிரவாதியிடம் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தியபொழுது, "நீ சுற்றி வளைக்கப்பட்டு விட்டாய்; சரணடையவில்லை என்றால் கண்டிப்பாக இறந்து விடுவாய்'' எனக் கூறியதற்கு நாங்கள் தினந்தோறும் இறப்பதாகப் பதில் அளித்தாராம்.

இந்தத் தொலைபேசி உரையாடல் அந்தத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒலி/ஒளிபரப்பப்பட்டது. இந்த உரையாடல் உண்மையிலேயே நடந்ததா, அல்லது அந்த டி.வி., தனது வர்த்தக நோக்கங்களுக்காக "செட்டப்'' செய்ததா என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது. ஆயினும், காசுமீரில், ஆப்கானில், ஈராக்கில் முசுலீம்கள் அன்றாடம் கொசுக்களைப் போல, இந்தியாவால், அமெரிக்காவால், பாகிஸ்தானால், "நேடோ'' படைகளால் கொல்லப்படுவதை யாரும் சந்தேகிக்க முடியாது.

இந்த மரணங்கள் நமது நாட்டு மேன்மக்களின் மனசாட்சியை ஒருபோதும் உலுக்கியது கிடையாது. இந்த முசுலீம்களின் மரணங்களை விட்டு விடுங்கள். காங்கிரசு கூட்டணி பதவியேற்ற பிறகு, கடந்த நாலரை ஆண்டுகளில் இந்தியாவில் 25,000 குண்டு வெடிப்புகள் நடந்திருப்பதாகவும், அதில் 7,000 அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முந்தைய பா.ஜ.க., கூட்டணி ஆட்சியில் நடந்த 36,259 குண்டுவெடிப்புகளில் 11,714 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Thursday, January 8, 2009

முறிந்த பனை என்ற நூலில் : விடுதலைப் புலிவதைமுகாமில் இருந்து தப்பி

"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இன்னொரு அரசியல் வேலை ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் அம்பலமாயிற்று. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான ஆனால் சிறு தொகையினருக்கே தெரிந்த விவகாரம் என்னவெனில், பல்கலைக்கழக மாணவன் றயாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டமையாகும். அந்த மாணவன் பொது நல விடயங்களில் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தான். அத்துடன் 1986 நவம்பரில் காணாமற் போன விஜிதரனின் விவகாரத்தில் நடவடிக்கைக்குழு உறுப்பினராகப் பங்குபற்றினான். றயாகரன் சிறு மார்க்ஸியக் குழுவான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியுடன் தொடர்பு கொண்டிருந்தான் என்று, விடுதலைப்புலிகள் இயக்கம் அவர் மீது சந்தேகப்பட்டமையே அவரைக் கடத்திச் சென்றமைக்கு உண்மையான காரணமெனப் பின்னர் அம்பலமானது. பொறியலாளரான திரு. விஸ்வானந்ததேவனே அவ் மாhக்ஸியக் குழுவின் தலைவர் ஆவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கடுமையாக விமர்சிப்பவர். அவர் கடந்த இரண்டாண்டுகளாக காணமற் போய்விட்டார். .....றயாகரனைக் கடத்திச் சென்ற போது, நெல்லியடியில் விஸ்வானந்ததேவனின் 70 வயதான தந்தையும் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டார். அவரது வீட்டுக்காணி நிலமும் தோண்டப்பட்டது. விடுதலைப்புலிகள் றயாகரனை தடுத்து வைக்கப்பட்டிருந்ததை மறுதலித்தனர். இதனால் மிகமோசமான முடிவு ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்பட்டது. அதி உற்சாகமும், திறமையும் வாய்ந்த றயாகரன் யூலை ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிறைவைப்பிலிருந்து தப்பிவிட்டார். 1987 ஜீலை 17ம் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு அவர் அனுப்பிய கடிதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசி, தனக்கு எதுவி.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலிகள் கெரில்லா அமைப்பாக கூட நீடிக்க முடியாது.

.........புலிகள் நீடிப்பார்கள், கெரில்லா அணியாக மாறுவார்கள். தொடர்ந்தும் சண்டை நடக்கும். அடர்காட்டில் இருந்து தப்பிப் பிழைப்பார்கள். இப்படி குருட்டு அனுமானங்களுடன் பல்வேறு முடிவுகளையும் அபிப்பிராயங்களையும் பிரகடனம் செய்கின்றனர். பிழைப்புவாதிகள் முதல் 'சுதந்திர" ஊடகவியல் பேசும் பச்சோந்திகள் வரை இதில் அடங்கும்;. உண்மைக்காக போராடுவது, மக்களைச் சார்ந்து நிற்றல் என்பது அருகிவிடும் போது, ஆய்வுகளும் அனுமானங்களும் கூட குறுகிவிடுகின்றது.

இப்படி இவர்கள் கூறும் காரணங்களாக அவர்கள் கண்டுபிடிப்பதில் முக்கிமானது, தமிழ் மக்களின் பிரச்சனையை இந்த அரசு தீர்க்காது என்ற அனுமானம் தான்.

இந்த பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்காது என்பது உண்மைதான்;. இதனால் மட்டும் புலிகள் நீடித்து இருக்கமுடியும் என்று, எப்படி கூறமுடியும்!? புலிகள் நீடித்து இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகின்றனரா? இந்தக் கேள்வியை யாரும் எழுப்புவது கிடையாது. புலிகளை ஏன் எதற்காக தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டும்?

மறுபக்கத்தில் இன்றும் தான், தமிழ் மக்கள் பிரச்சனையை இந்த அரசு தீர்க்கவில்லை. இதை தீர்க்காது என்பது, அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரியும். துரோகத்தையே இன்று தொழிலாக கொண்ட கும்பலுக்கும் கூட இது தெரியும். இப்படி இருந்தும், புலிகளை மக்கள் ஏன் தோற்கடிக்கின்றனர்? இதை விட புலிக்கு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.